Tuesday, November 2, 2010

குருப்பெயர்ச்சி முக்கியமானதா?

ஆண்டுதோறும் குருப்பெயர்ச்சி வந்துகொண்டே இருக்கிறது.விதம்விதமாக பலன் சொல்லும் புத்தகங்கள் வெளியிடப்பட்டு விற்பனையாகிக்கொண்டிருக்கிறது.இப்போதும் குரு பெயர்ச்சியாகிறார்.மீனத்திலிருந்து வக்ரகதியாக கும்பத்துக்கு வந்த குரு பகவான் மீண்டும் மீனத்திற்கு செல்கிறார்.அங்கே மே மாதம் முதல் வாரம் வரை இருப்பார்.கடந்த மே மாதத்திலிருந்தே மீனத்தில்தான் இருந்தார்.இப்போது மீண்டும் முந்தைய இடத்துக்கே செல்லும்போது பலன்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படும் என்பது உண்மையா?
சுபர்களில் வலிமையான குரு
நவகிரகங்களில் வலிமையையும்,சுபபலன்களை தருவதில் பேராற்றலும் பெற்றவர் குரு.புகழுடன் பெருமைப்படத்தக்க வாழ்வு குருவின் பலமின்றி அமையாது.அவர் இருக்கும் ஸ்தானமும் பார்வைகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை.தனது சொந்த வீட்டில் இருக்கும்போது அவருக்கு வலிமை அதிகமாவதோடு பலன்களும் வலிமையாகவே இருக்கும்.ஆனால் குரு மட்டுமின்றி அனைத்து கிரகங்களும் தங்களது பணியை செய்துகொண்டுதான் இருக்கும்.செவ்வாய்,சுக்கிரன்,சூரியன் ஆகியோர் இருக்குமிடத்தின் பலன்களுக்கு ஏற்றவாறு சுபபலன்கள் கூடவோ குறையவோ செய்யும்.குரு மீனத்தில் இருக்கும் காலம் முழுதும் சனி கன்னியில்தான் இருக்கிறார்.எனவே அடுத்து வரும் நான்கைந்து மாதங்கள் கடந்த மே மாதத்தில் இருந்து நீங்கள் அனுபவித்து வரும் பலன்களில் பேரளவு மாற்றங்கள் இருக்குமா என்பதை உங்கள் ஜனன கால ஜாதகம்தான் முடிவு செய்யவேண்டும்.
கோச்சாரமும் ஜனன ஜாதகமும்
நவகிரகங்கள் ஒவ்வொரு ராசிக்கும் இடம்பெயர்வது கோச்சாரம் எனப்படும்.சூரியன் ஓராண்டுகாலத்திற்கு பன்னிரண்டு ராசிகளை கடக்கிறார்.ஜனன கால ஜாதகத்தில் சூரியன் ஆட்சி ,உச்சம் பெற்றோ,கேந்திர,திரிகோணங்களில் நற்சாரம் பெற்று அமைந்தால் கோச்சாரத்தில் சூரியன் மாறுவது பற்றி அதிகம் கவலைப்படத்தேவையில்லை.திருமணத்திற்கு குருபலன் வேண்டும் என்பார்கள்.எனது நண்பன் ஒருவனுக்கு ஏழரை சனி, குரு பனிரெண்டில் இருக்கும்போது திருமணம் நடந்தது.அனுபவத்தில் கோச்சாரம் சந்திரனை அடிப்படையாக வைத்து கணக்கிடப்படுகிறது.எனவே,கோச்சார கிரக பெயர்ச்சிகளை மனதுக்கும் ,உடலுக்கும் தான் எடுத்துக்கொள்ளவேண்டும்.உதாரணமாக,எனது நண்பனின் திருமணத்தை ஜனனகால ஜாதகம் முடிவு செய்ய,கோச்சாரத்தில் குருவும்,சனியும் பல சங்கடங்களை உருவாக்கினார்கள்.வாழ்வின் முக்கிய நிகழ்வுகள் ஜனன கால ஜாதகப்படி நடக்கும்.
கவலை வேண்டாம்
குரு 2,5,7,9,11, ஆகிய இடங்களில் நற்பலன் தருவார்.நான்கு,பத்தாம் இடங்களில்மத்திம பலன் தருவார்.மற்றவர்களும் குருப்பெயர்ச்சி பற்றிய அதிக கவலை வேண்டாம். நம்பிக்கை உள்ளவர்கள் பரிகாரங்கள் செய்யலாம். குருவை வழிபடலாம்.குலதெய்வத்தை வணங்கலாம்.குரு உங்களை கைவிடமாட்டார்.கவலையின்றி தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்.
இத இதயங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள் ங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள் -

1 comment:

அஸ்ரோ இ.ஏ. மாரிசெட்டி said...

காலம் கருதி வெளியிட்டு உள்ளிர்
அருமை ......