Thursday, February 10, 2011

கமல்,மணிரத்னம் தந்த கஷ்டங்கள்


அப்போது பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன்.தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அண்ணன் ஒருவன் என்னை அணுகினான்.உறவு இல்லை.என்னை விட ஆறு வயது மூத்தவன் என்பதால் அண்ணன் என்றேன்.ஆரம்ப்ப் பள்ளியோடு அவனது படிப்பு முடிந்து போயிருந்த்து.டேய்,சினிமாவுக்கு போகலாம் வர்றியா?செகண்ட் ஷோ.’’

முன்பு இப்படியெல்லாம் சினிமா பார்த்து பழக்கமில்லை.அப்பாவோடு ஒன்றோ இரண்டோ பார்த்திருக்கிறேன்.எனக்கும் ஆசை.எங்கள் வீட்டில் திட்டுவார்கள்,என்றேன்.வீட்டில் இருப்பவர்கள் நிலத்தில் உள்ள வீட்டில் இருந்தார்கள்.நான் அத்தை வீட்டில் சாப்பிட்டு விட்டு தனியாக இருந்தேன்.செலவெல்லாம் நானே பார்த்துக்கொள்கிறேன்என்றான்.நானும் சம்மதம் சொல்லிவிட்டேன்.

முதல் முறையாக செகண்ட் ஷோ வுக்கு போகிறேன்.பரபரப்பாக இருந்த்து.தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது எங்கள் ஊர்.முக்கால் மணி நேர பயணத்தில் நகரத்தை அடையலாம்.எட்டு மணிக்கு புறப்பட்டு ஒன்பது மணிக்கு தியேட்டர் வாசலில் இருந்தோம்.நல்ல கூட்டம்.புதுப் படமாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன்.மங்கலான விளக்கொளியில் போஸ்டரை பார்த்தேன்.

பட்த்தின் பெயர்நாயகன்’.”இந்த படம் ரொம்ப நாளாக இருக்கிறதே?என்று கேட்டேன்.இன்னிக்கு கடைசி நாள்டா! என்று பதில் வந்த்து.அதனால்தான் இவ்வளவு கூட்டம்.எப்படியோ முந்தியடித்து டிக்கெட் வாங்கிவிட்டான்.உள்ளே உட்கார இடம் கிடைத்து விட்ட்து.அவன் இரண்டாம் முறையாக பார்க்கிறான்.கதவுகள் மூடவில்லை.அங்கே ஏராளமானவர்கள் நின்று கொண்டே படம் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

எனக்கு தூக்கம் தலையை சுற்றியது.ஆனால் தூங்கவில்லை.பட்த்தில் மனம் ஒன்றிப் போய்விட்ட்து.ஒரு பாட்டு முடிந்தவுடன் விசில் சத்தம் காதைப் பிளந்த்து.ஒன்ஸ்மோர்’-கூக்குரல் தியேட்டரை நடுங்க வைத்த்து.அந்த பாடல் எதுவென்று உங்களுக்கும் தெரியும்.

நான் எதிர்பார்க்கவில்லை.படம் முடிந்து வெளியே வந்த பின் லாரிகளை நிறுத்த ஆரம்பித்தான்.நள்ளிரவிலெல்லாம் எங்கள் ஊருக்கு பஸ் இல்லை என்பது அப்போதுதான் தெரிந்த்து.போகும் லாரியை கேட்டுதான் போக வேண்டும்.தேசிய நெடுஞ்சாலை என்பதால் எளிதென்று நினைத்தேன்.ஆனால் பத்து லாரிக்கு பிறகுதான் ஒன்று கிட்டியது.

லாரி டிரைவர் திட்டினார்.இப்படியெல்லாம் யார் சினிமா பார்க்கச் சொன்னார்கள்.நல்ல வேகத்தில் சென்று கொண்டிருந்த்து லாரி.நீண்ட தொலைவு செல்லும் வாகனம்.ஊர் வந்த அவசரத்தில் நிறுத்துங்கள்என்றோம் சத்தமாக! வண்டி உடனே நின்றது.நாங்கள் இருக்கையில் இருந்து எழும்போதுதடார்”’ என்று ஒரு சத்தம்.

பயந்து போனேன்.இருதய துடிப்பு அதிகமாகிவிட்ட்து.திடீரென்று லாரி நிற்கவே பின்னால் வந்த லாரி மோதிவிட்ட்து.யாருக்கும் அடிபடவில்லை.எனக்கு தலையில் லேசாக இடித்து விட்ட்து.கீழே இறங்கினோம்.இரண்டு லாரி டிரைவர்,கிளீனர்கள் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள்.எங்களை யாரும் கண்டுகொள்ள வில்லை.அங்கிருந்து கிளம்பிவிட்டோம்.யார் கிட்டயும் சொல்லாதடாஎன்றான்.அடுத்த நாள் மாலை பார்த்த போதும் அந்த லாரிகள் அங்கேயே நின்றிருந்தன.டிரைவர்,கிளீனர்களை காணவில்லை.அடுத்த நாளும் அங்கேயே நின்றிருந்த்து.

சென்ற முறை ஊருக்கு சென்ற போது அவரைக் கேட்டேன்.இப்போதெல்லாம் செகண்ட் ஷோ போவதில்லையா? எனக்கு தெரிந்து யாரும் போகிறமாதிரி தெரியவில்லை.’’

-

4 comments:

சாதாரணன் said...

நல்ல சுவையான அனுபவம்.அது சரி நீங்க இப்போதெல்லாம் செகண்ட் ஷோ நீங்க போவீங்களா?

shanmugavel said...

இன்னும் யுத்தம் செய் கூட பார்க்கவில்லை.நன்றி சாதாரணன்.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

வித்தியாசமான திகிலான அனுபவம்! உங்கள் அனுபவம் எல்லோருக்கும் ஒரு எச்சரிக்கை!

shanmugavel said...

இப்பொது யார் போகிறார்கள்.நன்றி