Friday, September 10, 2010

பிச்சைக்காரர்கள் உழைக்கத்தயார்

கோவை மாநகராட்சியில் மன நல ஆலோசனையின் விளைவாக பிச்சைக்காரர்கள் சுமார் ஐம்பது பேர் சுய தொழில் தொடங்க முன்வந்தார்கள்-தினமலர் செய்தி. .உரிய ஆலோசனையின் விளைவாக இந்த முடிவுஎட்டப்பட்டுள்ளது. இதன் சாதகபாதகங்களை பார்க்கும் முன்பாக மன நல ஆலோசனை பற்றி சில தகல்வல்கள் . மனிதர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண உதவுவது தான் மன நல ஆலோசனையின் நோக்கம் .பயிற்சி பெற்ற ஒருவர் தனி மனிதனுக்கோ குழுக்களுக்கோ ஆலோசனை வழங்கலாம் .நல்ல தமிழில் ஆற்றுப்படுத்துதல் என்றும் அழைக்கப்படுகிறது. இதே செய்தியில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் கூறும்போது ,''யார் என்ன சொன்னாலும் ஏற்றுக்கொள்ளகூடிய பக்குவத்தில் ஒருவர் கூட இல்லை என்கிறார் ''.மிகச்சரி .ஒருவருக்கு அறிவுரை கூறும்போது நீங்கள் மேலானவர்களாகவும் பெறுபவர்கள் கீழேயும் இருப்பதை உறுதிப்படுத்துகிறது.
மனிதன் எது இல்லையென்றாலும் ஒப்புக்கொள்வான்,உனக்கு அறிவில்லைஎன்றால் வரக்கூடிய கோபத்தை கற்பனை செய்து பாருங்கள் .உண்மையாகவே அறிவில்லாமல் போவதை நீங்கள் காண முடியும் . உணர்ச்சிகள் ஆக்கிரமிக்கும்போது இயற்கையாக உள்ள சிந்திக்கும் திறனை இழந்து அறிவிலியாவது தவிர்க்க முடியாது போய்
விடுகிறது. அப்போது மனநலம் பயிற்சி பெற்ற ஒருவர் உதவ முடியும் .தனி மனிதன் ஒருவரை மோசமான வகையில் பாதிக்கச்செய்யும் அச்சம் ,கலக்கம் போன்ற உணர்ச்சிகள் பெருமளவு சிதைக்கும்போது மனநல ஆலோசனை உதவும் . வளர்ந்த நாடுகளில் இத்தகைய ஆலோசனை பிரபலம். சக மனிதனை மனிதனாக பார்ப்பதென்பதுமுக்கியமானது.பிச்சைக்காரர்கள் உழைப்பாளி,முதலாளி என பரிணாமம் பெறுவது தொடர் ஆலோசனை மூலம் சாத்தியமாகலாம்.
-

No comments: