Showing posts with label Dreams. Show all posts
Showing posts with label Dreams. Show all posts

Friday, July 15, 2011

கனவில் பாம்பைக்கண்டால் நல்லது நடக்குமா?


                                   ஒருவர் பாம்பைக்கனவில் கண்ட்தாக கூறினார்.அது நல்லதல்ல என்றார் பக்கத்தில் இருந்தவர்.பெண்களால் துன்பம் வரும் என்று இன்னொருவர் சொன்னார்.எனக்குத்தெரிந்து கனவில் பாம்பைக்காண்பது பாலியல் ஆர்வத்துடன் தொடர்புபடுத்துவதை படித்திருக்கிறேன்.பல சமூகத்திலும் இது பொதுவான ஒன்றாக இருக்கலாம்.

                                   பாம்பை நேரில் பார்த்தால் கஷ்டம் வரும் என்று கிராமங்களில் நம்புகிறார்கள்.எப்போதும் கலகலப்பாக இருக்கும் ஒரு நண்பர் வீட்டின் முன்பு சோகத்துடன் அமர்ந்திருந்தார்.என்ன ஆச்சு?என்று கேட்டேன்.வீட்டுக்குள் பாம்பு நுழைந்து விட்ட்து! பாம்பு பிடிப்பவர்களை அழைத்து வந்து பார்த்தால் போய்விட்டிருக்கிறது.ரொம்ப பயமாய் இருக்கிறது.அதுதான் போய்விட்ட்தே? என்ன பயம் என்றேன்? அவர் தொடர்ந்தார்.

                                    ஏதாவது கெட்ட்து நடந்துவிடுமோ என்றுதான் பயம்.எங்கள் ஊரில் ஒரு லாரியில் பாம்பு ஏறிவிட்ட்து.அந்த லாரி தொடர்ந்து மூன்றுமுறை விபத்துக்குள்ளாகி ஓனர் பெரும் கடனாளி ஆகிவிட்டார்.இன்னொரு வீட்டில் பாம்பு நுழைந்த்து.ஒரு பெண் கேன்சர் வந்து இறந்துவிட்டார்.அவர் அடுக்கிக்கொண்டே போனார்.மனம் அப்படித்தான் கெட்ட்தையே தொடர்புபடுத்தும் என்று அவருக்கு ஆலோசனை சொல்லிவிட்டு வந்தேன்.சில தின்ங்களிலேயே காலி செய்து கொண்டு போய்விட்டார்.

                                       கிராமங்களில்ஏராளமான நம்பிக்கைகள்இருக்கின்றன.உழவர்கள் ஆண்டுதோறும் பாம்புப் புற்றுக்கு பொங்கல் வைத்து படைப்பார்கள்.அப்படி படைத்தால் பாம்பு கண்ணுக்கு தெரியாதாம்.நல்ல பாம்பை அடித்தால் மட்டும் கிராமங்களில் சடங்கு செய்வார்கள்.பாம்புக்கு மஞ்சள் துணி சுற்றி புற்றில்விட்டு வணங்குவார்கள்.சிலர் நல்ல பாம்பை மட்டும் அடிக்கமாட்டேன் என்பார்கள்.வெள்ளிக்கிழமை அடிக்க மாட்டேன் என்று சொல்வோர் உண்டு.மனிதன் எதையெல்லாம் கண்டு பயந்தானோ அதையெல்லாம் கடவுளாக்கினான் என்று படித்தேன்.பாம்பு வழிபாடு எல்லா இட்த்திலும் இருப்பதுதான்.

                      ராகு,கேது என்று நவகிரகங்களிலும் இரண்டு பாம்பு கிரகங்கள் உண்டு.ராகுவுக்கு உடல் பாம்பு.கேதுவுக்கு தலை பாம்பு.பாற்கடலை கடைந்து தேவர்களுக்கு வழங்கியபோது அசுரன் தேவனாக உருமாறி அமுதம் உண்ண வரிசையில் உட்கார்ந்துவிட்டான்.சந்திரனுக்கும்,சூரியனுக்கும் இடையில் அமர அவர்கள் தெரிந்து திருமாலிடம் சொல்லி விட்டார்கள்.அமுதம் பரிமாறிய திருமால் கண்டுபிடித்து சக்கரத்தால் தலையை கொய்துவிட்டார்.தலை வேறு உடல் வேறாகிவிட்ட்து.

                               மகாவிஷ்ணுவை நோக்கி தவம் இருந்து பாம்பின் உடலுடன் ராகுவும்,தலையுடன் கேதுவும் கிரக பதவி பெற்றார்கள் என்கிறது சாத்திரங்கள்.ராகு,கேது தோஷம் என்பது திருமணத்திற்கு,இல்லறத்திற்கு தீங்கானதாக சொல்லப்பட்டிருக்கிறது.திருப்பதி அருகில் உள்ள காளஹஸ்தி,திருநாகேஸ்வரம் போன்றவை புகழ்பெற்ற பரிகார ஸ்தலங்கள்.

                               பாரதி பாடல்களில் பாம்பு தீமையின் குறியீடாக பல இடங்களில் குறிப்பிட்டிருக்கிறார்.பாரதியும் ஷெல்லியும்நூலை எழுதிய தொ.மு.சி.ரகுநாதன், இருவரும் பாம்பை பயன்படுத்தியிருப்பது பற்றி ஒப்பிட்டு எழுதியுள்ளார்.பாம்புக்கு பால் வார்ப்பது என்பார்கள்.எல்லா இடங்களிலும் அரவம் கெட்ட விஷயங்களோடு தொடர்புபடுத்தியே இருக்கிறது.

                                பெரும்பாலான பாம்புகளை நான் நேரில் பார்த்திருக்கிறேன்.ஒவ்வொரு முறையும் இதய படபடப்பு நிற்க வெகுநேரமாகும்.படையும் நடுங்கும்போது நான் மட்டும் எம்மாத்திரம்?பாம்பு கடித்து இறப்பவர்கள் இன்னும் உண்டு.மருத்துவமனை சென்று சேர தாமதமாவதே காரணம்.பல இடங்களில் பாம்புக்கும் கீரிக்கும் சண்டை விடுகிறேன் என்பார்கள்.கூட்டம் கூடி நிற்கும்.ஆனால் ஒருமுறை கூட சண்டை நடந்து நான் பார்த்த்தில்லை.
-

Sunday, June 26, 2011

தூக்கத்தில் வரும் கனவுகள் பலிக்குமா?

என் பாட்டி ஒருவரிடம் உறவுக்கார அண்ணன் ஒருவன் கூறினான்."அந்த பெண்ணுடன் எனக்கு கல்யாணம் ஆவது போல கனவு கண்டேன்". பாட்டியின் மறுமொழி "அது கனவில்லை உன் நெனப்பு " அண்ணா பதில் பேசவில்லை.அதே பாட்டியுடன் ஒரு நாள் பயணம் செய்து கொண்டிருந்தேன்.பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஒரு அம்மாள் சொன்னார்,''சுவர் இடிந்து விழுவதுபோல க்கனவு கண்டேன் என்னவென்று தெரியவில்லை.பாட்டி சொன்னார் "உங்கள் வீட்டில் யாருக்காவது உடல்நலம் இல்லையா? ஏதாவது கெட்ட சம்பவம் நடந்தாலும் நடக்கும்''.

                                                                     இதை நான் வித்தியாசமாக உணர்ந்தேன்.அதன் பின்னர்கனவுகள் பற்றி  ஏராளமான கிராமப்புற நம்பிக்கைகள் இருப்பதை தெரிந்து கொண்டேன்.அழுத்தமான கனவுகள் காணும்போது பெரியவர்களிடம் விவாதிப்பதை ஒரு வழக்கமாக கொண்டிருந்தார்கள்.



                                                               பஞ்சாங்கங்
களில் கனவுகள் பற்றி கூறப்பட்டுள்ளன.கனவுகளுக்கு பலன்கள் சொல்லும் கட்டுரைகளும்,புத்தகங்களும் நிறைய உண்டு.இவையெல்லாம் மரபு சார்ந்தவை.அறிவியல் பூர்வமான அணுகுமுறை அல்ல! இதில் மூத்தவர் சிக்மன்ட் பிராய்ட் .உலகம் போற்றும் ,உலகின் கண்களைத்திறந்த உளவியல் அறிஞர் .ஒருவரது மனதில் உள்ள ஆசைகளும் ,ஏக்கங்களும் கனவுகளாக வரலாம்.துவக்கத்தில் பாட்டி சொன்ன மாதிரி.

                                                               ஆழ மனதில் பதிந்திருப்பவை கனவுகளாக வெளியேறி விடுகின்றன.வாழ்க்கையில் ஏற்பட்ட அதிர்ச்சியான சம்பவங்கள் கனவுகளாக சிலருக்கு தொடர்ந்தது வந்துகொண்டிருக்கும்.அவர் மனம் பாதிக்கப்பட்டு இருப்பதன் அறிகுறி இது.வாழ்வில் தீர்க்க முடியாத பிரச்சினைகளை கனவில் கண்டவர்கள் உண்டு! 



                                                               தையல் மெஷினை வடிவமைத்த சிங்கர் கனவு கண்டே மெஷினை இறுதி செய்தார் என்பதை படித்திருக்கிறேன்.இதுவும் உங்கள் நனவின்றியே இயங்கும் மனதின் வேலைதான்.தூக்கத்திலும் சிந்தித்து கனவாய் வெளிப்பட்டு விடுகிறது.வேறு சில உதாரனங்களும் இருக்கின்றன.தொலைந்துபோனதை கனவில் பார்த்து கண்டெடுத்தவர்கள் உண்டு.

                                                                 கிராமத்து தேநீர் கடையில் அமர்ந்து கொண்டிருந்தேன்.பேருந்து விட்டு இறங்கி வந்த பெரியவர் கேட்டார்.இங்கே கிருஷ்ணன் இருக்கிறாரா? அவருக்கு எண்பது வயது இருக்கும்.எந்த கிருஷ்ணன்? இன்ன சமூகத்தை சேர்ந்தவர்.நான்தான் என்று அவர் எழுந்து வந்தார்.பெரியவர் கடவுளே என்று வானத்தை நோக்கி கும்பிட்டார்.பெரியவர் பிறகு சொன்னது அங்கே இருந்த எல்லோருக்கும் ஆச்சர்யம்.



                                                                 கோயில் கட்ட எண்ணியதாகவும் ,இரவு கனவில் தேவதை வந்து ஊர் பெயரை சொல்லி அங்கே சென்று டீக்கடையில் கிருஷ்ணன் என்ற பெயர் சொல்லி கேட்குமாறு கட்டளையிட்டதாக கூறினார்.பக்கத்து மாவட்டத்தை சார்ந்தவர் அவர்.இருவரும் இதற்கு முன்பு சந்தித்ததில்லை.சிலர் அந்த பெரியவருக்கு யாராவது சொல்லியிருப்பார்கள் என்றார்கள்.பெரியவரை பார்த்தால் பொய் சொல்கிற ஆளாக தெரியவில்லை என்றார்கள் சில பேர்.

                                                                 எப்படியோ தினமும் இரவுகளில் கனவு கண்டுகொண்டுதான் இருக்கிறோம்.பெரும்பாலான கனவுகளும் சிம்பாலிக்காகவே வரும் என்கிறார்கள்.நேரடியாக இருக்காது.உதாரணமாக நீங்கள் யாரையாவது காதலிக்க முடிவு செய்தால் உங்கள் கனவில் விஜயோ,அஜீத்தோ டூயட் பாடுவதுபோல கனவு வரலாம்.
-