+2 தேர்வு முடிவுகள்
மே ஒன்பதாம் தேதியன்று வெளியாகிறது.மாணவர்கள் உள்ள குடும்பங்களில் இன்னும் பத்து நாள்,பனிரெண்டு
நாள் என்று சுவற்றில் எழுதாத குறைதான்.``எவ்வளவு மார்க் வரும்`` என்று நூறுதடவையாவது
கேட்டு விட்டிருப்பார்கள்.மன அழுத்தம் கூடி பசிகூட மறந்துபோகும்.தேர்வு எழுதியவர்கள்
கலக்கத்தில் சுற்றிக்கொண்டிருப்பார்கள்.
Showing posts with label கல்வி. Show all posts
Showing posts with label கல்வி. Show all posts
Friday, April 25, 2014
10,+2 தேர்வு முடிவுகள்-ஆலோசனை தேவை.
லேபிள்கள்:
+2 தேர்வு,
Exam results,
அனுபவம்.counselling,
கல்வி,
சமூகம்,
பெற்றோர்,
மாணவர்கள்
Wednesday, July 20, 2011
உங்களுக்கு ஜலதோஷம் பிடித்திருக்கிறதா?
சளி பிடித்த்தோ சனி பிடித்த்தோ என்று
சொல்வார்கள்.இரண்டும் அவ்வளவு சீக்கிரம் நம்மை விட்டுப்போகாது என்பது நிஜம்.சனி
நீண்ட காலம் ஒரு ராசியில் இருக்கும் கிரகம்.ஜலதோஷமும்,மருந்து சாப்பிட்டால் ஒரு
வாரத்திலும் மருந்து சாப்பிடாவிட்டால் ஏழு நாட்களிலும் குணமாகும் என்பார்கள்.இது
ஒரு வகை வைரஸ் தொற்று.(ரினோ வைரஸ்).பல்வேறு வைரஸ் நோய்களுக்கு மருந்து இல்லாத்து
போலவே சளிக்கும் மருந்து கிடையாது.தலைவலி,சோர்வு,மூக்கில் ஒழுகுதல்,தொண்டையில்
புண் ,தும்மல் போன்றவை இருக்கும்.தலைவலி போன்ற அறிகுறிகளை குறைக்க
பாரசிட்டமால்,மூக்கில் ஒழுக ஆண்டி ஹிஸ்டமின்,இரண்டாவதாக தொடரும் தொற்றுக்களுக்கு
ஆண்டிபயாடிக் மாத்திரைகளும் பரிந்துரைக்கப்படுகின்றன.போதுமான ஓய்வும்,திரவ
ஆகாரங்களும் அதிகம் எடுக்க வேண்டும் என்று சொல்வார்கள்.
உடல்நலம்.
இதில்
மனநலமும் சேர்ந்த்துதான்.சுவறை வைத்துத்தானே சித்திரம் எழுத முடியும்.ஆரோக்கியம்
இல்லாத மனிதன் வாழ்க்கையில் எத்தனை அடைந்து என்ன பயன்? சாதாரண தலைவலியிலிருந்து
கொடுமையான புற்று வரை எத்தனை விதமான நோய்கள்.சில இன்னொருவரிடமிருந்து
தொற்றுகிறது,சில பரம்பரையாக,உடல் இயக்க மாறுபாட்டால் வருகிறது.மனிதன் வலிந்து
தேடிக்கொள்பவை என்று எத்தனை வியாதிகள்,எவ்வளவு மருந்துகள்.உடல் நலம் குறித்து பல
பதிவுகளை பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.தொடர்ந்து அதைச்செய்யும்
எண்ணமிருக்கிறது.இரண்டு நாட்களாக கடுமையான ஜலதோஷத்தால் பதிவு போட முடியாமல்
போனது.ஆரோக்கியத்தை விட முக்கியமான ஒன்று இருக்கிறது என்பவர்கள் சளி பிடிக்குமே
அப்போது சொல்லுங்கள்!
உறவுகள்.
குடும்பம்,சுற்றம்,நட்பு
அனைத்தையும் சேர்த்துக்கொள்ளலாம். பிறப்பு முதல் இறப்பு வரை எல்லா சடங்குகளிலும்
உறவுகளுக்கு முக்கியத்துவம் தந்தார்கள்.இதை பங்காளிகள் செய்ய வேண்டும்,இதை மாமன்
மச்சான் செய்ய வேண்டும் என்று பிரித்தார்கள்.முக்கியமான நேரங்களில் உறவுகளின்
ஆதரவும்,ஆறுதலுமே அவசிய தேவை.உறவுகளுக்காக சிலவற்றை விட்டுக்கொடுக்கலாம்.மனிதனின்
மகிழ்ச்சிக்கும்,வெற்றிக்கும் உறவுகளே அடிப்படை.இதன் முக்கியத்துவம் பல இடங்களில்
திருக்குறளில் இருக்கிறது,படியுங்கள்.இவை பற்றியும் சில பதிவுகளை தந்திருக்கிறேன்.
கல்வி.
கண்ணுடைய ரென்பவர் கற்றோர்
முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்
கண்
இல்லாவிட்டாலும் கற்றவராக இருப்பின் கண்ணுடையவர்கள் ஆவார்கள்.கல்வி இல்லாதவருக்கு
கண் இருந்தாலும் அதுபுண் தான்.பிறந்தாகி விட்ட்து.உலகத்தைப்பார்க்க கல்வி
வேண்டும்.வேலை தேடுவதற்குத்தான் கல்வி என்ற பொருள் பிழையானது.இதன் பெருமைகளையும்
பெரியவர்கள் சொல்லிவிட்டார்கள்.எதையும் தெரிந்து கொள்ளாமல் செத்துப்போவது போன்ற
கொடுமை வேறில்லை.உண்மையான கல்வி பாடப்புத்தகத்திற்கு வெளியே இருக்கிறது என்று
சொன்னார்கள்(யாரென்று நினைவுக்கு வரவில்லை).மனிதன் தன்னை மேம்படுத்திக்கொள்ள
இறைவன் கொடுத்த வரம் புத்தகம் என்று ஒரு இடுகையை பகிர்ந்திருக்கிறேன்.
சங்கர்
குருசாமி இறை பக்தியும்,தேசப்பற்றும்,என் மீது அன்பும் வைத்திருக்கும் பதிவுலக
நண்பர்.முத்தான மூன்று என்று தொடர் சங்கிலி பதிவு எழுதவேண்டுமென்று
சொல்லிவிட்டார்.அதன் பொருட்டு வாழ்க்கைக்கு அவசியமான மூன்று முத்துக்கள்.
லேபிள்கள்:
cold,
education,
health,
relationship,
அனுபவம்,
உடல்நலன்,
உறவுகள்,
கல்வி,
சமூகம்,
திருக்குறள்,
ஜலதோஷம்
Monday, June 20, 2011
படிப்புக்கும் பண்புக்கும் ஏன் இவ்வளவு வித்தியாசம்?
அவன் போதையில் இருந்தான்.சுற்றி ஒரு கூட்டம்.பச்சை நிறத்தில் ஏதோ ஒரு பாக்கெட்டை பிரித்து நாக்குக்குக்கீழே வைத்துக்கொண்டான்.’இவருக்குக் கீழே முப்பதுபேர் வேலை செய்கிறார்கள்’ என்றார் அறிமுகப்படுத்தியவர்.கை குலுக்க நீட்டியபோது எனக்கு தயக்கமாக இருந்த்து.வேறு வழியில்லாமல் கை குலுக்கிய பின் தன்னுடைய விசிட்டிங் கார்டை எடுத்து நீட்டினான்.மூன்று பட்டங்களும்,மூன்று பட்டயங்களும்(diplamo) அவனது பெயரின் பின்னால் இருந்தன.
செல்போனை எடுத்து யாருக்கோ போன் செய்தான்.” மிஸ்டுகால் கொடுத்தா கூப்பிட மாட்டாளா அவ!? அவ எப்படி வேல செய்றான்னு பார்க்கறன்” “ விடாதீங்க பாஸ்’’ என்றார்கள் உடன் இருந்தவர்கள்.”சரி நீங்க கிளம்புங்க” என்று சற்று தூரம் நகர்ந்து போனார்கள்.அறிமுகப்படுத்திய நண்பர் அவனைப்பற்றி பேச ஆரம்பித்தார்.”
நிறைய படித்திருக்கிறான் என்று சொல்லி வேலை கொடுத்தார்கள்.எப்போதும் குடித்துவிட்டு பெண்களை கலாட்டா செய்துகொண்டு.....கொடுமை.ஒரு வேலையும் செய்யமாட்டான்.இரவு முழுக்க குடித்துக் கொண்டிருந்துவிட்டு படுத்தால் பகல் பன்னிரண்டு மணிக்கு தூங்கி எழுவான்.இது ஒரு தற்காலிக பணி.அதனால் மேலிட்த்திலும் அதிகம் கண்டு கொள்வதில்லை.வேறு மாவட்ட்த்தில் உள்ள வீட்டுக்கும் போவதில்லை.”
நான் மீண்டும் அந்த விசிட்டிங் கார்டை ஒருமுறை பார்த்தேன்.சமூக சேவைக்காக படித்திருந்தான்.மற்ற படிப்புகளும்.எதை சமூக சேவை என்று சொல்லிக் கொடுத்திருப்பார்கள் என்பது புரியவில்லை.பட்டங்கள் பெற்ற அவன் கற்ற கல்வி ஏன் அவனை குறைந்த பட்சம் மனிதனாக கூட மாற்றவில்லை?சேவை செய்வது கிடக்கட்டும்,தன்னளவில் யாருக்கும் தீங்கிழைக்காத ஒரு மனிதனாக்க் கூட உருவாக்க முடியாத கல்வியால் என்ன பயன்?
உலகெங்கும் பொருள் சார்ந்த கலாச்சாரம் வளர்ந்த அளவுக்கு பொருளற்ற கலாச்சாரம்(Non Material culture) வளரவில்லை.புதுப்ப்து அறிவியல் கண்டு பிடிப்புகள் மனிதனின் வாழ்க்கையை எளிமையாக்கின.மனம் மட்டும் குப்பையாக அப்படியே கிடக்கிறது.அது வளரவேயில்லை.மனம் வளர்வதற்கு தேவையான எந்த திட்டமும் ,பாடமும் நம்மிடம் இல்லை.
மனிதனிடம் நல்ல குணங்களை உருவாக்குவதில் கல்விக்கு எந்த பங்கும் இல்லை.மனப்பாடம் செய்து பக்கங்களை நிரப்புவதும்,விடைத்தாள்களின் கனத்தை பார்த்து மதிப்பெண் வழங்குவதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.கற்பனை ஆற்றலுக்கும்,சிந்திக்கும் திறனுக்கும் இங்கே இடமில்லாமல் இருக்கிறது.
கல்வியாளர் ஒருவரிடம் இதைப்பற்றி கேட்டபோது அவர் கூறியது, “ இந்தியாவில் எண்ணும் எழுத்தும் கற்றுக்கொள்வதே இன்னும் நூறு சதவீதம் ஆக்கமுடியவில்லை.நீங்கள் சொல்வது அடுத்த கட்டம்.அடுத்தடுத்து அவையும் வரும் என்று நம்புகிறேன்.மற்ற நாடுகளை விடவும் இந்தியாவுக்கு த்த்துவம் சார்ந்த பாரம்பர்யம் அதிகம் இருக்கிறது.ஆனால் அதற்கான முயற்சிகளை தொடங்க வேண்டிய நேரம் இது”
தனி மனிதனுக்கும்,சமூகத்திற்கும் அமைதியை வழங்கும் ஆற்றல் பெற்ற கல்வியே நமது தேவை.மனதில் அன்பையும்,மலர்ச்சியையும் உருவாக்கும் திறன் படைத்த கல்வியை அடையாளம் காண வேண்டிய தருணம் இது.
லேபிள்கள்:
CULTURE,
Education system,
Material culture,
Non Material culture,
அனுபவம்,
கல்வி,
சமூகம்
Subscribe to:
Posts (Atom)





