Thursday, June 30, 2011

பணம் கொடுத்தால்தான் அரசு வேலை கிடைக்குமா?

                           அவன் அரசாங்க வேலைக்கு விண்ணப்பித்திருக்கிறான்.அதற்காக புத்தகம் வாங்கி படித்துக்கொண்டிருந்தான்.இன்னும் தேர்வுக்கு ஒருமாதம் தான் இருக்கிறது.புத்தகத்தில் வாங்கிய கடையின் பெயர் அச்சிடப்பட்டிருந்த்தை பார்த்தவுடன் நண்பன் முகம் நினைவுக்கு வந்த்து.அவன் தான் இந்த புத்தகத்தை வாங்கச் சொன்னான்.அப்போது,பணம் கொடுத்தால்தான் வேலை கிடைக்கும்டா! ‘என்று சொன்னதும் அவன் தான்.

                             அவன் புத்தகத்தை படிப்பதை நிறுத்திவிட்டு எதையோ உற்றுப்பார்த்தான்.அவனுக்கு அரசியல்வாதிகள் மீது வெறுப்பு ஏற்பட்ட்து.முகம் மாறியது.தனது தாய் தந்தை மீது வெறுப்பு வந்த்து.இவர்களுக்குப்போய் ஏன் மகனாக பிறக்கவேண்டும்.பிறகு தன் மீதும் ஆத்திரம்பன்னிரெண்டாம் வகுப்பில் இன்னும் கொஞ்சம் நன்றாக படித்திருந்தால் டாக்டராகவோ,ஒரு எஞ்சினியராகவோ ஆகியிருக்காலாம்.அவனுக்கு சிகரெட் புகைக்கவேண்டும் போல் தோன்றியது.எழுந்து கடைக்கு போனான்.

                              அவன் மறுபடியும் வந்து படிப்பானா,படிக்கமாட்டானா என்பது கிடக்கட்டும்.மேற்கண்ட இரண்டாவது பத்தியில் அவனுடய எண்ணங்கள் ஏற்பட்டுக்கொண்டிருந்தபோது அவனுக்குள் சில மாற்றங்கள் ஏற்பட்டன.வயிற்றில் அமிலம் அதிகரித்த்து,ரத்த அழுத்தம் அதிகமானது,ஹார்மோன்களில் மாற்றம் ஏற்பட்ட்து.நோய் எதிர்ப்பு நிலையிலும்,உணவு செரிமானத்திலும் விரும்பத்தகாத மாற்றம் ஏற்பட்ட்து.

                              மனதில் டென்ஷன்,புகைக்கவேண்டும் என்ற உணர்வு,கவலை,வெறுப்பு,கவனம் செலுத்த முடியாத நிலை,குற்ற உணர்வு,இன்னும் இன்னும் ...தொடர்கிறது.இது பின்னர் மன அழுத்தமாக தொடரலாம்.குடிப்பழக்கம் இருந்தால் குடிக்க வேண்டுமென்ற எண்ணம் வரலாம்.மனநிலை காரணமாக உடலில் சில நோய்களும் ஏற்படலாம்.பெற்றோருடன் சண்டை பிடிக்கலாம்.

                                அவனுக்கு ஏற்பட்ட விரும்பத்தகாத விளைவுகள் எதனால் ஏற்பட்ட்தென்று சிந்தியுங்கள்.பணம் கொடுத்தால்தான் வேலை என்ற ஒரு எண்ணம் அவனிடம் உருவாக்கிய மாற்றங்கள் நமக்கு முக்கியமான பாட்த்தை சொல்கிறது.பணம் கொடுத்து வேலைக்கு சேர்ந்தவர்கள் இருப்பார்கள்.ஆனால்,பணம் கொடுக்காமல் கஷ்டப்பட்டு படித்து தேர்வெழுதி வேலைக்கு போனவர்களும் இருக்கிறார்கள்.இந்த விஷயத்தை யாரும் அவனுக்கு சொல்லவில்லை.

                                  நம்முடைய எண்ணங்களை உருவாக்குவது நம்மை சுற்றி உள்ளவர்களும்-சமூகம்-நாம் கற்றுக்கொண்ட விஷயங்களும்தான்.உண்மையில் நடப்பதை விடவும் நாம் நினைப்பதுதான் அதிக கஷ்டங்களைத்தருகிறது.பல சமயங்களில் நமது எண்ணங்கள் அறிவுக்கு கொஞ்சமும் தொடர்பில்லாமல்(irrational) இருக்கும்.மனிதனின் பெரும்பாலான கஷ்டங்கள் இதனால் ஏற்படுபவை.இதற்கு ஏராளமான உதாரணங்களைத்தர முடியும்.

                                  நீங்கள் நினைத்த்து போலவே எப்போதும் நடந்த்தில்லை என்பதை உணருங்கள்.எண்ணங்கள் தோன்றும்போதே இப்படித்தான் நடக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்பதையும் உணருங்கள்.அதையொட்டி ஆக்கப்பூர்வ எண்ணங்களை உருவாக்குங்கள்.ஒரு முறைக்கு இருமுறை யோசியுங்கள்,நான் நினைப்பது சரியா? என்று.நம்பிக்கையுடன் அணுகுங்கள்.

-

Tuesday, June 28, 2011

சில நேரங்களில் பெண்கள் எரிந்து விழுவது ஏன்?

சில நாட்களில் அவ்வளவு திருப்தியாக நாம் உணர்வதில்லை.மனசு ஒரு மாதிரியாக இருக்கிறது.ஆனால் சொல்லத்தெரிவதில்லை.எதிலும் பெரிய ஈடுபாடு இல்லாமல் இருக்கும்.வெற்றியென்றால் சந்தோஷப்படுவதும்,தோல்வி என்றால் சங்கடமாவதும் இயல்பாக உள்ள ஒன்று.ஆனால் காரணமே இல்லாமல் மனநிலையில் மாறுபாடு ஏற்பட்டுவிடுகிறது.

                                இது ஆண்களுக்கும்,பெண்களுக்கும் பொதுவாக இருக்கும் விஷயம்தான்.ஆண்களைப்பற்றி பெண்கள் திடீரென்று இவருக்கு என்ன ஆச்சு என்று குறைபட்டுக்கொள்வது அதிகமில்லை.ஆண்களுக்கு மட்டும் எவ்வளவு காலம் ஒன்றாக வாழ்ந்தாலும் இது புரிவதேயில்லை.அடிக்கடி இப்படி ஆயிடறா!என்பார்கள்.

                                 குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை மன நிலையில் மாற்றம் உருவாகிறது என்பது உலகம் ஒப்புக்கொண்ட ஒன்று.குழந்தைகள்,ஆண்,பெண் அனைவருக்கும் இது பொது.பயாலஜிகல் ரிதம் என்று சொல்வார்கள்.சந்திர சுழற்சிக்கு ஏற்ப அமாவாசை,பவுர்ணமி நாட்களில் கடலில் மாறுபாடு உண்டாவது நமக்கு தெரியும்.இரவில் தூக்கம்,பகலில் விழிப்பு என்பதும் இப்படித்தான்.

                                 நம்முடைய மனநிலை எப்போதும் நம்முடைய கையில் இல்லை.பெண்களுக்கு மாதவிடாய்க்கு முன்புள்ள சில நாட்கள் உடலிலும்,மனதிலும் மாற்றங்கள் ஏற்படுகிறது.மன நிலையில்,பசி உள்ளிட்ட உடல் செயல்களில்,நடந்துகொள்ளும் வித்த்தில் விரும்பத்தகாத மாற்றம் இருப்பது தவிர்க்கமுடியாது.இது அறிவியல் ஒப்புக்கொண்ட இயற்கையான விஷயம்.

                                  சந்திரனை தொடர்புபடுத்தி இதைக்கூறுவார்கள்.சோதிட்த்தில் மனதுக்கும்,உடலுக்கும் உரிய கிரகம் சந்திரன்.வளர்பிறை,தேய்பிறை என்று இருப்பதுபோல மனிதர்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் மாறுபாடும் இருக்கும் என்பதுண்டு.மாத விடாய் சுழற்சி என்பது சந்திரனை போல பெரும்பாலானவர்களுக்கு 28 நாட்கள் இருக்கும்.சிலருக்கு முறையற்று இருப்பதும்,சிலருக்கு 30 நாட்களும் இருக்கும்.

                                  வளர்பிறை,தேய்பிறை கணக்கீடு போல மாதவிலக்கிற்கு முன்பு,பின்பு என்று மனநிலையை அளவிடுவதும் இருக்கிறது.கருத்தரிக்க அதிக வாய்ப்புள்ள (மாத விலக்கு நாளிலிருந்து 14,15 ஆகிய நாட்கள்) நாட்கள் வரையுள்ள மனநிலைக்கும்,அதற்கு பின்பு உள்ளதற்கும் வித்தியாசம் காண முடியும் என்கிறார்கள்.16 வது நாளிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மாற்றங்கள் இருக்கலாம்.

                                   பெண்களைப்போல இல்லாவிட்டாலும் ஆண்களுக்கும் இந்த மாறுபாடு உண்டு.ஆனால் அது வெளியே தெரிவதில்லை.அன்றாடம் மனநிலையில் ஏற்படும் மாற்றங்களை குறித்து வைத்து வந்தால் இதை கண்டுபிடித்துக்கொள்ளலாம் என்று சொல்கிறார்கள்.நான் முயற்சி செய்து பார்த்த்தில்லை.நல்ல மனநிலை நாட்களை கண்டுபிடித்துவிட்டால் அதற்கேற்ப நம்முடைய நிகழ்ச்சிகளை திட்டமிட்டுக்கொள்ளலாம்.

                                    ஆணோ,பெண்ணோ மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள் இயல்பானது என்று புரிந்துகொண்டால்,ஒருவருக்கொருவர் உணர்வுபூர்வமாக உதவுவதும்,இம்மாதிரியான சமயங்களில் பொறுத்துப்போவதும் சாத்தியமாகிவிடும்.குடும்பத்தின் மகிழ்ச்சிக்கும்,அமைதிக்கும் இது அவசியமானது.
-

Monday, June 27, 2011

இனி இணையவழி கள்ள உறவுகள் குறையுமா?

                                 சமூக வலைத்தளங்கள் மூலம் கள்ளக்காதல்கள் அதிகரித்து வருவதாக சமீபத்தில் நாளிதழ் ஒன்றில் படித்தேன்.இது ஆச்சர்யமான ஒன்றல்ல என்று நிபுணர்கள் தெரிவித்திருந்தார்கள்.சாட்டிங் மூலம்.மெயில் வழியாக நட்பு தோன்றி வேறுவடிவம் பெறுவது இப்போது சாதாரணமாக ஒன்றாகியிருக்கிறது.

                                 இங்கே தடைகள் எதுவுமில்லை.எப்படியும் பேசலாம்.ஆபாச சொற்களை பயன்படுத்தி திருப்தி அடைவது பற்றி( corprolalia) உளவியல் கோட்பாடுகள் இருக்கின்றன.ஆபாச சொற்களை எழுதுவதிலும்,பேசுவதிலும் நாட்டம் கொள்பவர்கள் இவர்கள்.சில வகை மன நோயாளிகளிடம் இந்த போக்கு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

                                   இவர்களுக்கு இணையம் ஒரு முக்கிய வரப்பிரசாதமாக இருந்த்து.சாட்டிங் போன்றவற்றில்,சமூக வலைத்தளங்களில் தங்கள் ஆர்வத்தை தீர்த்துக்கொண்டார்கள்.கணினி தெரிந்தவர்கள் ஆண்,பெண் என்றில்லாமல் ஃபேஸ்புக்,ஆர்குட்,ட்விட்டர் போன்றவற்றில் ஒரு பொழுதுபோக்குக்காக ஈடுபாடு காட்டி இன்று பிரமாண்டமாக வளர்ந்து நிற்கிறது.

                                    சமீத்திய நிகழ்வு இந்த வக்கிரங்களுக்கு ஆத்திரத்தையும்,அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.தங்களது ஆபாச சொற்களையோ,பாலியல் அணுகுமுறையையோ யாரேனும் திட்டமிட்டு ஸ்கிரீன் ஷாட் எடுத்து சிக்கவைத்துவிட்டால்? என்பது அவர்களிடம் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.இது பெரும் குழப்பம்.இன்னும் சிலருக்கு நம்மையும் யாராவது இப்படி வலை விரித்திருப்பார்களோ என்ற பயமும் இருக்கலாம்.

                                   மன அழுத்தம் எப்போதுமில்லாத அளவு அதிகரித்துவருவதாக பல்வேறு ஆய்வுகளும் கூறுகின்றன.சகோதரி சாகம்பரி தனது பதிவில் இது பற்றி குறித்துள்ளார்.ஒருவரது மனநிலைக்கும்,பாலியல் குற்றங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.மேலே கண்டவாறு ஆபாச சொற்களை பயன்படுத்துபவர்கள் சிலரில் மனநோயாளிகளும் உண்டு என்பதை நினைவிற் கொள்ளுங்கள்.மனாழுத்தம் அதிகரிக்க அதிகரிக்க பாலியல் குற்றங்களும் அதிகரிக்கவே செய்யும்.

                                 மனநோயாகட்டும்,வறுமை ஆகட்டும்,குடிப்பழக்கம்,எய்ட்ஸ் என்று எந்த சமூகப் பிரச்சினையாக இருந்தாலும் அதனால் அதிகம் பாதிப்புக்குள்ளாவது பெண்களும் குழந்தைகளும்தான்.சிறு குழந்தை என்றும் பார்க்காமல் தங்கள் வக்கிரத்தை தீர்த்துக்கொள்பவர்களை நாம் படித்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

                                  குற்றங்களை குறைக்கவும்,தடுக்கவும் ஏற்பட்ட்துதான் சட்டம்,தண்டனை போன்றவை.ஆனால் இந்திய சூழலில் பாலியல் சார்ந்த குற்றங்கள் பதிவாவது குறைவு.இதற்குக் காரணம் பெண்களிடம் விழிப்புணர்வு இல்லாத நிலைதான்.மேலும் இங்கே வெளியில் சொன்னால் அவள் நல்ல பெண்ணே இல்லை என்கிறார்கள்.

                                     பாலியல் தொல்லைக்கு,ஆபாச சொற்களை எதிர்கொள்ளும் பெண் யாரிடமும் சொல்லாமல் ஓடிப்போய் வீட்டில் ஒளிந்து கொள்ளவேண்டும்.அதுதானே இத்தகைய ஆண்களின் எதிர்பார்ப்பு.வக்கிரங்களுக்கு பாதுகாப்பும் இதுவே. நாங்கள் அப்படித்தான் இருப்போம்,விருப்பமிருந்தால் பழகு,இல்லாவிட்டால் வெளியில் யாரிடமும் சொல்லாதே! வெளியில் சொன்னால் கெட்ட பெண்.

                                     பாலியல் தொல்லைகள்,கற்பழிப்புகள் உள்ளிட்ட பெண்கள்,குழந்தைகள் மீதான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.பலரும் அய்ய்ய்யோ நம் மீதே திருப்புவார்களோ,உனக்கு எங்கே போச்சு புத்தி என்பார்களோ, கண்,காது மூக்கு வைத்து பேசுவார்களோ என்று பயந்து புகார் தெரிவிப்பது குறைவாக இருந்த்து.இப்போது விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது.திட்டமிட்டு கவிழ்க்கிறார்கள்.இனி வக்கிரங்களுக்கு கஷ்டகாலம்தான்.
-

Sunday, June 26, 2011

தூக்கத்தில் வரும் கனவுகள் பலிக்குமா?

என் பாட்டி ஒருவரிடம் உறவுக்கார அண்ணன் ஒருவன் கூறினான்."அந்த பெண்ணுடன் எனக்கு கல்யாணம் ஆவது போல கனவு கண்டேன்". பாட்டியின் மறுமொழி "அது கனவில்லை உன் நெனப்பு " அண்ணா பதில் பேசவில்லை.அதே பாட்டியுடன் ஒரு நாள் பயணம் செய்து கொண்டிருந்தேன்.பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஒரு அம்மாள் சொன்னார்,''சுவர் இடிந்து விழுவதுபோல க்கனவு கண்டேன் என்னவென்று தெரியவில்லை.பாட்டி சொன்னார் "உங்கள் வீட்டில் யாருக்காவது உடல்நலம் இல்லையா? ஏதாவது கெட்ட சம்பவம் நடந்தாலும் நடக்கும்''.

                                                                     இதை நான் வித்தியாசமாக உணர்ந்தேன்.அதன் பின்னர்கனவுகள் பற்றி  ஏராளமான கிராமப்புற நம்பிக்கைகள் இருப்பதை தெரிந்து கொண்டேன்.அழுத்தமான கனவுகள் காணும்போது பெரியவர்களிடம் விவாதிப்பதை ஒரு வழக்கமாக கொண்டிருந்தார்கள்.



                                                               பஞ்சாங்கங்
களில் கனவுகள் பற்றி கூறப்பட்டுள்ளன.கனவுகளுக்கு பலன்கள் சொல்லும் கட்டுரைகளும்,புத்தகங்களும் நிறைய உண்டு.இவையெல்லாம் மரபு சார்ந்தவை.அறிவியல் பூர்வமான அணுகுமுறை அல்ல! இதில் மூத்தவர் சிக்மன்ட் பிராய்ட் .உலகம் போற்றும் ,உலகின் கண்களைத்திறந்த உளவியல் அறிஞர் .ஒருவரது மனதில் உள்ள ஆசைகளும் ,ஏக்கங்களும் கனவுகளாக வரலாம்.துவக்கத்தில் பாட்டி சொன்ன மாதிரி.

                                                               ஆழ மனதில் பதிந்திருப்பவை கனவுகளாக வெளியேறி விடுகின்றன.வாழ்க்கையில் ஏற்பட்ட அதிர்ச்சியான சம்பவங்கள் கனவுகளாக சிலருக்கு தொடர்ந்தது வந்துகொண்டிருக்கும்.அவர் மனம் பாதிக்கப்பட்டு இருப்பதன் அறிகுறி இது.வாழ்வில் தீர்க்க முடியாத பிரச்சினைகளை கனவில் கண்டவர்கள் உண்டு! 



                                                               தையல் மெஷினை வடிவமைத்த சிங்கர் கனவு கண்டே மெஷினை இறுதி செய்தார் என்பதை படித்திருக்கிறேன்.இதுவும் உங்கள் நனவின்றியே இயங்கும் மனதின் வேலைதான்.தூக்கத்திலும் சிந்தித்து கனவாய் வெளிப்பட்டு விடுகிறது.வேறு சில உதாரனங்களும் இருக்கின்றன.தொலைந்துபோனதை கனவில் பார்த்து கண்டெடுத்தவர்கள் உண்டு.

                                                                 கிராமத்து தேநீர் கடையில் அமர்ந்து கொண்டிருந்தேன்.பேருந்து விட்டு இறங்கி வந்த பெரியவர் கேட்டார்.இங்கே கிருஷ்ணன் இருக்கிறாரா? அவருக்கு எண்பது வயது இருக்கும்.எந்த கிருஷ்ணன்? இன்ன சமூகத்தை சேர்ந்தவர்.நான்தான் என்று அவர் எழுந்து வந்தார்.பெரியவர் கடவுளே என்று வானத்தை நோக்கி கும்பிட்டார்.பெரியவர் பிறகு சொன்னது அங்கே இருந்த எல்லோருக்கும் ஆச்சர்யம்.



                                                                 கோயில் கட்ட எண்ணியதாகவும் ,இரவு கனவில் தேவதை வந்து ஊர் பெயரை சொல்லி அங்கே சென்று டீக்கடையில் கிருஷ்ணன் என்ற பெயர் சொல்லி கேட்குமாறு கட்டளையிட்டதாக கூறினார்.பக்கத்து மாவட்டத்தை சார்ந்தவர் அவர்.இருவரும் இதற்கு முன்பு சந்தித்ததில்லை.சிலர் அந்த பெரியவருக்கு யாராவது சொல்லியிருப்பார்கள் என்றார்கள்.பெரியவரை பார்த்தால் பொய் சொல்கிற ஆளாக தெரியவில்லை என்றார்கள் சில பேர்.

                                                                 எப்படியோ தினமும் இரவுகளில் கனவு கண்டுகொண்டுதான் இருக்கிறோம்.பெரும்பாலான கனவுகளும் சிம்பாலிக்காகவே வரும் என்கிறார்கள்.நேரடியாக இருக்காது.உதாரணமாக நீங்கள் யாரையாவது காதலிக்க முடிவு செய்தால் உங்கள் கனவில் விஜயோ,அஜீத்தோ டூயட் பாடுவதுபோல கனவு வரலாம்.
-

Saturday, June 25, 2011

சாருவும் தமிழ்ப்பெண்களும்

                                                                                          எதையாவது எழுதிக்கொண்டிருப்பவனுக்கு(!) சமகால நிகழ்வுகள் பற்றிய எண்ணங்கள் தோன்றாமல் இருக்காது.அப்படித்தான் முள்வேலி உறுத்தியபோது “தமிழன் என்ற சொல் குற்ற உணர்வு தரும் சொல்லாகிவிட்ட்துஎன்று எழுதினேன்.அதற்கு தொப்பிதொப்பி போட்ட கமெண்ட் “வேண்டாம்
மீண்டும் எழுவோம் தமிழன் என்றால் உலகே அதிசயிக்கும்

                                   இன்றும் தமிழனை உலகம் அதிசயமாக பார்க்கிறது.சாரு விஷயத்தைத்தான் சொல்கிறேன்.எழுத்தாளர்கள்,அறிவு ஜீவிகள் என்றால் சமூகத்தில் இருக்கும் மதிப்பு தனி.கேரளாவில் எழுத்தாளன் தான் தன் குழந்தையின் கையைப்பிடித்து அட்சரம் எழுதக்கற்றுத்தரவேண்டும் என்று மக்கள் வரிசையில் நிற்கிறார்கள்’’ என்கிறார்விகடனில் எஸ்.ராமகிருஷ்ணன்.

                                    குடிக்கும் எழுத்தாளர்கள்,புகைக்கும் எழுத்தாளர்கள் பற்றி விமர்சன்ங்கள் வந்திருக்கின்றன.ஆனால் சாருவின் விஷயம் அருவருப்பானது.வயது வித்தியாசமின்றி ஒரு இளம்பெண்ணிடம் நடந்துகொண்டுள்ள செயல் எழுத்துலகில் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது என்பதே நிஜம்.

                                    இந்த மாதிரி விஷயங்களை பெண்கள் எப்போதும் வெளிப்படுத்த தயங்கியே வந்திருக்கிறார்கள்.உடனே திரும்பும்,அவனுடன் எதற்கு பேசினாய்?,பெண்ணென்றால் அடக்க ஒடுக்கமாக வீட்டில் இருக்கவேண்டியதுதானே?உடனே நீ வீட்டுக்குள் ஓடி கதவை சாத்திக்கொள்வதுதானே? ஆண்கள் என்றால் அப்படித்தான்,கண்டும் காணாமல் போவதுதானே? இப்படியே நீளும்.

                                      சாருவுடன் சாட் செய்த பெண் பேச்சு திசைமாறுவது தெரிந்தும்,ஏதோ பிரபல எழுத்தாளர் என்று நினைத்தால் சாக்கடைத்தனமாக ஏதேதோ வருகிறது என்று தெரிந்தும் தொடர்ந்திருக்கிறார்.இது திட்டமிட்டு செய்த்துதான்.தான் எதிர்பார்த்த அளவுக்கு நல்ல ஆசாமி இல்லை என்றவுடன் அவர்களை வீழ்த்துவதற்கு ஆதாரங்களை அதிகப்படுத்தவே முயல்வார்கள்.இது பெண்களிடம் இருக்கும் குணங்களில் ஒன்று.ஒரே வித்தியாசம் வழக்கமாக நாலு பேரிடம் சொல்லி மானத்தை வாங்குவார்கள். இங்கு பதிவாக வருகிறது.

                                      ஒரு பெண் வீட்டு மனிதர்களின் கண்காணிப்பில் இருக்கிறார் என்றால் இருபத்துநான்கு மணிநேரமும் காமிரா வைத்து பெற்றோர்கள் பார்த்துக்கொண்டிருப்பார்கள் என்று பொருள் அல்ல.அவர் யாருடன் பேசுகிறார்,பழகுகிறார் என்பதை கவனிப்பார்கள்.பிரபல எழுத்தாளருடன் சாட் செய்தால் அவர்கள் பெருமையாகவே நினைத்திருப்பார்கள்.

                                                                                               பாலியல் ரீதியாக பெண்களிடம் வரம்பு மீறுபவர்கள்மீது காவல்துறையில் புகார் செய்தால் இதற்கென்று ஊருக்கு ஒரு காவல்நிலையம்தான் திறக்கவேண்டும்.இன்று படித்த பெண்கள் பலருக்கும் அதற்கென உள்ள சட்டங்கள் கூட தெரியாது.இதை புதியதாக சொல்லவில்லை.என்னுடைய ஆரம்பகால பதிவுகளில் ஒன்றான “பணியிடங்களில் பாலியல் தொல்லைகளுக்கு பெண்களின் எதிர்வினைகள்’’ என்ற பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன்.

                                     ஆம் நண்பர்களே! பெண்ணென்றால் அடக்க ஒடுக்கமாக இருக்கவேண்டும்.அதிர்ந்து பேசக்கூடாது.வீட்டில் சமையல் செய்து கொண்டு,குழந்தை பெற்றுக்கொண்டு,கணவன் சாப்பிட்ட மீந்த்தை சாப்பிட்டு,பின் தூங்கி முன் எழுந்து,வாய் திறக்காமல்.................... சரிதான்.எழுந்து நின்று ஜோராக கைத்தட்டுங்கள். இந்தியா வல்லரசாகப்போகிறது.
-

Friday, June 24, 2011

காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை

ரெண்டு நாளா காய்ச்சல் டாக்டர்கிட்ட போனேன் .ஒண்ணுமே கேட்கல! அதான் வேற டாக்டர பார்க்கலாம்னு இருக்கேன்-இது நிறைய இடங்களில் இருக்கிறது.காய்ச்சலில் பல வகைகள் இருக்கின்றன.சொன்னவுடன் இந்த வகைதான் என்று சிகிச்சை அழிப்பது சாத்தியமல்ல .உதாரணமாக டைபாய்டு இருக்கிறதா என்று காய்ச்சல் கண்ட முதல் தினமே பரிசோதனை செய்வதில்லை.ரத்தப்பரிசோதனை முடிவு தவறாக வர வாய்ப்புண்டு .அதனால் இரண்டு ,மூன்று தினம் கழித்து பரிசோதனைக்கு அனுப்புவார்கள்.

                            மருத்துவரிடம் போனவுடன் இரண்டு நாட்களுக்கு மாத்திரை,மருந்துகள் கொடுத்து அனுப்புவார்கள்.சாதாரண மருந்துகளாக இருக்கும்.இரண்டு நாள் கழித்து மீண்டும் போகும்போது தான் அப்படியே இருந்தால் ரத்தப்பரிசோதனைகள் செய்ய அனுப்புவார்கள்.ஆனால் நம்மவர்கள் குறையவேயில்லை என்று இன்னொரு டாக்டரை பார்க்க போய்விடுவார்கள்.

                             காய்ச்சல் என்பது உடலின் சாதாரண வெப்பநிலையை விட அதிகரிக்கும் நிலைதான்.சாதாரணமாக 98 லிருந்து 100  பாரன்ஹீட் வரை இருக்கலாம்.ஃப்ளு ,டைபாய்டு,நிமோனியா,போன்றவற்றில் காய்ச்சல் தொடர்ந்தது இருக்கும்.மலேரியாவில் உடல் நடுக்கத்துடன் விட்டுவிட்டு காய்ச்சல் இருக்கும்.

                             பாக்டீரியா,பூஞ்சை,வைரஸ் போன்ற கிருமிகளால் உடலில் நோய்த்தொற்று ஏற்படும்போது,உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலம் இயங்க ஆரம்பிக்கும்,கிருமிகளை கொல்வதற்காக ரத்த்த்தில் உள்ள வெள்ளையணுக்கள்  புரத்த்தை உற்பத்தி செய்து போராடவைக்கிறது.அப்போது உடலின் வெப்பநிலை இயல்பான அளவை விட உயரும்.105 பாரன்ஹீட் வரை பரவாயில்லை.சுமார் 108 என்பது உயிருக்கு ஆபத்து விளைவிப்பதாக இருக்கும்.

                               புற்று நோய்,எய்ட்ஸ் உள்ளிட்ட வியாதிகளுக்கும் அறிகுறி காய்ச்சல்தான்.அதனால் உரிய காரணத்தை கண்டறிய போதுமான பரிசோதனைகள் அவசியம்.அதே சமயம் முன்பு கூறியது போன்று ஆத்திரப்படவும் கூடாது.உடனடியாக நோயை கண்டறிவது அவ்வளவு எளிதல்ல!நமது தவறும் நேர வாய்ப்பிருக்கிறது.

                                 பிரபலமான மருத்துவர்கள் சிலரிடம் கூட்டம் அதிகம் இருக்கும்.ஒவ்வொருவருக்கும் அதிக நேரம் செலவிடுவது கஷ்டம்.நாமும் அறிகுறிகளை முழுமையாக சொல்ல வேண்டும்.காய்ச்சல் என்று ஒற்றை வார்த்தை மட்டும் சொல்லாமல் உடன் இருக்கும்,பசியினமை,இருமல் இப்படி ஏதாவது இருந்தாலும் விடாமல் கூறவேண்டும்.இது நோயை முழுமையாக கணிக்க உதவும்.

                                 காச நோய் போன்ற நோய்களில் மாலையில் காய்ச்சல் இருக்கும்.சில வைரஸ் தொற்றுக்களில் தொடர்ந்து நாட்கணக்கில் இருப்பதுண்டு.முழுமையான ஓய்வும்,எளிதில் செரிக்கும் மிதமான உணவுகளும் தேவை.எந்த நோயானாலும் ஒரே மாத்திரையில் குணமாகிவிடவேண்டும் என்ற மனப்போக்கு அதிகம் இருக்கிறது.இது நல்லதல்ல.

                                 அதேபோல பரிந்துரைக்கும் மருந்துகளை முழுமையாக உட்கொள்ளவேண்டும்.சில தொற்றுக்களுக்கு இவ்வளவு மாத்திரைகள் எடுக்கவேண்டும் என்று இருக்கிறது.நாம் கொஞ்சம் தணிந்தவுடன் மாத்திரையை தூக்கிபோட்டு விடுவோம்.கிருமிகள் முழுமையாக அழிந்திருக்காது.சரியாகிவிட்ட்து என்ற எண்ணம் வந்து விட்டாலும் வாங்கி வந்த மருந்தை முழுமையாக சாப்பிட வேண்டும்.
-

Wednesday, June 22, 2011

மற்றவரை குற்றம் சாட்டுவதே பெண்களின் குணமா?

                                 பாலிடெக்னிக் ஒன்றில் விழாவுக்கு போயிருந்தேன்.பார்வையாளராகத்தான்.நண்பர் அக்கல்லூரியின் முதல்வர் என்பதால் அழைத்திருந்தார்.ஒரு பெரிய மனிதர் பேசிக்கொண்டிருந்தார்.எதற்கெடுத்தாலும் அடுத்தவர்களை குறை சொல்லிக்கொண்டிருக்க்க்கூடாது! பெண்கள் தான் அப்படி இருப்பார்கள்.’’மாணவர்களுக்கு அறிவுரைகள் தந்தவாறு இருந்தார்.

                                  பெண்கள்தான் மற்றவரை குற்றம் சாட்டுவார்களா? ஆண்கள் குற்றம் சாட்டமாட்டார்களா? தனது தவறுகளுக்கும்,தோல்விக்கும் தன்னை விடுத்து இன்னொருவர் மீது பழி போடுவது மனிதர்களுக்கு பழக்கமான விஷயம்தான்.தான் மிகச்சிறந்தவன்,அதி புத்திசாலி ,எந்த தவறும் செய்ய வாய்ப்பில்லை! அடுத்தவர்கள்தான் காரணம் என்பவர்களை பார்த்திருக்கிறோம்.



                                  ஒரு பெண் தீவிரமாக காதலித்து வந்தார்.பையன் வெளியூரில் இருந்தான்.அடிக்கடி ஏதோ ஒரு பிளாக்மெயில்.இந்த மாத்த்துக்குள் கல்யாணம் செய்யாவிட்டால் எனக்கு வேறொருவருடன் நிச்சயமாகிவிடும் என்பார்.தோழி ஒருவரை விட்டு அவளுக்கு உன்னை பிடிக்கவில்லையாம் மறந்து விடுங்கள் என்றிருக்கிறார்.அப்புறம் அந்த காதல் தோல்வியடைந்து விட்ட்து.அப்பெண் தோழியை பார்த்து சொன்னது “எல்லாம் உன்னால்தான்!

                              இருத்தைந்து வயது பையனுக்கும் நாற்பது வயதுக்கு மேற்பட்ட பெண்ணுக்கும் கள்ளக்காதல்.பெண்ணின் மகனுக்கு விஷயம் தெரியவே வீட்டில் சண்டை.கள்ளக்காதலில் ஈடுபட்ட பெண் விஷம் குடித்து,மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.மருத்துவமனைக்கு சென்று காதலன் பார்த்தவுடன் அப்பெண் சொன்னதுஎல்லாம் உன்னால்தான்

                             கல்யாணமான பின்னர் கணவன் புதியதாக தொழில் தொடங்கினார்.கொஞ்சமாக குடிக்கும் பழக்கம்.ஒவ்வொரு ஆர்டருக்கும் நண்பர்களுக்கு பார்ட்டி.சந்தோஷத்தை கொண்டாட வேண்டுமில்லையா? சில மாதங்களிலேயே தொழில் படுத்துவிட்ட்து.கணவன் மனைவியை பார்த்து சொன்னதுஎல்லாம் உன்னால்தான்!

                              ஏராளமான உதாரணங்களை நாம் பார்த்திருக்கிறோம்.தோல்வியோ தவறோ நிகழ்ந்து விட்டால் மனம் தப்பித்துக்கொள்கிறது.என்னால் இல்லை.அடுத்தவர்தான் காரணம் என்று.முதலில் காதலில் தோற்ற பெண்ணின் மோசமான அணுகுமுறையே தோல்விக்கு காரணம்.அவர் சொல்லித்தான் தோழி போன் செய்தார்.

                              இரண்டாவதான கள்ளக்காதலில் பையனை குறை சொல்வதற்கு எந்த நியாயமும் இல்லை.அப்பெண்ணுக்கு திருமணமான மகன் இருக்கிறான்.கணவனின் தொழில் நஷ்டமடைய காரணம் திறமையின்மையும்,முறையற்ற பழக்கங்களும்தான்.இன்னும் சிலர் நீ வந்த நேரம்தான் இப்படி ஆகிவிட்ட்து என்பார்கள்.இதைப்போல மனித்த் தன்மையற்ற செயல் வேறில்லை.

                               ஒழுக்கம் சாராத ஆளுமை(personality) கொண்டவர்கள் அடுத்தவர்கள் மீது பழிபோட்டு தப்பித்துக்கொள்வது அதிகம்.குடிக்கு அடிமையானவனை கேட்டுப்பாருங்கள்.தவறு செய்பவனை கேட்டுப்பாருங்கள்.எதையாவது,யாரையாவது குறை சொல்வார்கள்.இப்படிப்பட்டவர்கள் முன்னேறுவது கஷ்டம் என்பதை தெரிந்து கொள்ளவேண்டும்.

                                  இன்னொருவரை குற்றம் சாட்டுவது ஒரு தோல்விக்குள்ள நிஜமான காரணத்தை கண்டறியும் முயற்சியில் தடை உண்டாக்கும்.நாம் தவறுகளில் இருந்து கற்றுக்கொள்கிறோம்.சரியான காரணத்தை கண்டுபிடிக்க முடியாமல் போனால் மீண்டும் மீண்டும் ஏற்படும் தவறுகளை தவிர்க்க முடியாது.

                                  முதல் பத்திக்கு வருவோம்.அந்த பெரிய மனிதர் ஏன் அப்படி சொன்னார்? அவர் காலத்தில் நாற்பதாண்டுகளுக்கு முன்பு பெண்கள் அதிகம் வெளி விவகாரங்களீல் ஈடுபடுவதில்லை.இப்போதும் குறைவுதான்.சம்பாதிப்பது,முடிவெடுப்பது எல்லாமும் ஆணிடம் இருந்தன.அவர்கள் ஆண்களை குற்றம் சொல்லாமல் யாரை சொல்வார்கள். அவருடைய அனுபவத்தில் இருந்து பேசியிருக்கவேண்டும்.உண்மையில் இது ஆண்,பெண் இருவருக்கும் பொதுவாக இருக்கும் ஒன்றுதான்.
-

Tuesday, June 21, 2011

இரண்டே வாரங்களில் என் முகத்தை சிவப்பாக்கிய அழகு க்ரீம்.


                                சிவப்பாக மாற வேண்டுமென்று யாருக்குத்தான் ஆசை இருக்காது? அதுவும் இந்தியா போன்ற நாட்டில்! அழகும் அங்கீகாரமும் சிவப்புக்குத்தான் இருக்கிறது.மற்ற திறமையால் சிலர் பெயர் பெற்றிருக்கலாம்.கலர் அப்படியில்லாமல் இருப்பவர்கள் தாழ்வு மனப்பானமையால் பொசுங்கிப் போய்விடுகிறார்கள்.

                                 நானும் கொஞ்சம்(?!) கலர் குறைவுதான்.எனக்கு மட்டும் ஆசை இருக்காதா என்ன? ஆஹா! அது மட்டும் நடந்து விட்டால்,குறைந்தபட்சம் முகம் மட்டுமாவது சிவப்பாகிவிட்டால்? நினைக்கவே சந்தோஷமாக இருக்கிறது.மீசை அரும்பிக்கொண்டிருக்கிறது.அப்போதுதான் அந்த விளம்பரத்தைப்பார்த்தேன்.

                                ஆறே வாரங்களில் சிவப்பழகு.மனசுக்குள் மத்தாப்பு.எப்படியாவது வாங்கி விட வேண்டும்.விலையும் அதிகமில்லை.கிராமத்தில் கூட எல்லா கடையிலும் கிடைக்கிறது.அது ஒரு பெரிய விஷயமில்லை.வாங்கிவிட்டேன்.உடனே பயன்படுத்தவில்லை.நாளை காலை முதல்தான் அந்த அதிசயம் நடக்கப்போகிறது.

                                 குளித்துவிட்டு முகத்தை சுத்தமாக துடைத்தேன்.அந்த பொக்கிஷத்தை எடுத்து முதன்முதலாக நெற்றியில் கொஞ்சமாக தடவினேன்.அப்போதே எனக்கு நம்பிக்கை வந்துவிட்ட்து.அப்புறம் முகம் முழுக்க தேய்த்து கண்ணாடியில் பார்த்தபோது சந்தோஷமாக இருந்த்து.இவ்வளவு அழகாகவா இருக்கிறோம் நாம்?

                                 தெருவில் நடந்து போகும்போது என்னையே உற்று பார்ப்பதுபோல ஒரு உணர்வு.சந்தோஷம்,தன்னம்பிக்கை எல்லாம் வந்து விட்ட்து.மாலை வந்து கண்ணாடி பார்த்தால் பழைய முகமாக இருந்த்து.ஒரே நாளில் மாறிப்போகுமா என்ன? நான் எப்போதும் வாழ்க்கையில் நம்பிக்கையை மட்டும் இழந்த்தில்லை.தொடர்ந்து பயன்படுத்தி வந்தேன்.

                                  இரண்டு வாரமாகியிருந்த்து.சில நாட்களாகவே முகத்தில் ஏதோ மாற்றம் வந்து கொண்டிருப்பதுபோல உணர்ந்தேன்.அன்று ஞாயிற்றுக்கிழமை.முடி வெட்டுமளவுக்கு வளர்ந்துவிட்ட்து.கடைக்கு போய் முடிவெட்டி ஷேவிங்கும் செய்தாயிற்று! வழக்கத்துக்கு மாறாக எரிச்சல்.சிவப்பாகும்போது அப்படித்தான் இருக்கும் என்று நினைத்தேன்.

                                  முகத்தை கண்ணாடியில் உற்று பார்த்தபோது என் முகத்தில் அவ்வளவு சிவப்பு! இவ்வளவு விரைவாக அதுவும் ரத்தச்சிவப்பு! ஆஹா! என் முகம் சிவப்பாகிவிட்ட்து.கை வைத்து பார்த்தபோது பிசுபிசுவென்று ஒட்டியது.உண்மையில் ரத்தம்தான்.கடிக்காரனை முறைத்தேன்.முகத்தில் சிறுசிறு கொப்புளம் இருந்திருக்கிறது,நான் என்ன செய்ய முடியும்? பார்த்தால் தெரியவில்லை.

                                   கடையில் இருந்தவர் விளக்கம் கேட்டார்.ஏதாவது ஒத்துக்கொள்ளாத உணவு சாப்பிட்டீங்களா?நான் அழகு க்ரீம் பற்றி கூறினேன்.அது சிலரது உடலுக்கு ஒத்துக்கொள்ளாது.உங்களுக்கு அப்படித்தான் என்று நினைக்கிறேன்.இனிமேல் பூசாதீர்கள்’’ என்றார்.எனக்கு சப்பென்று ஆகிவிட்ட்து.இனி நான் சிவப்பாக மாற வழியே இல்லையா?

                                   பல்லாயிரக்கணக்கான ரூபாய்க்கு விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன சிவப்பழகு க்ரீம்கள். பெட்டிக்கடைகள் தோறும் கிடைக்கிறது.ஆனால்,அதை பயன்படுத்தி யாராவது கலர் மாறியிருக்கிறார்களா? அப்போதைக்கு கொஞ்சம் மெழுகு பூசினாற்போல தெரியும் வித்தைக்கு இருக்கும் வரவேற்பை என்ன சொல்வது?

                                    எனக்கு ஏற்பட்ட்து போல ஒவ்வாமை மட்டுமன்றி ,தோல் புற்றுநோய்க்கும் கூட வழி வகுக்கும் என்கிறார்கள்.ப்ளீச்சிங்,வேதிப்பொருட்களை உள்ளடக்கியவைதான் பெரும்பான்மையான க்ரீம்களும்.தோலுக்கும் உடலுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் என்பதே நிஜம்.எந்த தோல்நோய் நிபுணரும் இவற்றை பரிந்துரைப்பதில்லை மஞ்சள்,சந்தனம்,தேன்,ப்ப்பாளி,தயிர் போன்ற இயற்கைப்பொருட்கள் முகத்துக்கு பொலிவு தருபவை.இயற்கைக்கு நிகர் வேறில்லை.
-

Monday, June 20, 2011

படிப்புக்கும் பண்புக்கும் ஏன் இவ்வளவு வித்தியாசம்?

                                  அவன் போதையில் இருந்தான்.சுற்றி ஒரு கூட்டம்.பச்சை நிறத்தில் ஏதோ ஒரு பாக்கெட்டை பிரித்து நாக்குக்குக்கீழே வைத்துக்கொண்டான்.இவருக்குக் கீழே முப்பதுபேர் வேலை செய்கிறார்கள்என்றார் அறிமுகப்படுத்தியவர்.கை குலுக்க நீட்டியபோது எனக்கு தயக்கமாக இருந்த்து.வேறு வழியில்லாமல் கை குலுக்கிய பின் தன்னுடைய விசிட்டிங் கார்டை எடுத்து நீட்டினான்.மூன்று பட்டங்களும்,மூன்று பட்டயங்களும்(diplamo) அவனது பெயரின் பின்னால் இருந்தன.

                                                                                          செல்போனை எடுத்து யாருக்கோ போன் செய்தான்.மிஸ்டுகால் கொடுத்தா கூப்பிட மாட்டாளா அவ!? அவ எப்படி வேல செய்றான்னு பார்க்கறன்” “ விடாதீங்க பாஸ்’’ என்றார்கள் உடன் இருந்தவர்கள்.சரி நீங்க கிளம்புங்கஎன்று சற்று தூரம் நகர்ந்து போனார்கள்.அறிமுகப்படுத்திய நண்பர் அவனைப்பற்றி பேச ஆரம்பித்தார்.

                                                                                 நிறைய படித்திருக்கிறான் என்று சொல்லி வேலை கொடுத்தார்கள்.எப்போதும் குடித்துவிட்டு பெண்களை கலாட்டா செய்துகொண்டு.....கொடுமை.ஒரு வேலையும் செய்யமாட்டான்.இரவு முழுக்க குடித்துக் கொண்டிருந்துவிட்டு படுத்தால் பகல் பன்னிரண்டு மணிக்கு தூங்கி எழுவான்.இது ஒரு தற்காலிக பணி.அதனால் மேலிட்த்திலும் அதிகம் கண்டு கொள்வதில்லை.வேறு மாவட்ட்த்தில் உள்ள வீட்டுக்கும் போவதில்லை.

                                நான் மீண்டும் அந்த விசிட்டிங் கார்டை ஒருமுறை பார்த்தேன்.சமூக சேவைக்காக படித்திருந்தான்.மற்ற படிப்புகளும்.எதை சமூக சேவை என்று சொல்லிக் கொடுத்திருப்பார்கள் என்பது புரியவில்லை.பட்டங்கள் பெற்ற அவன் கற்ற கல்வி ஏன் அவனை குறைந்த பட்சம் மனிதனாக கூட மாற்றவில்லை?சேவை செய்வது கிடக்கட்டும்,தன்னளவில் யாருக்கும் தீங்கிழைக்காத ஒரு மனிதனாக்க் கூட உருவாக்க முடியாத கல்வியால் என்ன பயன்?

                                                                              உலகெங்கும் பொருள் சார்ந்த கலாச்சாரம் வளர்ந்த அளவுக்கு பொருளற்ற கலாச்சாரம்(Non Material culture) வளரவில்லை.புதுப்ப்து அறிவியல் கண்டு பிடிப்புகள் மனிதனின் வாழ்க்கையை எளிமையாக்கின.மனம் மட்டும் குப்பையாக அப்படியே கிடக்கிறது.அது வளரவேயில்லை.மனம் வளர்வதற்கு தேவையான எந்த திட்டமும் ,பாடமும் நம்மிடம் இல்லை.

                                மனிதனிடம் நல்ல குணங்களை உருவாக்குவதில் கல்விக்கு எந்த பங்கும் இல்லை.மனப்பாடம் செய்து பக்கங்களை நிரப்புவதும்,விடைத்தாள்களின் கனத்தை பார்த்து மதிப்பெண் வழங்குவதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.கற்பனை ஆற்றலுக்கும்,சிந்திக்கும் திறனுக்கும் இங்கே இடமில்லாமல் இருக்கிறது.

                                கல்வியாளர் ஒருவரிடம் இதைப்பற்றி கேட்டபோது அவர் கூறியது, “ இந்தியாவில் எண்ணும் எழுத்தும் கற்றுக்கொள்வதே இன்னும் நூறு சதவீதம் ஆக்கமுடியவில்லை.நீங்கள் சொல்வது அடுத்த கட்டம்.அடுத்தடுத்து அவையும் வரும் என்று நம்புகிறேன்.மற்ற நாடுகளை விடவும் இந்தியாவுக்கு த்த்துவம் சார்ந்த பாரம்பர்யம் அதிகம் இருக்கிறது.ஆனால் அதற்கான முயற்சிகளை தொடங்க வேண்டிய நேரம் இது

                                தனி மனிதனுக்கும்,சமூகத்திற்கும் அமைதியை வழங்கும் ஆற்றல் பெற்ற கல்வியே நமது தேவை.மனதில் அன்பையும்,மலர்ச்சியையும் உருவாக்கும் திறன் படைத்த கல்வியை அடையாளம் காண வேண்டிய தருணம் இது.
-

Sunday, June 19, 2011

கற்பழிப்புகள் -ஒரு சமூக பார்வை.

அணுகுண்டை விட வலிமையான ஆயுதமாக எதிரிகள் கருதுவது கற்பழிப்பு.பெண்ணுக்கும் அவளை சார்ந்தவர்களுக்கும்,தேசத்திற்கும் மிகப்பெரும் அவமானம் என்பதால்!மானம் உயிரினும் மேலானதுஎன்பதால்!பெண்களின் மீது நடத்தப்படும் வன்முறைகளில் உச்சமானது கற்பழிப்பும் அதன் விளைவான கொலையும்.தொடர்ந்து இணங்காமல் போராடும்போது கொலைசெய்யும் வாய்ப்பு அதிகரிக்கிறது.


ஒரு பெண் மீதான தீவிர,கீழ்த்தரமான ஆசைக்கு அப்பெண் மசியாதபோது கற்பழிப்புகள் நடக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது.இவற்றில் பெரும்பாலானவை திட்டமிட்டு உறவினர்களால் ,நண்பர்களால் நடத்தப்படுபவை.திடீரென்று திட்டமிடாமல் நடக்கும் கற்பழிப்புகள் குறைவு.மன நோயாளிகளால் நடப்பவையும் உண்டு.மனதிற்கும் பால் உணர்வுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.ஏதுமறியாத சிறுமிகளும் இதற்கு விதிவிலக்கல்ல.


கற்பழிப்பு குற்றங்களுக்கு சட்டத்தில் கடுமையான தண்டனைகளுக்கு இடமிருந்தாலும் புகார் செய்யப்படுவது குறைவு என்று சொல்லப்படுகிறது.சமூகத்திற்கு அஞ்சி மறைக்கப்படுவதால் குற்றவாளிகள் பெருகும் வாய்ப்பு அதிகம்.குற்றத்தை உறுதி செய்ய மருத்துவ பரிசோதனைகள்,காவல்,சட்ட நடைமுறைகளை தாண்டவேண்டும்.இயல்பு வாழ்க்கையை தொலைக்கவேண்டும்.மகளிர் அமைப்புகள் சில வழக்குகளுக்கு சிறப்பான பணியாற்றியிருக்கின்றன.


கற்பழிப்பு குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச்செல்லப்படும் போது வழியில் அவனை சந்தித்தேன்.காவல்துறையை சேர்ந்த நண்பர் என்னிடம் "ரேப் பண்ணியிருக்கான் ,இவனபார்த்தா எப்படியிருக்கு பார் ?"எனக்கும் ஆச்சரியாமாகத்தான் இருந்தது.ஒரு வீரனைப்போல அவன் முகம் காட்டினான்.குற்றம் சுமத்தப்பட்டவன் என்று அவனிடம் கவலையோ,குற்ற உணர்வோ இல்லை.விளையாட்டு வீரர்கள் தாங்கள் பெற்ற கோப்பையை உயர்த்தி காட்டும் மலர்ச்சியை நான் பார்த்தேன்.யாராலும் செய்யமுடியாத காரியமா?நண்பருக்கு என்னைப்பற்றி தெரியுமாதலால் அவனை அருகில் அழைத்து பேசினேன்.


அவனது வார்த்தைகளில் சில...................................


இதுக்கு மேல யார் சார் கல்யாணம் பண்ணிக்குவான் அவள,நான் எதுவும் பண்ணல!நான் வேணும்னா பலதடவ கல்யாணம் பண்ணிக்கலாம்,லவ் பண்ணலாம்னு சொன்னேன் .அவ எதுவும் பேசல! கோவத்துல சண்ட புடிச்சப்ப அவ சொந்தக்காரன் ஒருத்தன் பார்த்துட்டான்.அதனால வூட்ல போயி சொல்லிட்டா.அவளுக்குத்தான் அசிங்கம்.எவன் வருவான்?அப்படி ஆத்தரமா இருந்தா ரோட்ல,வீதில எத்தனையோ பேர் இருக்காங்க!நான் தண்ணியடிச்சா அந்த மாதிரி பழக்கமுண்டு.ராத்திரில செகண்ட்ஷோ சினிமா போய்ட்டு வந்து அந்தமாதிரி பொம்பளைங்ககிட்ட பழகியிருக்கிரன்.இதுக்கு மேல யார் கல்யாணம் பண்ணிக்குவான்னு பார்க்கிறேன்(திரும்பத்திரும்ப சொல்லிக்கொண்டிருந்தான்).அன்னக்கி நான் ஒண்ணும் தண்ணியிலகூட இல்ல!நான் ஒரே பையன்,கெடச்ச கூலிக்கு போவேன்.தப்புபண்ணமாட்டேன்.எங்கப்பன் குடிச்சி குடிச்சி காச கரைக்காம இருந்திருந்தா நான் எப்படியோ இருந்திருப்பேன்.நானும் படிச்சிருப்பேன்.இவள மாதிரி ஆளுங்கல்லாம் கால் தூசு (சற்று மாறுதல் செய்யப்பட மீள்பதிவு)
-

Friday, June 17, 2011

மூடி வைத்து மூடி வைத்து மோசம் போகும் மனிதர்கள்.


அந்த பெண்ணுக்கு சுமார் இருபது வயதுதான் இருக்கும்.ஓரளவேனும் படித்திருக்கவேண்டும்.மருந்துக்கடையில் சென்று அவர் மாத்திரை கேட்கிறார்.(இதைப்பற்றி ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்ட்து.இதுவே அபாயகரமான போக்கு) .புண்ணுக்கு மருந்து கொடுங்கள்!என்று கேட்டவுடன் கடையில் இருந்தவர் “ யாருக்கு? என்று விசாரிக்கிறார்.பெண் மாற்றி மாற்றி ஏதேதோ சொல்ல கர்ப்பிணியாக இருக்கிறாரே என்று யோசித்து கடையில் இருந்த பெண் பணியாளரை விட்டு அவரை விசாரிக்கச் செய்த்தில் ,புண் இருப்பது அவருக்குத்தான் என்பதும் ,பிறப்புறுப்பில் இருப்பதும் தெரிய வந்திருக்கிறது.

                              கடையில் இருந்தவர்கள் உண்மையில் அதிர்ச்சியாகி பெண்ணுக்கு விளக்கியிருக்கிறார்கள்.(கொஞ்சம் மனசு உள்ளவர்களாக இருந்த்தால்) அவர் கர்ப்பிணியாக இருப்பதால் முறையாக மருத்துவரை பார்ப்பதே நல்லது என்று அனுப்பிவிட்டார்கள்.கர்ப்பிணி என்பதால் பெரும்பாலான ஆண்டிபயாடிக் மாத்திரைகள் கூட தரக்கூடாது.தெரியாமல் தந்துவிட்டால் பின்விளைவுகள் மோசமாக இருக்கும்.

                              மேற்கண்ட விஷயம் பற்றி மருத்துவர் ஒருவர் கூறியது,

                                பிறப்புறுப்பில் ஏற்படும் புண்கள் அநேகமாக பால்வினை நோயாக இருக்கலாம்.இதில் மூன்று,நான்கு வகை இருக்கிறது.சிபிலிஸ் என்ற நோயில் முதலில் புண் ஏற்படும்,மருந்து செய்யாவிட்டாலும் சில நாட்களில் தானாகவே குணமாகிவிடும்.ஓரிரு மாதங்களில் உடலில் அம்மை போன்ற கொப்புளங்கள் சிறியதாக தோன்றும்.அப்போதும் மருத்துவரிடம் போகமாட்டார்கள்.அதுவும் தானாகவே சரியாகி விடும்.ஆனால் உள்ளிருக்கும் நோய் பல ஆண்டுகளுக்கு பிறகு முடி கொட்டுவதிலிருந்து துவங்கி உடலின் இதயம்,சிறுநீரகம் உள்பட எல்லாஉறுப்புகளையும் பாதிக்கும்.

                                கர்ப்பிணி பெண் என்பதால் இன்னொரு பிரச்சினை,குழந்தைக்கும் பரவும்,குழந்தை இறந்து பிறப்பது,அபார்ஷன் போன்ற வாய்ப்புக்களும் அதிகம்.பெரும்பாலும் கர்ப்பமாக இருந்து மருத்துவமனை சென்றாலே இதற்கான பரிசோதனைகள் செய்யப்பட்டுவிடும்.பலர் இன்னும் வீட்டில் பிரசவம் பார்த்துக்கொள்ளும் நிலை தொடர்கிறது.உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சையும் எடுப்பதில்லை என்றார்.

                                 இந்தியா பெண்கள் வாழத்தகுதியில்லாத நாடு (நான்காம் இடமாம்) என்று அறிவித்திருக்கிறார்களே அதற்கும்,இந்த மாதிரி அணுகுமுறைகளுக்கும் தொடர்பிருக்கிறதா? ஆம்.பிறப்புறுப்பில் புண் இருப்பதாக சொன்னால் அந்த பெண்ணை வீட்டில் இருப்பவர்கள் சந்தேக கண் கொண்டு பார்க்க வாய்ப்பிருக்கிறது.கணவனால் வந்திருந்தாலும் முதலில் இவராக பேச முடியாது.

                                  ஆண்கள் இப்படிப்பட்ட நோயால் பாதிக்கப்படும்போது மருத்துவர் சொன்னது போல மூடிவைத்து பெரிதாக்கிக் கொள்கிறார்கள் அல்லது அவர்கள் மட்டும் சிகிச்சை பெறுகிறார்கள்.மனைவியிடம் கூறினால் எப்படி ஏற்பட்ட்து?என்ற கேள்வி வரும் என்பதால் தவிர்த்து விடுவார்கள்.இது இன்னொரு முட்டாள்தனம்.இவர் நோய் தெரியும் முன்பே மனைவிக்கும் தொற்ற வைத்துவிட்டு இருப்பார்.இவர் மட்டும் குணப்படுத்திக்கொண்டாலும் மனைவியிடம் இருந்து மீண்டும் தொற்றும்.

-