Friday, June 17, 2011

மூடி வைத்து மூடி வைத்து மோசம் போகும் மனிதர்கள்.


அந்த பெண்ணுக்கு சுமார் இருபது வயதுதான் இருக்கும்.ஓரளவேனும் படித்திருக்கவேண்டும்.மருந்துக்கடையில் சென்று அவர் மாத்திரை கேட்கிறார்.(இதைப்பற்றி ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்ட்து.இதுவே அபாயகரமான போக்கு) .புண்ணுக்கு மருந்து கொடுங்கள்!என்று கேட்டவுடன் கடையில் இருந்தவர் “ யாருக்கு? என்று விசாரிக்கிறார்.பெண் மாற்றி மாற்றி ஏதேதோ சொல்ல கர்ப்பிணியாக இருக்கிறாரே என்று யோசித்து கடையில் இருந்த பெண் பணியாளரை விட்டு அவரை விசாரிக்கச் செய்த்தில் ,புண் இருப்பது அவருக்குத்தான் என்பதும் ,பிறப்புறுப்பில் இருப்பதும் தெரிய வந்திருக்கிறது.

                              கடையில் இருந்தவர்கள் உண்மையில் அதிர்ச்சியாகி பெண்ணுக்கு விளக்கியிருக்கிறார்கள்.(கொஞ்சம் மனசு உள்ளவர்களாக இருந்த்தால்) அவர் கர்ப்பிணியாக இருப்பதால் முறையாக மருத்துவரை பார்ப்பதே நல்லது என்று அனுப்பிவிட்டார்கள்.கர்ப்பிணி என்பதால் பெரும்பாலான ஆண்டிபயாடிக் மாத்திரைகள் கூட தரக்கூடாது.தெரியாமல் தந்துவிட்டால் பின்விளைவுகள் மோசமாக இருக்கும்.

                              மேற்கண்ட விஷயம் பற்றி மருத்துவர் ஒருவர் கூறியது,

                                பிறப்புறுப்பில் ஏற்படும் புண்கள் அநேகமாக பால்வினை நோயாக இருக்கலாம்.இதில் மூன்று,நான்கு வகை இருக்கிறது.சிபிலிஸ் என்ற நோயில் முதலில் புண் ஏற்படும்,மருந்து செய்யாவிட்டாலும் சில நாட்களில் தானாகவே குணமாகிவிடும்.ஓரிரு மாதங்களில் உடலில் அம்மை போன்ற கொப்புளங்கள் சிறியதாக தோன்றும்.அப்போதும் மருத்துவரிடம் போகமாட்டார்கள்.அதுவும் தானாகவே சரியாகி விடும்.ஆனால் உள்ளிருக்கும் நோய் பல ஆண்டுகளுக்கு பிறகு முடி கொட்டுவதிலிருந்து துவங்கி உடலின் இதயம்,சிறுநீரகம் உள்பட எல்லாஉறுப்புகளையும் பாதிக்கும்.

                                கர்ப்பிணி பெண் என்பதால் இன்னொரு பிரச்சினை,குழந்தைக்கும் பரவும்,குழந்தை இறந்து பிறப்பது,அபார்ஷன் போன்ற வாய்ப்புக்களும் அதிகம்.பெரும்பாலும் கர்ப்பமாக இருந்து மருத்துவமனை சென்றாலே இதற்கான பரிசோதனைகள் செய்யப்பட்டுவிடும்.பலர் இன்னும் வீட்டில் பிரசவம் பார்த்துக்கொள்ளும் நிலை தொடர்கிறது.உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சையும் எடுப்பதில்லை என்றார்.

                                 இந்தியா பெண்கள் வாழத்தகுதியில்லாத நாடு (நான்காம் இடமாம்) என்று அறிவித்திருக்கிறார்களே அதற்கும்,இந்த மாதிரி அணுகுமுறைகளுக்கும் தொடர்பிருக்கிறதா? ஆம்.பிறப்புறுப்பில் புண் இருப்பதாக சொன்னால் அந்த பெண்ணை வீட்டில் இருப்பவர்கள் சந்தேக கண் கொண்டு பார்க்க வாய்ப்பிருக்கிறது.கணவனால் வந்திருந்தாலும் முதலில் இவராக பேச முடியாது.

                                  ஆண்கள் இப்படிப்பட்ட நோயால் பாதிக்கப்படும்போது மருத்துவர் சொன்னது போல மூடிவைத்து பெரிதாக்கிக் கொள்கிறார்கள் அல்லது அவர்கள் மட்டும் சிகிச்சை பெறுகிறார்கள்.மனைவியிடம் கூறினால் எப்படி ஏற்பட்ட்து?என்ற கேள்வி வரும் என்பதால் தவிர்த்து விடுவார்கள்.இது இன்னொரு முட்டாள்தனம்.இவர் நோய் தெரியும் முன்பே மனைவிக்கும் தொற்ற வைத்துவிட்டு இருப்பார்.இவர் மட்டும் குணப்படுத்திக்கொண்டாலும் மனைவியிடம் இருந்து மீண்டும் தொற்றும்.

-

7 comments:

A.K.RASAN said...

எய்ட்ஸ் பரவும் ஆபத்தும் உண்டு.நல்ல பதிவு.

Unknown said...

ஆண்கள் பெரும்பாலானதை மூடியே வைக்கின்றனர்..தன்னை சுற்றி உள்ளோருக்கு பாதிப்பு வரும்னு தெரிஞ்சும் கூட!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

நல்ல விஷயம் சொல்லியிருக்கீங்கண்ணே!

ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதியா? உண்மையில் தனக்குண்டான நோய்க்கு சிகிச்சை பெறக் கூட ஒரு பெண்ணுக்கு சுதந்திரம் இல்லையா?

இந்த மாதிரி வியாதியை பெண்களுக்கு ஆண்களே கொண்டு வருகின்றனர்!

பின்னாடி பெண்களை குற்றம் சொல்லி இம்சை பண்ணுவதும்` இவர்கள்தான்!

எப்போது பெண்விடுதலை பெறுவாள்?

நிரூபன் said...

விழிப்புணர்வை ஏற்படுத்துகின்ற ஒரு அற்புதமான பதிவினைத் தந்திருக்கிறீங்க.

ஆண், பெண் இருபாலாரும் போதிய மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ளாமையும், மனம் விட்டுப் பேசிப் பால்வினை நோய் பற்றிய குழப்பங்களை ஆராயாது இருப்பதும் தான் இத்தகைய விளைவுகளுக்கான காரணங்கள் சகோ.

இறுதி வரை தம்மைத் தாமே சுய பரிசோதனை செய்து கொள்ளாத நிலமை தான் இத்தகைய நோய்கள் முற்றிய பின் கண்டறிந்து உயிரை மாய்த்துக் கொள்வதற்கும் காரணமாக அமைந்து கொள்கிறது,

Jayadev Das said...

A very sensitive,touching issue, hou have handled it nicely, thanks.

Jana said...

உண்மைதான் மருத்துவம் பற்றிய முழுமையான விழ்ப்புணர்வு அனைவருக்கும் தேவையான ஒன்றே.
அதேபோல சில மருந்துக்கடைகளில் எந்தவொரு டிஸ்கிரிப்ஸனும் இல்லாமல் மருந்து வழங்கும் முறை தடை செய்யப்படவேண்டும். மருத்துவ ஆலோசனைகள் இல்லாமலேயே மருந்து கடைகளில் மருந்தெடுக்கும் வீதம் தற்போது அதீதமாக அதிகரித்து வருவதை அவதானிக்கமுடிகின்றது.
சும்மாவா சொன்னார்கள், டாக்ரருக்கும், வக்கீலுக்கும் எதையும் மறைக்க கூடாது என்று?

Sankar Gurusamy said...

இது குறித்த விழிப்புணர்ச்சி மிகவும் குறைவே.. இதில் சுய மருத்துவம் செய்துகொள்பவர்களே அதிகம். வேறு வழி இல்லை என்றால்தான் மருத்துவரிடமே செல்கிறார்கள்.

பகிர்வுக்கு நன்றி..

http://anubhudhi.blogspot.com/