Pages

Wednesday, December 29, 2010

அவரவர் கஷ்டம்


அந்தத் தொலைபேசி

உரையாடலுக்குப் பிறகு

பேசும் கருவியை

உடைத்து விட்டான்.

கண்களில் நீர்

கைகளில் நடுக்கம்

சுய நினைவின்றி

புகைத்துக் கொண்டிருந்தான்.

என்ன நடந்தது?

ஏன் கேட்கிறீர்கள்?

யாருடைய கண்ணீரையாவது

துடைக்க

உங்களுக்கு மனமிருந்தால்

உங்கள் அருகே

உங்கள் வீட்டில்

உங்கள் தெருவில்

அதை செய்யுங்கள்.

வம்புக்கு

அலைய வேண்டாம்.

அவரவர் கஷ்டம்

அவரவருக்கு.





2 comments:

  1. செய்யலாமே ...நல்ல வரிகள்

    ReplyDelete
  2. கருத்துக்கு நன்றி,அரசன்

    ReplyDelete