Showing posts with label inhibited sexual desire. Show all posts
Showing posts with label inhibited sexual desire. Show all posts

Sunday, March 13, 2011

நெருக்கமில்லாத தம்பதிகள்;அதிரும் மணவாழ்க்கை-5


      தொடரின் முந்தைய பதிவு  இங்கே...http://counselforany.blogspot.com/2011/03/blog-post_09.html
  
தொடரின்             
                            தாம்பத்யத்தில் நாட்டமில்லாத நிலை,சில காரணங்களுக்காக பாலியல் ஆர்வம் தடுக்கப்பட்டு மணவாழ்க்கையில் சிக்கல்,உடல் திறன் இருந்தும் ஈடுபாடில்லாமல் இருப்பதற்கான காரணங்களையும்,அதன் சில முகங்களையும்,எதிரொலிகளையும் ஏற்கனவே பார்த்திருக்கிறோம்.

                            Inhibited sexual desire  என்று வரையறுக்கப்படும் தடுக்கப்பட்ட பாலியல் ஆர்வத்துக்கு தரப்படும் சிகிச்சை முறைகள் பெரும்பாலானவை மருந்துகள்,ஊசிகள் அல்ல.சென்ற பதிவில் குறிப்பிட்ட்துபோல உடல் சார்ந்த சில காரணங்களுக்கு மருந்துகள் தரப்படும்.

                           இம்மாதிரியான குறைபாடுகளுக்கு மனநல ஆலோசனைகள் மூலம் தீர்க்கப்படுகிறது.முதலில் யாருக்கு பிரச்சினை என்பது கண்டறிவார்கள்.சிக்கல் என்ன?எங்கே? என்பது தெரிந்துவிட்டால் அதை தீர்ப்பது எளிது.சில தம்பதிகளுக்கு உறவை இருவருக்குமுள்ள உறவை மேம்படுத்தும் வழிவகைகள் சொல்லித்தருவார்கள்.

                           திருமண ஆலோசனைகள் (counsellig)இருக்கின்றன.தம்பதிகளின் தகவல் தொடர்பு,ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது,கணவன் அல்லது மனைவி இருவரில் ஒருவர் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இன்னொருவர் நடந்து கொள்ளும் விதம் போன்றவை கற்பிக்கப்படும்.

                           சிலரிடம் நேரடியாக பாலுறவு குறித்து விவாதிக்க வேண்டியிருக்கும்.சூழ்நிலை,அணுகும் விதம்,தூண்டல்கள்,முன் விளையாட்டுக்கள் பற்றி கற்பிக்க வேண்டியிருக்கும்.சிறப்பு மருத்துவர்கள் முன்னிலையில் செய்யப்படவேண்டிய விஷயம் இது.அரைகுறையாக எனக்கும் தெரியும் என்று ஆளாளுக்கு ஆலோசனை தருவது தவறு.

                           தம்பதிகளிடையே பாலுறவு வாழ்க்கை வாய்ந்த்து.அதில் பிரச்சினை இருந்தால் குடும்பம் நிலைப்பது சிரம்ம்.பாலியல் தொடர்பான பலவற்றை மூடிமறைப்பது நம் பண்பாட்டில் இருந்து வரும் ஒன்று.அது தவறானது என்பது உங்களுக்கு புரிந்திருக்கும்.

                             கடந்த நான்கு பதிவுகளிலும் இப்போதும் பார்த்த பிரச்சினையை ஓரளவு நாமே தடுக்க முடியும்.தம்பதிகள் பாலுறவு நீங்கலாக ஒருவருக்கொருவர் நேசம் கொள்வதும்,நெருக்கமான உணர்வுகளை கொண்டிருப்பதும் அவற்றில் முக்கியமானவை.மனைவியை மனுஷியாக நட்த்தினாலே பெரும்பாலான பிரச்சினைகள் தீர்ந்துவிடும்.

                              இன்னும் சில இருக்கின்றன.அவற்றை தனித்தனியாக அவ்வப்போது பார்க்கலாம்.அடுத்த பதிவும் உங்களுக்கு சிலவற்றை சொல்லித்தரும்.மகிழ்ச்சியான வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள்.
-

Wednesday, March 9, 2011

நெருக்கமில்லாத தம்பதிகள்;அதிரும் மணவாழ்க்கை-நான்கு


முந்தைய  பதிவுகளை படிக்காதவர்கள் படித்துவிடவும்

 
தாம்பத்ய ஆர்வம் குறைந்த நிலையில் இருப்பது,திறன் இருந்தும் மன,உடல்,சமூக காரணங்களால் அடங்கியிருப்பது பற்றி முந்தைய பதிவுகளில் சில உதாரணங்களை பார்த்தோம்.தனது மனைவி அல்லது கணவனிடம் மட்டுமே இந்த நிலை இருக்கும்.ஒருவருக்கொருவர் தூண்டப்பட மாட்டார்கள்.சிலர் வெறுப்படைந்தும் இருக்கலாம்.

                                 காரணங்கள் என்று பார்த்தால் உறவு நிலை சிக்கல்களே முதலிட்த்தை வகிக்கிறது.கணவனும்,மனைவியும் உணர்வுரீதியாக நேசமின்றி இருப்பதே ஆகப் பெரிய பிரச்சினை.இருவருக்கும் போதுமான அளவு அன்பு இல்லாமல் இருத்தல்,தகவல் தொடர்பில் இடைவெளி,குடும்பத்தில் மோதல்கள் போன்றவை இந்நிலைக்கு பொதுவாக சொல்லப்படும் காரணங்கள்.

                                 குடும்பத்துக்கென நேரம் ஒதுக்காமல் இருப்பதும் இவற்றில் முக்கியமானது.இன்றைய அவசர யுகத்தில் வேலை காரணமாக இருவரும் அதிகம் பேசிக்கொள்ளவோ,பகிர்ந்து கொள்ளவோ நேரம் கிடைக்காத சூழல் அதிகரித்து வருகிறது.நிச்சயமாக இவை தாம்பத்யத்தில் ஆர்வத்தை குறைக்கும் என்று உறுதியாக சொல்கிறார்கள் உளவியலாளர்கள்.

                                 எத்தகைய சூழலிலும் குடும்பத்தை மறந்து பணம் மட்டுமே பிரதானமாக கருதி வாழ்க்கையைத் தொலைத்துவிடக் கூடாது என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.முயற்சி இருந்தால் கடுமையான பணிகளுக்கிடையிலும் மனைவியையும்,குழந்தைகளையும் கவனிப்பதன் அவசியத்தை புரிந்து கொள்ளவேண்டும்.

                                  இவை தவிர தூக்கமின்மை,சில மருந்துகள்,சோர்வு,சில பாலியல் குறைபாடுகள்,ஏற்கனவே பார்த்த்துபோல குழந்தையாக இருக்கும்போது வன்புணர்ச்சி,கற்பழிப்பு போன்றவையும் காரணங்களாக இருக்கலாம்.மேலும் உடல்,மன நோய்களும்,ஹார்மோன் சுரப்பதில் உள்ள கோளாறுகளும் அடக்கம்.

                                 பாலியல் குறித்த பிரச்சினைகளை மூடி மறைத்து வாழ்வதுதான் நம் சமூகத்தின் பொதுப்புத்தி.வாழ்க்கையை பாதித்தாலும் உரிய தீர்வுகளை நாடுவதில்லை என்பது என்னுடைய அனுபவம்.இத்தகைய பிரச்சினைகளுக்கு மருத்துவம் நல்ல தீர்வுகளை வைத்திருக்கிறது.தக்க ஆலோசனைகள் மூலம் இவற்றை சரி செய்ய முடியும்.

                                 பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன்.அருகில் அமர்ந்திருந்தவரை நின்று கொண்டிருந்தவர் கேட்டார்.நீங்க அம்மா புருஷன் தானே”?.இவருக்கு மகிழ்ச்சியாகிவிட்ட்து.ஆமாம் நீங்கள் வந்திருக்கிறீர்களா?.இரண்டு தடவை வந்திருக்கிறேன்.

                                 அவர்கள் பேச்சிலிருந்து என் அருகில் அமர்ந்திருந்தவர் சாமியாடி குறி சொல்லும் ஒருவருடைய கணவர் என்பதும்,எப்போது,என்னென்ன எடுத்துவரவேண்டும் என்பதான உரையாடல்களும் அவர்களுக்குள் நடைபெற்றுக் கொண்டிருந்த்து.

                                  குறி சொல்பவரின் கணவர் இடையே குறிப்பிட்ட்து.கல்யாணமாயி ரெண்டு வருஷத்துல குழந்தையில்ல!அப்புறம் அவ மேல அம்மா உட்கார்ந்துட்டா!ரெண்டு பேருக்கும் நடுவுல ஒண்ணுமில்ல(தாம்பத்ய உறவு இல்லை).சாமியாடுவது மனப்பிரச்சினை என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும்.எனக்கு நாம் இப்போது பார்த்துக் கொண்டிருக்கும் தாம்பத்யத்தில் ஆர்வமில்லாத நிலை நினைவுக்கு வந்தது.

                                சிகிச்சை முறைகள் ,தடுத்துக்கொள்ளும் வழிவகைகள் அடுத்த பதிவில்!

                                 
-

Sunday, March 6, 2011

நெருக்கமில்லாத தம்பதிகள்;அதிரும் மணவாழ்க்கை.-மூன்று


          முந்தைய இரு பதிவை படிக்காதவர்கள் படித்துவிடவும்.



                                  உடல் திறன் இருந்தும் பாலுறவில் ஆர்வமில்லாத நிலையில் மருத்துவரை நாடுபவர்கள் யாரென்பது உங்களுக்கும் தெரிந்த விஷயம் என்று குறிப்பிட்டேன்.எளிதில் நாம் பார்த்திருக்க கூடிய,அனுமானிக்க கூடிய ஒன்று. பொருந்தாத மனம் உடைய இருவரின் திருமணம்.

                                  தான் பணிபுரியும் இட்த்திலேயே சக பணியாளர் ஒருவருடன் அவனுக்கு காதல்.பையனுக்கு கொஞ்சம் வசதிக்குறைவு.காதலிக்கும் பெண்ணுக்கும் அப்படியே.! காதலை வீட்டில் சொல்ல முடிவு எடுத்த நேரத்தில் அப்பாவிடமிருந்து உடனே கிளம்பி வருமாறு தொலைபேசி தகவல்.

                                   அவனுக்கு மிக வசதியான இட்த்திலிருந்து வரன் வந்திருக்கிறது.அந்த குடும்பத்தையும்,பெண்ணையும் அவனுக்கு தெரியும். பெண் கருப்பு.பார்க்க அழகாகவும் இருக்க மாட்டார்.ஆத்திரத்துடன் மறுப்பு தெரிவித்தான்.அப்பாவுக்கு கோபம் அதிகமாகிவிட்ட்து.உன்னை படிக்க வைத்த கடன் இரண்டு லட்சம் இருக்கிறது.தெரியுமா?

                                    கடன் இருப்பது இதுநாள் வரை அவனுக்கு தெரியாது.சித்தப்பா வந்தார்,மாமா வந்தார்.உறவுகள் அவனை வளைத்துக் கொண்டார்கள்.அம்மா அழ ஆரம்பிக்க குழம்ப ஆரம்பித்தான்.அழகு முக்கியமில்லை,குணம்தான் முக்கியம் என்றார்கள்.அவன் ஒப்புக் கொண்டுவிட்டான்.

                                   திருமணமான ஒரு வாரத்தில் பெண் பிறந்த வீட்டை அடைந்தார்.அவனுக்கு ஆண்மையில்லை”.ஊர் முழுக்க பரப்பியாயிற்று.மொத்த குடும்பத்துக்கும் அவமானம் கேலிப்பேச்சாக சுழன்று கொண்டிருந்த்து.அவனை மருத்துவரிடம் இழுத்துக் கொண்டு ஓடினார்கள்.அவன் ஆண்மையுள்ளவன் என்று மருத்துவர் சான்றிதழ் அளித்தார்.

                                   மணமாகி குடும்பம் நட்த்தவில்லை என்பதும் உண்மைதான்.தாம்பத்யத்திற்கு மனம் ஒத்துழைக்கவில்லை.பாலியல் ரீதியாக அப்பெண் அவனை கவரவில்லை.காரணம் பெண்ணின் அழகு மட்டுமல்ல! அவன் விரும்பிய பெண்ணோடு வாழ முடியவில்லை என்பதுதான்.

                                   மனசு ஒட்டாத திருமணங்கள் இந்தியாவின் சாபக்கேடு! உறவு விட்டுப் போக்க் கூடாதென்றும்,சாதி மத பேதங்களாலும்,பொருளாதார அளவுகோளை வைத்தும் இரண்டு பேரை நீங்கள் இனி குடும்பம் நட்த்த வேண்டும் என்று திணிக்கப்படும் திருமணங்கள் இங்கே அதிகம்.இவை தாம்பத்யத்தில் குறைபாடுகளை தருவது மட்டுமல்லாமல் கள்ளக் காதல் போன்ற சீர்கேடுகளுக்கு வழி ஏற்படுத்தி விடுகின்றன.

                                 பாலியல் ஆர்வம் ஒடுங்கியுள்ள நிலை(inhibited sexual desire) ஏற்படுவதற்கான மேலும் சில காரணங்கள் இருக்கின்றன.சிலவற்றை நம்மால் தடுக்கவும் முடியும்.சிகிச்சை தேவைப்படும் காரணியும் உண்டு.அவை அடுத்த பதிவில்..






-