Saturday, June 11, 2011

கடையில கட்டிங் ஷேவிங் பண்ணுவீங்களா?

  இப்போது நினைத்தாலும் மனசை என்னவோ பண்ணுகிறது.சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விஷயம். முகத்தில் ஆங்காங்கே நமைச்சல் ஏற்படுகிற மாதிரி ஒரு உணர்வு.கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகிக் கொண்டிருந்தது.நானும் அடிக்கடி தேய்த்துக்கொண்டிருந்தேன்.அடுத்த நாள் காலையில் பார்த்தபோது முகத்தில் ஆங்காங்கே வெள்ளையாக புள்ளிகள் போல இருந்தது.


                                                                                          வீட்டில் ஷேவ் செய்ய வைத்திருந்த ஆண்டி ஷேவ் லோஷனை எடுத்து நன்றாக தேய்த்தேன்.அப்போதைக்கு வெள்ளையாக இருந்தது மறைந்து விட்டது போல தெரிந்தது.ஆனால் கொஞ்ச நேரம் கழித்து பார்த்தபோது அதிகமாகியிருந்தது.மனசில் பயம் அப்பிக்கொண்டது.கிட்டத்தட்ட நடுக்கத்தில் இருந்தேன் என்று சொல்ல வேண்டும்.எங்கும் வெளியில் செல்ல முடியவில்லை.முக்கியமான நண்பனின் திருமணம் .ஆனால் போகவில்லை.

                                                                                             தோல் மருத்துவரை பார்த்துவிடுவது என்று முடிவு செய்துவிட்டேன்.எங்கள் கிராமத்திலிருந்து பதினாறு கிலோமீட்டர்.ஆனால் பேருந்தில் எப்படி போவது? உடன் படித்தவர்கள் ,தெரிந்தவர்கள் என்று ஒவ்வொருவர் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்வதற்கே சரியாக இருக்கும்.முகத்திலோ,உடலிலோ ஏதேனும் இப்படி விகாரமாக இருக்கும்போது மற்றவர்களுக்கு பதில் சொல்கிறமாதிரி கஷ்டம் உலகத்தில் வேறில்லை.






                                                                                                 நண்பன் ஒருவன் உதவியுடன் இரு சக்கர வாகனத்தில் தோல் மருத்துவரிடம் போனேன்.நிமிடத்துக்கு நிமிடம் எனக்கு படபடப்பு அதிகரித்துக் கொண்டிருந்தது.மருத்துவர் என்ன சொல்லப்போகிறார் என்பதில் தான் வாழ்க்கை அடங்கியிருக்கிறது.எரிச்சலும் சிடுசிடுப்பும் வந்துவிட்டது.ஒருவழியாக மருத்துவரை பார்க்க என் முறை வர உள்ளே நுழைந்தேன்.

                                                                                                 "பயப்படாதீர்கள்! இது சரியாகிவிடும்.ஓரிரு வாரங்கள் ஆகும்!"-கடையில ஷேவ் பண்ணீங்களா?  .முடிந்தளவுக்கு வீட்டிலேயே பண்ணிக்கோங்க .உண்மையில் அப்போது எனக்கு கடவுளாகவே தோற்றம் தந்தார்.அது ஒருவகை பூஞ்சை காளான் .அவர் கொடுத்தது  ஒரு ஆயின்ட்மென்ட் ,முப்பது சி விட்டமின் மாத்திரைக்களும்தான்.கொஞ்ச நாளில் சரியாகி விட்டது  வேறு விஷயம்.அப்போதிருந்து நான் உஷாராக இருக்கிற


                                                         கடையில் ஷேவ் செய்யும்போது அவர்கள் வைத்திருக்கும் டவலை கொண்டு துடைக்க அனுமதிக்கவே கூடாது.கத்திரி உள்ளிட்ட பயன்படுத்தும் பொருட்கள் கிருமி நாசினியில் தொய்க்கப்படுவது அல்லது கொதிநீரில் சுத்தம் செய்யும் கடைகள் இருக்கின்றன.அதை தேர்ந்தெடுக்கலாம்.சிலர் ஷேவ் வீட்டில் செய்துகொண்டு  முடிவெட்டுவது மட்டும் கடையில் செய்வார்கள்.அவர்களுக்கும்.சுற்றுப்புறம் ஷேவ் செய்யும் போது புதிய பிளேடு பயன்படுத்துவதை உறுதி செய்துகொள்ளவேண்டும்.பிளேடு ,கத்தி மூலமாக எச்.ஐ.வி. கிருமி பரவும் அபாயமும் இருக்கிறது.
-

12 comments:

சக்தி கல்வி மையம் said...

நான் இதை சாதரணமாக நினைத்தேன் .. இந்தப் பதிவை படித்தவுடன் இவ்வளவு விபரீதமா?
என தெரிந்துக்கொண்டேன்..
நன்றி..

நிரூபன் said...

அனுபவ அறிவின் ஊடாகவும், மருத்துவத் தகவலையும் இணைத்து
கடையில் சேவ் செய்வதால் ஏற்படும் பின் விளைவுகள் பற்றி விளக்கியுள்ளீர்கள்.

நல்லதொரு விழிப்புணர்வு பதிவு.

கடையில் சேவ் செய்ய நாற்பது ரூபாவை வீணாக்குவதிலும் Disposable சேவிங் ரேசர் வாங்கி வீட்டில் சேவ் செய்வதால், பணமும் விரயாமாகாது,
தோலுடன் தொடர்புடைய நோய்களும் வராது.

இப் பதிவின் மூலம் நல்லதொரு விடயத்தை அறியத் தந்த உங்களுக்கு நன்றி சகோ.

Anonymous said...

அருமையான பதிவு .. கடையில் சவரம் செய்யும் போது இரண்டு பாதிப்புகள் உள்ளன .. ஒன்று சுத்தமில்லாத சவர ஆயுதங்கள், பிளேடுகள், என்பதனை சரியான முறையில் கிருமி நாசினி செய்யாமல் இருப்பதால் ஏற்படும் தொற்று .. மற்றொன்று தோலின் மென்மை தன்மையறியாது கொடுக்கப்படும் அழுத்தங்களால் ஏற்படும் ரேசஸ் ...

பலருக்கும், எனக்கும் கூட கடையில் சவரம் செய்தால் இப்படி வருவதுண்டு .. அதனால் வீட்டிலேயேய் இப்போது எல்லாம் முகச்சவரம் செய்கின்றேன் .. வீட்டில் என்றாலும் .. அவற்றிலும் கிருமி தொற்றும் அபாயம் உள்ளது. முகச்சவர ரேசர்களை ஆண்டி-செப்டிக்கில் போட்டு சுத்தம் செய்து நன்கு கழுவி வைக்கவேண்டும்.. இல்லையாயின் அடுத்தமுறை பயன்படுத்தும் போது ஆபத்துண்டு ... இரண்டு முகத்தினை நல்ல லோசனால் தடவேண்டும்.. டெட்டால் போன்றவைகளால்.. பிற உபகரண்கங்களை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஒருவரின் முகச்சவர இயந்திரங்களை அடுத்தவர் பயன்படுத்துதல் மிகத் தவறாகும்.

shanmugavel said...

@!* வேடந்தாங்கல் - கருன் *! said...
நான் இதை சாதரணமாக நினைத்தேன் .. இந்தப் பதிவை படித்தவுடன் இவ்வளவு விபரீதமா?
என தெரிந்துக்கொண்டேன்..
நன்றி..

உங்களுக்கும் நன்றி கருன்

shanmugavel said...

@நிரூபன் said...

உண்மையே சகோ! ஆனால் கட்டிங் செய்ய கடைக்கு போகவேண்டியிருக்கிறது.நன்றி

shanmugavel said...

@இக்பால் செல்வன் said...

தங்கள் ஆலோசனையும் சிறப்பானதே சகோ.நன்றி

கூடல் பாலா said...

தேவையான எச்சரிக்கை

shanmugavel said...

@koodal bala said...

தேவையான எச்சரிக்கை


நன்றி சார்

Unknown said...

நாங்க சொந்த கட்டிங் சேவிங் பாஸ் ஹிஹி நோ ப்ராப்ளம்

shanmugavel said...

@மைந்தன் சிவா said...

நாங்க சொந்த கட்டிங் சேவிங் பாஸ் ஹிஹி நோ ப்ராப்ளம்
கட்டிங் கூடவா?இது புதுசா இருக்கே சிவா! நன்றி

Sankar Gurusamy said...

சற்று விழிப்புணர்வுடன் இதில் இருப்பது நமக்கு பாதுகாப்பு. வேறு வழியில்லை.. கட்டிங் செய்யவாவது கடைக்கு போய்தான் ஆகவேண்டும்.

பகிர்வுக்கு நன்றி..

http://anubhudhi.blogspot.com/

ADMIN said...

விழிப்புணர்வு ஏற்படுத்திய பதிவு. பகிர்வுக்கு நன்றி..!