Tuesday, December 23, 2014
நாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு
Tuesday, March 22, 2011
பாலியல்,பெண் மற்றும் சமூகம்
Sunday, February 6, 2011
வக்கிர ஆண்களால் பெண்கள் படும்பாடு

இன்றைய சூழலில் பணியிடங்களில் ஆண்,பெண் இருபாலரும் நட்புடனோ,நட்பின்றியோ பழகுவது தவிர்க்க முடியாத ஒன்று.உடன் பணி புரிகிறவர்கள் அத்தனை பேரும் நல்ல குணத்துடன் இருப்பார்கள் என்பது சாத்தியமல்ல.வக்கிர ஆண்களிடம் சரியான விழிப்புணர்வின்றி அல்ல்ல்படும் பரிதாபம் பெண்கள் மட்டும் எதிர்கொள்ளும் பிரச்சினை.
பெண்ணுக்கு திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகியிருந்த்து.புதிதாக பணிக்கு சேர்ந்தார்.ஏழெட்டு பேர் மட்டும் பணிபுரியும் இடம்.இரண்டுபேர் மட்டும் பெண்கள்.புதிய ஊர்.பல தகவல்கலுக்கு யாருடைய உதவியாவது தேவைப்படும் சூழ்நிலை.அலுவலகத்தில் இருப்பவர்கள்தான் இத்தகைய நிலையில் உதவ முடியும்.
அலுவலகத்தில் பணிபுரியும் சக ஊழியன் ஒருவன் தாராள குணத்துடன் இருந்தான்.அவளுடைய அதிர்ஷ்டம் பலருக்கும் ஓடி ஓடி உதவிகள் செய்தான்.எல்லா தகவல்களும் அவனிடம் இருந்த்து.அவனுடைய உதவியால் புதிய இட்த்து வாழ்க்கை மிக எளிதாக இருந்த்து.அவளது கணவனுடனும் நண்பனாகி விட்டான்.
சிறிது காலம் கழித்து அவனது நோக்கம் வேறாக இருப்பது அந்தப் பெண்ணுக்கு புரியத் துவங்கியது.அலுவலகத்தில் இருந்த இன்னொரு பெண்ணும் அதை உறுதி செய்தார்.நோக்கத்தை தெரிந்து கொண்டபின் கொஞ்சம் கொஞ்சமாக விலகத் தொடங்கவே அவன் எல்லா உதவிகளையும் நிறுத்தி விட்டான்.நிறைய ஆவணங்கள் வேறு அவனிடம் மாட்டிக் கொண்ட்து.
கணவனை விட்டு போன் செய்தால் போனை எடுக்காமல் போக்கு காட்டினான்.சக ஊழியரை விட்டு கேட்டபோது ’’நான் நிறைய செலவு செய்திருக்கிறேன் அந்த பணத்தை கொடுத்தால் கொடுத்து விடுகிறேன்.’’என்றான்.ஒரு வழியாக பணத்தை கொடுத்து எல்லா ஆவணங்களையும் திரும்ப வாங்கினார்கள்.
ஏமாற்றம் கோபம், ஆத்திரம் போன்றவற்றை ஏற்படுத்தி விடுகிறது.அவனுக்கும் அப்படியே.கோபத்தை வேறு வகையில் திருப்பினான்.அந்த பெண்ணைப் பற்றி அவதூறாக பல இடங்களில் பேச ஆரம்பித்தான்.இன்னமும் பேசிக்கொண்டிருக்கிறான்.இனியும் பேசுவான்.
திருமணமாகாத பெண்கள் என்றால் இம்மாதிரியான சூழலில் கூடுதல் பிரச்சனை.மாப்பிள்ளை வீட்டார் பெண்ணைப் பற்றி அலுவலக ஆட்களிடம் விசாரிக்க வந்தால் வக்கிர ஆண்கள் பேசுவது வேறுமாதிரி இருக்கும்.இது போன்ற காரணங்களுக்காக திருமணம் தடை பட்ட பெண்களும் இருக்கிறார்கள்.
சில பெண்கள் இத்தகைய ஆண்களின் நோக்கம் தெரிந்தே விளையாட்டாக பழகுவதுண்டு.மிரட்டினால் ஓடிப்போய்விடுவார்கள் என்று நினைப்பதுதான் காரணம்.ஆனால் ஆணின் ஆசை நிராசையாகி ஏமாற்றப்படும்போது விளைவுகள் பெண்ணுக்கு எதிராகவே முடியும்.அவதூறு பரப்பலாம்,சில கற்பழிப்பு வரை கூட செல்ல்லாம்.ஏமாற்றத்தால் உருவாகும் உணர்ச்சிகளை உள்ளம் ஏதோவொரு வித்த்தில் ஈடு செய்யவே முயற்சிக்கும்.
-
Tuesday, January 25, 2011
எங்கே போனார்கள் அந்தப் பத்திரிகையாளர்கள்?

மேலாளர் ஒருவருக்கும் பணியாளர்கள் சிலருக்கும் தகராறு.ஒரு பணியாளருக்கு ஆத்திரம் அதிகமாக,மேலாளரை ஏதாவது செய்யவேண்டும் என்ற வெறி.பல இடங்களில் விசாரித்து ஒரு புலனாய்வு பத்திரிகை நிருபரை பிடித்தான்.மேலாளரின் ஊழலையும் அத்துமீறலையும் விவரித்தான்.
அடுத்த சில நாட்கள் வேலைக்கு விடுப்பு எடுத்துக்கொண்டு நிருபருடன் அலைந்தான்.ஆதாரங்கள் தயாரானது.மூன்று வேளையும் பத்திரிகையாளருக்கு சாப்பாடு,சிற்றுண்டி எல்லாம் ஆனது.அடுத்த வெளியீட்டில் புகைப்பட்த்துடன் மேலாளரைப்பற்றிய செய்தி வந்திருக்க வேண்டும்.ஆனால் வரவில்லை.
இரண்டு,மூன்று பத்திரிகையாளர்கள்-அவர்களும் புலனாய்பவர்கள்-கூடி விவாதித்தார்கள்.ஆதாரங்களுடன் மேலாளரிடம் பேசினார்கள்.பல சுற்று பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு மேலாளரின் மானம் காப்பாற்றப்பட்டு விட்ட்து.அவருக்கும் குடும்பம் இருக்கிறது(நிருபருக்கு இல்லையா?).புலனாய்வு நிருபர் சில நாட்கள் அலைந்த்தற்காக மட்டும் மேலாளரிம் கொஞ்சம் பணம் வாங்கிக்கொண்டார்.
எனது நண்பர் ஒருவர் உள்ளூர் பத்திரிக்கை நட்த்தி வந்தார்.பத்தாண்டுகளுக்கு முன்பு! எப்போதும் ஒரு கூட்டம் பின்னால் சுற்றிக்கொண்டிருக்கும்.அவர்களெல்லாம் நிருபர்கள்.பத்திரிக்கை அதிபர் அவர்களுக்கு சாப்பாடு கூட வாங்கித் தரமாட்டார்.ஊதியம் கிடையாது.நிருபர்கள் ஆசிரியருக்கு எல்லா செலவையும் பார்த்துக் கொள்வார்கள்.புதிது புதிதாக முளைப்பார்கள் இளைஞர்கள்.
தற்போது சென்ற பாராளுமன்ற தேர்தலுக்கு மீண்டும் பத்திரிக்கை முயற்சியை தொடங்கிப்பார்த்தார் நண்பர்.நிருபர்கள் ஒருவர் கூட வரவில்லை.இளம் பத்திரிக்கையாளர்கள் எங்கே போனார்கள் என்று தெரியவில்லை.நண்பர் ஆச்சரியத்துடன் கூறுகிறார்”இப்போதெல்லாம் மாறிப்போய்விட்ட்து” என்னதான் நடந்த்து?’’ஒரு வேளை அவர்களெல்லாம் வலைப்பூ எழுதுகிறார்களோ என்னவோ’’என்றேன்.
உண்மையில் அந்தப் பத்திரிகையாளர்கள் எங்கே போனார்கள்? அவர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள்.கண்ணில் இலட்சிய வெறியும்,தார்மீக கோபமும்,சமூகத்தின் மீது அக்கறையும் உள்ள இளைஞர்களை காலம் விழுங்கி விட்ட்து.பேனா மாற்றத்தை உருவாக்கித்தரும் என்று நம்பியவர்கள் அவர்கள்.கால ஓட்ட்த்தில் காணாமல் போனார்கள்.
செல்போன்கள் போன்று நுகர்பொருட்கள் அவர்களை சிதைத்தன.இரண்டு,மூன்று செல்போன்கள் இன்றைய நடைமுறை.தனக்கு,மனைவிக்கு,குழந்தைகளுக்கு விலை உயர்ந்த சாதன்ங்கள் தேவை.இல்லாவிட்டால் யார் மதிப்பார்கள்?அவன் வீட்டில் யார் பெண் எடுப்பார்கள்? யார் பெண் கொடுப்பார்கள்?
ஒரு அதிகாரியைப் பற்றி இரண்டு பக்கத்துக்கு எழுதுவதன் மூலம் அவனுக்கு என்ன கிடைக்கும்.தவிர,எழுதப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டு சமூகம் நன்மையடைந்த்தா,ஆட்சியாளர்களை மக்கள் புறக்கணித்து ஒதுக்கி வெளியேற்றினார்களா அல்லது அரசு வாகனத்தில் பவனி வந்தார்களா என்பது நமக்கு தெரிந்த எளிய உண்மை.
பத்திரிகையாளன் பேரம் பேசாமல் இலட்சியத்துடன் வாழ முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு விட்டானா?ஆனால் முழுதும் அப்படியல்ல!கொஞ்சம் தர்ம்ம் மிச்சமிருக்கிறது.நமக்கு கொஞ்சம் நம்பிக்கை..இதுவும் கடந்து போய்விடும்!
Monday, October 25, 2010
பணியிடங்களில் பாலியல் தொல்லை ஆண்களுக்கு இல்லையா?
ஆண்களுக்கும்,பெண்களுக்கும் உள்ள முக்கியமான வித்தியாசம் பெண்களுக்கு கிடைக்கும் சமூக ஆதரவு ஆண்களுக்கு கிடைக்காது.பெண்களுக்கு மற்ற பெண்கள் ஆதரவாக இருக்கும்போது,ஆண்கள் இன்னொரு ஆணுக்கு சாதகமாக இருக்கமாட்டார்கள்.எதிர்பாலினர் அங்கீகாரம் ஆண்களுக்கு ஒரு பிரச்சினையாவதால்பெண் தனக்கு ஆதரவாக திசைதிருப்புவது எளிது.ஆண்களைப்போல பெண்களின் தொல்லைகள் வெளிப்படையாக இருக்காது.பாலியல் தொல்லைக்கு உள்ளாகும் ஆண்,தனது நண்பர்களை இழக்க வேண்டியிருக்கலாம்.அந்த இடத்தை விட்டு மாறுதல் பெற்றுக்கொள்வதுதான் நல்லது.
எனக்கொரு நண்பன் இருந்தான்.அவனுக்கு திருமணமாகவில்லை.அவனுடைய அலுவலகத்தில் இருந்த ஒரு பெண்ணுக்கு -திருமணமானவர்-அவனை பிடித்துப்போனது.சாப்பாடு எடுத்து வரத்தொடங்கினார்.கணவர் பற்றி தொடர்ந்து குறை கூறுவது,கணவர் வீட்டில் இல்லைஎன்பதை அழுத்தமாக தெரிவிப்பது.அடிக்கடி போனில் பேசுவது என்று ஆரம்பித்தார்.அவனுக்கு பிடிக்கவில்லை.நேரில் பார்ப்பதை தவிர்த்தான்.போனை எடுக்கவில்லை.யாரிடமும் வெளியே சொல்லாமல் எனக்கு போன் செய்தான்.அந்த பெண்,நிறுவன தலைமையிடம் நெருக்கமாக இருந்தார்.அமைதி காக்குமாறு கூறினேன்.மற்ற பெண்களும் இவனை பார்த்தாலே குறை சொல்ல ஆரம்பித்தார்கள்.அப்பெண்ணின் திட்டமிட்ட அணுகுமுறையால் அலுவலக நண்பர்கள் இவனை விட்டுவிட்டு பெண்களிடமே அதிகம் பேசிக்கொண்டிருக்க தனிமைப்படுத்தப்பட்டான்.ஒரு கட்டத்தில் மாறுதல் பெற்று வெளியேறினான்.
பெண் என்னதான் செய்வாள் ?
- நண்பர்களை பிரித்து தனிமைப்படுத்துவது.
- செல்வாக்கை குறைக்க முயற்சி செய்வது.
- அதிகாரிகளிடம் பொய்யான காரணங்களை சொல்லி முறையிடுவது.
- மற்ற பெண்களையும் தனக்கு ஆதரவாக மாற்றுவது.
- பணியில் ஒத்துழைக்க மறுப்பது
- நண்பர்களை விட்டே பின்தொடர்வது.
- தொடர்ந்து இமேஜை கெடுக்கும் விதத்தில் அவதூறு பரப்புவது.
- செயலையும்,நோக்கங்களையும் முடக்க நினைப்பது.






