Showing posts with label நகைச்சுவை. Show all posts
Showing posts with label நகைச்சுவை. Show all posts

Tuesday, October 4, 2011

சீரியஸ் பதிவரின் ஆசைக்காதல்-நகைச்சுவை


பதிவுலகில் நகைச்சுவை குறைந்து கொண்டே போகிறது.கடைசியில் என்ன கதி ஆவது என்று தெரியவில்லை.காமெடி செய்வது கஷ்டமான வேலை என்று பாக்யராஜ் விகடனில் சொல்லிவிட்டார்.பன்னிக்குட்டியாருக்கு நகைச்சுவை உணர்வு குறைந்து போய்விட்ட்தா என்று ஜோதிஜி கேட்கிறார்.நாமாவது காமெடியாக எழுதிப்பார்க்கலாம் என்றால்,அண்ணே இது நீங்கள் எழுதியதா? என்று கேட்டு மானத்தை வாங்குகிறார்கள்.சீரியஸ் பதிவர் ஒருவரை பார்க்கப்போனேன். நாடு இருக்கும் நிலை சிரிக்கிற மாதிரியா இருக்கிறது என்று  கேட்கிறார்.அவரைப் பார்த்து விட்டு வந்த அனுபவம் மறக்க முடியாத ஒன்று.

                                 வாசலிலேயே பிரச்சினை.அவருடைய பெண் குழந்தை.மூன்று வயதிருக்கும்.என்னைப்பார்த்தவுடன் புன்னகை. என்னை குனியுமாறு சிரித்துக்கொண்டே சொன்னது.என் காதில் கிசுகிசுத்த வார்த்தைகள்’’அங்கிள் அப்பா அழறாங்க,ஜாலி  ஹே..ஹே..ஹே.. என்று ஒரே சிரிப்பு.பக்கத்து வீட்டு பையனை அழைத்து வேறு காட்டியது “எங்க அப்பா அழறாங்கடா! நல்லாருக்கில்ல! ஒரே ஆனந்தம்.
                                 உண்மையில் மனிதர் அழுது கொண்டுதான் இருந்தார்.அவரது கையில் நாளிதழ்.கோயம்புத்தூரில் பாதாள சாக்கடை எடுத்து இன்னும் மூடாமல் இருப்பதை புகைப்படம் எடுத்து போட்டிருந்தார்கள்.கொஞ்சம் கவனத்தை திசை திருப்பலாம் என்று பார்த்தேன்.மக்கள் தொகை பெருகிவிட்ட்து என்றேன்.அவரிடம் சமூகப் பிரச்சினைகள் பற்றித்தான் பேசமுடியும்.
                                 ஏன் சார் நான் கேட்கிறேன்! டாக்டர்கள் ஏன் பத்து மாதம் நாள் குறிக்கிறார்கள்? குழந்தை பெறும் காலத்தை முப்பது மாதம் ஆக்கவேண்டியதுதானே!??அரசாங்கத்துக்கும் அக்கறை இல்லை. எனக்கு வயிற்றை புரட்டியது.கொஞ்சம் சமாளித்துக்கொண்டே “அது இயற்கை அய்யா! 280 நாட்கள் ஒன்பது மாதம் பத்து நாள்.கடைசி மாத விலக்கு நாளிலிருந்து ஏழுநாள்,ஒன்பது மாதங்கள் கூட்டிக்கொள்ளவேண்டும்.அதுதான் பிரசவம் எதிர்பார்க்கும் தேதி.அதிலிருந்து ஒருவாரம் முன்போ,பின்போ குழந்தை பிறக்கும்.அவரை தெளிவு படுத்தி விட்ட்தாக எனக்கு தோன்றியது.

                                  அதெல்லாம் நம்பாதீங்க சார்! வெளிநாட்டு சதி.இந்தியாவை ஒழிக்க நினைக்கிறார்கள் தெரிந்து கொள்ளுங்கள்.நீங்கள் யார் சொல்வதையும் நம்ப வேண்டாம்.என்றார்.பேச்சை மாற்றலாம் என்று எனக்கு தோன்றியது.வசமாக மாட்டிக்கொண்டார்.இதில் இழுத்து விட்டுவிட்டால் நாம் தப்பித்துவிடுவோம்.சரி இந்த காவிரிப் பிரச்சினை பெரிய பிரச்சினையாக இருக்கிறது!? என்றேன்.
                           ஆஹா! அந்த மாற்றத்தை எப்படி வர்ணிப்பது? ஆண்கள் வெட்கப்பட்டு அதுவரை நான் பார்த்த்து கிடையாது! அழுகை முகம் பிரகாசமாக ஒளி வீசியது.நீங்கள் பெரிய ஆள்! உங்களுக்கு எப்படித் தெரியும்? என் முதல் காதல்! ஆறு வருடங்களாக காதலித்தேன்,ஒரு நாள் தைரியமாக கடிதம் எழுதி கொடுத்து விட்டேன்.ஒரே வரி நறுக்கென்று! “ உன்னை காதல் செய்வேன்;நான் உன்னைக் கட்டிக் கொல்வேன் அவ்வளவுதான்

                           ஆற அமர படித்துவிட்டுசிரித்துக்கொண்டே என்னை அழைத்தாள்.நானே உங்கள் வீடு தேடி வருவேன்,அது வரை என்னைப் பார்த்தால் தெரியாத மாதிரி வேறு வழியில் போய்விட வேண்டும்.பின்னால் வரக்கூடாது என்றாள்.இன்றுவரை அப்படித்தான் இருக்கிறேன்.இப்போது பார்க்கவே முடிவதில்லை.அவளுக்காகத்தான் காத்திருக்கிறேன்.
                           உங்களுக்குத்தான் கல்யாணம் ஆகிவிட்ட்தே? என்றேன்.இருந்தால் என்ன? காதலை விட்டுவிட முடியுமா? அவள் ஒருநாள் வருவாள் என்னைத்தேடி! என் மனைவியும் நல்லவர்தான்கொட்டிக்கிறீங்களா? என்று கேட்காமல் சாப்பாடு கொண்டு வந்து வைக்க மாட்டார்இரண்டு பேரும் இருந்து விட்டுப்போகட்டுமே!
                              உடனே நான் வீட்டுக்குப்போக வேண்டும் என்று எழுந்துவிட்டேன்.கொஞ்சம் தடுமாற்றமாக இருந்த்து.பார்த்துப்போங்கள் என்றார்.அவருக்கு நல்ல மனசு! வெளியே அவருடைய குழந்தை அதே புன்சிரிப்புடன்! என்னைக்குனியச்சொன்னது.அங்கிள் HOW DO YOU FEEL?  என் பதிலை எதிர்பார்க்கவில்லை.குதித்து சிரிக்க ஆரம்பித்த்து.

டிஸ்கி: மொக்கை போடுபவர்கள் சீரியஸானால் சீரியஸ் பதிவர்கள்   மொக்கை போடுவார்கள்.
-

Thursday, September 22, 2011

பெண் பார்க்கப்போய் காலில் விழுந்த பதிவர்-காமெடிபீஸ்


                             சில வலைப்பதிவுகளைப் படிப்பது வாழ்க்கையில் எந்தமாதிரியெல்லாம் கஷ்டம் தரும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்.கல்யாணமாகாத இளம்பெண்ணென்றால் சொல்லத்தேவையில்லை.பல்லைக்கடித்துக்கொண்டு படித்தால் கொஞ்சம் கொஞ்சமாக புரியும்.விவரமாகச் சொல்கிறேன்.

                             தனக்குக் கல்யாணமாகவில்லை என்று மனம் நொந்து எழுதிய பதிவை படித்தார் அந்த இளம்பெண்.என்ன நேரத்தில் படித்த்தோ தெரியவில்லை.அவ்வளவு நாளும் கல்யாணத்தின் மீது இருந்த வெறுப்பு மாயமாய் மறைந்து விட்ட்து.கல்லும் கரையும் என்பார்களே? இங்கே கரைந்து கடலில் கலந்து விட்ட்து.பெண்ணுக்கு காதலும்,கல்யாண ஆசையும் துளிர்த்து விட்ட்து.

                             ஆசைஆசையாய் வலைப்பதிவருக்கு தனது காதலை இல்லை,உயிரையே கொட்டி எழுதினார் காதல் கடிதம்.கல்யாணத்திற்கு அழைப்பாகவும் கருதலாம்.அந்தக் கடிதம் கீழே!

அன்பே,

                              உங்களைப் பார்ப்பதற்காக தூங்காமல் காத்திருப்பேன்.குளிக்காமல் உட்கார்ந்திருப்பேன்.நீங்கள் பெண் பார்க்க வரும் வரை வாசலை விட்டு எழுந்து உள்ளே போக மாட்டேன்.நீங்கள் எதற்காக பதிவு எழுத வேண்டும்? நான் ஏன் அதை விடிகாலையில் படிக்கவேண்டும்? இப்போது புரிந்துவிட்ட்தா? இருவருக்கும் கல்யாணமாகவில்லை.இனி நீங்களில்லாமல் என்னால் நடக்க முடியாது,ஓட முடியாது,கோலம் போட முடியாது! கீழ்கண்ட முகவரிக்கு உடனே வரவும்.

                              இளம்பெண் பழசை மறக்காதவர்.தான் வளர்க்கும் புறா காலில் கட்டி பதிவரிடம் தனது கடித்த்தை சேர்க்குமாறு அனுப்பினார்.கடித்த்தை படித்த பதிவருக்கு தலை சுற்றாமலா இருக்கும்.ஆஹா! நம்முடைய எழுத்தையும் படித்து நம்முடைய அறிவில் மயங்கி ஒரு பெண்ணுக்கு வந்த காதல்!

                              கடிதம் கிடைத்த்வுடன் புறப்ப்ட்டு முகவரி கண்டு பிடித்து ஊர் போய் சேர்ந்து விட்டார்.உண்மையில் அந்த பெண்ணும் வாசலில்தான் இருந்த்து.பதிவருக்கு அதைப் பார்க்க எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்!ஆமாம்,உலகத்தில் இருக்கும் அத்தனை காதலும் அவருக்கு வந்து விட்ட்து.அவர்களது காதலையும்,உணர்ச்சிவேகத்தயும் கண்ட காக்கைகள் அலறி அடித்து ஓடின.

                              வீட்டுக்குள்ளே அழைத்துச்சென்றவுடன் உங்களிடம் நான் நிறைய பேச வேண்டும் என்றார் பெண்.’’தாராளமாக! அதற்குத்தானே வந்திருக்கிறேன்!

’’ உங்களுக்கு வடிவேல் பிடிக்குமா? விவேக்கா?’’

இது எதற்கு என்று பதிவருக்கு தோன்றினாலும்சொல்லி வைத்தார்,’’வடிவேல்

ச்சீ நீங்கள் ரொம்ப மோசம்,எனக்கும்தான்! பாவம் போக்கிரியில் அசினை உயிருக்கு உயிராக காதலிப்பார்,நடுவில் விஜய் வந்து கெடுத்து விட்டார்.அவர் மனசு எப்படி இருந்திருக்கும்?’’ நகைச்சுவை உணர்வு நிரம்பியவர் என்று பதிவருக்கு தோன்றியது.

’’உங்களுக்கு சமைக்கத்தெரியுமா?’’ஆண்கள் சமைத்தால் ருசியாக இருக்கும் என்று என் தோழி சொன்னாள்.’’

இந்த அதிரடியை நம்ம ஆள் எதிர்பார்க்கவில்லை! “ தெரியாது என்றார்

நீங்கள் கவலைப்படவேண்டாம்,எள்ளுருண்டை செய்ய உங்களுக்குத் தெரியும்தானே? அது போதும்.நான் தினம் இரண்டு எள்ளுருண்டை மட்டும் சாப்பிட்டு உயிர் வாழ்வேன்

பதிவருக்கு குழப்பம் வந்தாலும் விடவில்லை.உயிர் வாழ்வது எங்கே! என் உயிரை எடுப்பாய்! அதில் இரண்டு வைட்டமின் தான் இருக்கிறது,வைட்டமின் சி இல்லை.அது நல்லதுதான்.ஆனால் மற்ற உணவும் வேண்டும்.நிரூபன் பதிவை படித்தீர்களா? சலிப்புடன் கேட்டார்.

உங்களுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம் என்று எனக்குத் தெரியும். நீங்கள் நிரூபன் இல்லாமல் வேறு யாராம்?

என்னது? நான் நிரூபன் இல்லை! நீ நிரூபனை காதலிக்கிறாயா?

ஆமாம்,நான் அவருக்குத்தான் கடிதம் எழுதினேன்,என்றார் அதிர்ச்சியுடன்.

பதிவர் மயக்கம்போட்டு பெண்ணின் காலடியில் விழுந்துவிட்டார்.நீங்கள் காலில் விழுந்தாலும் நான் நிரூபனைத்தான் காதலிப்பேன்இவ்வார்த்தை பதிவரின் காதில் விழவில்லை.மயங்கிக் கிடந்தார்.புறா ஓரமாக நின்று சிரித்துக்கொண்ட்து.காமெடி செய்யலாம் என்று திட்டமிட்டு வேறு பதிவரிடம் கடித்த்தை கொடுத்துவிட்ட்து..

டிஸ்கி: பதிவர்கள்,அதிலும் கல்யாணமாகாதவர்கள் பிளாக்கில் போட்டோ போட வேண்டும்.






-

Tuesday, September 13, 2011

அய்யோ! அய்யோ! பதிவத் திருடிட்டாங்களே!-லகலக பேட்டி.

அய்யோ,அய்யோன்னு ஏன்யா சத்தம் போடறீங்க? யாரு உங்க பதிவ திருடினது? சுத்த நான்சென்ஸா போச்சு! திருட்டுன்னா என்ன்ன்னு அர்த்தம் தெரியுமா உங்களுக்கு?இப்படித்தான் ஒரு பதிவர் ஆக்ரோஷமாக வந்தார்.அவரை இழுத்துப்போய் அவருடைய பிளாக்கை ஓபன் செய்து காட்டினேன்.அவர் எழுதியது அங்கேயே இருந்த்து.சாரி சொல்லி சர்பத் வாங்கிக் கொடுத்துவிட்டு போனார்,நாங்களும் மனுஷங்கதான்!’’

                             ஆதங்கத்துடனும்,வருத்த்துடனும் மனம் திறந்து பேசுகிறார் வலைத்தள அதிபர் வக்கில்லாதவன்(புனை பெயராம்).அவர் மீதான தவறான குற்றச்சாட்டுகள் அம்புகளாய் பாய்ந்து அவரது மனத்தை புண்படுத்தியிருப்பதை உணர முடிந்த்து.பல பதிவர்கள் தங்களது பதிவுகளை திருடி தளத்தில் போட்டுக்கொள்கிறார் என்று குற்றம் சாட்டி பதிவு எழுதியது அவரை வேதனைக்குள்ளாக்கியிருந்த்து.அவருடன் பேசியதிலிருந்து சென்சார் செய்யப்படாமல் அனைத்து பகுதிகளும்:

நீங்கள் சொந்தமாக எழுதியதுண்டா?

                                அது பெரும் பிரச்சினையில் முடிந்து விட்ட்து.மதுப்பழக்கம் தவறு என்று எழுதினேன்.அடுத்த நாள் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டிய நிலை.தமிழ்நாட்டில் மொத்தமாக குடிப்பதை நிறுத்திவிட்டார்கள்.அரசாங்கத்தை நினைத்து ஒரு நிமிடம் பதறிப்போய்விட்டேன்.உடனே மது குடிப்பது முடி,நகம் வளர உதவி செய்யும்,கொஞ்சமாக குடித்தால் தப்பில்லை என்று இன்னொரு கட்டுரை எழுதியதும் பிரச்சினை தீர்ந்த்து.

அப்போதிருந்து காபி பேஸ்ட் தானா?

                               ஆமாம்,வலைப்பதிவுகளில் சில நேரம் நல்ல கட்டுரைகள் கிடைக்கிறது.பத்திரிகைகளிலும் எடுப்பேன்.கல் தோன்றி முன் தோன்றா சாரி! கம்பியூட்டரில் காபி,பேஸ்ட் என்று எதற்காக இருக்கிறது? வடிவமத்தபோதே கொண்டுவந்து விட்டார்கள்.ரைட் கிளிக் செய்தால் copy என்று வருகிறது.அதே போல சுலபமாக பேஸ்ட் செய்யலாம்.தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால்தான் தமிழ் வளரும்.

நீங்கள் சந்த்தித்த பிரச்சினைகள் என்ன?

                                   காபி பேஸ்ட் செய்வதே பிரச்சினைதான்.சொந்தமாக எழுதுபவர்கள் கொஞ்ச நேரத்தில் எழுதிவிடுகிறார்கள்.நாங்கள் வாசகர்களுக்கு பிடித்த்தை தர பலதையும் படிக்க வேண்டும்.தவிர காபி செய்யும்போது எழுதியவர் பெயரும்,பிளாக் முகவரியும் விடுபட்டுப் போகிறது.தவறுவது யாருக்கும் சகஜம்.உடனே திருட்டு என்று சொல்லிவிடுகிறார்கள்.

மறக்க முடியாத சம்பவம் ?

                                  ஒரு முறை பிரபல பத்திரிகையிலிருந்து காபி செய்யும்போது விளம்பரத்தை காபி செய்து போட்டுவிட்டேன்.தவறாக நிகழ்ந்த விஷயம்.ஆனால் கம்பெனியிலிருந்து வந்து பாராட்டிவிட்டு இரண்டு துணி சோப்பு கொடுத்து விட்டுப் போனார்கள்.

உங்கள் எதிர்காலத் திட்டம் என்ன?

                               எப்படியாவது வெளிநாட்டிலிருக்கும் கறுப்பு பணத்தை காபி செய்து இந்தியாவில் பேஸ்ட் செய்யவேண்டும்.முடியுமா? என்று கேட்கிறார்கள்.அனைத்து காபி பேஸ்ட்டர்களும் ஒன்று சேர்ந்து முயற்சி செய்தால் முடியாதா? ஒரு வலைப்பதிவில் ரூபாய் நோட்டு படம் போட்டிருந்தார்கள்.காபி செய்து பேஸ்ட் செய்து பார்த்தேன் ஈஸியாக இருக்கிறது.

-

Thursday, September 1, 2011

கிருஷ்ணகிரிய எதுக்கு கிழிக்கணும் பதிவர்களே?

                           கிருஷ்ணகிரியை ஆளாளுக்கு கிழித்து தள்ளுகிறார்கள்.கிழிந்துபோய் மழை பெய்தால் வீடு,ரோடு என்று எல்லா இட்த்திலும் விழுகிறது.இங்கே சிறு பையனைக்கூட ஏமாற்ற முடியாது.ஸ்கூட்டர் எப்படி ஓடுகிறது என்று கேட்டுப்பாருங்கள்’’டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்’’ என்று தெளிவாக பதில் வரும்.

                           உலகமறிந்த ரஜினிகாந்த்,ராஜாஜி எல்லாம் இந்த மாவட்ட்த்தில் பிறந்தவர்கள்.ரஜினிகாந்தின் அண்ணனை அடிக்கடி இங்கே பார்த்திருக்கிறேன்.இங்கே விளையும் மாம்பழத்தை சுவைக்காத உலக நாடுகள் குறைவு.கிரானைட் கற்களையும் நாடுகள் பார்த்திருக்கின்றன.பெரும்பாலான நாடுகளுக்கு மலர்கள் ஏற்றுமதி ஆகிறது.

                           மற்ற மாவட்டங்களை ஒப்பிடும்போது இங்கே சீதோஷ்ண நிலை நன்றாக இருக்கும்.பெங்களூருக்கு அருகில் இருக்கிறது.ஓசூர் நிறைய பேருக்கு தெரியும்.தொழில் நகரம்.எல்லா மாவட்ட்த்து ஆட்களையும்,மாநிலத்து ஆட்களையும்,வெளிநாட்டினரையும் இங்கே பார்க்க முடியும்.
           
                           ஓசூருக்கு அருகில் தளி என்ற ஊர் இருக்கிறது.தொகுதியும் கூட!லிட்டில் இங்கிலாந்துஎன்று சொல்வார்கள்.பெரும்பாலான வீடுகளில் மின் விசிறியை பார்க்க முடியாது.இங்கிலாந்தில் நிலவும் தட்பவெப்ப நிலைதான் இங்கும்.காய்கறி,கீரைகள் அதிகம் பயிரிடுவார்கள்.விலையும் மிக குறைவு.ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.

                             பணிபுரிபவர்கள் யாரும் அவ்வளவாக விரும்புவதில்லை.பெரும்பான்மையானவர்கள் தெலுங்கு,கன்னடம் பேசும் மக்கள்.அதனால் தேசியக் கட்சியின் ஆதிக்கம்தான் அதிகம்.இப்போது இருப்பவர் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.இங்கே தோழர்கள் அதிகம்.தமிழ் ஓரளவு பேசுவார்கள்.உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டால்என் பேர் சிக்கம்மா! என்பார்கள்.

                             யானைகள் அடிக்கடி கிராமத்திற்கு வந்து பீதியூட்டுவது இம்மாவட்ட்த்தில் அதிகம்.பாம்புகளும் அதிகம்.சென்ற மாதம் மியூஸியத்தில் பாம்பு படக் கண்காட்சி வைத்திருந்தார்கள்.போய் பார்த்தேன்.இத்தனை வகை பாம்புகளா? மலைப்பாம்பு கூட கிராமப்புறத்திற்கு வருவதுண்டு.கறி சமைத்து சாப்பிடுவதை நாளிதழில் செய்தியாக போட்டார்கள்.

                             5 தேசிய நெடுஞ்சாலைகள் கிருஷ்ணகிரியை தொட்டுச்செல்கின்றன.விபத்துகளும் அதிகம் நடக்கின்றன.இன்றைய முதல்வர் போட்டியிட்டு வெற்றியும் தோல்வியும் பெற்ற பர்கூர் தொகுதி கிருஷ்ணகிரியில் இருக்கிறது.வாழப்பாடி ராம்மூர்த்தி,இ.வி.கே.எஸ் இளங்கோவன் எல்லாம் இங்கே போட்டியிட்டவர்கள்.

                               டி.ராஜேந்தர் எதிர்த்து போட்டியிட்டு பரபரப்பைக் கிளப்பினார்.சைக்கிள் சின்னம் கேட்டு கொடுக்காமல் ரயில் எஞ்சின் சின்னம் கொடுத்தார்கள்.அப்போது கிருஷ்ணகிரி மாவட்டமாக பிரிக்கப்படவில்லை.மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமளிதுமளிப் பட்ட்து.சிங்கத்தின் கர்ஜனையை அப்போது நேரில் பார்த்தேன்.

                              கிருஷ்ணகிரி அணை இருக்கிறது.நான் ஃப்ரெஷ் மீன் சாப்பிட செல்வது வழக்கம்.விஜய்,அவரது தந்தைக்கு காவேரிப்பட்டிணம் அருகில் உள்ள கோயில் விருப்பமானது.எஸ்.ஏ.சந்திரசேகர் அடிக்கடி வருவதுண்டு.அழகி படம் எடுத்த உதயகுமார் இந்த ஊரைச்சேர்ந்தவர்.மிக இளைய மாவட்டம்.ஆனால் பதிவுலகில் கிழிந்து தொங்கிக் கொண்டிருக்கிறது.அவ்வ்வ்வ்வ்வ்வ்......
-

Friday, August 19, 2011

ஜோக் படித்தால் சிரிப்பு வருகிறதா? இல்லையா?

  நகைச்சுவை  ஒன்றை படித்தால் சிரிப்பு வரத்தானே வேண்டும்.ஆமாம் ,அது மனிதனுக்கு கிடைத்த முக்கியமான விஷயம்.அது சுமாராக இருந்தால் கூட! அவ்வளவாக ரசிக்க முடியாமல் போனால் யோசிக்க வேண்டும்.கீழே உள்ளதையும் படியுங்கள்.

  ஆசிரியர்: ஏன் வீட்டுப்பாடம் எழுதவில்லை?

  மாணவி:கரண்ட் இல்ல !

  ஆசிரியர்:மெழுகுவர்த்தி வைத்து எழுத வேண்டியதுதானே?

   மாணவி:தீப்பெட்டி சாமி ரூம்ல இருந்தது! எடுக்க முடியல!

   ஆசிரியர் :ஏன்?

  மாணவி: குளிக்கல! அதனால சாமி ரூமுக்குள்ள போக முடியல!

  ஆசிரியர் :ஏன் குளிக்கவில்லை?

  மாணவி: லூசா நீங்க? அதான் கரண்ட் இல்லேன்னு மொதல்லயே சொன்னனே!?


                                                          இப்படி சாதரணமாக இருந்தாலே ஓஹோவென ரசிப்பவர்கள் உண்டு.வெடி ஜோக் சொன்னாலும் சிரிப்பு வரவில்லையா? நீங்கள் மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டிருக்கலாம்.சிலர் ஏதேனும் கவலையாக இருந்தாலும் உற்சாகமில்லாமல் இருப்பார்கள்.மனச்சோர்வு என்பது சாதாரண கவலையிலிருந்து அதன் கால அளவுகளில் வேறுபடுகிறது.பாதிப்பு நீண்ட காலம் இருக்கும்.

                                                           மனதில் ஏற்படும் சோர்வு என்பது இயல்பு வாழ்க்கையை பாதிக்கக் கூடியது.உறவுகளை பேணுவதில்,சிந்திப்பதில் செயல்படுவதில் சிக்கலை ஏற்படுத்துகிறது.தூங்குவதிலும் பாதிப்பு இருக்கும்.காலம் காயங்களை ஆற்றும் என்பார்கள்.நமக்கு ஏற்படும் எந்த துயரமும் காலம் செல்ல செல்ல குறைந்து விடும்.சிலரால் மீண்டு வரமுடியாமல் போய்விடுகிறது.


                                                          இன்றைய நவீன வாழ்க்கையில் எதைஎதையோ யோசித்து குழப்பிக்கொள்கிறோம்.அழுத்தங்கள் அதிகமாகிவிட்டது.பரம்பரை முக்கிய காரணமாக கருதப்பட்டாலும் சூழ்நிலைகள்,மருத்துவ காரணங்கள்,வாழ்வில் நடந்த சம்பவங்கள் போன்றவை முக்கிய காரணமாக இருக்கின்றன.நாம் சிந்திக்கும் முறையும் மன அழுத்தத்தை உருவாக்கும் காரணியாக இருக்கிறது.

                                                          அதிகம் சம்பாதிக்கும் இளைய தலைமுறை பாதிக்கப்படுவது கூடி வருகிறது .இதை ஆய்வுகளும் உறுதி செய்கின்றன.மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர் மதுவுக்கு அடிமையாகி பாண்டிச்சேரியில் சுற்றித்திரிந்தது பற்றி செய்திகளில் படித்திருப்பீர்கள்.


                                                              கௌரவம்,மதிப்பு ,நல்ல வருமானம் இத்தனை இருந்தும் ஏன் பாதிக்கப்படவேண்டும்? மனம் என்பது ஒரு சிக்கலான பிரமாண்டம்.சுற்றி உள்ள நண்பர்கள்,உறவினர்கள் யாராவது ஆரம்பத்திலேயே கவனித்திருந்தால் ,அவர்களுக்கு விழிப்புணர்வு இருந்திருந்தால் ஆரம்பத்திலேயே சரி செய்திருக்கவும் முடியும்.

                                                               மனிதன் உயிர்வாழ்வதில் அர்த்தத்தை தருவது அன்பு.ஆனால் இன்று மனதில் உள்ளதை வெளிப்படுத்தக் கூட முடியாத நிலை.பணத்திற்காக ஓடிக்கொண்டிருக்கிறோம்.மனச்சோர்வும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது.உடலையும் மனதையும் பலவீனப்படுத்துவது மன அழுத்தம்.


                                                                எதிலும் ஆர்வமில்லாமல் இருப்பது,சுகாதாரத்தில் கூட அக்கறை காட்டாமல் இருப்பது,மிதமிஞ்சிய மதுப்பழக்கம்,சரியாக சாப்பிடாமல் இருப்பது,அல்லது அதிகம் உண்பது,தூக்கமின்மை கோளாறுகள் இருந்தால்,கவனிப்பவர்கள் உதவுவது அவசியம்.

                                                                 மனதில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு அருகில் உள்ளவர்கள் அன்பு முக்கியமான மருந்து.மன அழுத்தம் மிதமாக இருந்தால் ஆலோசனைகள் மூலமாகவே தீர்வு காண முடியும்.அதிகமாக இருந்தால் மருத்துவ உதவி தேவைப்படும்.கிண்டல் ,கேலி செய்யாமல் அணுக வேண்டும் என்பது முக்கியம்.டிப்ரஷன் ,மன அழுத்தம் ,மனச்சோர்வு எல்லாம் ஒரே பொருள்தான்.
-

Wednesday, March 30, 2011

என் மனைவி யாருடனும் ஓடிப்போகவில்லை-பிரபல பதிவர் காமெடி பொளேர்

அவர்தான், உங்களுக்கு மிக நெருக்கமாக ஆகிவிட்ட அவரேதான்.அவரது வார்த்தைகளை கவனியுங்கள்.


                                                                                                              
உங்கள் நண்பர்களைப் பற்றி கூறுங்கள்.அவர்களும் பதிவர்களா?

                                                                அவர்களும் பதிவர்களே!ஒரு முறை பஸ் ஸ்டாண்ட் கழிப்பறையில் எழுதிக் கொண்டிருக்கும்போது “நண்பேண்டாஎன்று குரல் கேட்ட்து.திரும்பினால் இரண்டு பேர் சிரித்துக்கொண்டு என்னைத் தழுவிக் கொண்டார்கள்.அப்போது முதல் மூவரும் ஒருவரானோம்.அவர்களும் எழுத்தாளர்கள்தான்.அவர்களை நான் அதிகம் சிந்திக்கவிடுவதில்லை.என்னுடைய பதிவை காபி,பேஸ்ட் செய்து கொள்வார்கள்.நான் லிங்கும் கொடுத்திருக்கிறேன்.எனக்கு ஓட்டும்,ஆளுக்கு பத்து கமெண்டும் போடுவார்கள்.இப்போது என்னால் தியேட்டர்,பஸ் ஸ்டாண்ட் என்று கழிப்பிடம் பக்கம் போக முடிவதில்லை.அவர்களை அனுப்புகிறேன்.

வலைப்பதிவுதான் இருக்கிறதே,ஏன் கழிப்பிடத்தில் எழுதவேண்டும்?

                            உங்கள் அறியாமையை நினைத்தால் பாவமாக இருக்கிறது.நான்கு நாட்கள் ஆகிவிட்டாலே பதிவை யாரும் தேடி படிக்க மாட்டார்கள்.பொதுக்கழிப்பிடம் அப்படி அல்ல! கட்டிட தரம் பொறுத்து 100 ஆண்டுகள் கூட வாழும்.தானாக இடிந்து போகும்வரை நம்முடைய எழுத்துக்கள் இருக்கும்,அதுவரை சுத்தமும் செய்யமாட்டார்கள்.நாங்கள் ஒருவித அழியாத மையை கண்டுபிடித்திருக்கிறோம்.


ஆனால் உங்களுடைய பெயர் முன்னணி பதிவர்கள் பட்டியலில் வருவதில்லையே?

                             அது தொழில் நுட்ப கோளாறு.எல்லாவற்றையும் தொழில்நுட்பத்தால் சாதிக்க முடியாது.முதுகிலும்,தொடையிலும் அரித்துக்கொண்டே இருக்கிறது.சொரிவதற்கு உங்கள் தொழில்நுட்பம் ஒரு கருவியை கண்டுபிடித்த்தா?

உங்கள் மனைவியை அழைத்துவர முடியாதா? ஆளாளுக்கு ஒன்று பேசுகிறார்கள்.

                            நான் உங்களுக்கு தெளிவாக சொல்லிவிட்டேன்.என் மனைவி யாருடனும் ஓடிப்போகவில்லை.தாய் வீட்டுக்கு சென்றிருக்கிறார்.இன்னும் ஒரு வருடம் கூட ஆகவில்லை.ஒன்பது நாட்கள் பாக்கி இருக்கிறது.அவருக்கு கோபம் அவ்வளவுதான்.நாட்டின் எதிர்காலத்திற்காக சிலதை விட்டுக் கொடுத்துதான் ஆக வேண்டும்.தவிர பதிவு போட ஒருமணி நேரம் தாமதமானால்கூட இருநூறு மெயில் வருகிறது.


ஒரு வேளை எழுதாததற்கு நன்றி தெரிவித்து இருக்குமோ?

                              அந்த மெயிலை படிக்க எனக்கு நேரமில்லை.கிண்டலுக்காக பேட்டி எடுப்பதாக இருந்தால் தயவுசெய்து நிறுத்திக் கொள்ளுங்கள்.இதில் தேசத்தின் எதிர்காலம் சம்பந்தப்பட்டிருக்கிறது.கேலி,கிண்டல் செய்தே நாட்டை நாசம் செய்து கொண்டிருக்கிறோம்.கொஞ்சம் கூட சீரியஸாக சிந்திக்கத் தெரியவில்லை.

-

Saturday, March 26, 2011

என் வளர்ச்சி பொறுக்காமல் கிளப்பிவிடுகிறார்கள்-பிரபல பதிவர் அதிரடி

 
                           அவரைப் பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது.ஆம்.அவரேதான்.அவருடன் பேட்டியிலிருந்து சில பகுதிகள்.

 தாங்கள் எழுத்தாளரான பின்னணி என்ன?

                               அது சுவையானது.என்னுடைய சிறு வயதில் என் தாயார் எழுந்திரு என்றது என் காதில் எழுத்து என்று விழுந்துவிட்ட்து.அப்போதிருந்து அதை பிடித்துக் கொண்டு விட்டேன்.ஆரம்ப்ப் பள்ளியில் சேர்த்தார்கள்.எழுத சொன்னால் நான் ‘எஎன்று எழுதினேன்.அப்போதிருந்து எங்கேயாவது எழுதிக் கொண்டுதான் இருப்பேன்.எந்த பஸ் ஸ்டாண்ட்,தியேட்டர் பாத்ரூமிலும் எழுதாமல் வந்த்து இல்லை.


வலையுலகிற்கு எப்படி வந்தீர்கள்?
                                மூக்குப்பொடி வாங்கிய பேப்பரை படித்த போது கூகுள் இலவசமாக பிளாக் தருவது தெரியவந்த்து.இலவசமாக தரும் எதையும் நான் விட்ட்தில்லை.என் வாழ்வில் திருப்பம் நிகழ்ந்த்து.அப்புறம் கம்ப்யூட்டர் கற்றுக் கொண்டேன்.இதோ இப்போது பிரபல பதிவர்.

பிரபல பதிவர் என்பதற்கு என்னதான் இலக்கணம்?
                                இங்கே பொறாமை பிடித்தவர்கள்தான் அதிகம்.அதனால் பிரபல பதிவர் என்று நானே சொல்லிக் கொண்டேன்.மற்றவர்களை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தால் விடிந்து விடும்.தவிர அதை ஏன் இன்னொருவர் சொல்லவேண்டும்? அவர்களுக்கு கஷ்ட்த்தை தர நான் விரும்பவில்லை.


உங்களுக்கும் ஓட்டுபோட குழு இருப்பதாக சொல்லப்படுகிறதே?

                               ஒருவர் எத்தனை பிளாக் வேண்டுமானாலும் ஆரம்பித்துக் கொள்ள முடியும்.எனக்கு நான்கு இருக்கிறது.நண்பர்களும் இருக்கிறார்கள்.எங்கே குழு இல்லை என்று உங்களால் சொல்ல முடியுமா? மகளிர் குழுக்கள் இருக்கிறது.பாராளுமன்றத்தில் குழுக்கள் இருக்கின்றன.ஆண்கள் சுய உதவிக் குழுக்கள்கூட இருக்கிறது.

ஒரு நாளைக்கு எத்தனை பேர் படிக்கிறார்கள்.? நீங்கள் STAT வெளியில் காட்டவில்லையே?
                               ஏற்கனவே வயிறு எரிந்து சாகிறார்கள்.அதை பார்த்தால் அவ்வளவுதான்.பதிவர்கள் எல்லாம் வெந்து போய்விடுவார்கள்.எத்தனை பதிவர்கள்,எத்தனை குடும்பங்கள் யோசித்துப் பாருங்கள்.அந்த பாவம் எனக்கு வேண்டாம். அப்புறம் நான் மட்டும்தான் பதிவிட வேண்டும் திரட்டிகள் என் ஒருவனுடைய பதிவை மட்டும் காட்டிக் கொண்டிருக்க முடியாது.

பதிவுலகம் வந்த பிறகு உங்கள் மனைவி பிரிந்து விட்ட்தாக கூறப்படுகிறதே?

                                   கணவன் மனைவி ஊடல் சங்க காலத்தில் இருந்து வரும் ஒன்று.கோபத்தில் தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.ஒரு வருடம்கூட ஆகவில்லை.நேற்றுகூட நான் பேசினேன்.அது கிராம்ம் என்பதால் டவர் வீக்காக இருக்கும்.காது கேட்ட்தோ,இல்லையோ அவர் செல்ஃபோனை எடுக்கவில்லை.நேரில் போகலாம் என்றால் பதிவுலகை விட்டு செல்ல முடியவில்லை.லட்சக்கணக்கான வாசகர்களை ஏமாற்றியதுபோல ஆகிவிடும்.அவர் நல்லவர்.கல்யாணமாகி ஆறு மாதங்கள் டி.வி.பார்த்துக்கொண்டு சந்தோஷமாகவே இருந்தார்.நான் எழுதிக் கொண்டிருக்கும்போது தொல்லை தரமாட்டார்.என்னுடைய வளர்ச்சி பொறுக்க முடியாமல் ஏதேதோ கிளப்பிவிடுகிறார்கள்.


உங்கள் எழுத்து புகழ் பெற்றதற்கு என்ன காரணம்?

                             நான் NHM WRITER-ல் எழுதுகிறேன்.சுலபமாக இருக்கிறது.ஆங்கிலத்தில் ka என்று டைப் செய்தால் ‘கஎன்று வருகிறது.

-

Thursday, March 24, 2011

பதிவர் வெளியிட்ட புத்தகத்தால் பரபரப்பு;தமிழ் எழுத்தாளர்கள் அதிர்ச்சி!


சென்னை,மார்ச் 33
                                தமிழ் பதிவர் ஒருவர் வெளியிட்ட புத்தகத்தால் தமிழ் எழுத்தாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.இது பற்றி கூறப்படுவதாவது,

                              தமிழில் 1800 பக்கம் கொண்ட நாவலை எழுதி புகழ்பெற்றவர் எழுத்தாளர் மலைநாட்டான்.அதை அவரே பதிப்பித்து தமிழ் இலக்கிய உலகை வியப்படைய வைத்த்து வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.சம்பவத்தன்று காலைகாக்காஎன்ற இலக்கிய பத்திரிகையை புரட்டியபோது தன்னுடைய பாம்பின் அப்பா அம்மாநாவலுக்கு 20 பக்கத்துக்கு மதிப்புரை எழுதியிருப்பதை கண்டு மகிழ்ச்சியடைந்தார்.

                               மதிப்புரையை முழுக்க படிக்கவேண்டுமென்பதற்காக  காலை டிஃபன் வேண்டாம் என்று சொல்லிவிட்ட்தாக அவரது மனைவி தெரிவித்தார்.சந்தோஷத்துடன் படித்துக் கொண்டிருந்தவர் இறுதியில் நூலாசிரியர் பெயரும்,பதிப்பகத்தின் பெயரும் மாறியிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.


                                அதிர்ச்சியில் மலைநாட்டான் போட்ட கூப்பாடு தமிழ் எழுத்தாளர்களின் காதுகளில் ஒலித்த்து.சப்தம் கேட்ட அரை மணி நேரத்தில் அனைத்து எழுத்தாளர்களும் மலைநாட்டான் வீட்டில் கூடிவிட்டார்கள். தமிழ் எழுத்தாளர்கள் ஒன்று திரண்ட்து ஒரு வரலாற்றுநிகழ்வுஎன்கிறார்கள் இலக்கிய விமர்சகர்கள்.செய்தி கேட்ட நிருபர்களும்,பானிபூரி,வறுகடலை உள்ளிட்ட தள்ளூவண்டி கடைகளும் விரைந்தன.

                                 மலைநாட்டான் நாவலை தன் பெயரில் வெளியிட்ட்து தமிழ்வலைப்பதிவர் என்பது அவருக்கு ஆகாத பதிவர் ஒருவர் மூலம் தெரிய வந்துள்ளது.தமிழ் எழுத்தாளர் ஒருவர் இதைப் பற்றி கருத்து தெரிவிக்கும்போது “இது கொடூர திருட்டு.மலைநாட்டான் இந்த நாவலுக்காக பாம்புகளுடன் படுத்துறங்கியிருக்கிறார்.தேள்களுடன் வாக்கிங் போனார்.முப்பதாண்டு காலம் உழைத்து எழுதிய 1800 பக்க நாவலை சுலபமாக திருடியது அதிர்ச்சியளிப்பதாக உள்ளதுஎன்றார்.


                                  சட்ட ஆலோசனைக்காக வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டு ஏழாவது ரவுண்டு டிஃபன்,காஃபி உள்ளே போயும் ஆலோசனை எதுவும் தரவில்லை.தொடர்ந்து சிந்தித்துக்கொண்டிருக்கிறார்கள்.இதற்கிடையே பதிவரை தொடர்பு கொள்ள முயற்சித்தபோது அவர் சிங்கப்பூரில் திரைப்பட ஆலோசனையில் இருப்பது தெரிய வந்துள்ளது.(அவர்-திருடி- பதிப்பித்த நாவலை படித்த இயக்குனர் ஒருவர் வசனம் எழுத ஒப்ப்ந்தம் செய்திருப்பதாக தெரிகிறது.) அவரை தொடர்பு கொள்ள தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சற்று முன் வந்த செய்தி:

                              சிங்கப்பூரில் டி.வி.யை பார்த்து செய்தி தெரிந்து கொண்ட அந்த பதிவர் எழுத்தாளர் மலைநாட்டானை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.புத்தகத்தை பார்க்காமல் விமர்சனம் மட்டும் படித்து விட்டு தன்னைப் பற்றி தவறாக நினைத்த்தற்காக வருத்தப்பட்டுள்ளார்.


                               தான் மலைநாட்டானின் தீவிர வாசகன் என்றும்,அவ்வளவு மட்டமானவன் இல்லை என்றும்,புத்த்கத்தை சரியாக படிக்குமாறு கேட்டுக்கொண்டார்.நாவலின் இறுதியில் நன்றி-மலைநாட்டான் என்று குறிப்பிட்டிருப்பதை கவனிக்காமல் ஆத்திரப்பட்டுவிட்டீர்கள் என்று ஆதங்கப்பட்டுள்ளார்.

                               இதைக் கேள்வியுற்ற அனைத்து எழுத்தாளர்களும் “ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டுஎன்பது சரியாகப் போய்விட்ட்து என்று நினைத்துக்கொண்டே கலைந்து சென்றார்கள்.அநியாயமாக ஒரு தமிழ் பதிவர் பற்றி தவறான செய்தி பரவியது வருத்தம் தரும் ஒன்று.
-