Monday, March 21, 2011

ரஜினி ரசிகர்மன்றம் துவக்கிய கதை.


                                  ரசிகர் மன்றங்கள் பற்றி விவாதங்கள் இருக்கின்றன.நல்ல காரியங்கள் செய்யும் மன்றங்களையும் நான் பார்த்திருக்கிறேன்.நடிகர்கள் பின்னால் திரள்வதன் காரணம் என்ன? தன்னை அடையாளம் காட்டும் பொருட்டா?

                                  ரஜினிகாந்த் திரைப்பட வாழ்வில் பஞ்சு அருணாசலத்திற்கு முக்கிய இடம் இருப்பதாக கருதுகிறேன்.அநேகமாக குருசிஷ்யன் பட்த்திலிருந்துதான் ரஜினி நடிப்பில் நகைச்சுவை கூட்டப்பட்ட்து என்று நினைக்கிறேன்.இந்த அணுகுமுறை மேலும் ரஜினியை ரசிகர்களால் விரும்பவைத்த்து.

                                  வளரிளம் பருவத்தில் ஒருவர் யாருடைய ரசிகன் என்பது முக்கியமான கேள்வி.ஏதோ ஒரு வகையில் அது ஒட்டிக்கொண்டுவிடும்.எண்பதுகளின் இறுதியில்தான் எனக்கு சினிமா அறிமுகம்.அப்போது ரஜினி அல்லது கமல்தான் இளையோர்களின் தேர்வு.நான் மட்டும் விதிவிலக்கா என்ன?

                                  எனக்கொரு கடிதம் வந்த்து.பள்ளியில் உடன் பயிலும் நண்பன் அனுப்பியிருந்தார்.அஞ்சல் அட்டை.விடுமுறை நாட்கள் தவிர தினமும் நாங்கள் சந்தித்துக் கொள்கிறோம்.நேரில் பேசிக்கொண்டாலும் அந்த விஷயத்தை அவன் சொல்லவில்லை.அதிக தூரம் இல்லை.பக்கத்து கிராம்ம்.

                                  அஞ்சல் அட்டையில் கண்ட விஷயம் என்னை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியது.ஆமாம்.நண்பர்கள் குழு சேர்ந்து ரஜினிக்கு ரசிகர்மன்றம் ஆரம்பிக்கப் போகிறோம்.அதற்கு நான் செயலாளராக இருக்க வேண்டும் என்பது அவனுடைய கோரிக்கை.என் தகுதிக்கு பொறுப்பு தானாக தேடி வந்த்து.

                                   எனக்கு அதிக ஆர்வம் ஏற்பட்டுவிட்ட்து.ரசிகர்மன்றம் ஆரம்பித்து என்ன செய்யப்போகிறோம் என்பதெல்லாம் தெரியாது.படிப்பு மறந்து ரஜினி பற்றி அதிகம் சிந்தித்துக் கொண்டிருந்தேன்.கடிதம் அனுப்பிய நண்பன் மீது பாசமும்,நட்பும் அதிகமாகிவிட்ட்து.

                                   அடுத்த நாள் பள்ளியில் அதைப்பற்றியே பேசிக் கொண்டிருந்தோம்.தர்மத்தின் தலைவன் பெயர் வைத்த்தாக நினைவு.இருபதுபேர் சேர்ந்தாகிவிட்ட்து.நண்பனின் சகோதரன்ஒருவன் ஓவியம் நன்றாக வரைவான்.அவரிடம் தெரிவித்து ரஜினி படம் வரைந்து,கீழே மன்றத்தின் பெயர்,ஊர்,எங்களுடைய பெயர் எல்லாம் போட்டு ரஜினி படம் ஓடிக்கொண்டிருக்கும் தியேட்டருக்கு தரவேண்டும்.

                                   பழைய நாளிதழில் சுற்றிய பிரேம்போட்ட ஓவியத்துடன் ஒரு சனிக்கிழமை கிளம்பி தியேட்டருக்கு போனோம்.வெளியில் நின்றிருந்த காவலாளி என்ன விஷயம் என்று கேட்டார்.உள்ளே அனுப்பிவிட்டார்.திரையரங்க மேலாளரை பார்த்தோம்.நன்றாக இருக்கிறதென்று பாராட்டினார்.டீ வாங்கிக் கொடுத்தார்.எங்கள் அன்பளிப்பை பெற்றுக்கொண்டு நன்றி தெரிவித்தார்.

                           ரஜினி படம் முதல் காட்சிக்கு எங்களுக்கு டிக்கெட் தரவேண்டும் என்று நண்பன் கேட்டான்.அவர்நிச்சயமாக என்று உறுதியளித்தார்.மாவட்ட தலைவரைபோய் பாருங்கள்’’ என்று முகவரி தந்தார்.முகவரி தேடி கண்டுபிடித்துபோனால் அவர் வீட்டில் இல்லை.இன்னொரு நாள் பார்க்கலாம் என்று திரும்பி விட்டோம்.ஆனால் அதற்குப் பிறகு அவரை சந்திக்கவேயில்லை.

                            எங்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிவிட்ட்து.ரசிகர் மன்றத்தை மறந்து போய்விட்டோம்.ஆனால்,சினிமா பார்ப்பதை மட்டும் விடவேயில்லை.இப்போதெல்லாம் குறைவான படங்கள்தான் பார்க்கிறேன்.அதுவும் விமர்சன்ங்களையெல்லாம் படித்துவிட்டு நன்றாக இருக்கும் என்று நம்பினால் மட்டும்!

-

6 comments:

சக்தி கல்வி மையம் said...

ஆகா.. .நடத்துங்க.. நடத்துங்க..

கோவை நேரம் said...

இப்பவும் ரஜினி படம் பார்பீங்களா ?

Jayadev Das said...

என்னதான் சொல்ல வர்றீங்க?

shanmugavel said...

@!* வேடந்தாங்கல் - கருன் *! said...

ஆகா.. .நடத்துங்க.. நடத்துங்க..

உங்களவிடவா நடத்தப்போறம்.நன்றி,கருன்

shanmugavel said...

@கோவை நேரம் said...

இப்பவும் ரஜினி படம் பார்பீங்களா ?

இதென்ன சார் கேள்வி.நன்றி

shanmugavel said...

@Jayadev Das said...

என்னதான் சொல்ல வர்றீங்க?

மேல படிக்கலயா?