Pages

Monday, May 23, 2011

துயரம் மனிதனை கவர்வது ஏன்?


மைனா திரைப்படத்தில் ஏன் பிரபு சாலமன் நாயகனையும்,நாயகியையும் சாகடித்து துயரமான முடிவைத்தந்தார்?ஏன் சந்தோஷமாக வாழ விடவில்லை? உலகின் மிகச்சிறந்த இலக்கியங்கள் துயரச்சுவை கொண்டவையாக உள்ளன.(ஷெல்லி என்று நினைக்கிறேன்).ஏன்?துயரம் மனிதர்களுக்கு பிடித்துப்போகிறதா?அதில் என்ன ஆனந்தம் இருக்கிறது?துக்கத்தில் மனிதன் தன்னை உணர்கிறானா?அல்லது பிரபஞ்சம் பற்றிய சிந்தனையில் விழுந்து உழல்கிறானா? துயரம்தான் மனிதனை மனிதனாக பார்க்கச்செய்கிறதா?


துக்கத்தில் மனிதன் செய்வதறியாது திகைத்து நிற்கிறான்.கடவுளை நிந்திக்கிறான்.அல்லது அடி மனதிலிருந்து கெஞ்சுகிறான்.கோரிக்கை வைக்கிறான்.சமாதானத்தை தேடுகிறான்.சிலர் குழந்தையை போல ஆகி விடுகிறார்கள்.ஏதேனும் போதையை தேடி ஓடுகிறார்கள்."நடப்பதெல்லாம் நன்மைக்கே" "எல்லாம் கடவுள் செயல்""முன் ஜென்மத்தில் செய்த பாவம்"-ஏதேதோ சமாதானங்கள்.கடவுள் ஏன் கருணையின்றி இருக்கிறார்?

கோமல் சுவாமிநாதன் சுபமங்களா பத்திரிக்கைக்கு ஆசிரியராக இருந்தார்.நான் அதன் வாசகனாக இருந்தேன்.எனக்கு தமிழின் சமகால இலக்கியம் பற்றி ஓரளவு அறிமுகம் கிடைத்தது.சுந்தர ராமசாமியின் நாடகம் ஒன்றை படித்துவிட்டு அவருக்கு கடிதம் எழுதினேன்.அஞ்சல் அட்டையில் எழுதிய கடிதம்.நாடகத்தை பற்றி சிலவரிகள் எழுதிவிட்டு கொஞ்சமும் தொடர்பில்லாமல் இதை எழுதினேன்."துயரமான முடிவைக்கொண்ட கலை இலக்கியங்களே உலகின் சிறந்த இலக்கியமாக திகழ்கிறது "என்று சொல்லப்படுகிறது.உலகம் ஒரு நாடக மேடை என்று சொல்கிறார்கள்.அப்படியானால் கடவுள் படைக்கும் இலக்கியம்தானே உலகம்? அவரது படைப்பு மட்டும் எப்படி துயரம் இல்லாமல் இருக்கும்?


நான் எதிர்பார்க்கவில்லை! சில தினங்களில் சுந்தர ராமசாமி அவர்களிடமிருந்து அஞ்சல் அட்டை வந்திருந்தது.அதில் இருந்த வரிகள் "அந்த வரிகள் என்னைக்கவர்ந்தன.உங்களுக்கு சில பத்திரிக்கைகளையும்,சஞ்சிகைகளையும் அனுப்புகிறேன் ".எனக்கு இரண்டு காலச்சுவடு பிரதிகளை அனுப்பியிருந்தார்.முக்கியமான அறிமுகம்.ஒருநாள் நேரில் சந்திக்க நினைத்திருந்தேன்.முடியாமலேயே போய்விட்டது.

நாம் ஏதேதோ காரணங்களை தேடுகிறோம் அவ்வளவுதான்.ஏனென்று தெரியாமலேயே எல்லாவற்றையும் அனுபவித்து ஆகவேண்டும்.ஜோதிட நண்பன் இன்னொரு காரணம் சொன்னான்.குரு நல்ல கிரகம்.ஐந்து இடங்களில் தான் நல்லது செய்வார்.ஏழு இடங்களில் நல்ல பலன்கள் இல்லை.சனி மூன்று இடங்களில் தான் நல்லது செய்வார்.குரு சுக்கிரன்,புதன் நல்ல கோள்கள்.சந்திரன் வளர்பிறையில் நல்லவர்.சனி,செவ்வாய் சூரியன்,ராகு கேது என்று மற்ற கிரகங்கள் பொதுவாக நல்லதாக இல்லை.எனவே உலகில் நன்மை குறைவுதான்.அவர் வழியில் இது ஒரு காரணம்.

கலை,இலக்கியங்கள் துயரங்களை சொல்வது மூலம் நம்மை மென்மையாக்குகின்றன.மற்றவர்களை புரிந்துகொள்ளும் திறன் அதிகரிக்கிறது.உதவும் மனப்பான்மை உருவாகிறது.மனிதர்களாக அடுத்தவர் உணர்வுக்கு மதிப்பளிக்கிறோம்.நண்பர்களின்,உறவினர்களின் துயரங்களில் நாம் முழுமையாக உதவுவோம்.


12 comments:

  1. இப்பதான் ஒரு பதிவுக்கு கம்மன்ட் போட்டேன்னு நினைக்கிறேன்.

    ReplyDelete
  2. எத்த கருத்தை எடுத்தாலும் பாஸ் பின்னுறார்..நெசமாலுமே கவுன்சிலர் தான் போங்கள்!!

    ReplyDelete
  3. அண்ணே! இந்த உலகத்துல சோகத்தை ரசிக்கிறவங்க இருக்காங்க! விரும்பி சோகத்தை வரவழைச்சு, அதுல சுகம் கானுறவங்க இருக்காங்க! மகிழ்ச்சியா இருக்குறது தப்புன்னு நெனைக்கிரவங்களும் இருக்காங்க! ரொம்ப சந்தோசமா இருந்தா, அத தொடர்ந்து துன்பம் வரும் அப்டீன்னு நம்புறவங்க இருக்காங்க!! எல்லாமே உளவியல்.




    மனிதர்கள் பலவிதம்!! உங்க ஆய்வு அருமை அண்ணே!!

    ReplyDelete
  4. நண்பர்களின்,உறவினர்களின் துயரங்களில் நாம் முழுமையாக உதவுவோம். //
    பயனுள்ள கருத்து

    ReplyDelete
  5. "துயரமான முடிவைக்கொண்ட கலை இலக்கியங்களே உலகின் சிறந்த இலக்கியமாக திகழ்கிறது "என்று சொல்லப்படுகிறது.உலகம் ஒரு நாடக மேடை என்று சொல்கிறார்கள்.அப்படியானால் கடவுள் படைக்கும் இலக்கியம்தானே உலகம்? அவரது படைப்பு மட்டும் எப்படி துயரம் இல்லாமல் இருக்கும்?"

    வாவ்..இந்த இடங்களில் நானும் ஸ்தம்பித்து நின்றது உண்மை. உண்மைதான் துயரங்கள் எம்மை மேன்மைப்படுத்துகன்றது. நல்ல நண்பர்கள், தீய நண்பர்களை இனங்காட்டிவிடுகின்றது. அருமை ஐயா.. பதிவுலகில் தங்களைப்போன்றவர்களின் பதிவுகள். நெஞ்சில் ஒரு ந்ம்பிக்கையினை ஏற்படுத்தி விடுவது மிகப்பெரிய உண்மை.

    ReplyDelete
  6. @!* வேடந்தாங்கல் - கருன் *! said...

    இப்பதான் ஒரு பதிவுக்கு கம்மன்ட் போட்டேன்னு நினைக்கிறேன்.

    ok sir .thank you

    ReplyDelete
  7. @மைந்தன் சிவா said...

    எத்த கருத்தை எடுத்தாலும் பாஸ் பின்னுறார்..நெசமாலுமே கவுன்சிலர் தான் போங்கள்!!

    நன்றி சிவா

    ReplyDelete
  8. @ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

    அண்ணே! இந்த உலகத்துல சோகத்தை ரசிக்கிறவங்க இருக்காங்க! விரும்பி சோகத்தை வரவழைச்சு, அதுல சுகம் கானுறவங்க இருக்காங்க! மகிழ்ச்சியா இருக்குறது தப்புன்னு நெனைக்கிரவங்களும் இருக்காங்க! ரொம்ப சந்தோசமா இருந்தா, அத தொடர்ந்து துன்பம் வரும் அப்டீன்னு நம்புறவங்க இருக்காங்க!! எல்லாமே உளவியல்.




    மனிதர்கள் பலவிதம்!! உங்க ஆய்வு அருமை அண்ணே!!


    நன்றி தம்பி.உன்னுடைய கருத்துக்களும் அருமை.

    ReplyDelete
  9. @இராஜராஜேஸ்வரி said...

    நண்பர்களின்,உறவினர்களின் துயரங்களில் நாம் முழுமையாக உதவுவோம். //
    பயனுள்ள கருத்து

    தங்கள் கருத்துரைக்கு நன்றி மேடம்.

    ReplyDelete
  10. @Jana said...


    நன்றி ஜனா

    ReplyDelete
  11. துயரத்தின் இரு பக்கப் பார்வையினையும் அழகிய அனுபவ உணர்வுகள் மூலமாகச் சொல்லியிருக்கிறீர்கள் சகோ.

    ReplyDelete
  12. கஷ்டத்தில் கை கொடுப்பது என்பது மனித நேயத்தின் வழிகாட்டல். I totally agree with your words.

    ReplyDelete