Pages

Tuesday, January 4, 2011

தமிழன் என்ற சொல்


தமிழன் என்ற சொல்

குற்ற உணர்வு தரும்

சொல்லாகிவிட்டது
எனக்கு

இறக்கும் வரை

தவிக்க வேண்டும்

நெஞ்சில் குத்திய

முள்ளுடன்

முள்ளும் வேலியும்

உடல்சுற்றி

கனவில்

கனவு கலைந்து

தாகத்தில்

நீர் அருந்தும்போது

நினைவுக்கு வருகிறது

உயிர் நீரும்

வாய்க்காத

உதிரங்கள்

2 comments:

  1. //தமிழன் என்ற சொல்

    குற்ற உணர்வு தரும்

    சொல்லாகிவிட்டது
    எனக்கு//

    வேண்டாம்
    மீண்டும் எழுவோம்
    தமிழன் என்றால் உலகே அதிசயிக்கும்

    ReplyDelete
  2. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே!எனக்கும் நம்பிக்கை இருக்கிறது.

    ReplyDelete