
செம்மொழியான தமிழ் மீது
பல தமிழ் சினிமாவை நின்றுகொண்டே பார்த்திருக்கிறேன்.உட்கார இடம் கிடைக்காது.இருக்கைகளின் அளவுக்கு தாண்டி டிக்கெட் கொடுத்து விடுவார்கள்.இரண்டரை மணி நேரமும் நின்றுகொண்டே படம் பார்க்கவேண்டும்.கீழே உட்கார நினைத்தாலும் இடம் இருக்காது.அதுவும் முதல் நாளன்று அப்படி ஒரு கூட்டம் இருக்கும்.
மிகப்பல ஆண்டுகளுக்கு முன்பென்று நினைக்கவேண்டாம்.தொண்ணூறுகளின் துவக்கத்தில்கூட இந்நிலை இருந்த்து.அப்புறம் வந்த்து திருட்டு சிடி யுகம்.தமிழ் சினிமாவை புரட்டிப் போட்டுவிட்ட்து.நூறு நாட்கள் என்பது சாதாரணமாக இருந்த நாட்கள் போய் இந்த ஆண்டு பன்னிரெண்டு படங்களே பார்த்திருக்கின்றன.
சினிமா டிக்கெட்டுகளின் விலையும் இப்போது வசதியானவர்களும்,காதலர்களும் படம் பார்க்க போகும் அளவுக்கு இருக்கிறது.சாதாரணமானவர்கள் திருட்டு சிடியில் குடும்பத்தோடு பார்த்துவிடுகிறார்கள்.செலவும் குறைவு.நினைத்த நேரத்தில் அணைத்துவிடலாம்.
சினிமாக்களுக்கு சென்று பாதியில் எழுந்து வந்த அனுபவம் எனக்கு இருக்கிறது.உட்காரமுடியாத அளவுக்கு தரத்துடன் அவை இருக்கும்.பணத்தையும் இழந்து நேரத்தையும் இழந்து வெறுத்து வெளியேறும் தர்மசங்கடம் திருட்டு சிடியில் இல்லை.இதனாலேயே மக்களின் ஆதரவு கிடைத்துவிட்ட்து.
கேபிள் சங்கர்,சி.பி.போன்றவர்கள் கஷ்டப்பட்டு சினிமாவை பார்த்து நமக்காக விமர்சனம் எழுதி நம்மையெல்லாம் ஆபத்திலிருந்து காப்பாற்றுகிறார்கள்.பிளாக்கில் படித்து விட்டு பல சினிமாக்களை தவிர்த்திருக்கிறேன்.சினிமா விமர்சன்ங்களுக்கு மனமார்ந்த நன்றி.
அடிக்க அடிக்க தாயிடம் ஓடும் குழந்தையை போல சினிமா மீதான கவர்ச்சி குறையவில்லை.எப்போதும் குறையாது.சினிமாவைப்போன்றுபிரபலமும் பணமும்வேறு எந்த தொழிலிலும் கிடைக்காது.குறைந்த முதலீட்டில் நல்ல படங்கள் எடுக்க முடியும் என்பதை பல நேரங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது.நன்கு திட்டமிட்டு உழைத்தால் நம்மாலும் சிகரத்தை தொட முடியும்.அதற்கு நம்மிடமே நல்ல உதாரணங்கள் இருக்கின்றன.வரும் புத்தாண்டு அதற்கான கதவுகளை திறக்கட்டும்.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
கடுமையான போட்டியில்!?நான் கூட இரண்டாம் கட்ட வாக்கெடுப்புக்கு வந்து சேர்ந்திருக்கிறேன்.சென்ற ஆகஸ்டு மாதத்திலிருந்துதான் பதிவுலகில் இருக்கிறேன்.எனக்கு நேரடியாக எந்த பதிவரையும் தெரியாது.(ஈரோட்டிற்கு செல்ல முடியவில்லை.)தமிழ்மணம் விருது அறிவிப்பை பார்த்தவுடன் கலந்துகொண்டால் நான்கு பேர் பார்வை படும் என்று நினைத்து பரிந்துரை செய்தேன்.
முதல் கட்ட வாக்கெடுப்பு துவங்கியவுடன் சில நாட்களில் மங்கை அவர்கள் எனது இடுகை ஒன்றிற்கு பின்னூட்டம் இட்டிருந்தார்.”அருமை.வாழ்த்துக்கள்.’-என்று.ஏதேது நாம் கூட கவனிக்கப்படுகிறோம் என்று சந்தோஷமாக இருந்த்து.மீண்டும் ஒரு முறை நன்றி! மங்கை அவர்களே!
தமிழகத்தின் பாரம்பரிய கலையான தெருக்கூத்து தொடர்பான நாட்டுப்புற நம்பிக்கைகள் பற்றியது.ரதி,மன்மதன் கதை.யாரையும் முட்டாளாக்கும் காமத்தை கட்டுப்படுத்துவது பற்றிய நம்பிக்கை அது.இடுகைத்தலைப்பு,
நெற்றிக்கண்ணால் எரிக்கப்பட்ட காம்ம்.
(தமிழிசை,நடனம்,தமிழ்கிராமியக்கலைகள்-பிரிவில்) கதைக்கு வருகிறேன்.போட்டியில் கலந்துகொள்ளும் எல்லா இடுகைகளையும் எத்தனை பேர் படித்து வாக்களித்து இருப்பார்கள்.?அப்படி யாராவது இருந்தால் அவருக்கு தரலாம் எல்லா விருதையும்!.நாலு பேருக்குக் கூட தெரியாமல் நான் எப்படி இரண்டாம் கட்ட வாக்கெடுப்புக்கு வந்தேன்?
யாரிடமும் சொல்ல மாட்டீர்கள் என்றால் அந்த ரகசியத்தை சொல்கிறேன்.வேறொன்றுமில்லை.அந்த்த் தலைப்பில் மொத்தம் எட்டு இடுகைகள்தான் முதல் கட்ட போட்டியில் இருந்த்து.எட்டும் இரண்டாம் கட்ட்த்துக்கு வந்து விட்ட்து.எனக்கும் வாக்களித்தவர்களுக்கும் வாக்களிக்கப் போகிறவர்களுக்கும் மிக்க நன்றி.