Showing posts with label counseling. Show all posts
Showing posts with label counseling. Show all posts

Friday, October 18, 2013

மாணவர்கள் கையில் கத்தி.



கொடூரமான குற்றங்கள் நிகழும்போது வழக்கமாக என்ன சொல்வார்கள்? மோசமான படுகொலை நடந்துவிட்டால்?அவர்களைத் தூக்கில் போடவேண்டும் என்பார்கள்.கடுமையான தணடனை கொடுத்தால் மற்றவர்களுக்கு அந்த எண்ணம் வராது என்பது பொதுப்புத்தி.ஆனால் இப்போது கல்லூரி முதல்வர் கொலையில் குரல்கள் மாறியிருக்கின்றன.ஆனந்தவிகடன் கவுன்சிலிங் மையங்களை இயக்கவேண்டும் என்று தலையங்கம் எழுதியிருக்கிறது.

தண்டனைக்கான குரல்கள் பலவீனமாகி வேறு வார்த்தைகளை கேட்டுக்கொண்டிருக்கிறோம்.இது வரவேற்கத்தக்க மாற்றம்தான்.தண்டனையை விட தனிமனித,சமூகக்காரணிகளை கண்டறியும்போது நாம் தீர்வை நோக்கிச் செல்கிறோம்.ஆலோசனை பற்றிஇரண்டு ஆண்டுகளாக பல்வேறு பதிவுகளில் நான் சொல்லிவந்ததை வாசகர்கள் கவனித்திருக்கமுடியும்.ஆனால் தண்டனைகளும் அவசியம்தான்.

கொலை அதிகம் கவனிக்கப்பட்டுவிடுகிறது.ஆனால் மாணவ்ர்களின் தற்கொலைகள் பற்றி அதிகம் பேசப்படுவதில்லை. கோவை பகுதியில் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் எண்ணிக்கையை நாளிதழில் போட்டிருந்தார்கள். தற்கொலை பற்றி பரவலாக இப்படி சொல்வார்கள், மற்றவர்களைக் கொல்ல முடியாதபோது தற்கொலை செய்துகொள்கிறார்கள்.மாணவர்கள் விஷயத்தில் இது உண்மையாக இருக்கக்கூடும்.

சென்ற ஆண்டு கல்லூரிப்படிப்பை முடித்துவிட்டுவந்த ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன்.கல்லூரியில் மாணவ்ர்களுக்கு ஆசிரியர்கள் மீது மரியாதை இல்லை.திடீரென்று கட்டணத்தை உயர்த்துவார்கள்.அதிலும் முதல்வர் மீது காட்டமாக இருப்பார்கள் என்கிறார்.வணிகமயமாகிவிட்ட கல்வியை இந்தச்சீரழிவுக்கு முக்கியகாரணமாகச் சொல்லலாம்.அது பணம் கறக்கும் எந்திரமாக மாணவர்களைத் தரம் தாழ்த்துகிறது.

தங்களுடைய பெற்றோர் கடன் வாங்கி படிக்கவைக்கிறார்கள் என்பது அவர்களுக்குத்தெரியும்.ஒவ்வொருமுறை கடன் வாங்கச்செல்லும் தந்தையைப் பார்த்தாலே மன அழுத்தம் கூடிவிடுகிறது.ஒவ்வொருமுறை கட்டணத்திற்கும் அவன் குற்றவாளியாக்கப்படுகிறான்.குடும்பத்தை கடனில் தள்ளியவனாகத் தெரிகிறான்.நீ மட்டும் இன்னும் கொஞ்சம் நன்றாக படித்திருந்தால்? சலித்துக்கொண்டு சொல்லிக்காட்டும் பெற்றோரும் இருக்கிறார்கள்.

வளரிளம்பருவத்துப்பையனுக்கு மேற்கண்ட பிரச்சினைமட்டும் இல்லை.உடல் மாற்றங்கள் அங்கீகாரவேட்கை என்று பிரச்சினைகள்விரிகின்றன..ஃபேஸ்புக்கில் காதலியுடன் நட்பு பாராட்டிய சக மாணவனைக் கொன்றது ஒரு உதாரணம்.நுகர்வு கலாச்சாரம் காரணமாக அவன் இல்லாதவனாகவே உணர்கிறான்.உணர்ச்சிப்பூர்வமான தோழமையும் வழிகாட்டுதலும் அவர்களுக்கு வேண்டும்.

உளவியல் ஆலோசனை மையங்களின் முக்கியத்துவம் இப்போது உணரப்பட்டுவருகிறது.ஆனால் அப்படி துவக்கப்பட்ட மையங்களை மாணவ்ர்கள் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்று செய்தியில் படித்தேன்.பொதுவில் இன்னொருவரிடம் ஆலோசனை கேட்க நாம் விரும்புவதில்லை.அது நமது சுயமதிப்பைக் குறைக்கக்கூடும்நமக்கே எல்லாம் தெரியும் என்று நினைப்பதே வழக்கம்.அதற்காக இந்த முயற்சியை விட்டுவிடக்கூடாது.

ஆலோசனை சொல்பவர் மாணவர்களை ஈர்க்க முயற்சி செய்யவேண்டும்.மாணவர்களின் ஆளுமையை வளர்க்கும் பயிற்சிகளை நடத்தலாம்.உளவியல் ஆலோசனையின் தன்மையைப் புரியவைக்கும் கலந்துரையாடல் கூட்டங்கள் அவசியம்.ரகசியம் காப்பதை அவர்களுக்கு உறுதி செய்யவேண்டும்.பண்புடைய தகுதியான ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவது எல்லாவற்றையும் விட முக்கியம்.
-

Thursday, June 2, 2011

கணவனும் மனைவியும் அட்ஜஸ்ட் செய்து போவதுதான் சரியானதா?

ஆம்பளைங்கன்னா அப்படித்தான் இருப்பாங்க! நம்மதான் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி போகணும்-இது பெண்களுக்கு வழங்கப்படும் ஆலோசனை அல்ல புத்திமதி? பெரும்பாலான இடங்களில் இதைக்கேட்க முடியும்.லேடீஸ்னா அப்படித்தான் சார்! விட்டுக்கொடுத்து போங்கஇது ஆண்களுக்கு சமூகம் வழங்குவது!

                                காலம்காலமாய் கற்பாந்த காலமாய் தொட்டுத்தொடர்ந்து வரும் விஷயம் இது.ஆனால் சரியானதா? குடும்ப பிரச்சினைகளுக்கு தீர்வைத்தருமா? என்றால் தயவு செய்து மன்னிக்கவும்.உடலில் ஏற்பட்ட வலியை சிகிச்சை செய்து குணப்படுத்துவதற்கு பதிலாக வலியுடன் வாழ்க்கை முழுதும் வாழச்செய்யும் ஒரு தவறான அறிவுறுத்தல்.


                                 ஒரு வீட்டில் தம்பதிகள் இருவருக்கு எப்போதும் சண்டை.அண்டை அயலாரிடம்,நண்பர்களிடம் யாரிடம் போய் பேசினாலும் ஒட்டுமொத்தமாக தெரிவித்த வார்த்தைகள் விட்டுக்கொடுத்து போங்க என்றார்கள்.ஆனால் மனசு அப்படியெல்லாம் சமாதானம் ஆகிவிடுமா என்ன? ஒரு கட்ட்த்தில் திட்டமிட்டு வெளியூர் மாறுதல் வாங்கிப்போன கணவன் கொஞ்சம் கொஞ்சமாக வீட்டுக்கு வருவதை தவிர்க்க ஆரம்பித்தார்.(அலுவலகத்தில் இப்போது வேலை அதிகமாகி விட்ட்து)

                                  பெண்ணாக இருந்தாலும் பாதிப்பை சரி செய்ய ஏதாவது வகையில் முயற்சி செய்து கொண்டுதான் இருப்பார்கள்.பெற்றோர்கள் பார்த்து செய்யும் திரும்ணத்தில் சில சாதகங்கள் இருப்பது போலவே,காதல் திருமணத்திலும் சாதகங்கள் இருக்கவே செய்கின்றன.நன்கு புரிந்து கொண்ட காதல்களும் உண்டு.இரண்டிலும் பல்வேறு நேரங்களில் பிரச்சினை தோன்றுவது இயல்பு.

                                    எந்த திருமணமாக இருந்தாலும் அட்ஜஸ்ட் செய்து போவது முன்பு கூறியது போலவே தவறானதுதான்.கணவன்,மனைவி இருவரும் ஒருவர் மீது ஒருவருக்குள்ள கோபத்தையும்,ஆத்திரத்தையும் அடக்கிவைத்து அடக்கி வைத்து வாழ்வது ஏதேனும் ஒரு நாள் பெரிய அளவில் வெடித்துவிடும்.

                                   குப்பைகளை வெளியே கொட்டாமல் பலகாலம் வீட்டு மூலையில் சேகரித்து வைத்தால் புழு,வண்டு துர்நாற்றம் எல்லாம் தோன்ற ஆரம்பித்துவிடும்.குழந்தைகளுக்காக வாழ்கிறேன்,என்ன செய்வது என் தலையெழுத்து என்று வாழ்கிறேன் என்பது மாதிரியான வாழ்க்கையில்தான் வேறு மணம் மீறிய உறவுகளும் சிலருக்கு வடிகாலாக போய்விடுகின்றன.

                                   அட்ஜஸ்ட் செய்து போகாமல் பிரச்சினை தீர என்னதான் வழி? வலியை குணப்படுத்துவதுதான்.உடல் வலிக்கு மருத்துவரிடம் போனால் என்ன செய்வார்? அந்த வலிக்கான காரணம் என்ன? எதனால் ஏற்பட்ட்தென்று சிகிச்சை அளிப்பார்.அவர் வலி தோன்றிய வித்த்தை ஆராய்கிறார்,தேவையென்றால் சில பரிசோதனைகள் செய்கிறார்.அப்புறம் மருந்து கொடுப்பார்.

                                   உதாரணமாக ஒரு குடும்பத்தில் கணவன் மதுவுக்கு அடிமையாகி இருந்தால் உரிய சிகிச்சை,ஆலோசனை மூலமே அதை தீர்க்க முடியும்.காலையில் எழுத்த்திலிருந்து திட்டித் தீர்த்துக்கொண்டிருந்தால் அவர் குடிப்பது அதிகரிக்கவே செய்யும்.ஒவ்வொருவருக்கும் அவர் சார்ந்து வந்த வாழ்க்கை மூலம் மதிப்பீடுகள் இருக்கின்றன.ஒரு சமுதாயத்தில் தவறாகப்படுவது இன்னொரு சமூகத்தில் சரி என்பார்கள்.

                                   கணவனும்,மனைவியும் சிறப்பான குடும்பம் நட்த்தும் வழி இதுதான்.பூசல் உருவாகும் சூழலை புரிந்து கொள்வது,பிறகு அதை தீர்ப்பது.ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும் என்று சொல்லப்படுவது சரியானது.கொஞ்சம் யோசிக்க முடிந்தால் முடிகிற காரியம்தான்.முடியாத நிலையில் சில இடங்களில் குடும்ப ஆலோசனை வழங்கும் இடங்கள் இருக்கின்றன.அவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம்.
-

Friday, March 25, 2011

உங்களுக்கு நேரும் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வது எப்படி?


                                                                                          வாழ்வில் பிரச்சினைகள் ஓர் அங்கம்.உள்ளங்களில்,உறவுகளில்,பணியிடங்களில்,குடும்பத்தில் என்று உள்ளத்தை தைக்கும் சிக்கல்கள் நமக்கு இயல்பானவை.இயற்கை மனிதனுக்கு உடலில் நோய் எதிர்ப்புத்திறனை வழங்கியிருப்பது போலவே மனதிற்கும் சிந்திக்கும் ஆற்றலை வழங்கியிருக்கிறது.நோய் எதிர்ப்பு திறனை தாண்டி நோய்கள் உண்டாவது போலவே உங்கள் சிந்திக்கும் திறனை தாண்டி தீர்க்கமுடியாத பிரச்சினைகள் உருவாகின்றன. 
 

                                                                                                நமது மதிப்பீடுகள் தந்த நம்பிக்கைகள் வழியாக நாம் எப்போதும் அன்றாட பிரச்சினைகளை தீர்த்துக்கொண்டே இருக்கிறோம்.நமது ஆற்றலால் முடியாமல் சில நமது உள்ளத்தை பாதித்து நம்மால் எதிர்கொள்ளமுடியாதபோது வழக்கமாக செய்யும் செயல்கள் என்ன?
மரபு சார்ந்த வழிகளில் .................
நமது வாழ்க்கைமுறைக்கு உட்பட்டு மரபு சார்ந்து சில வழிகளை மேற்கொள்கிறோம்.அவை.
  • கோவிலுக்கு செல்கிறோம் :கடவுளிடத்தில் கோரிக்கை வைக்கிறோம்.பிரச்சினைகள் தீர்ந்தால் காணிக்கை செலுத்துவதாக வேண்டிக்கொள்கிறோம்
  • மத குருமார்களை சந்திக்கிறோம்:நமது சிரமங்களை கூறி ஆலோசனை கேட்கிறோம்.
  • ஜோதிடர்களை சந்திக்கிறோம்:எதுவும் கூறாமலேயே நல்ல நேரத்தை கேட்கிறோம்.சிலர் வெளிப்படையாக பேசுகிறார்கள்.குரு மாறினால் ,சனிப்பெயர்ச்சி அடுத்து அல்லது திசை மாறியவுடன் உங்கள் தொல்லைகள் தீரும் என்கிறார். நம்பிக்கையுடன் திரும்புகிறீர்கள்.
  • நல்ல நண்பர்கள் ,உறவினர்கள் உங்களை புரிந்து கொள்ளும் அளவுக்கு இருந்தால் அவர்களிடம் ஆலோசனை கேட்கிறோம்.
  • டாஸ்மாக்கை தேடிப்போகிறோம்.
  • எதுவும் செய்யாமல் மனநலம் பாதிக்கும் அளவுக்கு சிக்கலாக்குகிறோம்.
தற்கொலையை தேர்ந்தெடுப்பது,மற்றவர்களை துன்புறுத்துவது என்ற அளவில் ஆளுமைகளுக்கு தகுந்தவாறு பிரச்சினைகளை அணுகி வந்திருக்கிறோம்.

நவீன வழிமுறைகள் என்ன?
                                                         சமீபத்தில் பி.எஸ்.என்.எல்.நிறுவனத்தின் விளம்பரம் ஒன்றை திரையரங்கத்தில் பார்த்தேன்.உங்கள் பிரச்சினைகளுக்கு குறுந்தகவல் மூலம் தீர்வு தரப்படும் என்று தெரிவித்தது.அந்நிறுவன சந்தாதாரர் ராகுலை எல்லோரும் தேடுகிறார்கள்,விரும்புகிறார்கள்.SMS COUNSELLING சிலருக்கு தீர்வை தரலாம்.பொதுவாக counselling எனப்படுவது நல்ல தமிழில் ஆற்றுப்படுத்துதல் என்று அழைக்கப்படுகிறது.

                                                                                   சில இடங்களில் மன நல ஆலோசனை.உளவியலில் பயிற்சி பெற்ற ஒருவரிடம் நிகழ்வுகளையும்,உங்கள் உணர்வுகளையும் தெரிவித்தால் அவர் பிரச்சினை தீர்க்க வாய்ப்புகளை வழங்குவார்.நீங்கள் சரியான முடிவை தேர்ந்தெடுக்கலாம்.யாரிடமும் சொல்ல முடியாத தனிநபர் பிரச்சினைகளுக்கு இவை நல்ல தீர்வு.அயல் நாடுகளில் பிரபலமடைந்த போதிலும் நம்மிடையே இன்னும் போதுமான வாய்ப்புகள் இல்லை.உங்களுக்கு யாரேனும் தெரிந்தால் பயன்படுத்தலாம்.இல்லையெனில் மனநல மருத்துவரை அணுக வேண்டும்.

சுயமாகவே தீர்வை அணுகும் முயற்சி .......
அமைதியாக தனிமையில் அமர்ந்து உங்கள் பிரச்சினைகளை தாளில் எழுதுங்கள்.அது உங்களிடம் தோற்றுவித்த உணர்வுகளை குறிப்பிடுங்கள்.சிந்தியுங்கள்.பிரச்சினை தொடர்பான அனைத்து தகவல்களையும் தேடி கண்டுபிடிக்கவும்.உதாரணமாக தூக்கமின்மை என்றால் அதைப்பற்றி இணையத்தில்,புத்தகத்தில் தேடி சேகரிக்கவும்.

                                           புதிய தகவல்களை கொண்டு என்னென்ன தீர்வுகள் உள்ளன என்பதை எழுதவும்.தீர்வுக்குள்ள சாதகமான,பாதகமான விசயங்களையும் எழுதுங்கள்.அதிக நன்மையுள்ள தீர்வை தேர்ந்தெடுக்கவும்.வழக்கமாக,பிரச்சினைகள் ஏற்படுத்தும் உணர்ச்சிகள் நம்மை சிந்திக்கவிடாது.இன்னொருவருடன்(ஆலோசகர்,நண்பர்,உறவினர்,குருமார்கள்)
பேசி தீர்ப்பதே சிறந்தது என்றபோதிலும் முயற்சி செய்யுங்கள்.உரிய தீர்வுகளை கண்டடைந்தால் நாளை வாழ்வு நலமாகும்.
-

Sunday, March 13, 2011

நெருக்கமில்லாத தம்பதிகள்;அதிரும் மணவாழ்க்கை-5


      தொடரின் முந்தைய பதிவு  இங்கே...http://counselforany.blogspot.com/2011/03/blog-post_09.html
  
தொடரின்             
                            தாம்பத்யத்தில் நாட்டமில்லாத நிலை,சில காரணங்களுக்காக பாலியல் ஆர்வம் தடுக்கப்பட்டு மணவாழ்க்கையில் சிக்கல்,உடல் திறன் இருந்தும் ஈடுபாடில்லாமல் இருப்பதற்கான காரணங்களையும்,அதன் சில முகங்களையும்,எதிரொலிகளையும் ஏற்கனவே பார்த்திருக்கிறோம்.

                            Inhibited sexual desire  என்று வரையறுக்கப்படும் தடுக்கப்பட்ட பாலியல் ஆர்வத்துக்கு தரப்படும் சிகிச்சை முறைகள் பெரும்பாலானவை மருந்துகள்,ஊசிகள் அல்ல.சென்ற பதிவில் குறிப்பிட்ட்துபோல உடல் சார்ந்த சில காரணங்களுக்கு மருந்துகள் தரப்படும்.

                           இம்மாதிரியான குறைபாடுகளுக்கு மனநல ஆலோசனைகள் மூலம் தீர்க்கப்படுகிறது.முதலில் யாருக்கு பிரச்சினை என்பது கண்டறிவார்கள்.சிக்கல் என்ன?எங்கே? என்பது தெரிந்துவிட்டால் அதை தீர்ப்பது எளிது.சில தம்பதிகளுக்கு உறவை இருவருக்குமுள்ள உறவை மேம்படுத்தும் வழிவகைகள் சொல்லித்தருவார்கள்.

                           திருமண ஆலோசனைகள் (counsellig)இருக்கின்றன.தம்பதிகளின் தகவல் தொடர்பு,ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது,கணவன் அல்லது மனைவி இருவரில் ஒருவர் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இன்னொருவர் நடந்து கொள்ளும் விதம் போன்றவை கற்பிக்கப்படும்.

                           சிலரிடம் நேரடியாக பாலுறவு குறித்து விவாதிக்க வேண்டியிருக்கும்.சூழ்நிலை,அணுகும் விதம்,தூண்டல்கள்,முன் விளையாட்டுக்கள் பற்றி கற்பிக்க வேண்டியிருக்கும்.சிறப்பு மருத்துவர்கள் முன்னிலையில் செய்யப்படவேண்டிய விஷயம் இது.அரைகுறையாக எனக்கும் தெரியும் என்று ஆளாளுக்கு ஆலோசனை தருவது தவறு.

                           தம்பதிகளிடையே பாலுறவு வாழ்க்கை வாய்ந்த்து.அதில் பிரச்சினை இருந்தால் குடும்பம் நிலைப்பது சிரம்ம்.பாலியல் தொடர்பான பலவற்றை மூடிமறைப்பது நம் பண்பாட்டில் இருந்து வரும் ஒன்று.அது தவறானது என்பது உங்களுக்கு புரிந்திருக்கும்.

                             கடந்த நான்கு பதிவுகளிலும் இப்போதும் பார்த்த பிரச்சினையை ஓரளவு நாமே தடுக்க முடியும்.தம்பதிகள் பாலுறவு நீங்கலாக ஒருவருக்கொருவர் நேசம் கொள்வதும்,நெருக்கமான உணர்வுகளை கொண்டிருப்பதும் அவற்றில் முக்கியமானவை.மனைவியை மனுஷியாக நட்த்தினாலே பெரும்பாலான பிரச்சினைகள் தீர்ந்துவிடும்.

                              இன்னும் சில இருக்கின்றன.அவற்றை தனித்தனியாக அவ்வப்போது பார்க்கலாம்.அடுத்த பதிவும் உங்களுக்கு சிலவற்றை சொல்லித்தரும்.மகிழ்ச்சியான வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள்.
-

Tuesday, February 15, 2011

பத்திரிகையும்,டி.வி.யும் தற்கொலையைத் தூண்டுகிறதா?


அடுத்தடுத்த தற்கொலைகள் தமிழகத்தை உலுக்கிக் கொண்டிருக்கிறது.ஒரு கல்லூரி மாணவி,இரண்டு பள்ளி மாணவிகள் தூக்கிட்டும்,தீக்குளித்தும் தங்களை மாய்த்துக் கொண்டார்கள்.இதெல்லாம் உங்களுக்கு தெரிந்த செய்திதான்.தற்கொலைகள் பரபரப்பாக ஊடகங்களில் இடம் பிடித்த்து.தலைப்பு செய்திகளில்!தமிழகத்தில் இதைப் பற்றி பேசாதவர்கள் இருக்க மாட்டார்கள்.

தற்கொலைகளுக்கு முக்கிய காரணம் மனச்சோர்வுதான் என்கிறது உளவியல்.வாழ்க்கையில் ஏற்படும் தோல்வி,துயரம்,இழப்பு போன்றவை ஒருவருக்கு மனதில் பாதிப்பை உருவாக்கி மன அழுத்த்த்தை ஏற்ப்படுத்தி விடுகிறது.தொடர்ந்து வாழ்வில் ஈடுபாடு கொள்ளாமல் ஒருவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்யலாம்.பெரும்பாலான தற்கொலைகள் நன்கு திட்டமிட்டே நடக்கும்.

மாணவிகள் அனைவரும் டீனேஜ்’.மற்றவர்கள் அங்கீகரிக்க வேண்டும்,தான் மதிக்கப்படவேண்டும்,பேசப்படவேண்டும் என்பதற்காக எதெதையோ செய்யும் வயது.அதிலும் பெண்களுக்கு ஒரு அவமானமென்றால்?.நமது சமூகம் திருடனை ஏற்றுக் கொள்ளும்,திருடியை ஏற்றுக் கொள்ளாது.தனது இமேஜ்பாதிக்கப் படுவதை வாழ்க்கை முடிந்து போய் விட்ட்தாகவே உணர்வார்கள்.

ஒரு குடும்பத்தில் ஏற்கனவே அக்குடும்பத்தின் உறுப்பினர்களோ,உறவினர்களோ தற்கொலை செய்து கொண்ட வரலாறு இருந்தால் அக்குடும்பத்தைச் சார்ந்த ஒருவர் மனச் சோர்வால் பாதிக்கப் படும்போது தற்கொலை செய்து கொள்ளும் வாய்ப்பு அதிகம்.ஏன்? மனச்சோர்வு சிலருக்கு மரபணுக்கள் காரணமாகவும் வரலாம் என்கிறார்கள்.இன்னொரு விஷயம் இருக்கிறது.

இரண்டாவது முறையாக தற்கொலைக்கு முயன்ற ஒருவரை நிபுணர் ஒருவர் ஆலோசனைக்கு உட்படுத்தினார்.முடிவில் அவர் கண்டறிந்த்து,தற்கொலைக்கு முயன்றவரின் சிறு வயதில் அவரது தம்பி இறந்து விட்டார்.குடும்பம் முழுதும் சோகத்தில் ஆழ்ந்திருக்கும் நேரம்.பாவம் அந்த பையனை யாரும் கண்டுகொள்ளவில்லை.பசியைக்கூட யாரும் கவனிக்கவில்லை.எல்லோரும் இறந்து போனவனைப் பற்றித்தான் பேசினார்கள்.

அந்த இளம் வயதில் சிறுவனுக்குத் தோன்றிய எண்ணம்-என்னை பிறர் கவனிக்க வேண்டும் என்றால் நான் சாக வேண்டும்.இந்த எண்ணம் பெரியவர் ஆன பின்னும் அவரிடம் தற்கொலை எண்ணத்தை தூண்டியவாறே இருக்கிறது.சினிமாவில் பார்த்திருப்பீர்கள்-ஜோதிகாவை நினைத்துக் கொள்ளுங்கள்-சிறுவயது அனுபவங்கள் மனதில் எத்தகைய மாற்றத்தை உருவாக்குகிறது என்பதை.

இப்போது உங்களுக்கு தலைப்பின் பொருள் புரிந்திருக்கும்.ஒரே கிராமத்தில்,ஒரே குடும்பத்தில் தொடர் தற்கொலைகளை கவனித்திருக்கிறேன்.கல்லூரி மாணவி பற்றிய செய்திகள்,இரண்டு பள்ளி மாணவிகளுக்கு முன்னுதாரணமாக இருந்திருக்கலாம் என்றே நான் எண்ணுகிறேன்.மற்ற இரண்டு மாணவிகளின் வயது பதிமூன்று,பதினான்கு தான்.

நாம் கல்லூரி மாணவி போல பேசப்படுவோம் என்று நினைத்திருக்கலாம்,ஆசிரியையை பழி வாங்கியது மாதிரியும் இருக்கும்.ஆனால் மாணவிகள் தற்கொலை பரபரப்பான செய்தி! ஊடகங்களில் வெளியிடாமல் இருக்க முடியுமா?ஏற்கனவே விவசாயிகள் தற்கொலை பற்றிய பதிவிடும்போதே சிந்தித்தவை.இவை.விட்டு விட்டேன்.என்ன செய்யப் போகிறோம்?


-