Sunday, July 31, 2011

நல்லது மட்டுமே நடக்கவேண்டுமானால் என்ன வழி?

நமக்கு நல்லது மட்டுமே நடக்கவேண்டுமென்றுதான் ஆசைப்படுகிறோம்.இயற்கையாக நிகழும் சில விஷயங்களை தடுக்க முடியாது.சில நேரங்களில் நாமே நமது முன்னேற்றத்திற்கு எதிரியாய் அமைந்து விடுவது பற்றியது இந்தப் பதிவு.நமது பழக்க வழக்கங்கள்,உறவுகளில் கோணல்கள் என்று பல இருந்தாலும் எதிர்மறை எண்ணங்கள் ஒருவரை அதிக அளவு பாதித்து முடக்கி விடுகின்றன.

                                  நமது எண்ணங்கள்தான் செயலாக மாறுகின்றன என்பது உங்களுக்கு தெரியும்.நல்லதை நினைத்தால் நல்லதே நடக்கும் என்றும் கெட்ட்து நினைத்தால் அப்படியே நடக்குமென்றும் சொல்லப்பட்டுவிட்ட்து.மனதின் ஆற்றல் என்பது அளவிட முடியாத ஒன்று.வழக்கமாக நேர்மறையாகத்தான் எண்ண வேண்டும்.ஆனால் எதிர்மறை எண்ணங்கள் சிலருக்கு தவிர்க்க முடியாமல் இருக்கிறது.

                                  சில முறை தேர்வில் தோற்றுவிட்டால் மீண்டும் தேர்வெழுத வேண்டுமா? நமக்கு அதிர்ஷ்டமில்லை என்று எண்ணுவது இப்படித்தான்.கடந்த காலத்தில் நடந்த தோல்விகளும்,கெட்ட விஷயங்களும்,நோய்களும்,இழப்புகளும் மனதை பாதித்து சோர்வைத் தந்து விடுகிறது.அப்புறம் நெகடிவாக நினைப்பதே வாழ்க்கையாக இருக்கும்.முயற்சி செய்தால் இவற்றில் இருந்து எளிதில் விடுபடவும் முடியும்.அதற்கான வழிகளை பார்ப்போம்.

                                  முதலில் உங்களுக்கு இருப்பது எதிர்மறை எண்ணம்தான் என்பதை நீங்களே கண்டுபிடிப்பதுதான் அடிப்படை.உங்களையே உற்றுநோக்குங்கள்.தோன்றும் எண்ணத்தை நண்பர்களிடம்,உங்கள் நலம் விரும்புவோரிடம் பகிர்ந்து கொள்ளலாம்.அல்லது ஒரு பேப்பரில் எழுதுங்கள்.நீங்கள் நினைப்பது தவறானது என்று கண்டு கொண்டாலே பாதி வெற்றி நிச்சயம்.சில நேரங்களில் நண்பர்கள் கூறுவார்கள்’’ ஏண்டா அப்படி நினைக்கிற?அப்படி ஒண்ணும் நடக்காது,நல்லதையே நினைப்போம்

                                  உங்களுக்கு தோன்றுவது எதிர்மறை எண்ணம்தான் என்று தெரிந்த பின் அதை மாற்றுங்கள்.அதை சரி செய்யுங்கள்.பதிலாக நல்லதைப்பற்றி எண்ணுங்கள்.தொடர்ந்து முயற்சி செய்து முன்னேற்றத்தை கவனித்து வாருங்கள்.இது மிகவும் எளிதாக செய்யக்கூடிய ஒன்றுதான்.நன்மையை எதிர் நோக்கும்போது மனம் உற்சாகமடைவதை நீங்கள் உணரமுடியும்.எண்ணங்கள் வலிமையடைந்து மனம் தானாகவே செயலில் இறங்கும்.மேலும் சில...

  • ·         நிகழ்காலத்தில் வாழுங்கள்.கடந்த காலம் போனதுதான்.
  • ·         மனச்சோர்வு இருந்தால் மறைந்துவிடும் என்பதை நினைவில் இருக்கட்டும்.
  • ·         உடற்பயிற்சியிலும் உடல் உழைப்பிலும் ஈடுபடுங்கள்.
  • ·         அதிகாலையில் எழுவது,குறித்த நேரத்தில் தூங்கச்செல்வது போன்ற வழக்கத்தை கடைபிடிக்கவும்.
  • ·         போதுமான ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள்.
  • ·         உற்சாகமான நண்பர்களுடன் பொழுது போக்குங்கள்.
  • ·         உரிய நேரத்தில் சத்தான உணவு சாப்பிடுங்கள்.
  • ·         நல்ல புத்தகங்கள் படிக்கலாம்.

                                  நல்லதை நினைத்தால் நல்லதே நடக்கும்.அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.அப்புறம் வெற்றி உங்களுடையது.
-

Saturday, July 30, 2011

இந்தியாவின் முதல் லெஸ்பியன் திருமண ஜோடிக்கு போலீஸ் பாதுகாப்பு.

                               இந்தியாவின் முதல் லெஸ்பியன் திருமணம் டெல்லிக்கு அருகில் ஹரியானாவில் நடந்த்து. 25 வயதானசவீதா என்ற பல்கலைக்கழக மாணவியும்,20 வயதுள்ளவீணா என்ற அவரதுஇணையும் திருமணம் செய்து கொண்டார்கள் தம்பதிகள் 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பில் இருக்கிறார்கள்.அவர்களுடைய உயிருக்கு குறி வைக்கப்பட்டுள்ளதால்,தம்பதிகள் தங்கியுள்ள வீட்டுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கியிருக்கிறது..

                              சவீதா ஏற்கனவே வேறொரு ஆணுடன் திருமணமானவர்.மணமாகி 5 மாதம் கழித்து கணவரை விட்டு வெளியே வந்துவிட்டார்.ஆணுடனான குடும்ப வாழ்க்கையில் அவரால் பொருந்திப் போகமுடியவில்லை.தன்னை கட்டாயப்படுத்தி வீட்டில் ஒரு ஆணுடன் திருமணம் செய்து வைத்துவிட்ட்தாகவும்,வீணா என்பவருடன் லெஸ்பியன் உறவு இருப்பதாகவும் நீதிமன்றம் சென்றார்.

                               குர்கான் நீதிமன்றம் விவாகரத்து வழங்கியதுடன் வீணாவை திருமணம் செய்து கொள்ளவும் அனுமதி அளித்த்து.ஜூலை 22 ல் சவீதா கணவனாகவும்,வீணா மனைவியாகவும் ஆனார்கள்.இந்தியாவில் நடக்கும் முதல் லெஸ்பியன் திருமணம் இது.ஆனால் தம்பதிகள் மீண்டும் கோர்ட்டுக்கு ஓடிவந்தார்கள்.என்ன நடந்திருக்கும் என்று நம்மால் ஊகிக்க முடியும்.ஆமாம்,கிராமத்தில் அவர்களுடைய உறவினர்கள் கொல்லப்போவதாக அறிவித்து மிரட்டியிருக்கிறார்கள்.

                                கொலை மிரட்டல் விடுத்த உறவினர்களுக்கு கோர்ட் நோட்டீஸ் போயிருக்கிறது.அந்த பகுதி கிராமங்களை பொருத்தவரை ஒரே கோத்திரத்தில் திருமணம் செய்து கொண்டாலே கிராம பஞ்சாயத்து அனுமதியுடன் கொலை நிச்சயம் என்கிறார்கள்.இந்த லெஸ்பியன் ஜோடியின் நிலை என்னவாகும் என்பது கேள்விக்குறி.தற்போது பாதுகாப்பான வீட்டில் தங்க வைக்கப்பட்டு காவல்துறை பாதுகாப்பு அளித்துள்ளது.

                                   லெஸ்பியன் உறவை காரணம் காட்டி ஆணுடனான திருமண பந்த்த்தில் இருந்து விலகிய சவீதா பாராட்டைப் பெற்று விட்டார்.உண்மையில் இது ஒரு தைரியமான முடிவுதான்.இல்லாவிட்டால் ஒரு போலியான மணவாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்திருப்பார்.கணவனுக்கும்,அவருக்கும் சந்தோஷமில்லாமல் சமூகத்துக்கு பயந்து நடித்துக்கொண்டிருந்திருக்க வேண்டும்.இருவர் வாழ்க்கையையும் வீணடிக்காமல்அவர் எடுத்த சரியான முடிவு என்கிறார்கள் விமர்சகர்கள்.

                                   அவர்களது குடும்பத்தினரைப் பொருத்தவரை கொஞ்சம் ஜீரணிக்க கஷ்டமான விஷயம்தான்.இதெல்லாம் அவர்கள் கேள்விப்படாத ஒன்றாகவும்,அதிர்ச்சியாகவும்தான் இருந்திருக்கும்.ஆனால் நீதிமன்றம்,காவல்துறை நடவடிக்கை அவர்களிடம் ஓரளவு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்று தோன்றுகிறது.மாறிவரும் சூழலை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

                                   ஓரினச்சேர்க்கை போன்றவை எப்போதும் சமூகத்தில் இருந்து வந்திருக்கிறது.அங்கீகாரம் கிடைக்கும் என்பதால் இப்போதுதான் துணிவுடன் வெளியே வர ஆரம்பித்திருக்கிறது.இந்தியாவுக்கு இது புதிதாக தோன்றினாலும் தனி மனித உரிமை நிலை நாட்டப்பட்டுள்ளது.தானும் கெட்டு இன்னொருவரையும் கெடுப்பதற்கு பதிலாக தைரியமாக முடிவெடுப்பது நல்லது.
-

Thursday, July 28, 2011

காட்டிக்கொடுக்கும் செல்போன்கள்.


                                  செல்போன் நிறுவன்ங்கள் ஒரு கட்ட்த்தை எதிர்பார்த்து காத்திருந்தார்கள்.ஆரம்பத்தில் இன்கமிங் சேவைக்கும் கட்டணம் வசூலித்த கம்பெனிகள்,எங்கள் சிம்கார்டை வாங்கினால் மட்டும் போதும்.எல்லாம் இலவசம் என்றார்கள்.டாடா டொகொமோ வியாபார தந்திரமாக ஒரு பைசா என்றவுடன் மற்ற நிறுவன்ங்களும் வேறு வழியில்லாமல் இறங்கி வந்தன.அதே நம்பருக்கு வேறு நிறுவனம் மாறிக்கொள்ளலாம் என்று வந்து மாற விரும்பியவர்கள் மாறியும் விட்டார்கள்.

                                  இனி நம்மை விட்டு போக மாட்டார்கள் என்று முடிவாகி விட்ட்து.செல்போன் இல்லாமல் இனி வாழ்க்கையும் இல்லை.போட்டி எல்லாம் முடிந்து ஓரளவு நிலை பெற்றாகிவிட்ட்து.அப்புறம் இந்த மக்கள் அடிமைகள்தானே! விலை ஏற்றினால் சிம்மை தூக்கியா எறிந்து விடப்போகிறான்? ஏர்டெல் பல பகுதிகளில் விலை ஏற்றத்தை அறிவித்து விட்ட்து.இருபது சதவிகிதம் ரேட்டை கூட்டியிருக்கிறது.அடுத்து வோடஃபோன்,ஜடியா செயலில் இறங்க இருக்கிறது.இனி ஜோராய் சுரண்டல்தான்.

                                  என்னதான் அடிமையாக மாறிப்போனாலும் செல்போனால் அடையும் பலனும் அதிகம் இருப்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.இன்று பல வழக்குகளில் குற்றவாளிகளை கண்டறிய செல்போன்கள்தான் பயன்படுகின்றன.காவல்துறைக்கு கிடைத்த மிகப்பெரிய வரம் இது.பல கொலைகளில்,வழக்குகளில் தலைமறைவு குற்றவாளிகளை செல்போனை வைத்தே காவல்துறை உடனடியாக வளைத்திருக்கிறது.

                                   இரண்டு பேர் ஓடிப்போனார்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.அவர்களுடைய செல்போன் இயக்கத்தை வைத்து வீட்டு முன்பு போய் போலீஸ் நின்றது.தில்சன் கொலையில் செல்போன் கூவம் வரை போய் வந்திருப்பதை பார்த்தார்கள்.துப்பாக்கி கிடைத்து விட்ட்து.ஒரு கொலையில் கடைசியாக யாருடன் பேசியிருக்கிறார் என்று கவனித்தார்கள்.அவரை விசாரித்தவுடன் கொலையாளிகளை பிடித்து விட்டார்கள்.

                                   என் பெயரில் பயன்படுத்திக்கொண்டிருக்கும் சிம் இருந்தால்தானே கண்டுபிடிக்க முடியும்? வேறுவேறு சிம்மை மாற்றிக்கொண்டிருந்தால்? இப்படித்தான் புத்திசாலித்தனமாக சிந்தித்தார் ஒரு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்.நில மோசடி வழக்கில் தேடிக்கொண்டிருந்தார்கள் காவல்துறையினர்.ஓமலூர் முன்னாள் எம்.எல்.ஏ தமிழரசு கேரளாவில் இருந்தார்.சிம்மை தூக்கியெறிந்து விட்டு வேறு சிம்மை போட்டுக்கொண்டார்.

                                  அவரது உறவினர்களுடைய நம்பர்களை கவனிக்க ஆரம்பித்தார்கள் காவல்துறையினர்.கேரளாவில் உள்ள ஒரு நம்பரிலிருந்து அழைப்புகள் வந்து கொண்டிருந்தன.அங்கே போய் கைது செய்து அழைத்து வந்து விட்டார்கள்.தலைமறைவாக இருந்த போது அவர் மாற்றியது மட்டும் ஏழு சிம்கார்டுகள்.தலைமறைவாகி எவ்வளவு காலத்துக்கு மனைவி,குழந்தைகளுடன் பேசாமல் இருக்க முடியும்?

                                   முன்பெல்லாம் குற்றவாளிகளை கண்டுபிடிக்க போலீஸ் ரொம்பவும் மூளையை கசக்க வேண்டியிருந்த்து.இப்போது செல்போன்கள் போதும்.குற்றவாளிகளுக்கு இனி கஷ்ட காலம்தான்.ஒருவருடைய  எல்லா நட்த்தைகளையும் எளிதாக காட்டிக்கொடுத்து விடுகிறது.நமக்கெல்லாம் எவ்வளவோ தொல்லைகள் இருந்தாலும் செல்போன்களால் கிடைக்கும் நன்மைகளும் அதிகம்.எப்படியோ குற்றங்கள் குறையுமானால் நல்லதுதானே!
-

Tuesday, July 26, 2011

மாத்திரைகள் சாப்பிடுவதுண்டா? உஷார்!


பல்வேறு பாக்டீரியா தொற்றால் ஏற்படும் நோய்களுக்கு தரப்படுவது ஆண்டிபயாடிக் மாத்திரைகள்.சாதாரண சளிக்கும் கூட அடுத்த கட்ட தொற்றை தவிர்க்க இம்மாத்திரைகள் பயன்படுத்தப்படுகின்றன.நம்மில் ஒவ்வொருவரும் இந்த மாத்திரைகளை ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் விழுங்காமல் இருந்த்தில்லை.தலைப்பில் உஷார் என்று இருப்பது நாம் உஷாராக இருக்கவேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.அரசாங்கமும் செயலில் இறங்கிவிட்ட்து.

                                    போதுமான அளவு நமக்கு பரிந்துரைக்கப்படும் மாத்திரைகளை சாப்பிடாமல் போவது பற்றி ஏற்கனவே ஒரு பதிவில் சொல்லியிருக்கிறேன்.ஆண்டிபயாடிக் மாத்திரைகள் கிட்ட்த்தட்ட கத்தி மாதிரி.சரியாக பயன்படுத்தாவிட்டால் நம்மையும் பதம் பார்த்துவிடும்.ஒரு குறிப்பிட்ட நோய்க்கு இத்தனை நாட்கள்,அளவு என்று கணக்கிருக்கிறது.முழுமையான அளவு எடுக்காமல் போனால் குறிப்பிட்ட மாத்திரைகளுக்கு கிருமிகள் பழகிவிடுகின்றன.

                                    உதாரணமாக பாக்டீரியாவால் ஏற்படும் அல்சருக்கு பதினைந்து நாட்கள் அமாக்ஸிலின் மாத்திரைகள் சாப்பிடவேண்டும் என்று வைத்துக்கொள்வோம்.நான்கு நாட்கள் சாப்பிட்டுவிட்டு நிறுத்திக்கொண்டால் அமாக்ஸிலினை எதிர்த்து கிருமிகள் வாழப்பழகிவிடும்.இதை drug resistance என்பார்கள்.இதுதான் இன்று இந்தியாவில் பெரும்பிரச்சினையாக மாறியிருக்கிறது.

                                    குறிப்பிட்ட ஆண்டிபயாடிக் வேலை செய்யாமல் போனால் அதைவிட வீரியமான வேறொன்றுக்கு மாறவேண்டும்.தவறாக பயன்படுத்தினால் வீரிய மருந்துக்கும் இதேகதிதான்.இப்படியே போனால் பெரும் சிக்கல்.பழகிவிட்ட கிருமிகள் இன்னொருவருக்கு பரவினாலும் அவருக்கும் குறிப்பிட்ட மருந்து வேலை செய்யாது.

                                    காச நோய் பாக்டீரியாவால் பரவும் நோய்.ஆறுமாதம் மருந்து சாப்பிட வேண்டும்..கொஞ்சம் அறிகுறி குறைந்தவுடன் பலர் இடையில் நிறுத்தி விடுவதால் நோய் குணமாகாமல் மீண்டும் இருமல் ஆரம்பித்துவிடும்.முன்பு கொடுத்த மருந்தை திரும்ப ஆரம்பித்தால் மருந்து வேலை செய்யாமல் நோய் அதிகரித்துக்கொண்டே போகிறது. இதற்கு இரண்டு வருடம் மாத்திரைகள் சாப்பிடவேண்டும்.

                                      ஒரு காசநோயாளி பதினைந்து பேருக்கு பரப்பிவிடுகிறார்.வீரியமடைந்த கிருமிகளை பரப்பும்போது இனி காசநோய்க்கு ஆறுமாத ம்ருந்து என்பது இரண்டு வருடமாகிவிடும்.இதே போல பல நோய்களுக்கும் ஏற்பட்டால் மனித குலத்துக்கே பெரும் அச்சுறுத்தலாகி விடும்.நமக்கு இந்த விஷயத்தில் போதுமான விழிப்புணர்வு இல்லை.விபரீதம் புரியாமல் மருந்துக்கடைகளும் நேரடியாக மாத்திரைகளை இஷ்ட்த்திற்கு விற்பனை செய்கின்றன.

                                     மத்திய அரசு இப்போது சட்ட்த்திருத்தம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளது.அதனபடி சில குறிப்ப்ட்ட மருந்துகள் நேரடியாக மருத்துவமனைகளுக்கு மட்டுமே வழங்க வேண்டும்.மருத்துவர்கள் இரண்டு வகை பரிந்துரை சீட்டுகளை கொடுப்பார்கள்.ஒன்றை மருந்துக் கடைகள் ஓராண்டுவரை பாதுகாக்க வேண்டும்.

                                    வழக்கம்போல மருந்துக்கடைகள் விற்பனை படுத்துவிடும் என்று அலறுகிறார்கள். விளைவுகளை விடவும் அவ்ர்கள் பணம் சம்பாதிப்பதே முக்கியம்.காலாவதியான மருந்தால் ஆபத்து என்றாலும் அவர்களுக்கு வருவாய் முக்கியம்.நமக்குத்தான் இவ்விஷயத்தில் விழிப்புணர்வு அவசியம்.
-

Sunday, July 24, 2011

அதிக தண்ணீர் குடிப்பது சரியா?


உயிரின்ங்கள் உயிர்வாழ அத்தியாவசியமான ஒன்று நீர்.உடலியக்கம் சீராக நடைபெற போதுமான அளவு நீர் குடிப்பது அவசியம்.கொழுப்பு நீங்கலாக உடலில் எழுபது சதவீதம் தண்ணீர்தான்.வைட்டமின்களில் பி,சி ஆகியவை தண்ணீரில் கறையும்.இம்மாத்திரைகளை எடுத்துக்கொண்ட பிறகு மஞ்சளாக சிறுநீர் வெளியேறுவதை பார்க்கலாம்.எத்தனை கிராம் வைட்டமின் எடுத்துக்கொண்டாலும் உடல் தேவையானதை எடுத்துக்கொண்டு மற்றவற்றை சிறுநீர் மூலம் வெளியேற்றி விடுகிறது.

                                   எட்டு தம்ளர் தண்ணீர் குடிக்கலாம் என்று பொதுவாக சொல்வார்கள்.ஆனால் அவரவர் வாழ்க்கை முறைக்கு தக்கவாறு அளவு நிர்ணயிக்கப்படவேண்டும்.வெயிலில் கடுமையாக உழைப்பவருக்கும்,குளிர் சாதன அறையில் அமர்ந்திருப்பவருக்கும் ஒரே அளவு பொருந்தாது.மாத்திரைகள் உட்கொண்ட நேரம் தவிர சிறுநீர் மஞ்சளாக வெளியேறினால் நீர் குறைவாக குடித்திருக்கிறீர்கள் என்று பொருள்.

                                  சர்வதேச அளவிலும் இரண்டு லிட்டர் தண்ணீர் நாளொன்றுக்கு போதுமானது என்று நிர்ணயித்திருக்கிறார்கள்.அதிகமாக தண்ணீர் குடித்தால் நல்லது என்று இஷ்ட்த்திற்கு குடித்துக்கொண்டிருந்தாலும் இதயம்,சிறுநீரகம் போன்றவை அதிக சுமைக்கு உள்ளாகும்.அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சுஎன்பது நீருக்கும் பொருந்தும்.

                                   தினமும் காலையில் ஒன்றரை லிட்டர் தண்ணீர் குடித்தால் பல நோய்கள் ஏற்படாது என்று எப்போதோ படித்த நினைவு.நிபுணர்களும் இது நன்மையைத்தரக்கூடும் என்றுதான் சொல்கிறார்கள்.குறைந்த பட்சம் மலச்சிக்கலை போக்கும்.மலச்சிக்கல் இல்லாவிட்டாலே பல நோய்கள் அண்டாது.ஒன்றரை லிட்டர் இல்லாவிட்டாலும் காலையில் தண்ணீர் குடிப்பது நல்லதுதான்.

                                   இன்று குடிநீர் மிகப்பெரிய வியாபார வாய்ப்புகளை ஏற்படுத்திவிட்ட்து.பத்தாண்டுகளுக்கு முன்புகூட இதை எதிர்பார்க்கவில்லை.சிறு நகரங்களில் கூட பல வீடுகளில் இன்று கேன் வாங்குகிறார்கள்.பாக்கெட்களில் அடைக்கப்பட்ட குடி நீர் பரபரப்பாக விற்பனையாகிறது.இவற்றில் பெருமளவு தரமற்றவை என்றும் கண்டறிந்து அழித்துக்கொண்டிருக்கிறார்கள்.

                                   சுமார் எண்பது சதவீத நோய்கள் குடிநீரால் பரவுகின்றன.முக்கியமானவை வயிற்றுப்போக்கு,டைபாய்டு,ஒருவகை மஞ்சள் காமலை போன்றவை.உலகில் அதிக குழந்தைகள் வயிற்றுப்போக்கால் உயிரிழக்கின்றன.எப்போதும் கொதிக்க வைத்த நீரைத்தான் பயன்படுத்துகிறோம்.ஆனால் என் மகனுக்கு டைபாய்டு வந்துவிட்ட்து என்று ஒருவர் சொன்னார்.இதற்கெல்லாம் வெளியில் சாப்பிடும் பழரசங்கள்,ஜஸ்கிரீம்,நீர் கலக்கப்பட்ட சட்னி போன்ற உணவு வகைகள் காரணமாக இருக்கலாம்.

                                  தர்மபுரி போன்ற சில மாவட்டங்கள் ஃப்ளூரைடு கலந்த நீரால் பாதிக்கப்பட்டிருக்கிறது.பற்கள் மஞ்சளாக இருக்கும்.எலும்பையும் பல்லையும் பாதிக்கும் இப்பிரச்சினைக்கு ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்ட்த்தை நம்பி இருக்கிறார்கள்.எப்போதோ வந்திருக்க வேண்டியது,பொக்ரான் அணுகுண்டு வெடிப்பால் தாமதமாகிவிட்ட்து.நிதியுதவி அளிப்பதை ஜப்பான் அப்போது ரத்து செய்து விட்ட்து.

                                  தேநீர்க்கடைகளில் தூசு விழுந்த நீரையும் சாதாரணமாக குடிப்பவர்களை நீங்கள் பார்க்கலாம்.அவர்கள் அதிக உடல் உழைப்பு கொண்டவர்கள்.நோய் எதிர்ப்பு ஆற்றலும் அதிகம் இருக்கும்.ஆனாலும் இது அபாயமான பழக்கம்தான்.விழிப்புணர்வு இல்லாத நிலையே காரணம்.
-

Saturday, July 23, 2011

காபி குடிப்பீங்களா?

                                 கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்களின் சந்திப்பு அது.பேராசிரியர் ஒருவரது வீட்டில் கூடினார்கள்.ஒவ்வொருவரும் வாழ்க்கையில் செட்டில் ஆகியிருந்தார்கள்.தங்கள் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்கள்.கிட்ட்த்தட்ட எல்லோரும் முணுமுணுத்தார்கள்.அவர்களது ஆதங்கத்தை கொட்டித்தீர்த்தார்கள்.வாழ்க்கை எளிதாக இல்லை.

                                  வேலை குடும்பம் என்று மனதில் ஏற்படும் இறுக்கத்தையும்,வலியையும் குறிப்பிட்டார்கள்.டென்ஷன்,டென்ஷன் என்று குரல் கொடுத்தார்கள்.கல்லூரி வாழ்க்கை போன்ற வசந்தகாலத்தை அனுபவிக்கவே முடியவில்லை.இன்றைய அவசர வாழ்வின் பரிமாணங்களை பற்றி விவாதங்கள் போய்க்கொண்டிருந்த்து.பேராசிரியர் கவனமாக கேட்டுக்கொண்டிருந்தார்.

                                  மனதளவில் பழைய மாணவர்கள் ரொம்பவும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.அவர்களுக்கு காபி தரவேண்டுமென்று முடிவு செய்து அவரே தயாரிக்க கிளம்பினார்.மற்றவர்கள் தங்கள் மலரும் நினைவுகளை அசை போட்டுக்கொண்டிருந்தார்கள்.பேராசிரியர் காபி தயாரித்து முடித்துவிட்டார்.வந்திருக்கும் அனைவருக்கும் வீட்டிலிருக்கும் காபி கப்,தம்ளர்கள் போதாது.

                                   பேப்பர் கப்போ,பிளாஸ்டிக் கப்போ வாங்கிவரலாமென்றால் கடையும் வெகு தூரம்.வீட்டில் இருப்பதை வைத்தே சமாளித்து விடலாமென்று முடிவு செய்து விட்டார்.பீரோவில் இரண்டு வெள்ளித்தம்ளர்கள் இருந்த்து.சில கண்ணாடி தம்ளர்கள்,சில்வர்,மண் குவளை என்று விதம்விதமான கப்களையும்,தம்ளர்களையும் பிடித்து விட்டார்.ஒரு வழியாக வந்திருக்கும் அனைவருக்கும் ஏற்பாடு செய்தாகிவிட்ட்து.

                                   காபியை கப்களிலும்,தம்ளர்களிலும் அவரே ஊற்றி அனைவரையும் எடுத்துக்கொள்ளச்சொன்னார்.மாணவர்களும் ஆளுக்கொன்றை எடுத்துக்கொண்டார்கள்.சிலர் காபி குடிக்கும் பழக்கம் இல்லை என்று மறுத்து விட்டார்கள்.அதனால் சில கப்களும்,தம்ளர்கள் மட்டும் டேபிளிலேயே இருந்த்து.டேபிளில் மீதமிருக்கும் கப்களை கவனியுங்கள்’’ என்றார் பேராசிரியர்.

                                   யாரும் எடுக்காத மிச்சமிருக்கும் குவளைகள் விலை குறைவானவை மற்றும் அழகில்லாதவை.பேராசிரியர் பேசினார்.நான் கவனித்துக்கொண்டிருந்தேன்,முதலில் எடுக்க வந்தவர்கள் அதிக விலையுள்ள கப்களையும்,அழகானவற்றையும் எடுத்தார்கள்.அனைவரது கையும் அவற்றுக்குத்தான் நீண்டன! ஏன்? நீங்கள் குடிக்கப்போவது காபியத்தானே? கப்பையோ,தம்ளரையோ இல்லையே?

                                  பெரும்பாலானவர்களுக்கு வரும் மன இறுக்கமும்,கவலைகளும் இந்த வகைதான்.காபியை மறந்து விட்டு கப்பை பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்.வாழ்க்கையை வாழ்வதை விட்டுவிட்டு வறட்டு கௌவரவத்துக்காக அவசியமில்லாத்தை தேடி டென்ஷன் ஆகிறீர்கள்.தூக்கம்கெட்டு தவிக்கிறீர்கள்.அப்புறம் மன அழுத்தம்,கவலை என்று போய்க்கொண்டிருக்கிறது வாழ்க்கை.

                                   எளிதாக புரியும் விஷயம்தான்.கொஞ்சம் யோசித்தால் நாமும் சந்தோஷத்தை வரவழைத்துக்கொள்ளலாம்.கப்பை விட்டுவிட்டு நாம் காபியை கவனிப்போம்.(எனக்கு மெயிலில் வந்த்து)
-