Pages

Thursday, September 22, 2011

பெண் பார்க்கப்போய் காலில் விழுந்த பதிவர்-காமெடிபீஸ்


                             சில வலைப்பதிவுகளைப் படிப்பது வாழ்க்கையில் எந்தமாதிரியெல்லாம் கஷ்டம் தரும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்.கல்யாணமாகாத இளம்பெண்ணென்றால் சொல்லத்தேவையில்லை.பல்லைக்கடித்துக்கொண்டு படித்தால் கொஞ்சம் கொஞ்சமாக புரியும்.விவரமாகச் சொல்கிறேன்.

                             தனக்குக் கல்யாணமாகவில்லை என்று மனம் நொந்து எழுதிய பதிவை படித்தார் அந்த இளம்பெண்.என்ன நேரத்தில் படித்த்தோ தெரியவில்லை.அவ்வளவு நாளும் கல்யாணத்தின் மீது இருந்த வெறுப்பு மாயமாய் மறைந்து விட்ட்து.கல்லும் கரையும் என்பார்களே? இங்கே கரைந்து கடலில் கலந்து விட்ட்து.பெண்ணுக்கு காதலும்,கல்யாண ஆசையும் துளிர்த்து விட்ட்து.

                             ஆசைஆசையாய் வலைப்பதிவருக்கு தனது காதலை இல்லை,உயிரையே கொட்டி எழுதினார் காதல் கடிதம்.கல்யாணத்திற்கு அழைப்பாகவும் கருதலாம்.அந்தக் கடிதம் கீழே!

அன்பே,

                              உங்களைப் பார்ப்பதற்காக தூங்காமல் காத்திருப்பேன்.குளிக்காமல் உட்கார்ந்திருப்பேன்.நீங்கள் பெண் பார்க்க வரும் வரை வாசலை விட்டு எழுந்து உள்ளே போக மாட்டேன்.நீங்கள் எதற்காக பதிவு எழுத வேண்டும்? நான் ஏன் அதை விடிகாலையில் படிக்கவேண்டும்? இப்போது புரிந்துவிட்ட்தா? இருவருக்கும் கல்யாணமாகவில்லை.இனி நீங்களில்லாமல் என்னால் நடக்க முடியாது,ஓட முடியாது,கோலம் போட முடியாது! கீழ்கண்ட முகவரிக்கு உடனே வரவும்.

                              இளம்பெண் பழசை மறக்காதவர்.தான் வளர்க்கும் புறா காலில் கட்டி பதிவரிடம் தனது கடித்த்தை சேர்க்குமாறு அனுப்பினார்.கடித்த்தை படித்த பதிவருக்கு தலை சுற்றாமலா இருக்கும்.ஆஹா! நம்முடைய எழுத்தையும் படித்து நம்முடைய அறிவில் மயங்கி ஒரு பெண்ணுக்கு வந்த காதல்!

                              கடிதம் கிடைத்த்வுடன் புறப்ப்ட்டு முகவரி கண்டு பிடித்து ஊர் போய் சேர்ந்து விட்டார்.உண்மையில் அந்த பெண்ணும் வாசலில்தான் இருந்த்து.பதிவருக்கு அதைப் பார்க்க எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்!ஆமாம்,உலகத்தில் இருக்கும் அத்தனை காதலும் அவருக்கு வந்து விட்ட்து.அவர்களது காதலையும்,உணர்ச்சிவேகத்தயும் கண்ட காக்கைகள் அலறி அடித்து ஓடின.

                              வீட்டுக்குள்ளே அழைத்துச்சென்றவுடன் உங்களிடம் நான் நிறைய பேச வேண்டும் என்றார் பெண்.’’தாராளமாக! அதற்குத்தானே வந்திருக்கிறேன்!

’’ உங்களுக்கு வடிவேல் பிடிக்குமா? விவேக்கா?’’

இது எதற்கு என்று பதிவருக்கு தோன்றினாலும்சொல்லி வைத்தார்,’’வடிவேல்

ச்சீ நீங்கள் ரொம்ப மோசம்,எனக்கும்தான்! பாவம் போக்கிரியில் அசினை உயிருக்கு உயிராக காதலிப்பார்,நடுவில் விஜய் வந்து கெடுத்து விட்டார்.அவர் மனசு எப்படி இருந்திருக்கும்?’’ நகைச்சுவை உணர்வு நிரம்பியவர் என்று பதிவருக்கு தோன்றியது.

’’உங்களுக்கு சமைக்கத்தெரியுமா?’’ஆண்கள் சமைத்தால் ருசியாக இருக்கும் என்று என் தோழி சொன்னாள்.’’

இந்த அதிரடியை நம்ம ஆள் எதிர்பார்க்கவில்லை! “ தெரியாது என்றார்

நீங்கள் கவலைப்படவேண்டாம்,எள்ளுருண்டை செய்ய உங்களுக்குத் தெரியும்தானே? அது போதும்.நான் தினம் இரண்டு எள்ளுருண்டை மட்டும் சாப்பிட்டு உயிர் வாழ்வேன்

பதிவருக்கு குழப்பம் வந்தாலும் விடவில்லை.உயிர் வாழ்வது எங்கே! என் உயிரை எடுப்பாய்! அதில் இரண்டு வைட்டமின் தான் இருக்கிறது,வைட்டமின் சி இல்லை.அது நல்லதுதான்.ஆனால் மற்ற உணவும் வேண்டும்.நிரூபன் பதிவை படித்தீர்களா? சலிப்புடன் கேட்டார்.

உங்களுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம் என்று எனக்குத் தெரியும். நீங்கள் நிரூபன் இல்லாமல் வேறு யாராம்?

என்னது? நான் நிரூபன் இல்லை! நீ நிரூபனை காதலிக்கிறாயா?

ஆமாம்,நான் அவருக்குத்தான் கடிதம் எழுதினேன்,என்றார் அதிர்ச்சியுடன்.

பதிவர் மயக்கம்போட்டு பெண்ணின் காலடியில் விழுந்துவிட்டார்.நீங்கள் காலில் விழுந்தாலும் நான் நிரூபனைத்தான் காதலிப்பேன்இவ்வார்த்தை பதிவரின் காதில் விழவில்லை.மயங்கிக் கிடந்தார்.புறா ஓரமாக நின்று சிரித்துக்கொண்ட்து.காமெடி செய்யலாம் என்று திட்டமிட்டு வேறு பதிவரிடம் கடித்த்தை கொடுத்துவிட்ட்து..

டிஸ்கி: பதிவர்கள்,அதிலும் கல்யாணமாகாதவர்கள் பிளாக்கில் போட்டோ போட வேண்டும்.






45 comments:

  1. கலக்கல் கடிதமுங்கோ மாப்ள!

    ReplyDelete
  2. ilampengalukkaana vilippunarvu pathivaa?vaalthukal

    ReplyDelete
  3. அருமையான கடிதப்பரிமாற்றம்.

    புறா மட்டுமா சிரித்தது????

    ReplyDelete
  4. நல்ல நகைச்சுவை பதிவு...

    பகிர்வுக்கு நன்றி..

    http://anubhudhi.blogspot.com/

    ReplyDelete
  5. இனிய காலை வணக்கம் பாஸ்..

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    நல்லாத் தான் தாழிச்சிருக்கிறீங்க.

    ReplyDelete
  6. சில வலைப்பதிவுகளைப் படிப்பது வாழ்க்கையில் எந்தமாதிரியெல்லாம் கஷ்டம் தரும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்//

    ஆமா...என் பதிவினைப் படித்தாலும் கஷ்டம் கிடைக்குமா...

    கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete
  7. டிஸ்கி: பதிவர்கள்,அதிலும் கல்யாணமாகாதவர்கள் பிளாக்கில் போட்டோ போட வேண்டும்.//

    அவ்............

    அப்ப இன்னையிருந்து போட்டோ போடுறேன்...........

    ReplyDelete
  8. அண்ணே,
    ஒரு சிறிய வேண்டுகோள்,

    தொடர்ச்சியாக இனிமேல் கவுன்சிலிங் பதிவுகள் தராமல்,
    இப்படிச் சிரித்து மகிழ வைக்கக் கூடிய பதிவுகளையும் கலந்து கட்டித் தாருங்கோ.

    ReplyDelete
  9. விரிவான கமெண்ட் போட பின்னர் வருகிறேன்.

    ReplyDelete
  10. “வேறு பதிவரிடம் கடித்த்தை“

    அன்பு நண்பரே..
    நீங்க என்எச்எம் எழுதியைப் பயன்படுத்துகிறீர்களா.??

    அதில் இத்தகு பிழை பாமினி எழுத்துருவில் வருகிறது...

    ReplyDelete
  11. சூப்பர் புறாவா இருக்கே?

    ( யாருப்பா அது நம்ம சண்முகவேல் அண்ணனை புறாவா பயன்படுத்தினது?)

    ReplyDelete
  12. அண்ணே உங்களால இப்படியும் பதிவு போட முடியுமா? கலக்கிட்டீங்க! நிரூபன்......ஹஹ ஹா ஹா!

    ReplyDelete
  13. நிரூபன் மேலே என்ன சார் கோபம், அது சரி காலில் விழுந்த பதிவர் யார் அதை சொல்லலையே?

    ReplyDelete
  14. நிரூபன் அதிர்ஷ்டசாலி ,தப்பிசுடாறு



    சிறை என்னை வாட்டுகிறது - கனி மொழி

    ReplyDelete
  15. நிரூபனுக்கு இப்படி ஒரு சாட்டையடியா ஐயா நல்ல நகைச்சுவையாகத்தான் இருக்கின்றது!

    ReplyDelete
  16. @விக்கியுலகம் said...

    கலக்கல் கடிதமுங்கோ மாப்ள!

    நன்றி,நன்றி

    ReplyDelete
  17. @ராஜன் said...

    ilampengalukkaana vilippunarvu pathivaa?vaalthukal

    ஹாஹா ஆமா சார்,நன்றி

    ReplyDelete
  18. @இராஜராஜேஸ்வரி said...

    அருமையான கடிதப்பரிமாற்றம்.

    புறா மட்டுமா சிரித்தது????

    நன்றி.

    ReplyDelete
  19. @Sankar Gurusamy said...

    நல்ல நகைச்சுவை பதிவு...

    பகிர்வுக்கு நன்றி..

    நன்றி சங்கர்.

    ReplyDelete
  20. @நிரூபன் said...

    இனிய காலை வணக்கம் பாஸ்..

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    நல்லாத் தான் தாழிச்சிருக்கிறீங்க.

    மாலை வணக்கம் சகோ! என்ன பண்றது மாலையிலதான் பதில் சொல்ல முடியுது!நன்றி

    ReplyDelete
  21. @நிரூபன் said...

    சில வலைப்பதிவுகளைப் படிப்பது வாழ்க்கையில் எந்தமாதிரியெல்லாம் கஷ்டம் தரும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்//

    ஆமா...என் பதிவினைப் படித்தாலும் கஷ்டம் கிடைக்குமா...

    கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    பின்னே என்ன தூக்கமா வரும்?

    ReplyDelete
  22. @நிரூபன் said...

    டிஸ்கி: பதிவர்கள்,அதிலும் கல்யாணமாகாதவர்கள் பிளாக்கில் போட்டோ போட வேண்டும்.//

    அவ்............

    அப்ப இன்னையிருந்து போட்டோ போடுறேன்........

    உங்க போட்டோதான? தைரியம் இருக்கா?

    ReplyDelete
  23. @நிரூபன் said...

    அண்ணே,
    ஒரு சிறிய வேண்டுகோள்,

    தொடர்ச்சியாக இனிமேல் கவுன்சிலிங் பதிவுகள் தராமல்,
    இப்படிச் சிரித்து மகிழ வைக்கக் கூடிய பதிவுகளையும் கலந்து கட்டித் தாருங்கோ.

    நான் மட்டும் எத்தனை நாளைக்கு சீரியஸாவே இருக்கிறது? நன்றி

    ReplyDelete
  24. @நிரூபன் said...

    விரிவான கமெண்ட் போட பின்னர் வருகிறேன்.

    வருக!வருக! நன்றி

    ReplyDelete
  25. இன்னும் கொஞ்சம் வெங்காயம், கறீவேப்பிலை போட்டு தாளிச்சு விடுங்கோ சகோ.......

    எவ்வளவு தாளிச்சாலும் ஸ்ட்ராங்கா இருப்பாரு என்ற தம்பி :-)

    ReplyDelete
  26. @முனைவர்.இரா.குணசீலன் said...

    “வேறு பதிவரிடம் கடித்த்தை“

    அன்பு நண்பரே..
    நீங்க என்எச்எம் எழுதியைப் பயன்படுத்துகிறீர்களா.??

    அதில் இத்தகு பிழை பாமினி எழுத்துருவில் வருகிறது...

    ஆமாம் நண்பரே! என் எச் எம் தான் பயன்படுத்துகிறேன் நன்றி

    ReplyDelete
  27. @சத்ரியன் said...

    சூப்பர் புறாவா இருக்கே?

    ( யாருப்பா அது நம்ம சண்முகவேல் அண்ணனை புறாவா பயன்படுத்தினது?)

    ஹாஹா வேற யாரு அவங்கதான்,நன்றி

    ReplyDelete
  28. @Powder Star - Dr. ஐடியாமணி said...

    அண்ணே உங்களால இப்படியும் பதிவு போட முடியுமா? கலக்கிட்டீங்க! நிரூபன்......ஹஹ ஹா ஹா!

    நன்றி பிரதர்.

    ReplyDelete
  29. @RAVICHANDRAN said...

    he...he...he...

    நன்றி சார்.

    ReplyDelete
  30. @NAAI-NAKKS said...

    Nalla comedy ....

    நன்றி

    ReplyDelete
  31. @ஸ்ரீராம். said...

    :))

    thanks sir

    ReplyDelete
  32. @suryajeeva said...

    நிரூபன் மேலே என்ன சார் கோபம், அது சரி காலில் விழுந்த பதிவர் யார் அதை சொல்லலையே?

    ஹாஹா! காலில் விழுந்த பதிவர் பாவம் சார்! காட்டிக்கொடுக்க விரும்பல!

    ReplyDelete
  33. @IlayaDhasan said...

    நிரூபன் அதிர்ஷ்டசாலி ,தப்பிசுடாறு

    ஆமாம் சார்,நன்றி

    ReplyDelete
  34. @தனிமரம் said...

    நிரூபனுக்கு இப்படி ஒரு சாட்டையடியா ஐயா நல்ல நகைச்சுவையாகத்தான் இருக்கின்றது!

    நன்றி,நன்றி

    ReplyDelete
  35. @ஆமினா said...

    இன்னும் கொஞ்சம் வெங்காயம், கறீவேப்பிலை போட்டு தாளிச்சு விடுங்கோ சகோ.......

    எவ்வளவு தாளிச்சாலும் ஸ்ட்ராங்கா இருப்பாரு என்ற தம்பி

    விட்டுடவமா? இன்னும் இருக்கே! நன்றி

    ReplyDelete
  36. serious matter நடுவில் இப்படியான மாட்டருகளையும் இடையியையே போடுங்கோ

    ReplyDelete
  37. நிரூ ஊர்லயும் பெண் பார்க்க போவாங்களா?

    இது எத்தனையாவது அட்டேம்ப்டேட் சூசைடு ன்னு சொல்லலையே..

    ReplyDelete
  38. கலக்கிட்டீங்க பாஸ்..... நிரூபனை நெனச்சாத்தான்... பாவம் ஆளைக் காணலியே?

    ReplyDelete
  39. அப்பாடா... நம்ம ஆல்ரெடி போட்டோ போட்டாச்சு பாஸ்.... நண்பர் நிரூபன் எஸ்கேப்பாஆஆஆஆ .... ஹா ஹா

    ReplyDelete
  40. ///ஹாஹா! காலில் விழுந்த பதிவர் பாவம் சார்! காட்டிக்கொடுக்க விரும்பல///
    நீங்க காட்டிகொடுக்கலைன்னா என்ன எங்களுக்கா கண்டு பிடிக்க முடியாது. அவர் பஹைரைன் சென்ற நாகை பதிவர் தானே??????? ஹீ..ஹீ...ஹீ

    ReplyDelete