Monday, August 8, 2011

5 வயது சிறுமி 17 வயது பையனால் பலாத்காரம்.



சேலம் அருகே நடந்த பயங்கரம் இது. 5 வயது சிறுமியின் மறைவிட்த்தில் ரத்தக்கசிவை பார்த்த பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தார்கள்.குழந்தையை விசாரித்த பிறகு ஒரு 17 வயது பையனை அடையாளம் காட்டியிருக்கிறார்.பையனை சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்ப வேண்டும்.18 வயதுக்கு கீழ் மைனர் என்பதால் சீர்திருத்த வேண்டியிருக்கிறது.

                                 பாலியல் நட்த்தைகளுக்கான வயது தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது.குழந்தைகள் மீதான வன்முறையும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன.இந்தியாவில் 52 சதவீத குழந்தைகள் இத்தகைய வன்முறைக்கு ஆளாகிறார்கள் என்று அதிகாரப்பூர்வ ஆய்வு இருக்கிறது.இது 2007 கணக்கு.

                                 பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லைகள் தந்த மதுரை தலைமையாசிரியர் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்.புகைப்படம் எடுப்பதிலிருந்து அத்தனை வக்கிரங்களையும் செய்து வந்த்தாக விசாரணையில் தெரிய வந்த்து.வன்முறையில் ஈடுபடுபவர்கள் இப்படி குழந்தைகளுக்கு மிகவும் தெரிந்தவர்கள்தான்.

                                 குழந்தைகளுக்கு நல்ல தொடுகை எது? கெட்ட தொடுகை எது? என்று சொல்லித்தரலாம் என்று சொன்னார்கள்.பள்ளியிலும் அப்படி சொல்லித்தரலாம் என்று தோன்றுகிறது.அதிகமாக வெளியில் தெரிவதில்லை என்பதால் இப்படி பெற்றோர்கள் குழந்தைகளிடம் பேசுவதில்லை என்பதே நிஜம்.

                                  குழந்தைகளுக்கான வன்முறையில் பெரும்பங்கு வகிப்பது குழந்தைகளை வைத்து எடுக்கப்பட்ட ஆபாசப்படங்கள் மற்றும் புகைப்படங்கள்தான்.பலர் குழந்தைகளுக்கு இதை காட்டுவதன் மூலம் அவர்களுக்கு “இது தவறில்லையே’’ என்ற மனோபாவத்தையும் ஏற்படுத்தி விடுகிறார்கள்.இப்படிப்பட்ட ஆபாசப்படங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

                                   முன்பின் தெரியாத குழந்தைகள் மீது அதீத பாசம் காட்டுவது,அவர்களை அதிகமாக புகழ்வது,அவ்ர்கள் விளையாடும் பொருட்களை வைத்திருப்பது,ஆபாச படங்களையும்,புகைப்படங்களையும் வைத்திருப்பது போன்றவை இவர்களது பண்புகளாக இருக்கும்.பெற்றோர்கள் கண்காணிப்பில் இல்லாத குழந்தைகளுக்கு பரிசுப்பொருட்கள்,அவர்கள் விரும்புவதை வாங்கித்தருபவர்களாக இருப்பார்கள்.

                                    மேற்கண்ட குணமுடையவர்களை பார்த்தால் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்கலாம்.குழந்தைகள் மீதான் வன்முறை தொடர்பாக அதிக அளவிலான ஆய்வுகளும்,கண்காணிப்புகளும் தேவைப்படுகின்றன.பெற்றோர்களுக்கு இது குறித்த விழிப்புணர்வும்,கல்வியும் தேவை.சட்டங்கள் கடுமையாக அமல்படுத்தப்படுவதுடன்,ஆபாசங்களை தடை செய்வதும் அவசியம்.

-

15 comments:

தமிழ் வண்ணம் திரட்டி said...

நல்ல பதிவு

தமிழ் வண்ணம் திரட்டி said...

நல்ல பதிவு

Anonymous said...

என்ன கொடுமை ;-((

மாய உலகம் said...

கொடுமை :-(

shanmugavel said...

@தமிழ் வண்ணம் திரட்டி said...

நல்ல பதிவு

தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே!

shanmugavel said...

@கந்தசாமி. said...

என்ன கொடுமை ;-(

ஆமாம் கந்தசாமி,தங்கள் கருத்துரைக்கு நன்றி

shanmugavel said...

@மாய உலகம் said...

கொடுமை :-(
நன்றி சார்

ராஜா MVS said...

குழந்தையும், தெய்வமும் கொண்டாடும் இடத்தில். என்று குழந்தைகளை கடவுளுக்கு சமமாக கருதிய தமிழ்நாட்டில் இன்று பிஞ்சு குழந்தைகளிடம் காமப் பார்வையில் பழகுகிறார்கள் காமக்கொடுரர்கள், இதில் நல்லவைகளை கற்றுத்தரும் குரு இடத்தில் இருந்துகொண்டு இப்படி நடப்பவர்களை தூக்கிலிடவேண்டும், அதுவும் பெண்கள் என்பதுதான் மிக கொடுமையாக உள்ளது.
என் செய்வேன்...,

shanmugavel said...

@ராஜா MVS said...

குழந்தையும், தெய்வமும் கொண்டாடும் இடத்தில். என்று குழந்தைகளை கடவுளுக்கு சமமாக கருதிய தமிழ்நாட்டில் இன்று பிஞ்சு குழந்தைகளிடம் காமப் பார்வையில் பழகுகிறார்கள் காமக்கொடுரர்கள், இதில் நல்லவைகளை கற்றுத்தரும் குரு இடத்தில் இருந்துகொண்டு இப்படி நடப்பவர்களை தூக்கிலிடவேண்டும், அதுவும் பெண்கள் என்பதுதான் மிக கொடுமையாக உள்ளது.
என் செய்வேன்...,

தங்கள் வருகைக்கும் கரூத்துரைக்கும் நன்றி

சக்தி கல்வி மையம் said...

என்ன கொடுமை சரவணா இது?

கூடல் பாலா said...

அரக்கத்தனமான செயல்தான் ...பக்குவமான பாலியல் கல்வி மூலம் இது போன்ற மோசமான நிகழ்வுகளை குறைக்க முடியும் என எண்ணுகிறேன் !

Sankar Gurusamy said...

அரக்கத்தனமான செயல்.. குழந்தைகளின் மனங்களைக் கெடுக்கும் டீவியும் சினிமாவும் அதுபடி நடக்க விளையும் சமூகமும்தான் இதற்கு மூல காரணம்.. வளர்ந்துவிட்ட தகவல் தொழில் நுட்ப சூழலில் நாம் மேற்கொள்ளவேண்டிய மேலதிக முன்னெச்சரிக்கைகளைக் கைகொண்டால் இவற்றை ஓரளவுக்கு குறைக்கலாம்.

பகிர்வுக்கு நன்றி..

http://anubhudhi.blogspot.com/

நிரூபன் said...

5 வயது சிறுமி 17 வயது பையனால் பலாத்காரம்.//

கொடுமையான செயல் சகோ,
இதற்கெல்லாம் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்புவதை விட, கடுங் காவல் தண்டனை கொடுக்க வேண்டும்.

எங்கே போகிறது உலகம்?

இராஜராஜேஸ்வரி said...

பெற்றோர்களுக்கு இது குறித்த விழிப்புணர்வும்,கல்வியும் தேவை/
அவசியமான பகிர்வு.

Mathuran said...

அந்தப் பையனை சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பாமல் தண்டனை வழங்க வேண்டும். அப்போதுதான் அவன் எதிர்காலத்திலும் இவ்வாறான தவறுகளில் ஈடுபடாமல் இருப்பான்