Thursday, January 20, 2011

சிறுத்தை-விகடனும் நானும்


வாரப்பத்திரிக்கை படிக்கத் தொடங்கிய நாளில் இருந்து ஆனந்த விகடனின் வாசகன் நான்.அதிக திரைப்படங்களை பார்க்கும் வழக்கம் எனக்கு இல்லை.விகடனின் சினிமா விமர்சனத்தை பார்த்துவிட்டுதான் பெரும்பாலான படங்களுக்கு சென்றிருக்கிறேன்.நானும் பிளாக்கில் எழுதும் முயற்சியை சில மாதங்களாக மேற்கொண்டு வருகிறேன்.

பொங்கலில் நேரம் கிடைத்த்தால் சிறுத்தை படம் பார்த்தேன்.எனக்கு பட்ட்தை நான்கு வரி எழுதி வைத்தேன்.விகடன் விமர்சனத்தோடு எனது வரிகளை ஒப்பிட்டு பார்த்த்தன் விளைவு இது.

விகடன்:

ஊரையே மிரட்டும் ரௌடிகள்,ஒடுங்கி வாழும் மக்கள் என 18-ம் நூற்றாண்டு பழங்கஞ்சியை,பட்டாக்கத்தி,வெட்டுக்குத்து மசாலா பூசிப் படைத்திருக்கிறார்.

நான்:

ஒரே ஓர் ஊர் .அதில் ஒரு வில்லன்,அவனுடைய தம்பி,மகன் எல்லாம் வில்லன்கள் ,அவர்களுடைய அட்டூழியங்கள்,கஞ்சா,மந்திரி தொடர்பு,அடி,உதை,அவனுக்கு பயந்த மக்கள்,வில்லன் வீட்டில் ஒருகுத்துப்பாட்டு ,நேர்மையான போலிஸ் இதெல்லாம் இன்னும் குழந்தைகள் தியேட்டரில் பார்த்திருக்க மாட்டார்கள்

விகடன்:

தம்மாத்தூண்டு இடுப்பைத் திரையில் சரித்துக்கொண்டே நிற்கும் ‘லைஃப்டைம் கேரக்டர் தமன்னாவுக்கு,மற்றபடி விசேஷம் இல்லை.

நான்:

தமன்னாவை கதாநாயகி வேண்டும் என்பதற்காவும்,பாட்டுக்காகவும்,இடுப்புக்காகவும்,கிளைமாக்சுக்க்காகவும் புக் செய்திருக்கிறார்கள்.

விகடன்:

சம்பவங்கள் இல்லாத முதல் பாதி முழுக்க ‘சந்தான சாம்ராஜ்யம்

நான்:

இப்போது தமிழ் சினிமா நகைச்சுவைக்கு சந்தான யுகம் போல் தோன்றுகிறது.

விகடன்:

முதல் முறையாக இரு வேடங்களில் கார்த்தி..............................................................வெளுத்துக்கட்டியிருக்கிறார்.

நான்:

கார்த்தி இரண்டு பாத்திரங்களில் ஜொலிக்கிறார்.திருடனாக,இலட்சியமுள்ள போலிஸ் அதிகாரியாக இருவேறு முகங்களில் நறுக்.

விகடன்:

சிங்கத்தை பார்த்து சிறுத்தை கற்றுக்கொள்ள வேண்டும்.மதிப்பெண்.-39/100

நான்:

.பொழுது போகவேண்டும்,பணமும் இருக்கிறது என்றால் தியேட்டருக்குள் நுழையலாம்.

நீயெல்லாம் விகடனோடு ஒப்பிட்டு பார்ப்பதா? என்று யாரும் தவறாக நினைக்க வேண்டாம்.இது சும்மா.


-

2 comments:

பத்மநாபன் said...

நானும் பதினாறு வயதினிலே காலத்திலிருந்து விகடன் விமர்சனம் படிப்பவன்...

உங்கள் விமர்சனத்தில் வரும் ரசனைகள் விகடனின் விமர்சன வரிகளுக்குள் வருவது சுவாரசியம்....

shanmugavel said...

இருபதாண்டு காலம் விகடன் விமர்சனத்தோடு சினிமா பார்த்து வந்தது காரணமாயிருக்கலாம்.நன்றி,பத்மநாபன்.