Showing posts with label Family problems. Show all posts
Showing posts with label Family problems. Show all posts

Saturday, November 5, 2011

கணவன் மீது மனைவிக்கு வரும் சந்தேகம்.

நினைக்கவே சந்தோஷமாக இருக்கிறது.ரொம்ப நாள் ஆகிவிட்டது போலவும் தோன்றுகிறது.மகாராணி என்று சொல்லவேண்டும்.இன்னும் மேலாக ஏதாவது சொல்லலாம்.எப்படித்திரும்பினாலும் ஆனந்தம்.அந்த நாட்களிலேயே ஒருவரால் வாழ முடிந்தால் எப்படி இருக்கும்?

சின்னப் பையன் முதல் கிழங்கள் வரை அவளை பார்த்தால் அப்படி ஒரு இதம்.வீதியில் நடந்து போகும்போது பசங்கள் எதையாவது உளறுவார்கள்.சந்தோசமாக இருக்கும்.சில நேரங்களில் உடல் உதறும்.ஓடிப்போய் வீட்டில் அடைந்து கொள்ளத் தோன்றும்.


காதல் அது இது என்று என்னென்னவோ சொல்கிறார்கள்.அப்படித்தானா என்று நிச்சயமாக தெரியவில்லை.பிடித்திருந்தது.வீட்டைக் கடக்கும்போது சைக்கிளில் மணி அடிக்கும் சத்தம் கேட்கும்.மனம் இருப்புக் கொள்ளாமல் துள்ளும்.ஆனால் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை.

ஒருநாள் வெளியே வந்து பக்கத்து வீட்டு அண்ணியை அழைத்தாள்.அவரது குழந்தையை தூக்கி முத்தமிட்டாள்.அண்ணி முகத்தை சுளித்து சொன்னது ஒரே வார்த்தைதான்.அதெல்லாம் நமக்கு ஒத்துவராது! அதே நொடியில் மனம் விழுந்து விட்டது.அதற்குப்பிறகு சைக்கிள் மணியைக் கேட்டால் குறுகுறுவென்று இருக்கும்.சில சமயம் வெறுப்பாக இருக்கும்.

ஒருவேளை அவனை காதலித்திருந்தால் நாம் சந்தோசமாக இருந்திருப்பேனோ! என்று தோன்றுகிறது.எதிர் வீட்டில் ஒரு கிழவி இருப்பாள்.பெரிய மகராசன்தான் உனக்கு மாப்பிள்ளையாக வருவான் என்பாள்.புள்ளைக்கு சுத்திப்போடு என்று அம்மாவிடம் சொல்வாள்.அப்படி ஒன்றும் நடக்கவில்லை.

பல பேர் பார்த்துவிட்டு போய்விட்டார்கள்.எதிர்பார்த்த மாதிரி இல்லாவிட்டாலும் சுமார்தான்.ஒரு வழியாக கல்யாணம் ஆகிவிட்டது.மகிழ்ச்சியான நாட்கள் முடிந்து போய்விட்டது போல தோன்றுகிறது.இப்போதெல்லாம் அவருக்கு பிடிக்கவில்லையோ என்ற எண்ணம் அடிக்கடி வருகிறது.

நீ தனியாக எங்கும் போகவேண்டாம் என்று சொன்னது நினைவுக்கு வருகிறது.காலையில் கடைக்கு போகவேண்டும் என்றால் "ஏன் உன்னால் தனியாக போக முடியாதா? என்று கேட்கிறார்.அம்மாவிடம் பேச வேண்டும் என்று தோன்றியது.திரும்ப திரும்ப குழந்தை பற்றியே கேட்கிறாள்.எரிச்சல்தான் மிச்சம்.

திடீரென்று அந்த எண்ணம் தோன்றியது.ஒருவேளை அப்படி இருக்குமோ? தொலைக்காட்சி தொடர்களும்,கேள்விப்பட்ட கதைகளும் நினைவுக்கு வந்தன.வேறு யாராவது?! உடல் வியர்த்துவிட்டது.இருதயத்துடிப்பு காதில் கேட்டது.அவனுடைய மேசையை திறந்து சோதிக்கத் தோன்றியது.உடலெங்கும் பரபரப்பு! சிறுநீர் கழிக்கவேண்டும் என்று தோன்றியது.

அப்படியே படுக்கையில் சாய்ந்தபோது " போன் செய்தால் என்ன என்று தோன்றியது! அலுவலக நேரங்களில் போன் செய்து பழக்கமில்லை.உடனே எடுத்துவிட்டான்.என்ன? " சாப்பிட்டீங்களா? நேத்து தலை வலின்னு சொன்னீங்க! குட்டிப்பாப்பா உங்க போட்டோவ காட்டி வேணும்னு கேட்கறா!" மூச்சு விடாமல் பேசி விட்டாள்.




ஹிஹி..கதை எழுதலாம் என்று பார்த்தேன்.போகட்டும்,உண்மையை விடவும் அப்படி இருக்குமோ,இப்படி இருக்குமோ என்ற எண்ணங்கள் மனதையும்,உடலையும் ரொம்ப கஷ்டப்படுத்திவிடுகிறது.

300 வது பதிவு.
வாசகர்களுக்கும்,சக பதிவர்களுக்கும் நன்றி
-

Wednesday, September 7, 2011

குடும்ப பிரச்சினைகள் சந்தி சிரிப்பது எப்படி?

தம்பதிகள்  வேலை கிடைத்து புதியதாக அந்த ஊரில் குடியேறினார்கள்.குடும்பம் என்றால் சில நேரங்களில் பிரச்சினைகள் வரத்தான் செய்கின்றன.ஒரு நாள் இருவருக்கும் வாக்குவாதம் முற்றி விட்ட்து.கணவர் கோபத்தில் வெளியே போனவர் வெகு நேரமாகியும் வரவில்லை.செல்போனையும் விட்டுவிட்டு போய்விட்டார்.

                               கணவர் வேலை செய்யுமிட்த்தில் ஒருவர் நல்ல பழக்கம்.கணவர் செல்லிலிருந்து அவருக்கு போன் செய்து விசாரித்திருக்கிறார்.வீட்டில் சண்டை நடந்த விஷயத்தை ஒரு வார்த்தை விடாமல் முழுமையாக கொட்டி தீர்த்துவிட்டார்.அவரும் தேடிப்பார்ப்பதாக சொல்ல,சிறிது நேரத்தில் கணவர் வீட்டிற்கு வந்துவிட்டார்.

                               அடுத்த நாள் கடைக்கு போய்விட்டு வீட்டுக்கு திரும்பும்போது,நான்கு வாலிபர்கள் கமெண்ட் அடித்து சிரிப்பது காதில் விழுந்த்து.மானம் போன அதிர்ச்சியில் கூனிக்குறுகிப் போனார்.அந்த வார்த்தைகள் அவர்களது சண்டையில் கணவன் அப்பெண்ணுக்கு எதிராக பயன்படுத்திய வார்த்தைகள்.பையன்கள் வீட்டு வெளியில் இருந்து கேட்டிருப்பார்கள் என்று நினைத்தார்.ஆனால் அது உண்மையல்ல!

                                கணவருடன் பணி புரிபவரிடம் பேசிய விவரத்தை அவர் அதே வீதியில் உள்ள அவரது உறவினருக்கு சொல்லிவிட்டார்.அந்த குடும்பத்தில் இருக்கும் ஒரு பையன் தான் கமெண்ட் அடித்து சிரித்த்து.வழியில் காதில் கேட்ட்தால் அவரைப் பற்றி தெரிந்து போனது.இல்லாவிட்டால் அவரிடம் தொடர்ந்து எல்லாமும் பகிரப்ப்ட்டு இருக்கும்.

                                நல்ல குடும்பங்களில் வீட்டு விவகாரங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்வதில்லை.அது அவசியமானதும் அல்ல.நெருங்கிய உறவினர்களுடன் மட்டுமே பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுவிடும்.உரிய ஆலோசனை கிடைக்காத சுற்றம் இருக்கும்போது சிலர் நல்ல யோசனை கிடைக்கும் என்று மற்றவர்களிடம் சொல்கிறார்கள்.

                                ஒருவரது ரகசியத்தை காப்பாற்றுவது என்பது சீரிய ஒழுக்கம்.பலருக்கு வெளியில் சொன்னால் ஏதேதோ தெரிந்து வைத்திருக்கிறான் என்று கேட்பவர்கள் மதிப்பார்கள் என்று உளறி விடுகிறார்கள்.நல்லவர்களை கெட்டவர்களாக்குவதும்,நண்பர்களை எதிரிகளாக்குவதும் காலம் செய்யும் மாயம்.

                                எந்த ஒரு தனி மனிதனும் தனது பிரச்சினைகளையும்,ரகசியங்களையும் யாரிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற தெளிவு வேண்டும்.அதிலும் முன்னுரிமை கொடுத்து பட்டியல் இருக்க வேண்டும்.குடும்ப்ப் பிரச்சினைகளை ஒரு வட்ட்த்திலும்,அலுவலக பிரச்சினைகளை ஒரு வட்ட்த்திலும் உரையாடலாம்.

                               நன்றாக பேசுகிறார்கள்,பார்க்க நல்லவர்களாக தெரிகிறார்கள் என்று சொல்லி யாரை வேண்டுமானாலும் நம்புவது ஆபத்தில் முடியும்.பொதுவாக குடும்ப உறுப்பினர்கள்,நெருங்கிய உறவினர்களே பாதுகாப்பானவர்களாக இருக்க முடியும்.
-

Thursday, July 21, 2011

களியாட்ட சாமியாரும் காட்டிக்கொடுத்த சாமியாரும்

கையில் திருவோடு,இடுப்பிலிருந்து முழங்கால் வரை ஒரு பச்சைத்துணி.நெற்றி முழுக்க பக்தி நீறு.ரட்டை நாடி சரீரம்.இப்படி ஒரு சாமியார் எங்கள் ஊரில் வந்து சேர்ந்தார்.பெரும் தலைகள் எல்லாம் எழுந்து நின்று வணங்குவார்கள்.உள்ளூர் அரசியலில் இருந்து உலக அரசியல் வரை அவரிடம் பாடம் படிக்கலாம்.மருத்துவ மூலிகைகளைப்பற்றி பேசுவார்.சிலருக்கு வைத்தியமும் செய்த்தை பார்த்திருக்கிறேன்.ஒரு சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கிவிட்டார்.

                                காவியில் எத்தனையோ மகான்களை பார்த்த பூமி இது.துறவிகளை பார்த்தால் மக்களுக்கு எப்போதும் ஒரு தனி மரியாதை.பெண்கள் காலில் நீர் ஊற்றி வணங்குவார்கள்.மேலே சொன்ன சாமியாருக்கும் அப்படி ஒரு மரியாதை தந்தார்கள்.பலர் ஆலோசனைக்காக தேடிப்போனார்கள்.இப்போது மதிப்பிழந்துவிட்ட ஒரு சாமியார் பற்றி வெகு காலம் முன்பே அவர் சொன்னார்.

                                                                                பேருந்து நிறுத்த்த்தில் உள்ள தேநீர்க்கடைதான் அவரது சந்திப்பு மையம். சில மாதங்களுக்குப் பிறகு வீடுவீடாக பிச்சைக்கு செல்வதை நிறுத்திவிட்டார்.யாரோ ஒருவர் உணவுக்கு அழைத்துச்சென்று விடுவார்.ஊரில் பல பெரியவர்கள் அவருக்கு தாசனாகிப் போனார்கள்.அடிக்கடி வெளியூர் சென்று வருவார்.திருப்பதி போனேன்,காஞ்சி போனேன் என்று அவருடைய அனுபவங்களை கேட்க பலர் காத்திருப்பார்கள்.

                               நண்பன் ஒருவன் வீட்டிற்கு வந்து அழைத்தான்.ஒரு சூப்பர் விஷயம், இங்க வா!.அவன் பின்னால் நானும் தொடர மாரியம்மன் கோயிலுக்குப் போய் சேர்ந்தோம்.அங்கே ஒரு சாமியார்.ஊதினால் விழுந்துவிடுவது போல! “ சாமி,நீங்கள் என்னவோ சொன்னீர்களே இவனிடம் சொல்லுங்கள்’’ என்றான் நண்பன்.மிக ஆவலோடு இருந்தான்.அவனுக்கு ஏதோ இனம் புரியாத சந்தோஷம்.

                                 “ அவன் ஒரு ஃப்ராடு,அவன பத்தி இவனுக்கு எதுக்கு? என்றார் சாமியார்.இவன் அடிக்கடி பணம் கொடுக்கிறான் அந்த சாமியாருக்கு என்றான் நண்பன் என்னைப்பார்த்து! சாமியாருக்கு வந்த ஆக்ரோஷத்தை பார்க்க வேண்டும்.அவன் ஒரு குடிகாரன்,ஊரெல்லாம் வைப்பாட்டி வைத்துக்கொண்டு திரிபவன்,அவனுடைய பிள்ளைகள் அடித்து துரத்திவிட்டார்கள்.கொஞ்ச நாள் என்னுடன் தான் சுற்றிக்கொண்டிருந்தான்.ரயிலில் வந்தால் டிக்கெட் எடுக்க மாட்டான்.

                                    ஊரில் நன்மதிப்பு பெற்ற சாமியார் பற்றி புதியதாக வந்த சாமியார் வெளியிட்ட விவரங்கள் ஊரில் பெரும்பாலானவர்களுக்கு தெரிந்து விட்டிருந்த்து.சிலர் நம்பினார்கள்,சிலர் நம்பவில்லை.தன்னைப்பற்றிய அவதூறுகள் சாமியாருக்கு தெரிந்து  விட்ட்து.நேரடியாக இருவருக்கும் காரசாரமான சண்டை ஏற்பட்டுவிட்ட்து.நன் மதிப்பு பெற்ற சாமியார் ஆத்திரத்தில் பேசிய வார்த்தைகளை கேட்டவர்கள் காதுகளை மூடிக்கொண்டார்கள்.

                                    புதியதாக வந்த சாமியார் போய்விட்டார்.ஊரில் அவ்வளவாக யாரும் கண்டுகொள்ளவில்லை.அடுத்த நாளே பழைய சாமியாரின் போக்கு மாறிப்போயிருந்த்து.தனக்கு மரியாதை போய்விட்ட்து என்று முடிவு செய்திருக்க வேண்டும்.குடித்துவிட்டு வீதியில் பாட்டுபாடி திரிய ஆரம்பித்து விட்டார்.ஒரு பெண்மணி வீட்டுக்கு வந்து ஒரே சண்டை.மனைவியாக இருக்க வாய்ப்பில்லை.

                                    அவரது தொல்லை தாங்க முடியாமல் போய்க்கொண்டிருந்த்து.இனியும் இவனை ஊரில் வைக்க்க்கூடாது என்று தீர்மானித்து விட்டார்கள்.குறிப்பாக பக்கத்து வீட்டில் குடியிருப்பவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டிருந்தார்கள்.வீடு கொடுத்தவர் வீட்டைக்காலி செய்யுமாறு கட்டளையிட்டு துரத்திவிட்டார்கள்.இப்போதும் ஏதேனும் ஒரு கிராமத்தில் நன் மதிப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கலாம்.யாரேனும் குனிந்து வணங்கிக் கொண்டும் இருக்கலாம்.

                                பெரும்பாலான கோயில்களில் பிச்சை எடுத்துக்கொண்டிருக்கும் பல சாமியார்கள் வீட்டுப்பிரச்சினைகள்,கடன் தொல்லை போன்றவற்றை சமாளிக்க முடியாமல் ஓடிப்போனவர்கள் என்று கேள்விப்பட்டேன்.திருவண்ணாமலை ரமணாசிரம்ம் முன்பு ஒரு சாமியார் சொன்னது இது.ஓடிப்போனவர்களின் குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்பது பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை.பெண்களும் குழந்தைகளும் ஓடிப்போவது எப்படி?

-

Wednesday, July 20, 2011

சந்தேகத்தால் சிதறும் தாம்பத்யம்.


சம அந்தஸ்து,படிப்பு,சொந்தவீடு,அரசுப்பணியிலிருந்து ஓய்வு பெற்ற பையனின் தந்தை என்று நல்ல இடமாகத்தேடி அந்த பெண்னுக்கு திருமணம் செய்து வைத்தார்கள்.இனி தன் பெண்ணுக்கு எந்தப்பிரச்சினையும் இல்லை என்று பெற்றொருக்கு சந்தோஷம்.குறை வைக்காமல் பார்த்து பார்த்து செய்தார்கள்.

                                ஒரு வாரத்தில் வீட்டுக்கு வந்த பெண் அம்மாவைக்கட்டுக்கொண்டு அழ ஆரம்பித்தார்.எதற்கெடுத்தாலும் சந்தேகப்படுகிறார்.வெளியே எட்டிப்பார்த்தால் யாரைப்பார்க்கிறாய் என்கிறார்.என்னுடைய செல்போனை எடுத்து யார்யாருடன் பேசியிருக்கிறேன் என்று பார்க்கிறார், வாழ்க்கையை நினைத்தால் பயமாயிருக்கிறது’’

                                 மேலே சொல்லப்பட்ட்து கொஞ்சம்தான்.தன்னை விட அழகான மனைவி அமைந்த்தால் சந்தேகம் ஏற்பட்டு மனநோயாளியானதை சினிமாவில் பார்த்திருக்கிறோம்.நிஜத்திலும் உண்மையில் மனநோய் ஏற்படும் அளவுக்கு பிரச்சினையை தரும் ஒன்றுதான் இந்த சந்தேகம்.தீவிரமான உணர்ச்சிப்போராட்ட்த்தை தரும் பயங்கரம் இது.

                                 ஆண் மட்டுமல்ல கணவன் மீது சந்தேகம் கொள்ளும் மனைவியும் உண்டு.இரு பாலருக்கும் பொதுவான இந்த பிரச்சினைக்கு அழகான மனைவி,அழகான கணவன் என்ற தாழ்வு மனப்பான்மை மட்டும் காரணமல்ல! ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கலாம்.ஒரு வகை மனநோயிலும் இந்த பிரச்சினை வரலாம்.

                                  தனது பாலியல் திறன் மீது அவநம்பிக்கை உள்ளவர்கள்,உண்மையிலேயே பாலியல் குறைபாடு கொண்டவர்கள் சந்தேகம் உள்ளவர்களாக இருப்பார்கள்.பருவ வயதில் திருமணமான நபர்களின் கள்ளக்காதல் பற்றி நண்பர்கள் சொன்ன பல விஷயங்களும் இப்போது மனதைக்குழப்பும்.சில விஷயங்களை இவர்களே பார்த்திருப்பார்கள்.கடந்த கால சம்பவங்களோடு மனம் ஒப்பிட்டுக் கொண்டிருக்கும்.

                                  பாலியல் குறைபாடு உள்ளவர்கள் கூட தனது இணை தனக்கு மட்டுமே உரியவர் என்பதில் தீவிரமாக இருப்பார்கள்.பல எண்ணங்கள் தவறு என்றாலும்  அவர்களது மனம் படும்பாடு கொடூரமான அனுபவமாக இருக்கும் என்கிறார்கள்.சந்தேகமும்,பொறாமையும்,கோபமும் அதிகரிக்கும்போது பாலியல் உணர்வும் மூர்க்கத்துடன் இருக்க வாய்ப்புண்டு.

                                  பலரது சந்தேகங்கள் உண்மையல்ல என்பதே நிஜம்.உணர்ச்சி அளவில் அதிகம் பாதிக்கப்படுவது சந்தேக புத்தி உள்ளவர்கள்தான்.அவர்களது கணவனோ,மனைவியோ ஒரு பைத்தியத்தை பார்ப்பதுபோலவே பார்ப்பார்கள்.ஆனால் கலாச்சாரம் சார்ந்து மனதளவில் சந்தேகப்படும் கணவனைப்பெற்ற பெண் அதிகளவு பாதிக்கப்படுகிறார்.

                                  கொலை செய்யும் அளவுக்கு,தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கும் இப்பிரச்சினை விஸ்வரூபம் எடுப்பதுண்டு.கவனமாக கையாண்டால் வெளியே வர உறவினர்களும்,நண்பர்களும் உதவ முடியும்.காரணத்தைக்கண்டறிந்து உரிய ஆலோசனை வழங்கினால் பல குடும்பங்களை உடையும் ஆபத்திலிருந்து மீட்க முடியும்.

-

Thursday, June 2, 2011

கணவனும் மனைவியும் அட்ஜஸ்ட் செய்து போவதுதான் சரியானதா?

ஆம்பளைங்கன்னா அப்படித்தான் இருப்பாங்க! நம்மதான் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி போகணும்-இது பெண்களுக்கு வழங்கப்படும் ஆலோசனை அல்ல புத்திமதி? பெரும்பாலான இடங்களில் இதைக்கேட்க முடியும்.லேடீஸ்னா அப்படித்தான் சார்! விட்டுக்கொடுத்து போங்கஇது ஆண்களுக்கு சமூகம் வழங்குவது!

                                காலம்காலமாய் கற்பாந்த காலமாய் தொட்டுத்தொடர்ந்து வரும் விஷயம் இது.ஆனால் சரியானதா? குடும்ப பிரச்சினைகளுக்கு தீர்வைத்தருமா? என்றால் தயவு செய்து மன்னிக்கவும்.உடலில் ஏற்பட்ட வலியை சிகிச்சை செய்து குணப்படுத்துவதற்கு பதிலாக வலியுடன் வாழ்க்கை முழுதும் வாழச்செய்யும் ஒரு தவறான அறிவுறுத்தல்.


                                 ஒரு வீட்டில் தம்பதிகள் இருவருக்கு எப்போதும் சண்டை.அண்டை அயலாரிடம்,நண்பர்களிடம் யாரிடம் போய் பேசினாலும் ஒட்டுமொத்தமாக தெரிவித்த வார்த்தைகள் விட்டுக்கொடுத்து போங்க என்றார்கள்.ஆனால் மனசு அப்படியெல்லாம் சமாதானம் ஆகிவிடுமா என்ன? ஒரு கட்ட்த்தில் திட்டமிட்டு வெளியூர் மாறுதல் வாங்கிப்போன கணவன் கொஞ்சம் கொஞ்சமாக வீட்டுக்கு வருவதை தவிர்க்க ஆரம்பித்தார்.(அலுவலகத்தில் இப்போது வேலை அதிகமாகி விட்ட்து)

                                  பெண்ணாக இருந்தாலும் பாதிப்பை சரி செய்ய ஏதாவது வகையில் முயற்சி செய்து கொண்டுதான் இருப்பார்கள்.பெற்றோர்கள் பார்த்து செய்யும் திரும்ணத்தில் சில சாதகங்கள் இருப்பது போலவே,காதல் திருமணத்திலும் சாதகங்கள் இருக்கவே செய்கின்றன.நன்கு புரிந்து கொண்ட காதல்களும் உண்டு.இரண்டிலும் பல்வேறு நேரங்களில் பிரச்சினை தோன்றுவது இயல்பு.

                                    எந்த திருமணமாக இருந்தாலும் அட்ஜஸ்ட் செய்து போவது முன்பு கூறியது போலவே தவறானதுதான்.கணவன்,மனைவி இருவரும் ஒருவர் மீது ஒருவருக்குள்ள கோபத்தையும்,ஆத்திரத்தையும் அடக்கிவைத்து அடக்கி வைத்து வாழ்வது ஏதேனும் ஒரு நாள் பெரிய அளவில் வெடித்துவிடும்.

                                   குப்பைகளை வெளியே கொட்டாமல் பலகாலம் வீட்டு மூலையில் சேகரித்து வைத்தால் புழு,வண்டு துர்நாற்றம் எல்லாம் தோன்ற ஆரம்பித்துவிடும்.குழந்தைகளுக்காக வாழ்கிறேன்,என்ன செய்வது என் தலையெழுத்து என்று வாழ்கிறேன் என்பது மாதிரியான வாழ்க்கையில்தான் வேறு மணம் மீறிய உறவுகளும் சிலருக்கு வடிகாலாக போய்விடுகின்றன.

                                   அட்ஜஸ்ட் செய்து போகாமல் பிரச்சினை தீர என்னதான் வழி? வலியை குணப்படுத்துவதுதான்.உடல் வலிக்கு மருத்துவரிடம் போனால் என்ன செய்வார்? அந்த வலிக்கான காரணம் என்ன? எதனால் ஏற்பட்ட்தென்று சிகிச்சை அளிப்பார்.அவர் வலி தோன்றிய வித்த்தை ஆராய்கிறார்,தேவையென்றால் சில பரிசோதனைகள் செய்கிறார்.அப்புறம் மருந்து கொடுப்பார்.

                                   உதாரணமாக ஒரு குடும்பத்தில் கணவன் மதுவுக்கு அடிமையாகி இருந்தால் உரிய சிகிச்சை,ஆலோசனை மூலமே அதை தீர்க்க முடியும்.காலையில் எழுத்த்திலிருந்து திட்டித் தீர்த்துக்கொண்டிருந்தால் அவர் குடிப்பது அதிகரிக்கவே செய்யும்.ஒவ்வொருவருக்கும் அவர் சார்ந்து வந்த வாழ்க்கை மூலம் மதிப்பீடுகள் இருக்கின்றன.ஒரு சமுதாயத்தில் தவறாகப்படுவது இன்னொரு சமூகத்தில் சரி என்பார்கள்.

                                   கணவனும்,மனைவியும் சிறப்பான குடும்பம் நட்த்தும் வழி இதுதான்.பூசல் உருவாகும் சூழலை புரிந்து கொள்வது,பிறகு அதை தீர்ப்பது.ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும் என்று சொல்லப்படுவது சரியானது.கொஞ்சம் யோசிக்க முடிந்தால் முடிகிற காரியம்தான்.முடியாத நிலையில் சில இடங்களில் குடும்ப ஆலோசனை வழங்கும் இடங்கள் இருக்கின்றன.அவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம்.
-

Monday, May 2, 2011

கலங்கும் பெண்களால் உடையும் உறவுகள்.

                           காதலிலோ,குடும்பத்திலோ ஆண்,பெண் இருவருமே நம்பிக்கையும் பாதுகாப்பும் உணர வேண்டும்.இவற்றில் தவறினால் அந்த உறவு அதோகதிதான்.தான் தொடர்ந்து மதிக்கப்படுவோமா? என்ற கேள்வி எழுந்தவுடன் சந்தேகமும் அதைத் தொடர்ந்து உறவுகளில் விரிசலும் ஆரம்பித்துவிடுகிறது.

                            வேலைக்கு போன இட்த்தில் ஒரு பெண்ணை பார்த்தவுடன் பிடித்துப்போய் விட்ட்து அவனுக்கு! அந்த பெண்ணுக்கும்தான்.பார்வையில் ஆரம்பித்து புன்சிரிப்பாய் மலர்ந்து பேசிக்கொள்ள ஆரம்பித்தார்கள்.ஒரு நாள் அவன் திருமணம்செய்து கொள்ளலாம் என்று கூறினான்.



                            அந்த பெண்ணுக்கு குழப்பம் அதிகமாகிவிட்ட்து.இம்மாதிரி நேரங்களில் தோழிகள்தான் பக்கபலம்.ஆண்களை எளிதில் நம்பி விடாதே! என்றார் தோழி.நல்ல வேலையில் இருக்கிறான்,இனிமையாக பழகுவான் என்பது தவிர வேறெதுவும் தெரியாது.தேர்வுகள் ஆரம்பமாகிவிட்ட்து.

                            அவனைத்தவிர்க்க ஆரம்பித்தாள்.வேறு எந்தெந்த ஆண்களுடனோ அதிகம் பேசிக்கொண்டிருந்தாள்.போன் செய்தால் வீட்டில் உள்ளவர்கள் எடுத்து என்ன வேண்டும் என்று முறைப்பாக கேட்டார்கள்.பாவம் இவன் அப்பாவி!கொஞ்ச நாள் கழித்து சொல்லியிருக்கலாமோ என்று நினைத்தான்.இவனுக்கும் குழப்பம் அதிகமாகி விட்ட்து.



                                                                        சுருக்கமாக சொன்னால் பையனின் வீட்டில் திருமணத்திற்கு தீவிரமாக இருந்த்தால் பெற்றோர் பார்த்த பெண்ணை மண முடித்துவிட்டான்.நிச்சயமானவுடன் பெண்ணின் தோழி ஆத்திரமாக கேட்டார்என்ன இப்படி செஞ்சிட்டீங்க?’’ அவன் பதில் சொல்லவில்லை.கொஞ்சம் இழுத்திருந்தால் பரவாயில்லை.அதிகமாக இழுத்தால் எத்தகைய உறவும் அறுந்துதான் போகும்.

                                சமூகத்தில் பெண்களின் தகுதிநிலையே இதற்கெல்லாம் காரணம் என்கிறார்கள்.திருமணமாகி மணவாழ்க்கையில் சந்தோஷம் இழந்த பெண்களை பார்த்துவிட்டு கலங்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.பார்த்தவையும் கேட்டவையும் அவர்களுக்கு அச்சத்தையும்,கலக்கத்தையும் தருகிறது.முடிவு எடுப்பதில்,நம்பிக்கை கொள்வதில் பெரும் குழப்பம்.

                                மேற்கண்ட பெண் திருமணமாகி போனால் கூட தான் எப்போதும் மதிக்கபடுவோமா என்ற சந்தேகத்திலேயே இருந்தால் சிக்கலான குடும்ப பிரச்சினைகளையே கொண்டுவரும்.கணவன் எப்போதும் தன்னை முக்கியமாக கருத வேண்டும் என்பதற்காக அவர் மேற்கொள்ளும் உத்திகள் விரும்பத்தகாத விளைவுகளையும் உருவாக்கலாம்.

                                கணவன் குடும்பம் தொடர்பான உறவுகள்,அவரது பெற்றோர்,சகோதரிகள் போன்றோரை அதிகம் கணவனுடன் நெருங்கமுடியாத சூழ்நிலையை ஏற்படுத்தலாம்.மாமியார் மருமகள் சண்டைக்கு வித்திடலாம்.(பெற்றோருக்கும் மகன் தங்களை மதிக்கமாட்டானோ என்ற எண்ணம் ஏற்படுவது வேறுவிஷயம்).பெண்ணின் தாய் வீட்டு உறவுகளுக்கு அதிகம் வரவேற்பு அளிக்கலாம்.



                                 மிகச்சில சொந்தக்காலில் நிற்கும் பெண்களைத்தவிர இதெல்லாம் பொதுவானவை.பெண்ணுக்கு உரிய சமூக தகுதுநிலை கிடைத்தால் ஒழிய இவற்றை தவிர்ப்பது கஷ்டம்.
-

Wednesday, March 9, 2011

நெருக்கமில்லாத தம்பதிகள்;அதிரும் மணவாழ்க்கை-நான்கு


முந்தைய  பதிவுகளை படிக்காதவர்கள் படித்துவிடவும்

 
தாம்பத்ய ஆர்வம் குறைந்த நிலையில் இருப்பது,திறன் இருந்தும் மன,உடல்,சமூக காரணங்களால் அடங்கியிருப்பது பற்றி முந்தைய பதிவுகளில் சில உதாரணங்களை பார்த்தோம்.தனது மனைவி அல்லது கணவனிடம் மட்டுமே இந்த நிலை இருக்கும்.ஒருவருக்கொருவர் தூண்டப்பட மாட்டார்கள்.சிலர் வெறுப்படைந்தும் இருக்கலாம்.

                                 காரணங்கள் என்று பார்த்தால் உறவு நிலை சிக்கல்களே முதலிட்த்தை வகிக்கிறது.கணவனும்,மனைவியும் உணர்வுரீதியாக நேசமின்றி இருப்பதே ஆகப் பெரிய பிரச்சினை.இருவருக்கும் போதுமான அளவு அன்பு இல்லாமல் இருத்தல்,தகவல் தொடர்பில் இடைவெளி,குடும்பத்தில் மோதல்கள் போன்றவை இந்நிலைக்கு பொதுவாக சொல்லப்படும் காரணங்கள்.

                                 குடும்பத்துக்கென நேரம் ஒதுக்காமல் இருப்பதும் இவற்றில் முக்கியமானது.இன்றைய அவசர யுகத்தில் வேலை காரணமாக இருவரும் அதிகம் பேசிக்கொள்ளவோ,பகிர்ந்து கொள்ளவோ நேரம் கிடைக்காத சூழல் அதிகரித்து வருகிறது.நிச்சயமாக இவை தாம்பத்யத்தில் ஆர்வத்தை குறைக்கும் என்று உறுதியாக சொல்கிறார்கள் உளவியலாளர்கள்.

                                 எத்தகைய சூழலிலும் குடும்பத்தை மறந்து பணம் மட்டுமே பிரதானமாக கருதி வாழ்க்கையைத் தொலைத்துவிடக் கூடாது என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.முயற்சி இருந்தால் கடுமையான பணிகளுக்கிடையிலும் மனைவியையும்,குழந்தைகளையும் கவனிப்பதன் அவசியத்தை புரிந்து கொள்ளவேண்டும்.

                                  இவை தவிர தூக்கமின்மை,சில மருந்துகள்,சோர்வு,சில பாலியல் குறைபாடுகள்,ஏற்கனவே பார்த்த்துபோல குழந்தையாக இருக்கும்போது வன்புணர்ச்சி,கற்பழிப்பு போன்றவையும் காரணங்களாக இருக்கலாம்.மேலும் உடல்,மன நோய்களும்,ஹார்மோன் சுரப்பதில் உள்ள கோளாறுகளும் அடக்கம்.

                                 பாலியல் குறித்த பிரச்சினைகளை மூடி மறைத்து வாழ்வதுதான் நம் சமூகத்தின் பொதுப்புத்தி.வாழ்க்கையை பாதித்தாலும் உரிய தீர்வுகளை நாடுவதில்லை என்பது என்னுடைய அனுபவம்.இத்தகைய பிரச்சினைகளுக்கு மருத்துவம் நல்ல தீர்வுகளை வைத்திருக்கிறது.தக்க ஆலோசனைகள் மூலம் இவற்றை சரி செய்ய முடியும்.

                                 பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன்.அருகில் அமர்ந்திருந்தவரை நின்று கொண்டிருந்தவர் கேட்டார்.நீங்க அம்மா புருஷன் தானே”?.இவருக்கு மகிழ்ச்சியாகிவிட்ட்து.ஆமாம் நீங்கள் வந்திருக்கிறீர்களா?.இரண்டு தடவை வந்திருக்கிறேன்.

                                 அவர்கள் பேச்சிலிருந்து என் அருகில் அமர்ந்திருந்தவர் சாமியாடி குறி சொல்லும் ஒருவருடைய கணவர் என்பதும்,எப்போது,என்னென்ன எடுத்துவரவேண்டும் என்பதான உரையாடல்களும் அவர்களுக்குள் நடைபெற்றுக் கொண்டிருந்த்து.

                                  குறி சொல்பவரின் கணவர் இடையே குறிப்பிட்ட்து.கல்யாணமாயி ரெண்டு வருஷத்துல குழந்தையில்ல!அப்புறம் அவ மேல அம்மா உட்கார்ந்துட்டா!ரெண்டு பேருக்கும் நடுவுல ஒண்ணுமில்ல(தாம்பத்ய உறவு இல்லை).சாமியாடுவது மனப்பிரச்சினை என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும்.எனக்கு நாம் இப்போது பார்த்துக் கொண்டிருக்கும் தாம்பத்யத்தில் ஆர்வமில்லாத நிலை நினைவுக்கு வந்தது.

                                சிகிச்சை முறைகள் ,தடுத்துக்கொள்ளும் வழிவகைகள் அடுத்த பதிவில்!

                                 
-

Friday, February 11, 2011

விவாகரத்துக்களுக்கு காரணம் பெண்களா?


விவாகரத்து-அன்பெனும் ஈரமில்லாமல் இறுகி உடைந்து போன இதயங்கள் வாழும் இடம்.நான் செய்தியில் படித்த்து.சேலம் குடும்ப நல நீதிமன்றத்தில் மட்டும் இந்த ஆண்டு துவக்கத்திலிருந்து சராசரியாக நாளொன்றுக்கு ஒரு விவாகரத்து வழக்கு தாக்கல் ஆகியிருக்கிறது.இவற்றில் பெரும்பாலானவை காதல் திருமணங்கள்.

காதலிக்கும் போது யதார்த்தமாக இருப்பதில்லை.அப்போது காதலனுக்கு காதலியும்,காதலிக்கு காதலனும் தெய்வங்கள்.அல்லது அவற்றிலும் மேலானவர்கள்.அவள் பேச்சுக்கு மறு பேச்சு கிடையாது.ஏன்,உயிரை விட தயார் அவன்!காதல் காலங்களில் உணர்ச்சிகள் மட்டுமே ஆதிக்கம் செலுத்துகின்றன்.உணர்ச்சிகள் ஆதிக்கத்தில் இருக்கும்போது மனம் சிந்திப்பதில்லை.

திருமணத்துக்கு முன் அந்த உலகத்தில் இருவரைத் தவிர வேறு யாரும் இல்லை.திருமணத்திற்கு பிறகு,மாமனார்,மாமியார்,நாத்தனார் எல்லாம் இருக்கிறார்கள்.ஆளுக்கொன்று சொல்கிறார்கள்.மனைவி மயக்கத்தில் மகன் தன்னை கவனிக்காமல் விட்டு விடக் கூடாதென்று மருமகளை குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

காதலித்தபோது இருந்த்து போலவே கல்யாணத்திற்கு பிறகும் இருப்பது சாத்தியமில்லை.இது அவர்களுக்கு தெரியாது.தெரு முனையில் தன் வருகைக்காக மணிக்கணக்கில் காத்திருந்த காதலன் இப்போது சில நிமிட தாமத்த்திற்கு எரிந்து விழுகிறான்.இதை அவள் எதிர்பார்க்கவில்லை.அவனும் அப்ப்டியொன்றும் முக்கியமில்லை என்று நினைக்கிறான்.அக்கா,தங்கை,அம்மா,அப்பா எல்லாம் ஏதேதோ சொல்கிறார்கள் .இப்போது அவர்களெல்லாம் முக்கியமாக படுகிறது.காதலிக்கும்போது வீட்டில் இருப்பவர்கள் காணாமல் போயிருந்தார்கள்

இருவருக்கும் திருமணத்திற்குமுன் எதிர்பார்ப்புகள் அதிகமிருந்த்து.அதனால் இப்போது ஏமாற்றமும் அதிகமாகி,வலியும் தாங்க முடியாத அளவிற்கு இருக்கிறது.அப்போது வேறு யாரைப் பற்றியும் நினைக்கவில்லை.இப்போது ஒரு சமூகத்தை எதிர்கொள்ளவேண்டும்.கல்யாணத்திற்கு முன்னால் இருவருக்கும் உரிய மன நல ஆலோசனை வழங்குவது சிக்கலை ஓரளவு குறைக்கும்.

தவிர பெண் முன்பு போலில்லை என்றார் ஒரு பெரியவர் விவாகரத்து செய்தியொன்றை படித்துவிட்டு!.உண்மைதான்!கணவனிடம் அடியும்,உதையும் வாங்கிக் கொண்டு சாராயம்,சிகரெட் நாற்றத்தையும் பொறுத்துக் கொண்டு குழந்தைகளை காரணமாகச் சொல்லியே வாழ்க்கையை தியாகம் செய்த பெண்கள் இன்று இல்லைதான்.

படிப்பும்,வேலையும் பெண்ணுக்கு இன்று சுய மதிப்பை வழங்கியிருக்கிறது.சொந்தக்காலில் நிற்கமுடியும்.பூமி மட்டும் எத்தனை நாளைக்கு பொறுக்கும்? எதன்பொருட்டும் சந்தோஷமில்லாத வாழ்க்கையை ஏன் வாழவேண்டும்?வாழ்க்கை திரும்பவராது!ஜோடி சேர்ந்து நெருப்பில் நின்று கொண்டிருப்பதை விட தனியாக மகிழ்ச்சியாக இருக்க முடிந்தால் நல்லதுதான்.

குடும்பம் என்ற நிறுவனம் ஆட்டம் காண்கிறது.இது சமூகத்திற்கு நல்லதில்லைதான்.இப்போதைக்கு வேறெதுவும் செய்ய முடியாது.குழப்பங்களும்,சிக்கல்களும் அதிகரிக்கும்.பின்ன்ர் நாம் சிந்திக்க துவங்குவோம்.காரணத்தைக் கண்டறிவோம்.இவ்வளவு காலமும் அப்பாவிப் பெண்களின் தியாகத்தில்தான் குடும்பம் என்று ஒன்று இருந்த்து என்பதை உணர்வோம்.உண்மை தெரியும்போது,உணரும்போது நல்ல மாற்றங்கள் வரும்.

-

Saturday, January 1, 2011

நெருப்பில்லாமல் புகையும் குடும்பங்கள்


நெருப்பில்லாமல் புகையாது என்பார்கள்.ஆதாரமின்றி ஒருவரை பற்றிய செய்தி வெளி வராது என்பது இதன் பொருள்.ஆனால், நடைமுறையில் நெருப்பில்லாமலும் புகைந்து,ஏன் எரிந்து சாம்பலாகிவிடுவதைக் கூட பார்க்கிறோம்.எல்லா குழப்பங்களுக்கும் மனமே முழுமுதற் காரணம்.தவறான எண்ணங்கள்,குழப்பங்கள்,கற்பனைகள் தனி மனிதனையும்,குடும்பங்களையும் பொசுக்கி விடுகிறது.கணவன் மனைவி பிரச்சினை ஒன்றை கவனியுங்கள்.

கணவர் தனியார் நிறுவனமொன்றில் நிரந்தர வேலை.மிக சாதாரண குடும்பம்.சொந்தவீடு இல்லை.அவர்களுக்கு திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது.ஒரு பெண் குழந்தை.தொடர்ந்து கணவன் மனைவிக்குள் புகைச்சல்கள்.பிறகு மனைவி பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.பெண்ணின் தாய் தொலைபேசி மூலம் தினமும் காட்டமான வார்த்தைகளால் அர்ச்சித்துக் கொண்டிருந்தார்.

கணவர் தனது நண்பர் ஒருவரை உதவிக்கு நாடினார்.அவர், பெற்றோர் வீட்டில் இருந்த மனைவியை தொடர்பு கொண்டு நேரில் வந்து பேசுமாறு கேட்டுக் கொண்டார்.கணவனின் நண்பன் மீது அந்த பெண்ணுக்கு ஓரளவு மரியாதை இருக்கவே,தனது தாயுடன் நேரில் சந்தித்தார்.பிரச்சினை உங்களுக்கெல்லாம் தெரிந்ததுதான்.

பக்கத்து வீட்டுக்காரர் குழந்தைக்கு துணி எடுத்தால்,சினிமாவுக்கு போனால் தானும் அதை உடனே செய்தாகவேண்டும் என்பது.சேமிப்பாக கணவர் சீட்டு கட்ட ஆரம்பிக்க,மனைவியோ பெரும் தொகைக்கு நகை சீட்டு கட்ட வேண்டும் என்கிறார்.இறுதியாக,நான் எது சொன்னாலும் இவர் கேட்பதில்லை.அதனால் அவருக்கு என்மீது அன்போ பாசமோ கிடையாது.

மனைவியின் கூற்றில் எள்ளளவும் உண்மையில்லை.அலுவலக பணிபோதுமான நேரம் ஒதுக்க முடியவில்லை.நம்முடைய மிகப்பெரிய பிரச்சினை இதுதான்.நாம் சொல்கிறபடி நடந்தால்,பேசுவதற்கெல்லாம் தலையாட்டினால் மட்டுமே ஒருவரை நம்புகிறோம்.அவர்தான் நம்மை நேசிப்பதாக நினைக்கிறோம்.மனம் புகைந்து எரிய ஆரம்பிக்கிறது.குடும்பங்களும் உறவுகளும் கருகிப்போய் விடுகின்றன. -

Friday, November 19, 2010

கள்ளக்காதல் வெளியே வருவது எப்படி?

கள்ளக்காதல் உள்ளூர் தினசரிகளின் அன்றாட செய்திகள்.ஒரு சமூகப்பிரச்சினையாக அணுகுவதை விட்டுவிட்டு பரபரப்பு செய்தியாக மட்டுமே பார்த்துவிட்டு மறந்து விடுகிறோம்.உறவுகளிலும்,குடும்பங்களிலும் விஷக்கிருமியைப்போல ஊடுருவி கொலை,தற்கொலை,குடும்பசிதைவு,என கோரமுகம் காட்டும் ஒன்றை நாம் கவனிக்காதது போல் இருக்கும் மாயம் என்ன?இது ஒரு சமூகப்பிரச்சினையாக ஏன்ஆய்வு செய்யப்படவில்லை?படிக்கப்படவில்லை?

சமூகப்பிரச்சினை என்பதற்கு உள்ள வரையறைகள் கள்ளக்காதலுக்கு பொருந்தும்.மரபு சார்ந்து நாம் காதல்,பாலியல் தொடர்பான விஷயங்களை திரும்பிப்பார்க்காமல் ஓரக்கண்ணால் படபடப்புடன் பார்த்து வந்திருக்கிறோம்.குற்றங்களை ஆய்வு செய்கிறோம்.மதுப்பழக்கம்,புகைபிடித்தல்,வறுமை,என்று சமூகப்பிரச்சினைகள் ஆய்வு செய்யப்படுகின்றன.படிக்கப்படுகின்றன.கள்ளக்காதல் போன்றவற்றை அவ்வப்போது சில பத்திரிக்கைகள்ஆய்வுக்கு உட்படுத்துகின்றனவே தவிர வேறு யாரும் கவனிப்பதில்லை.

கள்ளக்காதல் சமூகத்தில் நோய்க்கூறாக சிந்திக்கப்ப்படும்போது,அனுமானங்களும்,அதையொட்டி ஆய்வுகளும் உருவாக வாய்ப்புள்ளது.ஆய்வுகள் மூலம் கண்டடையப்படும் உண்மைகள் பிரச்சினைகளை தீர்க்க உதவும்.பல குழந்தைகள் அனாதையாவது,கொலை,தற்கொலைஎன்று நீளும் குற்றச்செயல்களை ஓரளவாவது நம்மால் குறைக்கமுடியும்.முயற்சி இருந்தால் முடியாதது இருக்கிறதா என்ன?

நாம் இனி தலைப்புக்கு வருவோம்.நாளிதழ்களில்வந்தால் எல்லோருக்கும் தெரியும்.வேறு எப்படி?கள்ளக்காதல் ஒரு குற்றம்.ரகசியமானது,யாருக்கும் தெரியாமல் நடக்கவேண்டும்.ஆனால்,எல்லா குற்றச்செயல்களைப்போலவே தடயமும் இருக்கும்.நான் அறிந்தவரை உடனிருப்பவர்கள் யாருக்கும் தெரியாமல் இத்தகைய உறவுகள் மலர்வதில்லை.காதலை போலவே இது தொற்றிக்கொள்ளும் தன்மை கொண்டது.தோழிகளுக்கு தெரியாத கள்ளக்காதல் விதிவிலக்கு!

பலருடன் விவாதித்த வரையிலும்,பார்த்து,கேட்டு அறிந்தவகையிலும் கள்ளக்காதல்கள்,முடிவு செய்வதற்கு முன்னர் பெண்ணால் தனது தோழிகளிடம் பேசப்பட்டுவிடுகிறது.அவர்களது கருத்துக்களை அறிவதும்,அவரைப்பற்றி அறிவதும் இதன் நோக்கமாகும்.வெற்றிக்கு பிறகு ஆண் தனது நண்பர்களிடம் அறிவிப்பான்.ஆண் தனது வெற்றியாக கொண்டாடுவான்.பின்னர்,அப்பெண் தனது மரியாதையை இழக்க துவங்கி எதிர்கொள்ளும் சிக்கல்களை பெண்ணிய நோக்கில் பார்க்கவேண்டும். -