Thursday, March 31, 2011

ஆணும் ஆணும்

ஒரு பெரிய டப்பாவில் உங்களை போட்டு அடைத்து விட்டால் எப்படியிருக்கும்.உங்களுக்குள்ளே மட்டும் பேசிக் கொள்ள வேண்டும்.எப்போதாவது உங்களை மாதிரி இருக்கும் நண்பரிடம் பேசலாம்.இம்மாதிரி வாழ்க்கையை உலகில் சுமார் 5சதவீத மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.அவர்கள் தங்களுடைய பழக்கங்களை,ஆர்வங்களை வெளியே பேசினால் கேவலமாக பார்ப்பார்கள்.  

                           அவர்கள் தனது ஜோடியுடன் அவசரமாக லாட்ஜில் ரூம் எடுப்பார்கள்.சில நேரம் குழுவாக! போலீஸ் பயம் வேறு.அப்படி ஒரு பழக்கம்.ரகசிய உலகத்தில் தங்கள் தேவையை நிறைவேற்றிக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் அவர்கள் ஆணும்,பெண்ணும் அல்ல! ஆணும் ஆணும்! ஆமாம்,அவர்கள் ஓரினச் சேர்க்கையாளர்கள்.

 


                            நகரில் ஒரு பெரிய வீட்டில் குடும்பம் நட்த்திக் கொண்டிருந்த அந்த பிரபல அரசியல் புள்ளி கொலை செய்யப்பட்டார்.செல்போனில் கடைசியாக கொல்லப்படும் முன்பு தொடர்பு கொண்டிருந்த எண்ணை துருவினார்கள்.அது அவரது ஆண் ஜோடியின் செல்போன் எண் என்பது கண்டுபிடித்தார்கள்.

                            மேலே கண்ட அரசியல்வாதியை போல பலர் இருக்கிறார்கள்.அவர்கள் ஆர்வம் ஆணிடம்தான் என்றாலும் வெளியே சொல்ல முடியாமல் திருமணம் செய்து கொள்வார்கள்.மனைவியிடம் ஈடுபாடு அதிகம் இருக்காது.வெளியில் மட்டும் மற்றவர்களைபோலவே குடும்பம் நட்த்துவார்கள்.இவர்களை bisexual என்பார்கள்.

 

                              பரம்பரை கூறுகள் காரணமாக இருக்கலாம் என்று சில ஆய்வுகள் கூறினாலும் அறியாத வயதில் ஓரினச்சேர்க்கை நபர்களால் பழக்கத்துக்கு உள்ளாகி விட முடியாமல் போய்விட்டவர்கள்தான் அதிகம்.விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு பாதிப்பு அதிகம்.ஆணுடன் ஆண் சேர்க்கையில் பழகுவது,போதை சிகரெட் போன்றவற்றுக்கு அடிமையாவது போலவேதான்.

                               குற்ற உணர்வு,வெளியே தெரிந்து விடுமோ என்ற பயம்,விளைவுகள் பற்றிய கலக்கம்,தன்மீது சுயமதிப்பு குறைந்து அதிகம் சமூக ஒட்டுதலின்றி வாழவேண்டும்.கிட்ட்த்தட்ட வாழ்நாள் முழுக்க நரகம் போலவே!சமூகம் கேவலமாக பார்க்கும்.இப்போது நீதிமன்றங்கள் ஓரளவு ஆதரவு நிலை எடுத்து வருகின்றன. அவர்கள் இப்படிப்பட்ட பழக்கத்திற்கு உள்ளாகும் சூழல் எதிர்பாராமல் நடக்கும் ஒன்று. 

               

                                                                  கல்லூரி விடுதியில் இரவு தூங்கிக் கொண்டிருந்தபோது அவனுக்கு முதல் அனுபவம்.பிறகு அதுவே பழக்கமாகிப் போனது.இன்று அவன் ஆணுடன் ஆண் உறவு கொள்ளும் Homosexual.அவனுக்கு திருமணத்தில் ஈடுபாடு இல்லை.பால்வினை நோய்கள் வேறு இருக்கிறது.வீட்டில் திருமணத்திற்கு  கட்டாயப்படுத்துகிறார்கள்.மன உளைச்சலில் அலைந்து கொண்டிருக்கிறான்.பெண் குழந்தைகளுக்கு மட்டுமல்ல,ஆண் குழந்தைக்கும் வெளியில் ஆபத்து இருக்கிறது என்கிறார் தொண்டு நிறுவனத்தைச் சார்ந்த நண்பர் ஒருவர்.

                             மேலே தெரிவித்த்து போல உலக மக்கள் தொகையில் சுமார் 5 சதவீதம் வரை இருக்கிறார்கள் என்கிறது ஆய்வுகள்.சிலருக்கு குறிப்பிட்ட சதவீதம்வரை பெண் தன்மை இருக்கலாம்.அவர்களில் பணத்திற்காக தொழில் செய்பவர்களும் உண்டு.அவர்கள் கண்டிக்கத்தக்கவர்களோ,பாவிகளோ அல்ல!பரிதாபத்துக்குரியவர்கள்.சக மனிதப்பிறவிகளாக மதிக்கப்பட வேண்டியவர்களே!
-

Wednesday, March 30, 2011

என் மனைவி யாருடனும் ஓடிப்போகவில்லை-பிரபல பதிவர் காமெடி பொளேர்

அவர்தான், உங்களுக்கு மிக நெருக்கமாக ஆகிவிட்ட அவரேதான்.அவரது வார்த்தைகளை கவனியுங்கள்.


                                                                                                              
உங்கள் நண்பர்களைப் பற்றி கூறுங்கள்.அவர்களும் பதிவர்களா?

                                                                அவர்களும் பதிவர்களே!ஒரு முறை பஸ் ஸ்டாண்ட் கழிப்பறையில் எழுதிக் கொண்டிருக்கும்போது “நண்பேண்டாஎன்று குரல் கேட்ட்து.திரும்பினால் இரண்டு பேர் சிரித்துக்கொண்டு என்னைத் தழுவிக் கொண்டார்கள்.அப்போது முதல் மூவரும் ஒருவரானோம்.அவர்களும் எழுத்தாளர்கள்தான்.அவர்களை நான் அதிகம் சிந்திக்கவிடுவதில்லை.என்னுடைய பதிவை காபி,பேஸ்ட் செய்து கொள்வார்கள்.நான் லிங்கும் கொடுத்திருக்கிறேன்.எனக்கு ஓட்டும்,ஆளுக்கு பத்து கமெண்டும் போடுவார்கள்.இப்போது என்னால் தியேட்டர்,பஸ் ஸ்டாண்ட் என்று கழிப்பிடம் பக்கம் போக முடிவதில்லை.அவர்களை அனுப்புகிறேன்.

வலைப்பதிவுதான் இருக்கிறதே,ஏன் கழிப்பிடத்தில் எழுதவேண்டும்?

                            உங்கள் அறியாமையை நினைத்தால் பாவமாக இருக்கிறது.நான்கு நாட்கள் ஆகிவிட்டாலே பதிவை யாரும் தேடி படிக்க மாட்டார்கள்.பொதுக்கழிப்பிடம் அப்படி அல்ல! கட்டிட தரம் பொறுத்து 100 ஆண்டுகள் கூட வாழும்.தானாக இடிந்து போகும்வரை நம்முடைய எழுத்துக்கள் இருக்கும்,அதுவரை சுத்தமும் செய்யமாட்டார்கள்.நாங்கள் ஒருவித அழியாத மையை கண்டுபிடித்திருக்கிறோம்.


ஆனால் உங்களுடைய பெயர் முன்னணி பதிவர்கள் பட்டியலில் வருவதில்லையே?

                             அது தொழில் நுட்ப கோளாறு.எல்லாவற்றையும் தொழில்நுட்பத்தால் சாதிக்க முடியாது.முதுகிலும்,தொடையிலும் அரித்துக்கொண்டே இருக்கிறது.சொரிவதற்கு உங்கள் தொழில்நுட்பம் ஒரு கருவியை கண்டுபிடித்த்தா?

உங்கள் மனைவியை அழைத்துவர முடியாதா? ஆளாளுக்கு ஒன்று பேசுகிறார்கள்.

                            நான் உங்களுக்கு தெளிவாக சொல்லிவிட்டேன்.என் மனைவி யாருடனும் ஓடிப்போகவில்லை.தாய் வீட்டுக்கு சென்றிருக்கிறார்.இன்னும் ஒரு வருடம் கூட ஆகவில்லை.ஒன்பது நாட்கள் பாக்கி இருக்கிறது.அவருக்கு கோபம் அவ்வளவுதான்.நாட்டின் எதிர்காலத்திற்காக சிலதை விட்டுக் கொடுத்துதான் ஆக வேண்டும்.தவிர பதிவு போட ஒருமணி நேரம் தாமதமானால்கூட இருநூறு மெயில் வருகிறது.


ஒரு வேளை எழுதாததற்கு நன்றி தெரிவித்து இருக்குமோ?

                              அந்த மெயிலை படிக்க எனக்கு நேரமில்லை.கிண்டலுக்காக பேட்டி எடுப்பதாக இருந்தால் தயவுசெய்து நிறுத்திக் கொள்ளுங்கள்.இதில் தேசத்தின் எதிர்காலம் சம்பந்தப்பட்டிருக்கிறது.கேலி,கிண்டல் செய்தே நாட்டை நாசம் செய்து கொண்டிருக்கிறோம்.கொஞ்சம் கூட சீரியஸாக சிந்திக்கத் தெரியவில்லை.

-

Monday, March 28, 2011

நீங்கள் தொட்டதெல்லாம் வெற்றியாக வேண்டுமா?

                              நம் அனைவருக்கும் ஒரு மைய ஆசை உண்டு.எப்போதும் வெற்றியாளராக இருக்க வேண்டும்.ஆம், ஆனால் பல நேரங்களில் வறட்டு கௌரவம்,வீண் பிடிவாதங்கள்,பொறாமை போன்றவற்றால் நல்ல உறவுகளை இழந்து விடுகிறோம்.சில ஒட்டவைக்க முடியாமல்கூட போய்விடுகிறது.நம் குழந்தைகள் தவறு செய்தால் சில காலங்களில் ஏற்றுக்கொள்ளும் மனம் மற்றவர்களுக்கு வழி விடுவதில்லை.  


                                                                        வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் எல்லோரும் இனிய,இதமான உறவுகளை அமைத்துக்கொண்டவர்களே! கணவன்,மனைவி,நண்பர்கள்,பணியாளர்கள்,அண்டைவீட்டார்,பெற்றோர்,உடன்பிறந்தவர்கள் என சிக்கலில்லாத உறவுகளை கைவரப்பெற்றவர்கள் உண்மையில் இவ்வுலகில் வாழ்ந்தார்கள் என்று போற்றப்படும் நிலையை பெற்றவர்கள்.சாதனைகள்,தொழில் வெற்றி,புகழ் மாலை போன்றவற்றை உறவுகள்தான் தீர்மானித்திருக்கின்றன.


                                                                              வெற்றி பெற்ற தனிமனிதன் அவனது திறமைகளால் தானே உயர்ந்திருப்பான்?ஆம். அவனது திறமை நல்ல உறவுகளை உருவாக்கியதில் இருக்கிறது.உறவுகளை தனது வெற்றிக்கு ,சாதனைக்கு பயன்படுத்திக்கொண்டதில் இருக்கிறது.தூக்கிவிட ஆளில்லாமல் யாரும் மேலேபோக முடியாது.தாங்கிப்பிடிக்காமல்நிலைத்து நிற்கவும் முடியாது.பலர் பலத்தில்தான் ஒருவர் உயரே நிற்கமுடியும்.

                                                                                  நல்ல உறவுகளுக்கு ஒருவர் அதிக சுயநலம் உள்ளவராக இருக்ககூடாது.சுயநலம் இருப்பவன் தனியாகத்தான் இயங்கமுடியும்.உங்கள் உடனிருப்பவர்கள் சந்தோஷமாக இல்லாதபோது நீங்கள் எப்படி சந்தோசமாக இருக்கமுடியும்?அப்படி இருந்தால்,அது ஒரு மன நோய்.உணர்வுபூர்வமாக மற்றவர்களின் தேவையை உணர்ந்தவன் அதை நிறைவேற்றுகிறான்.உடைக்கமுடியாத பிணைப்புகள் உருவாகின்றன.


                                                                                        நல்ல வார்த்தைகள் கைவரப்பெற்றவர்கள் நல்ல வாழ்க்கையை பெற்றவர்கள்.வார்த்தைகள்தான் உறவின் வலிமையை தீர்மானிக்கின்றன.சூழ்நிலை காரணமாக உணர்ச்சி வயப்பட்டு எரியும் வார்த்தைகள் சில நேரங்களில் சிக்கல்களை ஏற்படுத்திவிடுகிறது.பின்னர்,தவறை உணர்ந்து இனிய வார்த்தைகளால் உறவுகளை இருக்கிக்கொள்ளவேண்டும்.நல்ல உள்ளங்களிலிருந்து நல்ல வார்த்தைகளே வரும்.கோபம் போன்ற உணர்வுகளை கையாளத்தெரிந்தால் நலம் பயக்கும் உறவுகள் உண்டாகும்.

                                                                            உறவுகளுக்காக தேவைப்பட்டால் உங்கள் மதிப்பீடுகளை மாற்றிக்கொள்ளலாம்.அந்த மதிப்பீடுகள் சமூகத்துக்கோ,தனி மனிதனுக்கோ தீங்கு விளைவிப்பதாக இருக்கக்கூடாது.ஒத்துப்போதல்,மற்றவர்களை புரிந்து கொள்வது,உணர்வுப்பூர்வமான ஆதரவு அளிப்பது,சேர்ந்து உண்பது,இணைந்து கொண்டாடுவது,எளிமையாக இருப்பது,பணத்தை பார்க்காமல் மனத்தை பார்த்து பழகுவது போன்றவை இனிய உறவுகளின் அடிப்படை.முயற்சி செய்தால் நீங்களும் சாதனை மனிதர்தான்!

                                 இது சிறு மாற்றங்களுடன் கூடிய மீள்பதிவு.இன்னும் பத்து தின்ங்களுக்கு நண்பர்கள் தளத்தை வாசிப்பதும்,கருத்துரைக்கு பதில் சொல்வதும் மாலை நேரத்தில்தான் முடியும்.நன்றி நண்பர்களே!


-

Sunday, March 27, 2011

உங்களை அனைவரும் விரும்பவேண்டுமா?


நமக்கு சில திறமைகள் அவசியமானவை.அதில் முக்கியமானது கேட்பது(listening).யாராவது பேசும்போது நான் கேட்பேனே என்று சொன்னால் மன்னிக்கவும்! அது உண்மையல்ல.தொடர்ந்து படித்துவிட்டு சூழ்நிலைகளை கவனித்துப்பாருங்கள்.உங்களுக்கு புரியும்.இந்த ஒரு திறமையை நீங்கள் வளர்த்துக் கொண்டாலே நீங்கள் மற்றவர் விரும்பக்கூடிய மனிதர்.

ஒருவருடைய பிரச்சினைகளை காது கொடுத்து கேட்பதனாலேயே பெரும்பாலான தற்கொலைகளை தடுக்கமுடியும் என்கிறார்கள் உளவியலாளர்கள்.உங்களிடம் யாரேனும் தங்கள் துயரங்களை,துக்கங்களை கொட்டும்போது,புலம்பும்போது கவனமாக கேட்டிருக்கிறீர்களா? ஆம் என்றால் பெரும்பாலனவர்கள் சொல்வது பொய்!உண்மையாக இருக்குமானால் மதுக்கடையில் கூட்டம் குறைந்திருக்கும்,நிறைய தற்கொலைகள் தடுக்கப்பட்டிருக்கும்,மனக்கோளாறுகள்,மனநோய்கள் அதிகரித்திருக்காது,தங்களது சிக்கல்களுக்காக கோவில்களுக்கு செல்பவர்கள் இருக்கமாட்டார்கள்.குழந்தைகள் சொல்வதை கவனமாக கேட்டால் அவர்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் கூட வெளியே வரலாம்.

பிரச்சினைகளை நாம் ஏன் கவனமாக காது கொடுத்து கேட்பதில்லை?
ஏனென்றால், நாம் யாரையாவது சந்திக்கும்போது நம்மை முன்னிலைப்படுதுவதிலேயே நோக்கமாக இருக்கிறோம்.நமது அருமை,பெருமைகளையும்,சாதனைகளையும் கூறி நம்மை முக்கியமானவராக உருவாக்குவதில் தான் கவனம் செலுத்துகிறோம்.எதிரில் இருப்பவர் கேட்கிறாராஎன்பது கூட தெரியாமல் பேசிக்கொண்டிருக்கிறோம்,மேலும், நாம் துயரங்களை விரும்புவதில்லை.நண்பர்களோ,உறவினர்களோ சந்திக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் அவ்வளவே. அடிப்படையிலேயே நாம் எதிர் உணர்வுகளை விரும்புவதில்லை.முக்கியமாக நாம் இன்னும் அருகில் உள்ளவர்களையே சகமனிதர்களாக ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுதான் கசக்கும் உண்மை.


பிரச்சினைகளை வெளியே சொல்ல ஏன் முன்வருவதில்லை ?         
                         பலர் தங்களது நெருடல்களை,சிக்கல்களை யாரிடமும் பேச முன்வருவதில்லை.தங்களது பிரச்சினைகளை கடவுளிடம் எடுத்துச்செல்கிறார்கள்.இறைவன் கேலி,கிண்டல் செய்வதில்லை.பேசிக்கொண்டிருக்கும்போது,புலம்பும்போது பேச்சை மாற்றுவதில்லை, அவசரமான வேலை இருப்பதாக கிளம்பிச்செல்வதில்லை,தங்களது கதைகளை சொல்ல தொடங்குவதில்லை.வேண்டாவெறுப்பாக பதிலுக்கு ஏதேனும் உளறுவதில்லை.

நண்பர்களை கண்டறியுங்கள்
                           உங்கள் கஷ்டங்களை நண்பர்களிடம் பேச ஆரம்பிக்கலாம்,அவர்கள் உங்களை எதிர்கொள்வதை வைத்து நல்ல நண்பர்களை தேர்வு செய்யுங்கள்.நீங்கள் கூறுவதை கவனமாக கேட்டால் அவர் நல்ல நண்பர்.உங்கள் உணர்வுகளை புரிந்து கொண்டால்,அதற்கு மதிப்பளித்தால்,கவனமாக இருந்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலி
.
கவனமாக காது கொடுத்து கேளுங்கள்!
ஆம்.தங்களது பிரச்சினைகளை கேட்க யாரும் இல்லாத நிலையிலேயே கடவுளிடம் போகிறார்கள்.அந்த இடத்தில் நீங்கள் இருந்தால் கடவுள் நீயே.
கேட்கும்போது
  • கண்ணோடு கண் நோக்கி கவனமாக கேளுங்கள் .
  • அவரது உணர்வுகளை கவனியுங்கள்.
  • அவரை பேசத்தூண்டுங்கள்.
  • அவரது உணர்வுகளை கூறி நீங்கள் புரிந்துகொண்டதை தெரியப்படுத்துங்கள்.
  • புரியாததற்கு விளக்கம் கேளுங்கள்.
  • உங்கள் கதையை ஆரம்பிக்கவேண்டாம்.
  • பேச்சை திசை திருப்பவேண்டாம் .
  • தீர்வு இருந்தால் அவருக்கு சொல்லுங்கள் .

                          இத் திறமையை கொஞ்சம் கொஞ்சமாகத்தான் வளர்த்துக் கொள்ள முடியும்.முயற்சி செய்து பாருங்கள்.நீங்கள் மற்றவர்கள் விரும்பக்கூடிய மனிதராக இருப்பீர்கள்.

-

Saturday, March 26, 2011

என் வளர்ச்சி பொறுக்காமல் கிளப்பிவிடுகிறார்கள்-பிரபல பதிவர் அதிரடி

 
                           அவரைப் பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது.ஆம்.அவரேதான்.அவருடன் பேட்டியிலிருந்து சில பகுதிகள்.

 தாங்கள் எழுத்தாளரான பின்னணி என்ன?

                               அது சுவையானது.என்னுடைய சிறு வயதில் என் தாயார் எழுந்திரு என்றது என் காதில் எழுத்து என்று விழுந்துவிட்ட்து.அப்போதிருந்து அதை பிடித்துக் கொண்டு விட்டேன்.ஆரம்ப்ப் பள்ளியில் சேர்த்தார்கள்.எழுத சொன்னால் நான் ‘எஎன்று எழுதினேன்.அப்போதிருந்து எங்கேயாவது எழுதிக் கொண்டுதான் இருப்பேன்.எந்த பஸ் ஸ்டாண்ட்,தியேட்டர் பாத்ரூமிலும் எழுதாமல் வந்த்து இல்லை.


வலையுலகிற்கு எப்படி வந்தீர்கள்?
                                மூக்குப்பொடி வாங்கிய பேப்பரை படித்த போது கூகுள் இலவசமாக பிளாக் தருவது தெரியவந்த்து.இலவசமாக தரும் எதையும் நான் விட்ட்தில்லை.என் வாழ்வில் திருப்பம் நிகழ்ந்த்து.அப்புறம் கம்ப்யூட்டர் கற்றுக் கொண்டேன்.இதோ இப்போது பிரபல பதிவர்.

பிரபல பதிவர் என்பதற்கு என்னதான் இலக்கணம்?
                                இங்கே பொறாமை பிடித்தவர்கள்தான் அதிகம்.அதனால் பிரபல பதிவர் என்று நானே சொல்லிக் கொண்டேன்.மற்றவர்களை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தால் விடிந்து விடும்.தவிர அதை ஏன் இன்னொருவர் சொல்லவேண்டும்? அவர்களுக்கு கஷ்ட்த்தை தர நான் விரும்பவில்லை.


உங்களுக்கும் ஓட்டுபோட குழு இருப்பதாக சொல்லப்படுகிறதே?

                               ஒருவர் எத்தனை பிளாக் வேண்டுமானாலும் ஆரம்பித்துக் கொள்ள முடியும்.எனக்கு நான்கு இருக்கிறது.நண்பர்களும் இருக்கிறார்கள்.எங்கே குழு இல்லை என்று உங்களால் சொல்ல முடியுமா? மகளிர் குழுக்கள் இருக்கிறது.பாராளுமன்றத்தில் குழுக்கள் இருக்கின்றன.ஆண்கள் சுய உதவிக் குழுக்கள்கூட இருக்கிறது.

ஒரு நாளைக்கு எத்தனை பேர் படிக்கிறார்கள்.? நீங்கள் STAT வெளியில் காட்டவில்லையே?
                               ஏற்கனவே வயிறு எரிந்து சாகிறார்கள்.அதை பார்த்தால் அவ்வளவுதான்.பதிவர்கள் எல்லாம் வெந்து போய்விடுவார்கள்.எத்தனை பதிவர்கள்,எத்தனை குடும்பங்கள் யோசித்துப் பாருங்கள்.அந்த பாவம் எனக்கு வேண்டாம். அப்புறம் நான் மட்டும்தான் பதிவிட வேண்டும் திரட்டிகள் என் ஒருவனுடைய பதிவை மட்டும் காட்டிக் கொண்டிருக்க முடியாது.

பதிவுலகம் வந்த பிறகு உங்கள் மனைவி பிரிந்து விட்ட்தாக கூறப்படுகிறதே?

                                   கணவன் மனைவி ஊடல் சங்க காலத்தில் இருந்து வரும் ஒன்று.கோபத்தில் தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.ஒரு வருடம்கூட ஆகவில்லை.நேற்றுகூட நான் பேசினேன்.அது கிராம்ம் என்பதால் டவர் வீக்காக இருக்கும்.காது கேட்ட்தோ,இல்லையோ அவர் செல்ஃபோனை எடுக்கவில்லை.நேரில் போகலாம் என்றால் பதிவுலகை விட்டு செல்ல முடியவில்லை.லட்சக்கணக்கான வாசகர்களை ஏமாற்றியதுபோல ஆகிவிடும்.அவர் நல்லவர்.கல்யாணமாகி ஆறு மாதங்கள் டி.வி.பார்த்துக்கொண்டு சந்தோஷமாகவே இருந்தார்.நான் எழுதிக் கொண்டிருக்கும்போது தொல்லை தரமாட்டார்.என்னுடைய வளர்ச்சி பொறுக்க முடியாமல் ஏதேதோ கிளப்பிவிடுகிறார்கள்.


உங்கள் எழுத்து புகழ் பெற்றதற்கு என்ன காரணம்?

                             நான் NHM WRITER-ல் எழுதுகிறேன்.சுலபமாக இருக்கிறது.ஆங்கிலத்தில் ka என்று டைப் செய்தால் ‘கஎன்று வருகிறது.

-

Friday, March 25, 2011

உங்களுக்கு நேரும் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வது எப்படி?


                                                                                          வாழ்வில் பிரச்சினைகள் ஓர் அங்கம்.உள்ளங்களில்,உறவுகளில்,பணியிடங்களில்,குடும்பத்தில் என்று உள்ளத்தை தைக்கும் சிக்கல்கள் நமக்கு இயல்பானவை.இயற்கை மனிதனுக்கு உடலில் நோய் எதிர்ப்புத்திறனை வழங்கியிருப்பது போலவே மனதிற்கும் சிந்திக்கும் ஆற்றலை வழங்கியிருக்கிறது.நோய் எதிர்ப்பு திறனை தாண்டி நோய்கள் உண்டாவது போலவே உங்கள் சிந்திக்கும் திறனை தாண்டி தீர்க்கமுடியாத பிரச்சினைகள் உருவாகின்றன. 
 

                                                                                                நமது மதிப்பீடுகள் தந்த நம்பிக்கைகள் வழியாக நாம் எப்போதும் அன்றாட பிரச்சினைகளை தீர்த்துக்கொண்டே இருக்கிறோம்.நமது ஆற்றலால் முடியாமல் சில நமது உள்ளத்தை பாதித்து நம்மால் எதிர்கொள்ளமுடியாதபோது வழக்கமாக செய்யும் செயல்கள் என்ன?
மரபு சார்ந்த வழிகளில் .................
நமது வாழ்க்கைமுறைக்கு உட்பட்டு மரபு சார்ந்து சில வழிகளை மேற்கொள்கிறோம்.அவை.
  • கோவிலுக்கு செல்கிறோம் :கடவுளிடத்தில் கோரிக்கை வைக்கிறோம்.பிரச்சினைகள் தீர்ந்தால் காணிக்கை செலுத்துவதாக வேண்டிக்கொள்கிறோம்
  • மத குருமார்களை சந்திக்கிறோம்:நமது சிரமங்களை கூறி ஆலோசனை கேட்கிறோம்.
  • ஜோதிடர்களை சந்திக்கிறோம்:எதுவும் கூறாமலேயே நல்ல நேரத்தை கேட்கிறோம்.சிலர் வெளிப்படையாக பேசுகிறார்கள்.குரு மாறினால் ,சனிப்பெயர்ச்சி அடுத்து அல்லது திசை மாறியவுடன் உங்கள் தொல்லைகள் தீரும் என்கிறார். நம்பிக்கையுடன் திரும்புகிறீர்கள்.
  • நல்ல நண்பர்கள் ,உறவினர்கள் உங்களை புரிந்து கொள்ளும் அளவுக்கு இருந்தால் அவர்களிடம் ஆலோசனை கேட்கிறோம்.
  • டாஸ்மாக்கை தேடிப்போகிறோம்.
  • எதுவும் செய்யாமல் மனநலம் பாதிக்கும் அளவுக்கு சிக்கலாக்குகிறோம்.
தற்கொலையை தேர்ந்தெடுப்பது,மற்றவர்களை துன்புறுத்துவது என்ற அளவில் ஆளுமைகளுக்கு தகுந்தவாறு பிரச்சினைகளை அணுகி வந்திருக்கிறோம்.

நவீன வழிமுறைகள் என்ன?
                                                         சமீபத்தில் பி.எஸ்.என்.எல்.நிறுவனத்தின் விளம்பரம் ஒன்றை திரையரங்கத்தில் பார்த்தேன்.உங்கள் பிரச்சினைகளுக்கு குறுந்தகவல் மூலம் தீர்வு தரப்படும் என்று தெரிவித்தது.அந்நிறுவன சந்தாதாரர் ராகுலை எல்லோரும் தேடுகிறார்கள்,விரும்புகிறார்கள்.SMS COUNSELLING சிலருக்கு தீர்வை தரலாம்.பொதுவாக counselling எனப்படுவது நல்ல தமிழில் ஆற்றுப்படுத்துதல் என்று அழைக்கப்படுகிறது.

                                                                                   சில இடங்களில் மன நல ஆலோசனை.உளவியலில் பயிற்சி பெற்ற ஒருவரிடம் நிகழ்வுகளையும்,உங்கள் உணர்வுகளையும் தெரிவித்தால் அவர் பிரச்சினை தீர்க்க வாய்ப்புகளை வழங்குவார்.நீங்கள் சரியான முடிவை தேர்ந்தெடுக்கலாம்.யாரிடமும் சொல்ல முடியாத தனிநபர் பிரச்சினைகளுக்கு இவை நல்ல தீர்வு.அயல் நாடுகளில் பிரபலமடைந்த போதிலும் நம்மிடையே இன்னும் போதுமான வாய்ப்புகள் இல்லை.உங்களுக்கு யாரேனும் தெரிந்தால் பயன்படுத்தலாம்.இல்லையெனில் மனநல மருத்துவரை அணுக வேண்டும்.

சுயமாகவே தீர்வை அணுகும் முயற்சி .......
அமைதியாக தனிமையில் அமர்ந்து உங்கள் பிரச்சினைகளை தாளில் எழுதுங்கள்.அது உங்களிடம் தோற்றுவித்த உணர்வுகளை குறிப்பிடுங்கள்.சிந்தியுங்கள்.பிரச்சினை தொடர்பான அனைத்து தகவல்களையும் தேடி கண்டுபிடிக்கவும்.உதாரணமாக தூக்கமின்மை என்றால் அதைப்பற்றி இணையத்தில்,புத்தகத்தில் தேடி சேகரிக்கவும்.

                                           புதிய தகவல்களை கொண்டு என்னென்ன தீர்வுகள் உள்ளன என்பதை எழுதவும்.தீர்வுக்குள்ள சாதகமான,பாதகமான விசயங்களையும் எழுதுங்கள்.அதிக நன்மையுள்ள தீர்வை தேர்ந்தெடுக்கவும்.வழக்கமாக,பிரச்சினைகள் ஏற்படுத்தும் உணர்ச்சிகள் நம்மை சிந்திக்கவிடாது.இன்னொருவருடன்(ஆலோசகர்,நண்பர்,உறவினர்,குருமார்கள்)
பேசி தீர்ப்பதே சிறந்தது என்றபோதிலும் முயற்சி செய்யுங்கள்.உரிய தீர்வுகளை கண்டடைந்தால் நாளை வாழ்வு நலமாகும்.
-

தமிழ் சினிமாவிற்கு எதிர்காலம் இருக்கிறதா?


மக்கள் தொகை பெருக்கல் விகித்த்தில் அதிகரிக்கும்போது உணவு உற்பத்தி கூட்டல் விகித்த்தில் அதிகரிக்கும் என்றார் பொருளாதார அறிஞர் மால்தஸ்.ஆனால் மக்கள் தொகை அதிகரிக்க அதிகரிக்க தியேட்டருக்கு சென்று சினிமா பார்ப்பவர்கள் எண்ணிக்கையும்,திரையரங்களின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டேபோகிறது.

                                 தமிழ் சினிமா வெள்ளிவிழாக்களை தொலைத்து விட்ட்து.இளைய தலைமுறைக்கு வெள்ளிவிழா என்றால் என்னவென்றே தெரியாது.திரையரங்குகளில் உள்ள  பழைய வெள்ளிவிழா கேடயங்களை காட்டி விளக்க வேண்டியிருக்கும்.தொழில் தேய ஆரம்பித்து வருடங்கள் கடந்துவிட்ட்து.

                                  “மண்டபமாக மாற்றி விடலாம் என்றால் என் பையன் ஒத்துக்கொள்ள மாட்டேங்கிறான்’’ என்கிறார் தியேட்டர் அதிபர் ஒருவர்.கொஞ்ச நாள்ள அவரும் ஒத்துக்குவார்என்றேன் நான்.’’பெரும்பாலும் இளஞ்சோடிகள்தான் படம்பார்க்க வருகிறார்கள்.அவர்களும் முடியும் முன்பே கிளம்பி விடுகிறார்கள்’’ என்கிறார்.தியேட்டரை வேலை செய்யலாம் என்றால் கூட வரும் பணம் போதவில்லை.

                                    சி.டி.யை காரணமாக சொல்லிக் கொண்டிருக்கிறோம்.ஆனால் அது முழுதும் உண்மையல்ல! சி.டி.கூட ஓரளவு நல்ல திரைப்படங்களின் சி.டி.தான் விற்பனையாகிறது என்கிறார்கள்.ரசனையில் மாற்றம் வந்திருக்கிறது என்று தோன்றுகிறது.நல்ல கதை,திரைக்கதையின்றி,புதுமையின்றி,உழைப்பில்லாமல் எடுக்கப்படும் சினிமாவும் ஒரு காரணம்.

                           மோசமான சினிமாக்களுக்கு பணம் கொடுத்து ஏமாந்து சினிமா ரசிகர்கள் தங்களை மாற்றிக் கொண்டு விட்டார்கள்.பணத்தை வாங்கிக்கொண்டு தரமற்றதை தலையில் கட்டுவது ஒரு மோசடியும்கூட.குத்துப்பாட்டு,நாலுஃபைட்,ஆறு பாடல்கள் இருந்தாலே படம் ஓடி விடும் என்ற மூடநம்பிக்கை தமிழ் சினிமாவுக்கு வெந்நீர் ஊற்றிவிட்ட்து.

                                     ஒரு படம் வெளியானவுடன் பிரபல நடிகராக இருந்தால்,அவரது ரசிகர்களால் பார்க்கப்படுகிறது.மற்றவர்கள் நல்ல விமர்சனம் கேள்விப்பட்டே சினிமாவுக்கு போகிறார்கள்.பிரபல நடிகர்கள் இல்லாத நல்ல கதையம்சம் உள்ள சினிமாக்கள் ஓரிருவார இடைவெளியிலேயே வரவேற்பு பெறுவது ஒரு உதாரணம்.

                                    தியேட்டர்களின் லட்சணம்,மூட்டைப்பூச்சி,சமூக விரோதிகள் தொல்லை போன்றவையும் சி.டி. வளர்ச்சியை ஊக்குவிக்கிறது என்கிறார்கள்.ஆனால் கிடைக்கும் வருவாயில் பராமரிப்பு செய்ய முடியவில்லை என்கிறார்கள் அதன் உரிமையாளர்கள்.அதிக விலை என்றாலும் யாரும் வருவதில்லை.

                                  டி.வி. ஒரு முக்கிய விஷயம்.மோசமான படமென்றால் விரைவில் சின்னத்திரைக்கே வந்துவிட்டுப் போகிறது என்ற நம்பிக்கையும் காரணம்.சீரியல்களுக்கு அடிமையாகிக் கிடப்பது கவனிக்க வேண்டிய ஒன்று.இதற்கு மோசமான சினிமாவே பரவாயில்லை.

                                  அதிகம் பணம் வைத்திருக்கும் தயாரிப்பாளருக்கு இது ஒரு சூதாட்டம்.நடிகர்,நடிகைகளுக்கும் கவலையில்லை.மிஞ்சிப்போனால் சீரியல்கள் இருக்கிறது.திரைப்பட தொழிலை நம்பியிருக்கும் தொழிலாளர்களின் நிலைதான் பரிதாபம்.தமிழ்சினிமா தேய்ந்து கொண்டிருக்கிறது என்பதே உண்மை.
-

Thursday, March 24, 2011

பதிவர் வெளியிட்ட புத்தகத்தால் பரபரப்பு;தமிழ் எழுத்தாளர்கள் அதிர்ச்சி!


சென்னை,மார்ச் 33
                                தமிழ் பதிவர் ஒருவர் வெளியிட்ட புத்தகத்தால் தமிழ் எழுத்தாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.இது பற்றி கூறப்படுவதாவது,

                              தமிழில் 1800 பக்கம் கொண்ட நாவலை எழுதி புகழ்பெற்றவர் எழுத்தாளர் மலைநாட்டான்.அதை அவரே பதிப்பித்து தமிழ் இலக்கிய உலகை வியப்படைய வைத்த்து வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.சம்பவத்தன்று காலைகாக்காஎன்ற இலக்கிய பத்திரிகையை புரட்டியபோது தன்னுடைய பாம்பின் அப்பா அம்மாநாவலுக்கு 20 பக்கத்துக்கு மதிப்புரை எழுதியிருப்பதை கண்டு மகிழ்ச்சியடைந்தார்.

                               மதிப்புரையை முழுக்க படிக்கவேண்டுமென்பதற்காக  காலை டிஃபன் வேண்டாம் என்று சொல்லிவிட்ட்தாக அவரது மனைவி தெரிவித்தார்.சந்தோஷத்துடன் படித்துக் கொண்டிருந்தவர் இறுதியில் நூலாசிரியர் பெயரும்,பதிப்பகத்தின் பெயரும் மாறியிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.


                                அதிர்ச்சியில் மலைநாட்டான் போட்ட கூப்பாடு தமிழ் எழுத்தாளர்களின் காதுகளில் ஒலித்த்து.சப்தம் கேட்ட அரை மணி நேரத்தில் அனைத்து எழுத்தாளர்களும் மலைநாட்டான் வீட்டில் கூடிவிட்டார்கள். தமிழ் எழுத்தாளர்கள் ஒன்று திரண்ட்து ஒரு வரலாற்றுநிகழ்வுஎன்கிறார்கள் இலக்கிய விமர்சகர்கள்.செய்தி கேட்ட நிருபர்களும்,பானிபூரி,வறுகடலை உள்ளிட்ட தள்ளூவண்டி கடைகளும் விரைந்தன.

                                 மலைநாட்டான் நாவலை தன் பெயரில் வெளியிட்ட்து தமிழ்வலைப்பதிவர் என்பது அவருக்கு ஆகாத பதிவர் ஒருவர் மூலம் தெரிய வந்துள்ளது.தமிழ் எழுத்தாளர் ஒருவர் இதைப் பற்றி கருத்து தெரிவிக்கும்போது “இது கொடூர திருட்டு.மலைநாட்டான் இந்த நாவலுக்காக பாம்புகளுடன் படுத்துறங்கியிருக்கிறார்.தேள்களுடன் வாக்கிங் போனார்.முப்பதாண்டு காலம் உழைத்து எழுதிய 1800 பக்க நாவலை சுலபமாக திருடியது அதிர்ச்சியளிப்பதாக உள்ளதுஎன்றார்.


                                  சட்ட ஆலோசனைக்காக வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டு ஏழாவது ரவுண்டு டிஃபன்,காஃபி உள்ளே போயும் ஆலோசனை எதுவும் தரவில்லை.தொடர்ந்து சிந்தித்துக்கொண்டிருக்கிறார்கள்.இதற்கிடையே பதிவரை தொடர்பு கொள்ள முயற்சித்தபோது அவர் சிங்கப்பூரில் திரைப்பட ஆலோசனையில் இருப்பது தெரிய வந்துள்ளது.(அவர்-திருடி- பதிப்பித்த நாவலை படித்த இயக்குனர் ஒருவர் வசனம் எழுத ஒப்ப்ந்தம் செய்திருப்பதாக தெரிகிறது.) அவரை தொடர்பு கொள்ள தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சற்று முன் வந்த செய்தி:

                              சிங்கப்பூரில் டி.வி.யை பார்த்து செய்தி தெரிந்து கொண்ட அந்த பதிவர் எழுத்தாளர் மலைநாட்டானை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.புத்தகத்தை பார்க்காமல் விமர்சனம் மட்டும் படித்து விட்டு தன்னைப் பற்றி தவறாக நினைத்த்தற்காக வருத்தப்பட்டுள்ளார்.


                               தான் மலைநாட்டானின் தீவிர வாசகன் என்றும்,அவ்வளவு மட்டமானவன் இல்லை என்றும்,புத்த்கத்தை சரியாக படிக்குமாறு கேட்டுக்கொண்டார்.நாவலின் இறுதியில் நன்றி-மலைநாட்டான் என்று குறிப்பிட்டிருப்பதை கவனிக்காமல் ஆத்திரப்பட்டுவிட்டீர்கள் என்று ஆதங்கப்பட்டுள்ளார்.

                               இதைக் கேள்வியுற்ற அனைத்து எழுத்தாளர்களும் “ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டுஎன்பது சரியாகப் போய்விட்ட்து என்று நினைத்துக்கொண்டே கலைந்து சென்றார்கள்.அநியாயமாக ஒரு தமிழ் பதிவர் பற்றி தவறான செய்தி பரவியது வருத்தம் தரும் ஒன்று.
-