Saturday, January 29, 2011

வலைப்பதிவுகள்,பதிவர்கள் மற்றும் நான்

2008-ம் ஆண்டு குமுதத்தில் பிரபலமான வலைப்பதிவுகள் பட்டியல் போட்டிருந்தார்கள்.அதைப்பார்த்து விட்டு அந்த தளங்களுக்கு சென்றேன்.இட்லி வடை,பி.கே பி.ஆகியன.அவற்றைத்தான் படித்து வந்தேன்.பிறகு ஆனந்த விகடன் மூலமாக சில பதிவுகள் அறிமுகம்.டாக்டர் ஷாலினியின் பதிவுகள் போன்றவை.வேறு விபரங்கள் எனக்கு தெரியாது.இணையத்தில் இலவசமாக எழுத முடியும் என்றோ,யார் வேண்டுமானாலும் எழுதலாம் என்பதெல்லாம் தெரியாது.

ஒரு நாள் create blog மீது தொடப்போக நானும் ஒரு வலைப்பதிவை ஆரம்பித்துவிட்டேன்.ஒரு வருட்த்திற்கும் மேலாக அப்படியே கிடந்த்து.எப்போதாவது திறந்து பார்ப்பேன்.அவ்வளவுதான்.தமிழில் எழுத்முடியும் என்பது கூட தெரியாது.தலைப்பு ஆங்கிலத்தில் இருப்பது அதனால்தான்.கூகுள் ஒலிபெயர்ப்பு,மொழி பெயர்ப்பும் தெரியாது.

புதிய தலைமுறை இதழொன்றில் இ-கலப்பை பற்றி படித்தேன்.அதைத் தேடப்போய் ஒவ்வொன்றாக தெரிந்த்து.பதிவு எழுதி எப்படி மற்றவர்களை படிக்க வைப்பது என்று குழப்பம்.சொந்தமாக கணினியெல்லாம் கிடையாது.எல்லாமும் வெளியில்தான்.அதனால் அதிகம் வேறெதுவும் தெரியவில்லை.

தமிழ் பற்றி ஏதோ தேடிக்கொண்டிருக்கும்போது தமிழ்10 தளத்துக்குப் போனேன்.என்னவென்றே தெரியாமல் இ-மெயில் சந்தாதார்ராக பதிவு செய்தேன்.எனக்கு வந்த மெயிலை அடுத்த நாள் பார்த்தபோது பெரும்பாலானவை சினிமா செய்திகளாக இருந்த்து.சினிமா பார்ப்பேனே தவிர சினிமா செய்திகளில் அவ்வளவாக ஆர்வம் இல்லை.இன்றைய பிரபலமான செய்திகள் என்றிருந்த்து.ஏதோ சினிமா பற்றிய இணைய இதழ் என்று கருதி விட்டுவிட்டேன்.மெயிலை திறந்து கூட பார்ப்பதில்லை.

பொழுது போகாமல் ஒரு நாள் தமிழ்10 மெயிலை பார்த்தேன்.உங்கள் பிளாக்கில் திருக்குறள் விட்ஜெட் சேர்ப்பது எப்படி என்று செய்தி.ஆமாம்.வந்தேமாதரம் ச்சிக்குமார்தான்.அங்கிருந்து வந்தேமாதரம் போனவன் இதையெல்லாம் எழுதிக்கொண்டிருக்கிறேன்.திரட்டி பற்றியெல்லாம் பிறகுதான் தெரிந்து கொண்டேன்.

உலவு திரட்டியில்தான் முதல்முதலாக பதிவு செய்தேன்.தமிழ்மணம்,இண்ட்லி யெல்லாம் பின்னர் இணைத்தேன்.என்னுடைய பயனர் பெயர் உலவு திரட்டியில் வேலை செய்யவில்லை.ஓட்டுப்பட்டை பற்றிகூட தெரியவில்லை.பதிவுகளை நேரடியாக இணைத்தேன்.

முதன் முதலாக ‘ஒரு சிறிய புத்தகம்என்று பாரதியார் புத்தகம் பற்றி ஒரு பதிவு.அதற்கு முதல் கருத்துரை இட்டவர்,கேபிள் சங்கர்.என்னுடைய அதிர்ஷ்ட்த்தை என்னவென்று சொல்வது? தமிழின் முதன்மையான பதிவர் என்னுடைய முதல் பதிவுக்கு மறுமொழிதொடர்ந்து எழுதுங்க நண்பரே

தினமணி சில பதிவுகளை முதல் பக்கத்தில் வெளியிட்டு எனக்கு அங்கீகாரம் வழங்கியது.முதலில் பிந்தொடர்ந்தவர் பிரஷா.இரண்டாவதாக வந்தவர் காணாமல் போய் விட இப்போது இவ்வளவுதான்.சராசரியாக ஒரு கருத்துரையும் இரண்டு வாக்குகளும் கிடைத்து விடுகின்றன.

ஆங்கிலப் புத்தாண்டு காலை மெயிலை திற்ந்தால் அங்கித வர்மா விருது அனுப்பியிருந்தார்.பாண்டிச்சேரி வலைப்பூவின் அறிமுகத்தவம் சஞ்சிகையில் எனது முகம் மாறிப் போன தமிழ் சினிமா பதிவை மறு பிரசுரம் செய்திருந்தார்.உடல்நலக் குறைவு காரணமாக இப்போது இயங்கவில்லை.அவர் நலமாகி மீண்டும் பதிவில் பங்கேற்க வேண்டும் என வேண்டுகிறேன்.

செய்வதை சுத்தமாக செய்யவேண்டும் என்றே நினைக்கிறேன்.அதிகம் வாசிக்க முடியாத நிலை இருக்கிறது.கிடைக்கும் நேரத்தில் பதிவு எழுதவே சிரம்மாக இருக்கிறது.பதிவுலகில் என்ன நடக்கிறதென்றே தெரியாமல் நானும் சமூகத்தில் இருக்கிறேன்.முன்னணி பதிவர்கள் பலரை இன்னும் படிக்கவில்லை.பல பதிவர்களுக்கு உள்ள சமூக அக்கறை எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.பெருமையாகவும் இருக்கிறது.

-

8 comments:

THOPPITHOPPI said...

எழுதுங்க சார் நான் தினமும் உங்கள் பதிவை படித்துக்கொண்டுதான் இருக்கிறேன் பின்னூட்டம் இடாமல் இருந்தது விட்டேன். பிறரை ஊக்குவிக்க மறந்துவிட்டேன்.

நான் தினமும் படிக்கும் லிஸ்ட்டில் நீங்களும் இருக்குறீங்க

http://thoppithoppifollows.blogspot.com/

மதுரை சரவணன் said...

அருமை நண்பரே...பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்

தங்கராசு நாகேந்திரன் said...

இன்னும் எழுதுங்க எழுத எழுத எல்லாம் கைகூடும்

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

சரிதான் நண்பரே பதிவுலகில் இப்படியே இருந்துவிடப் போகிறீர்களா? முன்னேறும் ஐடியா இல்லையா? சரி இப்போது நான் உங்களுக்கு ஓட்டு போடுகிறேன்! follower ஆகவும் வருகிறேன்! நீங்களும் பதிலுக்கு ஓட்டுப் போடவேண்டும்! கமெண்டும் போடவேண்டும்!



நான் இன்றுதான் உங்களுக்கு முதல் தடவையாக ஓட்டுப் போடுகிறேன் என்று நினைக்க வேண்டாம்! முன்பு சில ஓட்டுக்கள் போட்டிருந்தேன்! நீங்கள் கண்டு கொள்ளவில்லை! அதனால் இன்டிலியில் உங்களை block செய்திருந்தேன்! இப்போது unblock செய்து விட்டு ஓட்டுக்கள் போடுகிறேன்! என்னுடன் நட்புக்கு வந்தால், நானும் நட்புடன் இருப்பேன்!!

துளசி கோபால் said...

அட! நல்வரவு!

இப்போதாங்க உங்க வலைப்பக்கம் பார்த்தேன். எல்லோரையும் போல முட்டி மோதித்தான் வந்துருக்கீங்க!!!

இனி எல்லாம் சுகமே தான். தொடர்ந்து எழுதுங்க.

பலதரப்பட்ட விஷயங்களையும் கருத்துக்களையும் இங்கே வலைப்பதிவுகள் மூலம் தெரிஞ்சுக்க ஆவலாக இருப்போர்களில் நானும் ஒருத்தி.

shanmugavel said...

அனைவருக்கும் நன்றி.அவசரமாக சென்னை சென்று விட்டேன்.
தொப்பி தொப்பி மீண்டும் முனைப்புடன் எழுத வேண்டும் என்பது என் வேண்டுகோள்.
மாத்தி யோசி நிறைய யோசிக்க வைத்து விட்டீர்கள்.உங்கள் பதிவுகள் நன்றாக உள்ளன.சரியாக நெட் கிடைக்க வில்லை.நாம் ஒன்றிணைவோம்.
மிக்க நன்றி உண்மைத்தமிழன்,மதுரை சரவணன்,துளசி கோபால்.
தமிழ்ச்சரம் என்னுடைய மெயிலுக்கு வந்துகொண்டிருக்கிறது.வாழ்த்துக்கள்.நாளை முதல் வாசிக்கவென நேரம் ஒதுக்க முடிவு செய்திருக்கிறேன்.மீண்டும் நன்றி நண்பர்களே.

ஜோதிஜி said...

கொம்பு முளைக்காத எதார்த்த எழுத்துக்கு சொந்தக்காரர். நிறைய எழுதுங்க.

shanmugavel said...

தங்களைப் போன்றவர்களின் வாழ்த்துக்கள்தான் என்னை இயக்கிக் கொண்டிருக்கிறது.நன்றி ஜோதிஜி