Friday, February 15, 2013

மனதை உற்சாகப்படுத்தும் உணவுகள்.


                              மனம் நல்ல நிலையில் இருப்பதற்கு உணவும் முக்கியமானது.அனைத்து சத்துக்களும் நிறைந்த உணவை தேர்ந்தெடுத்து உண்ணும்போது உடல் நலம் சிறப்பாக இருக்கும்.உடலும் மனமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.ஜலதோஷம் பிடித்தால் கூட சிடுசிடுப்பும் எரிச்சலும் வந்து விடுகிறது.உடலில் ஏற்படும் நோய்கள் மனதையும் மனதில் ஏற்படும் நலக்குறைவு உடலையும் பாதிக்கும்.இந்திய மருத்துவத்தில் குறிப்பிட்ட உணவு உணர்ச்சிகளில் மாறுபாட்டை உண்டாக்கும் என்று சொல்வதுண்டு.

                               பெரும்பாலான வீடுகளில் நடக்கும் ஒரு நிகழ்வை கவனித்திருக்க முடியும்.நண்பர் ஒருவருக்கு அப்பாவுடன் சண்டை.காரசாரமான விவாதம் நடைபெற்று நண்பர் வெறுத்துப்போயிருந்தார்.அன்று மாலை அவருடைய அம்மா கடைக்குப்போய் திரும்பிக்கொண்டிருந்தார்.அவனுக்குப் பிடிக்கும் என்று பலகாரம் செய்யப்போகிறேன்.ஆமாம்.அம்மாவுக்கு தெரியாதா என்ன? குழந்தைகள் எதற்கு கவலையை மறப்பார்கள்? எப்படி வழிக்கு கொண்டு வருவதுஎன்பதெல்லாம் அவர்களுக்கு தெரியும்.ஒவ்வொருவருக்கும் சில உணவுகளில் விருப்பம் அதிகம்.விருப்பமான உணவுகள் மனதை சந்தோஷப்படுத்தி விடுகிறது.மனம் இறுக்கமாக இருக்கும்போது பிடித்த உணவை உண்பது இறுக்கத்தை குறைக்க உதவும்.

                               மேலே கண்ட அம்மா வைத்தியமும் இப்போது பெரும் சிக்கலை உண்டாக்கி வருகிறது.சிறுவயது முதலே இனிப்பு,குப்பை உணவு என்று பழக்கத்தை ஏற்படுத்துகிறார்கள்.அதிக எடை,ஆரோக்கிய குறைபாடு என்று திசை மாறிக்கொண்டிருக்கிறது.ஆரோக்கியம் தரும் பலகாரத்தை வீட்டில் செய்து தருவது இன்று சாத்தியமாக இல்லை.பொட்டலம் கட்டப்பட்ட அல்லது கடையை நம்பியே இருக்கிறார்கள்.அழும்போதெல்லாம் இப்படிப்பட்ட உணவுகளையே தின்னக் கொடுக்கிறார்கள்.இத்தகைய பழக்கங்கள் மருத்துவமனையை நோக்கி படையெடுக்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்துகிறது.

                                                                       பெரும்பாலான வீடுகளில் இந்தப்பழக்கம் இருக்கிறது.சமைப்பதற்கு முன்னால் என்ன செய்யட்டும் என்று கேட்பார்கள்.ஆனால் அனைத்து உறுப்பினர்களையும் திருப்திப்படுத்துவது சாத்தியம் இல்லை.நமக்கு சில நேரங்களில் குறிப்பிட்ட உணவின் மீது ஆசை உண்டாகிறது.உணவின் மீதான ஆர்வத்துக்கும் உடல் நலனுக்கும் நெருங்கிய தொடர்பிருப்பதாக ஒரு கிராமத்துப்பெரியவர் சொன்னார்.உடலில் உள்ள நோய்க்கு தகுந்தவாறு உணவின் மீதான ஆசையும் இருக்கும் என்றார்.உதாரணமாக ஒருவர் உடலில் சி வைட்டமின் பற்றாக்குறையாக இருக்கும்போது சி உயிர்ச்சத்து மிகுந்த உணவுகளின் மீது ஆர்வம் உண்டாகும்.இது சிந்திக்கவேண்டிய விஷயமாகத்தோன்றுகிறது.
                                                                         மகிழ்ச்சி, நல்ல மனநிலை,தூக்கம் போன்றவற்றிற்கு செரோடானின் என்ற வேதிப்பொருள் முக்கிய காரணமாக உள்ளது.செரோடானின் அளவை உயர்த்தும் உணவுகளை உண்பது முக்கியமானது.வைட்டமின் பி சத்துள்ள உணவுகள்(பச்சை காய்கறிகள்,இறைச்சி,முட்டை,முளை கட்டிய தானியங்கள்,கைக்குத்தல் அரிசி,கோழி இறைச்சியின் மார்புப்பகுதி போன்றவை),வாழைப்பழம்,தக்காளி,அன்னாசி,கடல் உணவுகள் ஆகியவற்றை உணவில் சேர்ப்பது மகிழ்ச்சியான மனநிலையை தக்கவைக்கும்.
-

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

Home Maker-மிகவும் சிரமம் தான்...

மதுரை அழகு said...

உபயோகமான பதிவு!

நிலாமகள் said...

உண்மைதான் ஐயா.. நம் உள்ளுறுப்புகளின் பலவீனங்கள் பொறுத்தே நாவின் ருசி அமையும் என்றும் சொல்கின்றனர்.

SURYAJEEVA said...

ஏன் சில வகை உணவுகள் மட்டும் எனக்கு பிடிக்கிறது என்பதற்கு இன்று ஒரு பதில் கிடைத்தது...

Easy (EZ) Editorial Calendar said...

மிகவும் நல்ல பதிவு.....உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி......

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)