Showing posts with label psychology. Show all posts
Showing posts with label psychology. Show all posts

Tuesday, February 15, 2011

பத்திரிகையும்,டி.வி.யும் தற்கொலையைத் தூண்டுகிறதா?


அடுத்தடுத்த தற்கொலைகள் தமிழகத்தை உலுக்கிக் கொண்டிருக்கிறது.ஒரு கல்லூரி மாணவி,இரண்டு பள்ளி மாணவிகள் தூக்கிட்டும்,தீக்குளித்தும் தங்களை மாய்த்துக் கொண்டார்கள்.இதெல்லாம் உங்களுக்கு தெரிந்த செய்திதான்.தற்கொலைகள் பரபரப்பாக ஊடகங்களில் இடம் பிடித்த்து.தலைப்பு செய்திகளில்!தமிழகத்தில் இதைப் பற்றி பேசாதவர்கள் இருக்க மாட்டார்கள்.

தற்கொலைகளுக்கு முக்கிய காரணம் மனச்சோர்வுதான் என்கிறது உளவியல்.வாழ்க்கையில் ஏற்படும் தோல்வி,துயரம்,இழப்பு போன்றவை ஒருவருக்கு மனதில் பாதிப்பை உருவாக்கி மன அழுத்த்த்தை ஏற்ப்படுத்தி விடுகிறது.தொடர்ந்து வாழ்வில் ஈடுபாடு கொள்ளாமல் ஒருவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்யலாம்.பெரும்பாலான தற்கொலைகள் நன்கு திட்டமிட்டே நடக்கும்.

மாணவிகள் அனைவரும் டீனேஜ்’.மற்றவர்கள் அங்கீகரிக்க வேண்டும்,தான் மதிக்கப்படவேண்டும்,பேசப்படவேண்டும் என்பதற்காக எதெதையோ செய்யும் வயது.அதிலும் பெண்களுக்கு ஒரு அவமானமென்றால்?.நமது சமூகம் திருடனை ஏற்றுக் கொள்ளும்,திருடியை ஏற்றுக் கொள்ளாது.தனது இமேஜ்பாதிக்கப் படுவதை வாழ்க்கை முடிந்து போய் விட்ட்தாகவே உணர்வார்கள்.

ஒரு குடும்பத்தில் ஏற்கனவே அக்குடும்பத்தின் உறுப்பினர்களோ,உறவினர்களோ தற்கொலை செய்து கொண்ட வரலாறு இருந்தால் அக்குடும்பத்தைச் சார்ந்த ஒருவர் மனச் சோர்வால் பாதிக்கப் படும்போது தற்கொலை செய்து கொள்ளும் வாய்ப்பு அதிகம்.ஏன்? மனச்சோர்வு சிலருக்கு மரபணுக்கள் காரணமாகவும் வரலாம் என்கிறார்கள்.இன்னொரு விஷயம் இருக்கிறது.

இரண்டாவது முறையாக தற்கொலைக்கு முயன்ற ஒருவரை நிபுணர் ஒருவர் ஆலோசனைக்கு உட்படுத்தினார்.முடிவில் அவர் கண்டறிந்த்து,தற்கொலைக்கு முயன்றவரின் சிறு வயதில் அவரது தம்பி இறந்து விட்டார்.குடும்பம் முழுதும் சோகத்தில் ஆழ்ந்திருக்கும் நேரம்.பாவம் அந்த பையனை யாரும் கண்டுகொள்ளவில்லை.பசியைக்கூட யாரும் கவனிக்கவில்லை.எல்லோரும் இறந்து போனவனைப் பற்றித்தான் பேசினார்கள்.

அந்த இளம் வயதில் சிறுவனுக்குத் தோன்றிய எண்ணம்-என்னை பிறர் கவனிக்க வேண்டும் என்றால் நான் சாக வேண்டும்.இந்த எண்ணம் பெரியவர் ஆன பின்னும் அவரிடம் தற்கொலை எண்ணத்தை தூண்டியவாறே இருக்கிறது.சினிமாவில் பார்த்திருப்பீர்கள்-ஜோதிகாவை நினைத்துக் கொள்ளுங்கள்-சிறுவயது அனுபவங்கள் மனதில் எத்தகைய மாற்றத்தை உருவாக்குகிறது என்பதை.

இப்போது உங்களுக்கு தலைப்பின் பொருள் புரிந்திருக்கும்.ஒரே கிராமத்தில்,ஒரே குடும்பத்தில் தொடர் தற்கொலைகளை கவனித்திருக்கிறேன்.கல்லூரி மாணவி பற்றிய செய்திகள்,இரண்டு பள்ளி மாணவிகளுக்கு முன்னுதாரணமாக இருந்திருக்கலாம் என்றே நான் எண்ணுகிறேன்.மற்ற இரண்டு மாணவிகளின் வயது பதிமூன்று,பதினான்கு தான்.

நாம் கல்லூரி மாணவி போல பேசப்படுவோம் என்று நினைத்திருக்கலாம்,ஆசிரியையை பழி வாங்கியது மாதிரியும் இருக்கும்.ஆனால் மாணவிகள் தற்கொலை பரபரப்பான செய்தி! ஊடகங்களில் வெளியிடாமல் இருக்க முடியுமா?ஏற்கனவே விவசாயிகள் தற்கொலை பற்றிய பதிவிடும்போதே சிந்தித்தவை.இவை.விட்டு விட்டேன்.என்ன செய்யப் போகிறோம்?


-

Thursday, January 27, 2011

திருமணத்தில் தவிர்க்க வேண்டிய சடங்கு


திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக சொல்லப்பட்ட்து.எங்கே முடிகிறதென்று யாரும் சொல்லவில்லை.பல இன்று நீதிமன்றத்தில் முடிகிறது.கல்யாண சடங்குகள் பெரும் செலவு வைப்பதாக இருக்கிறது.எளிமை தேவை.சில சடங்குகள் மதம் சார்ந்தவை.அவரவர் விரும்பியவாறு இருந்து விட்டுபோகட்டும்.

தவிர்க்க வேண்டிய சடங்கு ஒன்று இருக்கிறது.அவ்வளவாக கவனித்திருக்க மாட்டீர்கள்.பெரும்பாலான திருமணங்களில் நான் பார்த்து வருந்தியிருக்கிறேன்.இனி உடனிருந்து கவனித்து பாருங்கள்.அந்த சடங்கு-பிள்ளை வீட்டாரும் பெண்வீட்டாரும் ஒருவரை ஒருவர் குறை சொல்லிக்கொள்வது.சம்பந்திகள் முறுக்கிக்கொள்வது.

நண்பர் ஒருவருக்கு திருமணம்.முந்தைய இரவு நிச்சயதார்த்தம் முடிந்து விருந்து.விருந்தில் தயிர் தீர்ந்து விட்ட்தென்று சத்தமிட ஆரம்பித்து விட்டார்.பெரும்பாலானோர் சாப்பிட்டு முடித்து விட்டார்கள்.அது இயல்பான ஒன்றுதான்.இதற்குத்தான் இந்த இடமே வேண்டாமென்றேன் என்றார்.எனக்கு ஆச்சரியமாக இருந்த்து.ஏனெனில்,அவரது விருப்பத்தின் படி முடிவு செய்யப்பட்ட திருமணம் அது.

மணப்பெண்ணின் தந்தை தர்ம சங்கடமாக உணர்ந்தாலும் அவர் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.பெண்ணைப் பெற்றவன் வேறு என்ன செய்வது? உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்துத் தானாக வேண்டும்.ஆனால்,அவரது உறவினர்கள் பார்ப்பவர்களிடமெல்லாம் மணமகன் வீட்டாரைப் பற்றி ஏதாவது சொல்லிக்கொண்டே இருந்தார்கள்.

நண்பனின் தந்தை அங்கே சாப்பிடவில்லை.அவர் ஓய்வு பெற்ற அரசு அலுவலர்.ஹோட்டலுக்கு சென்று விட்டார்.அப்போதிலிருந்து நான் செல்லும் அனைத்து திருமணங்களிலும் கவனித்து வருகிறேன்.ஒருவரை ஒருவர் இரு வீட்டாரும் குறை சொல்லிக்கொள்வது சடங்காகவே இருக்கிறது.

உளவியல் படியும் கூட இயல்பானதென்று எனக்கு தோன்றுகிறது.தான் முக்கியத்துவம் பெற வேண்டும் என்பது அடிப்படையாக இருப்பதுதான்.கூட்ட்த்தில் தன்னை கவனிக்கவேண்டும் என்று கருதி அதி முக்கியமில்லாத விஷயத்திற்கு சத்தமிடுகிறார்கள் அவ்வளவே.இன்னொன்று புது பொண்டாட்டி மயக்கத்தில் தன்னை மகன் கவனிக்கமாட்டானோ என்பது.

கல்யாணத்தில் என்றில்லை புதிய உறவுகள் உருவாகும் எல்லா இடங்களிலும் இதைக் காண முடியும்.மற்றவர்களை குறை சொல்வதெல்லாம் தன்னை உயர்த்திக் கொள்வதற்காகவே!அத்தகைய மனிதர்களை, சூழலை புரிந்துகொண்டால் எளிதாக நம்மால் கடந்து செல்ல முடியும்.வாழ்வில் ஒருமுறை நடக்கும் திருமணத்தில் இதெல்லாம் தவிர்க்கப்பட வேண்டும்.

-

Friday, November 19, 2010

கள்ளக்காதல் வெளியே வருவது எப்படி?

கள்ளக்காதல் உள்ளூர் தினசரிகளின் அன்றாட செய்திகள்.ஒரு சமூகப்பிரச்சினையாக அணுகுவதை விட்டுவிட்டு பரபரப்பு செய்தியாக மட்டுமே பார்த்துவிட்டு மறந்து விடுகிறோம்.உறவுகளிலும்,குடும்பங்களிலும் விஷக்கிருமியைப்போல ஊடுருவி கொலை,தற்கொலை,குடும்பசிதைவு,என கோரமுகம் காட்டும் ஒன்றை நாம் கவனிக்காதது போல் இருக்கும் மாயம் என்ன?இது ஒரு சமூகப்பிரச்சினையாக ஏன்ஆய்வு செய்யப்படவில்லை?படிக்கப்படவில்லை?

சமூகப்பிரச்சினை என்பதற்கு உள்ள வரையறைகள் கள்ளக்காதலுக்கு பொருந்தும்.மரபு சார்ந்து நாம் காதல்,பாலியல் தொடர்பான விஷயங்களை திரும்பிப்பார்க்காமல் ஓரக்கண்ணால் படபடப்புடன் பார்த்து வந்திருக்கிறோம்.குற்றங்களை ஆய்வு செய்கிறோம்.மதுப்பழக்கம்,புகைபிடித்தல்,வறுமை,என்று சமூகப்பிரச்சினைகள் ஆய்வு செய்யப்படுகின்றன.படிக்கப்படுகின்றன.கள்ளக்காதல் போன்றவற்றை அவ்வப்போது சில பத்திரிக்கைகள்ஆய்வுக்கு உட்படுத்துகின்றனவே தவிர வேறு யாரும் கவனிப்பதில்லை.

கள்ளக்காதல் சமூகத்தில் நோய்க்கூறாக சிந்திக்கப்ப்படும்போது,அனுமானங்களும்,அதையொட்டி ஆய்வுகளும் உருவாக வாய்ப்புள்ளது.ஆய்வுகள் மூலம் கண்டடையப்படும் உண்மைகள் பிரச்சினைகளை தீர்க்க உதவும்.பல குழந்தைகள் அனாதையாவது,கொலை,தற்கொலைஎன்று நீளும் குற்றச்செயல்களை ஓரளவாவது நம்மால் குறைக்கமுடியும்.முயற்சி இருந்தால் முடியாதது இருக்கிறதா என்ன?

நாம் இனி தலைப்புக்கு வருவோம்.நாளிதழ்களில்வந்தால் எல்லோருக்கும் தெரியும்.வேறு எப்படி?கள்ளக்காதல் ஒரு குற்றம்.ரகசியமானது,யாருக்கும் தெரியாமல் நடக்கவேண்டும்.ஆனால்,எல்லா குற்றச்செயல்களைப்போலவே தடயமும் இருக்கும்.நான் அறிந்தவரை உடனிருப்பவர்கள் யாருக்கும் தெரியாமல் இத்தகைய உறவுகள் மலர்வதில்லை.காதலை போலவே இது தொற்றிக்கொள்ளும் தன்மை கொண்டது.தோழிகளுக்கு தெரியாத கள்ளக்காதல் விதிவிலக்கு!

பலருடன் விவாதித்த வரையிலும்,பார்த்து,கேட்டு அறிந்தவகையிலும் கள்ளக்காதல்கள்,முடிவு செய்வதற்கு முன்னர் பெண்ணால் தனது தோழிகளிடம் பேசப்பட்டுவிடுகிறது.அவர்களது கருத்துக்களை அறிவதும்,அவரைப்பற்றி அறிவதும் இதன் நோக்கமாகும்.வெற்றிக்கு பிறகு ஆண் தனது நண்பர்களிடம் அறிவிப்பான்.ஆண் தனது வெற்றியாக கொண்டாடுவான்.பின்னர்,அப்பெண் தனது மரியாதையை இழக்க துவங்கி எதிர்கொள்ளும் சிக்கல்களை பெண்ணிய நோக்கில் பார்க்கவேண்டும். -