Showing posts with label women status. Show all posts
Showing posts with label women status. Show all posts

Monday, May 2, 2011

கலங்கும் பெண்களால் உடையும் உறவுகள்.

                           காதலிலோ,குடும்பத்திலோ ஆண்,பெண் இருவருமே நம்பிக்கையும் பாதுகாப்பும் உணர வேண்டும்.இவற்றில் தவறினால் அந்த உறவு அதோகதிதான்.தான் தொடர்ந்து மதிக்கப்படுவோமா? என்ற கேள்வி எழுந்தவுடன் சந்தேகமும் அதைத் தொடர்ந்து உறவுகளில் விரிசலும் ஆரம்பித்துவிடுகிறது.

                            வேலைக்கு போன இட்த்தில் ஒரு பெண்ணை பார்த்தவுடன் பிடித்துப்போய் விட்ட்து அவனுக்கு! அந்த பெண்ணுக்கும்தான்.பார்வையில் ஆரம்பித்து புன்சிரிப்பாய் மலர்ந்து பேசிக்கொள்ள ஆரம்பித்தார்கள்.ஒரு நாள் அவன் திருமணம்செய்து கொள்ளலாம் என்று கூறினான்.



                            அந்த பெண்ணுக்கு குழப்பம் அதிகமாகிவிட்ட்து.இம்மாதிரி நேரங்களில் தோழிகள்தான் பக்கபலம்.ஆண்களை எளிதில் நம்பி விடாதே! என்றார் தோழி.நல்ல வேலையில் இருக்கிறான்,இனிமையாக பழகுவான் என்பது தவிர வேறெதுவும் தெரியாது.தேர்வுகள் ஆரம்பமாகிவிட்ட்து.

                            அவனைத்தவிர்க்க ஆரம்பித்தாள்.வேறு எந்தெந்த ஆண்களுடனோ அதிகம் பேசிக்கொண்டிருந்தாள்.போன் செய்தால் வீட்டில் உள்ளவர்கள் எடுத்து என்ன வேண்டும் என்று முறைப்பாக கேட்டார்கள்.பாவம் இவன் அப்பாவி!கொஞ்ச நாள் கழித்து சொல்லியிருக்கலாமோ என்று நினைத்தான்.இவனுக்கும் குழப்பம் அதிகமாகி விட்ட்து.



                                                                        சுருக்கமாக சொன்னால் பையனின் வீட்டில் திருமணத்திற்கு தீவிரமாக இருந்த்தால் பெற்றோர் பார்த்த பெண்ணை மண முடித்துவிட்டான்.நிச்சயமானவுடன் பெண்ணின் தோழி ஆத்திரமாக கேட்டார்என்ன இப்படி செஞ்சிட்டீங்க?’’ அவன் பதில் சொல்லவில்லை.கொஞ்சம் இழுத்திருந்தால் பரவாயில்லை.அதிகமாக இழுத்தால் எத்தகைய உறவும் அறுந்துதான் போகும்.

                                சமூகத்தில் பெண்களின் தகுதிநிலையே இதற்கெல்லாம் காரணம் என்கிறார்கள்.திருமணமாகி மணவாழ்க்கையில் சந்தோஷம் இழந்த பெண்களை பார்த்துவிட்டு கலங்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.பார்த்தவையும் கேட்டவையும் அவர்களுக்கு அச்சத்தையும்,கலக்கத்தையும் தருகிறது.முடிவு எடுப்பதில்,நம்பிக்கை கொள்வதில் பெரும் குழப்பம்.

                                மேற்கண்ட பெண் திருமணமாகி போனால் கூட தான் எப்போதும் மதிக்கபடுவோமா என்ற சந்தேகத்திலேயே இருந்தால் சிக்கலான குடும்ப பிரச்சினைகளையே கொண்டுவரும்.கணவன் எப்போதும் தன்னை முக்கியமாக கருத வேண்டும் என்பதற்காக அவர் மேற்கொள்ளும் உத்திகள் விரும்பத்தகாத விளைவுகளையும் உருவாக்கலாம்.

                                கணவன் குடும்பம் தொடர்பான உறவுகள்,அவரது பெற்றோர்,சகோதரிகள் போன்றோரை அதிகம் கணவனுடன் நெருங்கமுடியாத சூழ்நிலையை ஏற்படுத்தலாம்.மாமியார் மருமகள் சண்டைக்கு வித்திடலாம்.(பெற்றோருக்கும் மகன் தங்களை மதிக்கமாட்டானோ என்ற எண்ணம் ஏற்படுவது வேறுவிஷயம்).பெண்ணின் தாய் வீட்டு உறவுகளுக்கு அதிகம் வரவேற்பு அளிக்கலாம்.



                                 மிகச்சில சொந்தக்காலில் நிற்கும் பெண்களைத்தவிர இதெல்லாம் பொதுவானவை.பெண்ணுக்கு உரிய சமூக தகுதுநிலை கிடைத்தால் ஒழிய இவற்றை தவிர்ப்பது கஷ்டம்.
-

Wednesday, February 9, 2011

பெண்கள் பச்சை உடை அணிவதே தவறா?


பல இடங்களில் கவனித்திருக்கிறேன்.அவற்றில் ஒன்று.ஒரு பெண்திருமணமானவர்-பச்சை புடவை உடுத்தி வழியில் சென்று கொண்டிருக்கிறார்.கல்லூரி மாணவர்கள் மூவர் நின்றிருந்தார்கள். இளைஞர்களில் ஒருவன்-வயது இருபத்தைந்துக்குள் இருக்கலாம்-,யாருக்குடா மச்சி க்ரீன் சிக்னல்?’’

பச்சை கலரில் உடை உடுத்துவது எப்படி சிக்னலாகும்? என்பது எனக்கு புரியவில்லை.அக் கலரில் உடை இல்லாமல் யாரும் இருப்பது வாய்ப்பில்லை.அந்த வக்கிரத்தை என்னவென்று வர்ணிப்பது? திருமணமானவர் ஒருவர் பச்சை நிறத்தில் உடை உடுத்தினால் அது காதலுக்கான அறிகுறியா?

கருப்பு கலர்,சிவப்பு கலருக்கெல்லாம் ஒவ்வொரு பொருள் கற்பித்துக் கொள்வது பெண்ணை அவமதிக்கும் செயல்.ஒரு கிராமத்தில் இரண்டு,மூன்று பேர் ஒரு பெண்ணின் மீது காதல் கொண்டிருக்கும்போது பச்சை நிற உடையை பார்த்தே மூவரும் கடிதம் கொடுப்பார்களா? இல்லை,அப்பெண் விரும்பும் ஒருவர் கண்ணுக்கு மட்டும் அந்த கலர் தெரியுமா?

கிராமத்தில் நேரில் பேச முடியாத பழங்கால காதலுக்கு நிறங்கள் பயன்பட்டிருக்கலாம்.இப்போது செல்போன் யுகம்,அதுவும் நேரில் சந்திப்பதோ ஏன் டேட்டிங் அது,இதுவென்று போய்விட்ட்து.இன்னமும் இம்மாதிரியான கலாச்சாரங்களை ஏன் கட்டிக்கொண்டு அழ வேண்டும்.எதில்தான் வக்கிரமென்று அளவே இல்லையா?

நடந்தால்,அமர்ந்தால்,சிரித்தால்,இன்ன கலரில் உடை உடுத்தினால் காதல்,காம்ம் என்றுஅடையாளங்கள் வாழ்க்கை முறையாகிவிட்ட்தால்தான் எய்ட்ஸ்,பால்வினை நோய்கள்,கள்ளக்காதல் போன்ற சீரழிவுகளை நாம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.தேசத்தின் பெரும் சாபம் இது.

மேற்கண்ட இளைஞர்களுக்கு இவற்றையெல்லாம் கற்பித்த்து யார்? கல்லூரியில் வரலாறு,இலக்கியம்,அறிவியல் சமூகம் என்று எத்தனையோ கற்பிக்கிறோம்.பச்சை நிறத்தில் உடைஉடுத்தி வந்தால் சிக்னல்என்று எவர் கற்பித்தார்கள்?

காலம் காலமாக இருந்து வரும் மட்த்தன்ங்களை நம்முடைய இளைஞர்கள் உள்ளத்தில் அழுக்காக சேராமல் விரட்டினால் ஒழிய, அவர்கள் மிக விலை உயர்ந்த செல்போனை வைத்துக் கொண்டு அசிங்கமான வார்த்தைகளை பேசிக் கொண்டிருப்பார்கள்.செவ்வாய் கிரகத்தில் குடியேறினாலும் மனம் மட்டும் துர்நாற்றம் வீசிக் கொண்டே இருக்கும்.

-