Tuesday, October 25, 2011

பீர் தீபாவளியா? குவார்ட்டர் தீபாவளியா?

                          குடிக்கத் துவங்கும் பலர் தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில்தான் ஆரம்பிக்கிறார்கள் என்று சொல்கிறார்கள்.(நிறைஞ்ச அமாவாசை என்பதனாலா?).அதுவும் பீரில் ஆரம்பித்து அடுத்த தீபாவளிக்குள் குவார்ட்டருக்கு வந்து விடுவார்கள். வருடாவருடம் தீபாவளிக்கு மது விற்பனை விண்ணைத்தொடுகிறது.எப்போதாவது குடிப்பவர்களும் இந்த மாதிரி நாட்களை தவரவிடுவதில்லை.ஏன் என்பதற்கான அலசல் ஏற்கனவே எழுதப்பட்ட பதிவிலிருந்து...
                           தீபாவளி மட்டுமல்ல,பொங்கல் ,திருவிழாக்கள்,திருமணம்,சடங்குகள் என்று விழா நாட்களில் மது விற்பனை எதிர்பாராத அளவிற்கு அதிகரிக்கிறது.பண்டிகைகளுக்கும் மதுவிற்கும் பாரம்பரிய தொடர்பு எதுவும் இல்லை.பின் ஏனிந்த மோகம்?
பெண் வீட்டார் ஒருவர் உறவினர் ஒருவரை கேட்டார்கள் "அந்த பையன் எப்படி?கெட்ட பழக்கம் ஏதாவதுஉண்டா?".பதில்:"இந்தக்காலத்தில் குடிக்காதவர்கள் யார் இருக்கிறார்கள்?இந்த பதிலில் மாப்பிள்ளை பற்றிய பொய்யும்,சமூகத்தை பற்றியஓரளவு உண்மையும் இருக்கிறது.

நண்பேண்டா -சொல்ல ஆளில்லை!
எல்லா பண்டிகை காலங்களிலும் வழக்கமாகவே நான் தனிமையை அனுபவித்திருக்கிறேன்.எனக்கு குடிக்கும் பழக்கம் இல்லை என்பதால்தான் என்பதை வெகு காலம் கழித்து உணர்ந்தேன்.அதேபோல நண்பர்களின் திருமணத்திற்கு காலையில் முகூர்த்தத்துக்கு செல்வதை வழக்கமாக்கிக்கொண்டேன்.முந்தைய இரவில் சென்றால் தனியாக அலைய வேண்டும்.குடிக்காத சில நண்பர்கள் இருந்தாலும் எல்லா நேரங்களிலும் உடன் இருப்பதில்லை. எனக்கு நண்பர்கள் குறைவாக இருப்பதற்கு மதுப்பழக்கம் இல்லாமல் இருப்பது ஒரு காரணமா என்று தெரியவில்லை.விழாக்காலங்களில் மது மீது அதிக ஆர்வம் உள்ள சிலர் தங்களது குற்ற உணர்வை -சமூகம் தவறென்று சொல்லித்தந்திருக்கிறது-குறைத்துக்கொள்ள குழுவை சேர்த்துவிடுகிறார்கள்.
விழாக்கால மனப்பாங்கு!

விழா நாட்களில் கூட்டம் கூடுவது இயல்பு.அறிமுகமாகாதவர்கள்,உறவினர்கள்,ஊர்க்காரர்கள் என்று பொது இடங்களில் சந்திக்க வேண்டியிருக்கிறது.எல்லோரும் நம்மை முக்கியமாக கவனிக்கவேண்டும் என்ற எண்ணமும்,கவனிப்பார்களா?என்ற கலக்கமும்,அதன் தொடர்ச்சியாக பதட்டமும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.நாலு பேருக்கு முன்னால் பேசவோ இயங்கவோ நமக்கு எப்போதும் கொஞ்சம் தயக்கம்தான்.பெரும்பாலான குற்றச்செயல்களும் மதுவுடன் தொடர்பு கொண்டுள்ளன.மது பதட்டத்தை குறைத்து செயல்பட தூண்டுகிறது.எனக்கு ஒரு நண்பனை தெரியும்.தண்ணி அடித்த பிறகுதான் போனை எடுத்து பெண்களிடம் பல மடங்கு பேசுவான்.அவனே நேரில் அதிகம் பேசாமல் இருப்பதை பார்த்திருக்கிறேன்.மிதமான போதை இருந்தால் விழா நேரங்களில் பெண்ணிடம் மட்டுமல்லாமல் அனைவரிடமும் எளிதாக பதட்டமின்றி,என்ன நினைப்பார்களோ?என்ற எண்ணமின்றி இயங்கலாம்.

வேறு என்னதான் செய்வது?
பண்டிகை என்று சொல்கிறார்கள்,விழா என்று சொல்கிறார்கள்.இனிப்பும்,விருந்தும் சாப்பிட்டு விட்டால் போதுமா?மன எழுச்சி குறையவேயில்லை.நண்பர்கள் இலவசமாக வாங்கித்தருவதாக அழைக்கிறார்கள்.வேறு என்னதான் செய்வது?
மாறிவரும் மதிப்பீடுகள்:
அலுவல் தொடர்பான கூட்டங்களில் ,விருந்துகளில் மது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது.மிதமான போதையில் பேசிக்கொண்டிருப்பதுதான்பலருக்கு மகிழ்ச்சியாக ,உணர்வுகளை தயக்கமின்றி வெளிப்படுத்த உதவுவதாக இருக்கிறது.மதுவால் ஏற்படும் சமூகக்கேடுகள்,சீரழிவுகள்,தனிமனிதனுக்கு உடலநல பாதிப்புகள் எல்லாமும் பின்தள்ளப்பட்டு இன்றைய நாகரீகமாக மாறுவதற்கு நுகர்பொருள் கலாச்சாரமும்,அதன் விளைவாக ஏற்பட்ட அடையாள சிக்கல்களும் ஒரு காரணம்.தவிர,இளைஞர்களுக்கு நல்ல முன்மாதிரியும் இல்லை.

-

18 comments:

ஸ்ரீராம். said...

உங்கள் பதிவுக்குப் பரிசாக 'டாஸ்மாக் ஊழியர்களுக்கு இருபது சதவிகித போனஸ்' செய்தியை நினைவு படுத்துகிறேன்!

ஒரு ஜோக்.

மாப்பிள்ளை சிகரெட் பிடிப்பாரா, மது குடிப்பாரா சீட்டு விளையாடுவாரா, சூதாடுவாரா என்றெல்லாம் கேட்டபோது 'அப்படியெல்லாம் ஒரு கெட்டபழக்கமும் இல்லை' என்றார்களாம். 'ஒரு கெட்டபழக்கமுமே இல்லையா' என்று கேட்டபோது 'பொய் மட்டும் சொல்வார்' என்றார்களாம்!

தீபாவளி நல்வாழ்த்துகள்.

இராஜராஜேஸ்வரி said...

எச்சரிக்கைப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

தீபாவளி நல் வாழ்த்துக்கள்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

குடிக்கும் பழக்கம் இல்லாதவர்கள் இக்காலத்தில் அதிகம் தனிமையைச் சந்திக்க வேண்டி இருக்கும் சூழல்தான் உள்ளது.....

அனைவருக்கும் இனிய தீபாவளித்திருநாள் நல்வாழ்த்துக்கள்!

shanmugavel said...

@ஸ்ரீராம். said...

உங்கள் பதிவுக்குப் பரிசாக 'டாஸ்மாக் ஊழியர்களுக்கு இருபது சதவிகித போனஸ்' செய்தியை நினைவு படுத்துகிறேன்!

ஒரு ஜோக்.

மாப்பிள்ளை சிகரெட் பிடிப்பாரா, மது குடிப்பாரா சீட்டு விளையாடுவாரா, சூதாடுவாரா என்றெல்லாம் கேட்டபோது 'அப்படியெல்லாம் ஒரு கெட்டபழக்கமும் இல்லை' என்றார்களாம். 'ஒரு கெட்டபழக்கமுமே இல்லையா' என்று கேட்டபோது 'பொய் மட்டும் சொல்வார்' என்றார்களாம்!

தீபாவளி நல்வாழ்த்துகள்.

நன்றி அய்யா! உங்க ஜோக் சூப்பர்.

shanmugavel said...

@இராஜராஜேஸ்வரி said...

எச்சரிக்கைப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

தீபாவளி நல் வாழ்த்துக்கள்..

தங்கள் பாராட்டுக்கும்,வாழ்த்துக்கும் நன்றி

shanmugavel said...

@பன்னிக்குட்டி ராம்சாமி said...

குடிக்கும் பழக்கம் இல்லாதவர்கள் இக்காலத்தில் அதிகம் தனிமையைச் சந்திக்க வேண்டி இருக்கும் சூழல்தான் உள்ளது.....

அனைவருக்கும் இனிய தீபாவளித்திருநாள் நல்வாழ்த்துக்கள்!

ஆம அய்யா! தங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.

மகேந்திரன் said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் மனம்நிறைந்த
இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

Unknown said...

நீங்கள் சொல்வது சரியே....தனிமையில் ஏற்ப்படும் கெட்ட பழக்கங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன...இதற்க்கு சரியான காரணம் மனிதனின் மனதுக்குள் இருக்கும் எதிர் மறை குணம்....நல்ல குணம் வேண்டாம் என்று தடுத்தாலும்...எதிர் மறை குணமே அதிகமாக வெல்லுகிறது!...

இனிய தீபாவளித்திருநாள் நல்வாழ்த்துக்கள்!

SURYAJEEVA said...

என் நண்பர், விஜய் பாஸ்கரன் அண்ணன் எப்பொழுதும் தனியாகவே குடிக்க செல்வார்... நண்பர்களை உடன் அழைத்து செல்ல மாட்டார்... என்னால் அவன் கெட்டான்னு ஒரு குற்ற உணர்ச்சி இருக்க கூடாது பாரு... அதனால் தான் என்பார்... அவரும் குடிப்பதை நிறுத்த முயற்சி செய்து கொண்டிருக்கிறார்... ஒவ்வொரு நண்பனும் தன நண்பனை கெடுக்க கூடாது என்ற நல்ல எண்ணம் இருந்தால் குடிப்பது தானாகவே நின்று விடும்...

வவ்வால் said...

ஹி ஹி.. நீர் என்ன அம்புட்டு நல்லவரா போடுறது எல்லாம் பிக்காலிப்பதிவு, இதுல அட்வைசு வேறயா? அமெரிக்காகாரன் ஐபாட் கண்டு புடிச்சா வாங்கி மகிழ்கிறிங்க, அவனே ஹோம் மேட் பீர் மெசின், விஸ்கி மெசின் விக்கிறானே ஏன், வீட்ல காய்ச்சி குடிக்கத்தானே? முடிஞ்சா எனக்கு ஒரு மெசின் வாங்கி தாரும். ஆன்லைன்ல ஆர்டர் பண்ண முடியலை.

இப்போ கூட 1/2 அடிச்சுட்டே இருக்கேன் ..தீவாளியாவது காவாளியாவது... நமக்கு எல்லா நாளும் ஒரு நாளே(லீவ் விட்டா வேற என்ன தான் பண்றது)

Unknown said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

அம்பாளடியாள் said...

என் இனிய தீபத்திருநாள் நல் வாழ்த்துக்கள் உங்களிற்கும் உங்கள்
உறவினர்களிற்கும் !......
வாழ்க என்றும் பல்லாண்டு நல் வளமும் நலனும் பெற்று இங்கே
மிக்க நன்றியும் வாழ்த்துக்களும் உங்கள் சிறந்த பகிர்வுக்கு ........

ராஜா MVS said...

இன்றைய பதிவு அருமை...
தேவையான பதிவும் கூட...


என் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்... நண்பரே...

Sankar Gurusamy said...

நண்பர்கள் அதிகம் அமைவதற்கு குடிப்பழக்கமும் புகைப்பழக்கமும் முக்கிய காரணிகள். ஆனால் அவையே முழுக் காரணிகள் அல்ல.

உண்மையில் நம் சமூகம் நுகர்வுக் கலாச்சாரத்தின் ஒரு பின் விளைவான குடிப்பழக்கம் இயல்பானதுதான் என்ற சிந்தனைக்கு வந்திருக்கிறது. இது இன்னும் விரிவடைந்து எல்லா விசயங்களிலும் பிரதி பலிக்கும் நாள் வெகு தூரம் இல்லை.

சிறப்பான பதிவு. பகிர்வுக்கு மிக்க நன்றி..

http://anubhudhi.blogspot.com/

சென்னை பித்தன் said...

பார்ட்டி என்றாலே தண்னி என்ற ஒரு தவறான கலாசாரம் உருவாகி விட்டது.

ஓசூர் ராஜன் said...

நம்ம வள்ளுவரு,கள் உண்ணாமை என்று ஒரு அதிகாரமே குடியைப் பற்றி எழுதியதுடன் நிற்கவில்லை. "எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்மெய்ப் பொருள் காண்பது அறிவு" என்ற குறளையும் தந்துள்ளார்! நல்லவற்றை எற்றுக்கொள்ளும் நாகரீகம் கூட குறைந்து வருகிறது என்பது போல வவ்வால் நண்பர் கருத்து சொல்லியுள்ளது உள்ளது! நல்ல,சிந்தனைப் பதிவுக்கு எனது வாழ்த்துக்கள்!

shanmugavel said...

அனைவருக்கும் நன்றி.

நிரூபன் said...

அருமையான பதிவு அண்ணா,
பண்டிகைகளில் குடிக்கத் தொடங்கிப் பின்னர் வாழ் நாள் பூராவும் குடி மகனாகுவோர் பற்றிய உதாரண விளக்கப் பதிவு.