Showing posts with label impotence. Show all posts
Showing posts with label impotence. Show all posts

Monday, April 18, 2011

பெண்மைக் குறைவு-ஆண்மைக்குறைவு-நரம்புத்தளர்ச்சி


                                 திருமணமான பெண் தாம்பத்யத்தில் ஆர்வமில்லாத நிலையை பெண்மைக்குறைவு(Frigidity) என்று சொல்ல்லாம்.ஆர்வமின்மையும் வெறுப்பும் இருக்க்க் கூடும்.குறிப்பிட்ட சதவீதம் இப்பிரச்சினை உள்ளதாக கருதப்படுகிறது.இதுதான் காரணம் என்று குறிப்பாகச் சொல்லமுடியாது.

                                 நெருக்கமில்லாத தம்பதிகள்-அதிரும் மணவாழ்க்கை என்ற பதிவில் சிலவற்றை கூறியிருக்கிறேன்.ஏதோ ஒரு காரணத்தால் கணவன் மனைவி அன்பில்லாமல் இருப்பது ஒரு முக்கிய காரணம்.பெரும்பாலும் இதனாலேயே வெறுப்பும் ஆர்வமின்மையும் தோன்றக்கூடும்.

                                பலருக்கு இதனால் உடல்நலக்குறைவும் அடிக்கடி ஏற்பட்டுவிடும்.மனம் சார்ந்த உடல்நோய்கள் என்று சொல்வார்கள்.விருப்பமில்லாத நிலை உடல்நல பாதிப்பாக தோன்றும்.அடிக்கடி மாலையில் தலைவலி,உடல்வலி இருப்பதாக கூறிய பெண்ணை மருத்துவரிடம் அழைத்துச் சென்றார்கள்.

                               முழுமையாக பரிசோதித்த மருத்துவர் உடலில் கோளாறு எதுவும் இல்லாத்தை கண்டுபிடித்தார்.அவருக்கு தாம்பத்யத்தில் உள்ள வெறுப்பே காரணம் என்பது பின்னர் தெரிய வந்த்து.விஷயம் தெரிந்துவிட்டால் சீர் செய்து விடலாம்.

                               யாரையாவது காதலித்துவிட்டு பின்னர் குடும்பத்தினர் சம்மதம் கிடைக்காமல் அல்லது தவிர்க்க முடியாத சூழலால் வேறொருவரை திருமணம் செய்து கொள்ளும் பெண்களுக்கு பெண்மைக்குறைவு ஏற்படுவது அதிகம் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன.

                               சிறு வயதில் ஏற்படும் அனுபவங்களும் நம்பிக்கைகளும் இன்னொரு பிரச்சினை.இந்தியாவில் இது சகஜமாக காணப்படுகிறது.நம் பண்பாட்டில் பாலியல் என்பது சீச்சீ! இதெல்லாம் தவறு என்ற எண்ணத்துடனே சிறு வயதில் இருந்து வளரும் குழந்தைகள் ஆர்வமில்லாத,வெறுக்கும் நிலைக்கு தள்ளப்படலாம் என்கிறார்கள்.

                                இன்னொன்று மனநிலையில் ஏற்படும் பாதிப்புகள்.மன அழுத்தம் போன்ற சிக்கல்களில் இருக்கும்போது பெண்மைக்குறைவு சாதாரணம்.சிறு வயதில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களும் காரணமாகலாம்.நீண்ட காலம் கர்ப்பமுறாமல் இருக்கும் பெண்ணுக்கும் இந்நிலை தோன்றலாம்.

                                 தாழ்வு மனப்பான்மை உள்ள பெண்களுக்கு வெறுப்பும்,ஆர்வமின்மையும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.தன் அழகு,குடும்பம்,கல்வி,உடலமைப்பு போன்றவை சிறப்பாக இல்லை என்று தனக்குள்ளேயே தாழ்வு மனப்பானமை கொண்டிருப்பது பெண்மைக்குறைவில் கொண்டுபோய் விட்டுவிடும்.

                                 சிறப்பான ஆலோசனையும்,மருத்துவ உதவியும்,ஹார்மோன் சிகிச்சைகளும் இப்பிரச்சினையை போக்க உதவும்.தங்களுக்குள்ளேயே மூடி வைத்துக்கொள்ளாமல் நிபுணர்களை நாடுவது நல்ல எதிர்காலத்தை உறுதி செய்யும்.

   ஆண்மைக்குறைவும்,நரம்புத்தளர்ச்சியும் பதிவு இங்கே
-

Tuesday, October 5, 2010

ஆண்மைக்குறைவும் நரம்புத்தளர்ச்சியும்

சார்,"எனக்குஉடல் பலவீனமாக இருக்கிறது"-என்ன செய்யலாம்?என்று கேட்டான் அவன்.அவனுக்கு திருமணம் ஆகவில்லை.வயது இருபத்தேழு .ஐம்பது கிலோ மூட்டையை தூக்க சொன்னபோது சாதாரணமாக தூக்கிவிட்டான்! உண்மையில் அவனுடைய பிரச்சினை என்ன? பிறகு பேசப்பேச தெரிந்தது இதுதான் -ஆண்மைக்குறைவு,நரம்புத்தளர்ச்சி,உடல் பலஹினம்,விரைவில் விந்து வெளியேறுதல்,கரப்பழக்கம் என்ற விளம்பரம் அவனிடம் ஏற்படுத்திய தாக்கம் அது.பரம்பரை விடுதி வைத்தியர்களின் புகழ்பெற்ற விளம்பரம் அவை.இவ்விளம்பரங்களில் காணப்படும் அறிகுறிகள் மிக பொதுவானவை.பெரும்பாலான இளைஞர்களிடையே சுய இன்பம் காணும் பழக்கம் இருப்பதை ஆய்வுகள் உறுதி செய்கின்றன.இவற்றை பணமாக்குவதுதான் பரம்பரை வைத்தியர்களுக்கு எளிதாக இருக்கிறது.
உண்மையில் ஆண்மைக்குறைவு என்பதுதான் என்ன?
உடலுறவில் பிறப்புறுப்பு விரைப்புத்தன்மை இல்லாமல் போவதும்,விரைவில் விந்து வெளியாவதும்தான் பொதுவாக ஆண்மைக்குறைவு எனப்படுகிறது.இவற்றில் பெரும்பாலானவை மனம் தொடர்புடைய சிக்கல்கள்.தவறான விளம்பரங்கள் மேலும் சிக்கலாக்குகின்றன.நீரிழிவு,மது,அதிகமாக புகை பிடித்தல்,உட்சுரப்பிகள் தொடர்பானவை உள்ளிட்ட வேறு காரணங்கள் இருந்தாலும் உள்ளம்தான் முதலிடம் வகிக்கிறது.மனநல மருத்துவரை நாடுவதே இதற்குதீர்வு .மனநல மருத்துவர் என்றவுடன் பைத்தியங்கள்தான் அங்கே போகவேண்டும் என்று கருதுவது விடுதி வைத்தியர்களுக்கு வசதியாகிவிடுகிறது. இவர்களுக்கு கொடுக்கும் விலை மிக அதிகம்.
நரம்புத்தளர்ச்சி பற்றிய நம்பிக்கைகள்
நரம்புமண்டலநோய்கள் தவிர்த்து பொதுவாக விளம்பரங்கள் குறிப்பிடும் நரம்புத்தளர்ச்சி மனம் தொடர்பான ஒரு குறைபாடு.ஆங்கிலத்தில் Anxiety disorder என்று குறிப்பிடப்படும் இக்குறைபாடு சமூகத்தை எதிர்கொள்வதில் காணப்படும் கலக்கத்தை குறிக்கிறது. தாழ்வு மனப்பான்மை இதன் பின்னணியில் இருக்கிறது. மற்றவர்களைப்போல் சாதாரணமாக பழக கூச்சப்படுவது போன்றவற்றால் சரியான தகவல்கள் இவர்களுக்கு எட்டாமல் போய்விடுகிறது. பரம்பரை வைத்தியர்களிடம் அடைக்கலமாவது தவிர்க்கமுடியாமல் பணத்தை இழந்தும்,பிரச்சினை சரியாகாமல் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்.
சர்வரோக நிவாரணி -அஸ்வகந்தா
விடுதி வைத்தியர்கள்சர்வரோக நிவாரணியாக பயன்படுத்துவது அஸ்வகந்தா எனும் மருத்துவ குணம் கொண்ட மூலிகைதான் என்பது பல இந்திய முறை வைத்தியர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.இம்மூலிகை மன இறுக்கத்தை போக்கிவிடுகிறது என்றும் மனநலத்தை மேம்படச்செய்வதால் ஓரளவு உள்ளம் சார்ந்த ஆண்மைக்குறைவும்,நரம்புத்தளர்ச்சியும் சரியாக வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.இதற்காக பல்லாயிரக்கணக்கில் பணத்தை இழக்கத்தேவையில்லை.நல்ல இந்திய முறை மருத்துவர்களை நாடலாம்.எனினும் இப்பிரச்சனைகள் உள்ளம் சார்ந்ததா,உடல் சார்ந்ததா என்பதிலும் தெளிவு வேண்டும்.

-