Tuesday, January 11, 2011

திருப்பூர் குமரன்



உனது செந்நிறக் குருதியால்

புனிதமடைந்தது நம் தாய்மண்

கொடிக்காக இன்னுயிர்

மண்ணுக்காக ரத்தம்

பட்டொளிவீசி பறக்கிறது

நம் தேசியக்கொடி இன்று

உன் புகழைப் பரப்ப

புவியில் காற்றுள்ளவரை

உன் பெயரை ஒலித்துக்கொண்டிருக்கும்

நீ தாங்கிய கொடி

கருப்பாயி ஈன்ற மகன்

காலத்தை வென்ற நாளில்

வணங்குகிறேன்.
(நேற்று எழுதியது )

-